loader
நிரப்புகிறது.....
Slider Image
9/3/2018 2:53:04 PM

மகாத்மா காந்தி

மகாத்மாவின் கனவு

என் நாட்டு மக்களே...நலமென்று 

யூகிக்கிறேன், கனவொன்று கண்டேன் நேற்று - விழித்திட்டேன் கனவு நீளாதிருக்க... 

 

மரங்களையும் மனிதத்தையும் 

அழிப்பதைப் போலவும்... 

ஆங்கிலேயனே ஆச்சரியப்படும் 

அராஜகம் அரசியலாயும்..! 

என்வழியில் அறப்போர் செய்தால் 

அனைவரையும் அழிப்பதைப் போலும்...!சுதந்திரமே பெறவில்லை 

என்று சொல்லிச் சிலரும்,பெறாமலே 

இருக்கலாமோ என்பதாய் சிலரும்... 

அப்பப்பா...இன்னும் சொல்ல பதைக்கிறதே நெஞ்சம்..கனவில் கூட 

வேண்டாமென விழித்துள்ளேன் இன்னும்...!