loader
நிரப்புகிறது.....
Slider Image

எனது பெயர் கிருஷ்ண.செந்தில்குமார் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்ட சோழபுரத்தைச் சார்ந்தவன். பள்ளிக்கல்விக்குப் பிறகு கோவையில், கோவைத் தொழில்நுட்பக்கல்லூரியில் B.E. ( Electrical and Electronics ) பட்ட படிப்பும், சென்னை, கிண்டி பொறியியல்கல்லூரியில் ( Power Systems) முதுகலைபட்டப் படிப்பும் பயின்றேன். அதன்பிறகு இந்தியக் குடிமையியல் பணிக்கான (Indian Civil Service) தேர்வு எழுதி 1996 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிபணியில் (Indian Administrative Service) சேர்ந்தேன். தற்போது பீஹார் மாநிலத்தில் பணியாற்றி வருகிறேன்.ஆட்சிபணிதவிர, சமூகச் சேவையிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்,தமிழ் இலக்கியம் உட்பட வாசிப்பில் தீவிர ஆர்வம் உண்டு . மாணவர்களுக்கு இனைஞர்களுக்கும் வழி காட்டியாக விளங்கும் என்ற எண்ணத்துடன் இந்தவலைப் பதிவை தொடங்கியிருக்கிறேன்,பிழைகள் இருப்பின் பொறுத்துக்கொள்ளவும். இந்த வலைப்பதிவு என்னுடைய சாதனைகளைப் பற்றி பேசப் போவதிவதில்லை.உங்களுடைய சாதனைகளை வெளி உலகுக்குகாட்ட இந்த வலைப் பதிவு பயன்படும்.இதன் மூலம் வருங்கால இளையத்தலைமுறைக்கு தேவையான வழிகாட்டுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இந்த சிறிய முயற்சியைப் பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது,வணக்கம்.




இப்படிக்கு,
கிருஷ்ண.செந்தில்குமார், ஐ.ஏ.எஸ்