loader
நிரப்புகிறது.....
Slider Image
8/29/2018 7:51:34 PM

 எனது பெயர் கிருஷ்ண.செந்தில்குமார் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்ட சோழபுரத்தைச் சாந்தவன். பள்ளிக்கல்விக்குப் பிறகு கோவையில், கோவைத் தொழில்நுட்பக் கல்லூரியில் B.E. ( Electrical and Electronics )பட்ட படிப்பும், சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில்( Power Systems) முதுகலை பட்டப் படிப்பும் பயின்றேன். அதன் பிறகு இந்தியக் குடிமையியல் பணிக்கான  (Indian Civil Service) தேர்வு எழுதி 1996 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிபணியில் (Indian Administrative Service) சேர்ந்தேன். தற்போது பீஹார் மாநிலத்தில் பணியாற்றி வருகிறேன்.ஆட்சி பணி தவிர, சமூகச் சேவையிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்,தமிழ் இலக்கியம் உட்பட வாசிப்பில் தீவிர ஆர்வம்உண்டு .

மாணவர்களுக்கு இனைஞர்களுக்கும் வழி காட்டியாக விளங்கும் என்ற எண்ணத்துடன் இந்தவலைப் பதிவை தொடங்கியிருக்கிறேன்,பிழைகள் இருப்பின் பொறுத்துக்கொள்ளவும். இந்த வலைப்பதிவு என்னுடைய சாதனைகளைப் பற்றி பேசப் போவதிவதில்லை.உங்களுடைய சாதனைகளை வெளி உலகுக்குகாட்ட இந்த வலைப் பதிவு பயன்படும்.இதன்  மூலம் வருங்கால இளையத்தலைமுறைக்கு தேவையான வழிகாட்டுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இந்த சிறிய முயற்சியைப் பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது,வணக்கம்.
 
இப்படிக்கு,
கிருஷ்ண.செந்தில்குமார், ஐ.ஏ.எஸ்
 

Slider Image
8/29/2018 7:01:56 PM

அழிவை நோக்கி பூமி !

 உலகமயமாதல்,தொழிற்மயமாதல்,பொருளாதார வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களில் மக்களுக்குத் தேவையான உணவு,உடை இருப்பிடம் வேண்டுமானால் இந்த நூற்றாண்டில் தேவையான அளவிற்கு கிடைத்திருக்கலாம் . ஆனால் இந்த வளர்ச்சி எதை நோக்கி செல்கிறது.உலகம் உயிருடன் இருக்குமா,இருப்பின் எத்தனை ஆண்டுகள்.இது மிகப்பிரிய கேள்விக் குறி.சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தொடந்து எச்சரித்து வந்த போதும்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது.காடுகள் தொடர்ந்து அக்கப்படுகிறது.மக்களுக்கு வேலைத் தேவை.ஆனால் பூமி தேவையில்லையா.நமது அடுத்துவரவிருக்கின்ற தலைமுறை வாழ்வதற்கான காலச்சூழல் இருக்கிறதா 

தற்போது பூமியின் வெப்ப நிலைசராசரியாக, தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதற்கு முன்பு இருந்ததை விட ஒரு 1° அதிகமாக உள்ளது.ஒவ்வொறு பத்து ஆண்டுகள் சராசரியாக 0.17 செஎன்ற விகிதத்தில் அதிகரித்துவருகிறது. ஆனால் தற்போது கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகம்,ஆஸ்திரேலிய தேசியப்பல்கலைக்கழகம் மற்றும் இதர புகழ் பெற்ற அமைப்புகளைக்சார்ந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி படி பூமியின் வெப்பநிலைவருங் காலத்தில் 4-5 செஉயர்வதற்கு வாய்ப்புள்ளதகவும் இதனால் ஆர்க்டிக், அண்டார்டிகாபகுதியால் உள்ளஐஸ் பாறைகள் உருவதால பல நாடுகளும், தீவுகளும் அழியவாய்ப்புள்ளது.அதிக வெப்ப நிலையால் காடுகள்,விவசாயம், மண்வளம் மற்றும் பல்லுயர்பாதுகாப்பு போன்றவை பாதிக்கப்படக்கூடும். பூமி வாழ்வதற்கு / தகுதியற்றகோளாக மாறக்கூடும்.
 

Slider Image
10/3/2018 3:11:18 PM

6.வெற்றிக் கனி !

 கடந்த மாதத்தில் நடந்து முடிந்த இந்தோனேசிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த தருண் அய்யாசாமி 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம்  பெற்று  நம்மை  வியப்பில்  ஆழ்த்தியுள்ளார்.  இவர், 48.96 வினாடிகளில்  இந்த  சாதனையை  நிகழ்த்தி  புதிய  சாதனையைப்  படைத்துள்ளார்.

திருப்பூரைச்   சேர்ந்த  இவரது  வயது 21 மட்டுமே!  மேலும்,  மேலும்  இவர்   வெற்றி பெற  வாழ்த்துக்கள்!
 

Slider Image
9/5/2018 3:09:50 PM

1.முயற்சி உடையார் வெல்வது உறுதி !

இந்த பகுதி சமூகத்தின் சாதாரண நிலையில் இருந்து கொண்டு சாதனை நிகழ்த்தும் சகோதர, சகோதரிகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். உலக அளவில் இல்லாவிட்டாலும் எவரெஸ்ட்டில் ஏறாவிட்டாலும்,அட்லாண்டிக் மகாசமுத்திரத்தை கடக்காவிட்டாலும்,ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு சகோதர, சாகோதரிக்கும்தான் தொட்டு விடும் உயரம் தான் வானம்.அது தான் சாதனை.கருவில் இருக்கும் குழந்தைக்கு பிறப்பது சாதனை.பிறந்த குழந்தைக்கு நடப்பது சாதனை.நடப்பவனுக்கு ஓடுவது சாதனை. எனவே உலகில் பிறந்த அனைவருமே சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.வாயப்புகளும், முயற்சிகளும் சாதனைக்கு உறுதுணையாக விளங்குகின்றன.ஒவ்வொரு வினாடியும் எங்கோ ஒருவன் சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றான்.
 
அத்தகைய சாமானிய மனிதனின் சாதனையை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் இந்தப் பகுதி. சாதிக்க நினைப்பவர்களுக்கு ஒரு தீப்பொறியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.சாதனைக்கு என்ன தேவை, இலக்கு .ஆம் இலக்கு நிர்ணயிக்கபட்டால் சாதிப்பது எளிது தடைகளை தாண்டுவது எளிது. இதற்கு எடுத்துக்காட்டு, 24 வயதான ஆஞ்சல்கங்வால் என்ற மத்திய பிரதேசத்தைச் சார்ந்த பெண்மணி.இவர் நீமச் மாவட்டத்தில் வசிக்கும்  சுரேஷ் கங்வால் என்ற தேநீர்க்கடைக்காரரின் மகள்.இவர் நிகழ்த்திய சாதனை என்ன  சமீபத்தில் வெளியான AFCAT என்ற தேர்வில் வெற்றிப் பெற்ற ஐந்து பெண்களில் முதலாமானவர், இந்த தேர்வு மூலம் இந்திய விமானப்படையில் சேரவிருக்கிறார்.
 
இவர் 12 வயதில் இருந்த போது உத்தராக்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 
மக்களை காப்பாற்றுவதற்கு இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டார். அன்று விதைக்கப்பட்ட விதை இன்று முளைத்து தளிர்விட்டிருக்கிறது.படிப்பதற்கு தேவையான பணமும், வசதியும் இல்லாவிட்டாலும் தன்னுடைய தொடர் முயற்சியால் இன்று இந்த சாதனைய நிகழ்த்தி உள்ளார். இதற்கிடையில்பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றபோதும்.தன்னுடைய ராணுவ பணிக்கனவைவிடாமல் துரத்தி வெற்றி கண்டார். 5 முறை தோல்வி அடைந்தாலும் ஆறாவது முறையில் தன்னுடைய இலக்கை அடைந்தார். 
 
முயற்சி திருவினை ஆக்கும் என்ற வள்ளுவரின் வாக்குகாலத்தால் அழியாத உண்மை.
 

Slider Image
11/8/2018 2:38:05 PM

15 வயது இரும்பு மனிதன்!

 அர்ஜென்டினாவில் தற்போது நடைப்பெற்று வரும் இளைஞர்களுக்கான (Youth Olympics) ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தைச் சார்ந்த 15 வயது ஜெரிமி லால்ரின்னுங்கா என்ற சிறுவன், எடை தூக்கும் போட்டியில் (62 கிலோ பிரிவு) தங்கம் வென்று சாதனைப் புரிந்துள்ளார். இந்த ஆண்டு நடைப்பெற்ற ஏசியன் சேம்பியன்ஷிப்  போட்டியிலும்  வெள்ளி  மற்றும் வெண்கல பதக்கங்களை ஏற்கனவே பெற்று  இந்தியாவின்  நம்பிக்கை  நட்சத்திரமாக  விளங்கி  வருகிறார்.

Slider Image
9/5/2018 3:47:29 PM

வானம் தொட்டு விடும் உயரம்தான்!

 

 

1.வெற்றியின் திறவுகோல் - தோல்வி

 

இன்றைய இளைஞர்களுக்கு வானத்தில் பறக்கவும் ஆசை, ஆழ்கடலில் நீச்சல் அடிக்கவும் ஆசை.ஆனால் சமூகக்கட்டுப்பாடுகளும் காலங்காலாமாக சுகந்திரமாகவும் சுயமாகவும் செயல்பட விடுவதில்லை என்பதே உண்மை.அவர்களின் மனத்திற்க்கு பிடித்த இலக்குகளை அடைய முடிவதில்லை.வாழ்க்கையின் இலக்கு, சமூகத்தின் பார்வையால் குடும்ப உறுப்பினர்களின் விப்பத்தால் நிர்ணயிக்குப்படுகிறது.அதனால் தனது சுகந்திரத்தையும் நிர்ணயிருக்கும் உரிமையையும் அடுத்தவர்களுக்காக மாற்றிக்கொள்ளவோ,விட்டு கொடுக்கவோ, நிர்பந்திக்கப்படுகின்றனர்,சமூகத்தின் மரபுச்சார்ந்த பழக்கவழக்கங்கள் இளைஞர்களை தன்னிச்சையாக சுகந்திரமாக முடிவெடுக்கவோ இயங்கவோ விடுவதில்லை.

 

இளைஞர்களின் சிறகுகள் குழந்தையாக இருக்கும் போழுதே வெட்டப்படுகின்றன.வாழ்நாள் முழுவதும் கூண்டுக்கிளியாகவே வாழ்கின்றனர்.  வானத்தில் உச்சத்தைதொடவேண்டியவர்கள் வானத்தைப் பார்த்தவண்ணம் தரையிலேயே தத்தித்தத்தி காலத்தைகடந்த வேண்டிய நிலையில் வாழ்ந்துவருகின்றனர். இளைஞர்கள் வானத்துச்சூரியனாக பிரகாசிக்காவிட்டாலும் ஒரு நட்சத்திரமாக மின்னுவதற்குகாவது முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இக்காலத்தில் இளைஞர்கள் தோல்வியை நினைத்தேதுவண்டுவிடுவதால் முயற்சி என்றால் என்ன என்பதை அறிய முற்படுவதில்லை தோல்வி என்றச்சொல்லை ஒருவிபரீதமானச் சொல் என்று நினைத்துக் கொண்டு கண்ணையும் காதையும் பொத்திக் கொள்கின்றனர். அவர்கள் வெற்றியின் படிக்கட்டு தோல்வியே என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 

 

தோல்வியைக்காட்டிலும் தோல்வியைப் பற்றிய பயம் தான் மனிதனை பாழாக்கிறது அவனைச் சாதிக்க இயலாமல் குடத்தில் இட்ட விளக்காக வாழ்நாள் முழுவதும் அடக்கிவைக்கிறது. இப்போது எந்த இளைஞரையாவது பார்த்து தம்பி நீ ஏதாவது வேலைக்கும் தேர்வுக்கும்தயார் செய்கிறாயா என்றுக் கேட்டவுடனே அவர் அதற்கு அதெல்லாம் எங்கே நமக்குகிடைக்கப் போடுகிறது என்ற அலட்சிய பதிலையே தருவார். அதாவது முயற்சி செய்வதற்கு முன்பே தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளுகிற நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டனர் இன்றைய இளைஞர்கள் இவர்கள் தாமஸ் ஆல்வா எடிசனைப் பார்க்க வேண்டும்.ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானி.இவையனைத்தும் என்ன ஒரே நாளிலா அவர்கண்டுபிடித்தார். இதனை உருவாக்க பத்தாயிரத்கும் அதிகமான முறை அவர் தோல்வியை தழுவியிருக்கிறார்.

 

இன்று நாம் மின்விளக்கு, திரைப்பட வசதிகளை மகிழ்ச்சியோடு அனுபவிக்க அவரது முயற்சி தான் காரணம். தோல்வியடையும் ஒவ்வொரு முறையும் நான் வெற்றி பெறுவதற்கான மாற்று வழியை தெரிந்து கொள்கிறேன் என்றார் அவர்.தன்னுடைய முழு ஆய்வகமும் எரிந்துசாம்பலான பொழுதும், மனம் தளராத அந்த மாமனிதன் தனது மனைவியிடம் தனது தவறுகள் அனைத்தும் எரிந்துவிட்டன, இனிமேல் வெற்றிக்கான வழி பிறக்கும் என்று உத்வேகத்தோடு உரைத்தவர். இத்தகைய முயற்சியும் விழுந்தால் மீண்டும் எழுந்து ஓட வேண்டிய மனப்பாங்கும், உத்வேகமும் கொண்டு தோல்வியைக் கண்டு மனம் தளராமல் அதேயே வெற்றிக்கான திறவுகோலாக பயன் படுத்த இளையசமுதாயம் எழுச்சியோடு எழவேண்டும். எனவே, பெற்றோர்களும், சமுதாயமும் இன்றைய மாணவர்களை, இளைஞர்களை தோல்வியை எதிர் நோக்கும் மனப்பான்மையோடு வளர்க்க விழைய வேண்டும்.மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய அவர்களை ஊக்குவிக்க வேண்டும்,அதுவே இளைஞர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கடமையாகும், 

 

தோல்வியே  வெற்றிக்கான திறவுகோல்!

 

 தோல்வியே  வெற்றிக்கான படிக்கட்டு!

 

 தோல்வியே  வெற்றிக்கான வெற்றி !

 

 

Slider Image
8/30/2018 2:38:40 PM

தமிழர்களின் அறம் - 1

 தமிழ் மொழியின் சிறப்பு அனைவரும் அறிந்தே.உலகின் மூத்தக் குடியும் முதல் குடியும் தமிழ்க் குடியே. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மொழி நம் மொழி.தமிழ் மொழியின் பொற்காலம் என்றால் அது சங்ககாலம். பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் சங்க இலக்கியத்தின் இரு கண்கள். எட்டுத் தொகையில் ஒன்று புறநானூறு.தமிழர்களின் அறத்தையும் வீரத்தையும் பேசும் பேரிலக்கியம்.அதிலிருந்து சிலவற்றை தற்காலத் தமிழ்ச் சமூதாயத்திற்கு நினைவும்படுத்துவது. அவசியம், அவசரமும் கூட.

புறநாறூற்றில் பத்தாவது பாடல், பாடியவர் புலவர் ஊன் பொதி பசுங்குடையார்.பாடப்பட்டவர் சோழ மன்னன் நெய்வதலங்கானல் இளஞ்சேட் சென்னி. இந்தப்பாடல் மன்னனுக்காக கூறப்பட்ட அறவுரை அல்ல ,அறிவுரை.சங்கப் புலவர்கள் மன்னனை வாழ்த்தி வணங்கி இடித்துரைப்பதில் வல்லவர்கள்,இந்தப் புலவர் சோழ மன்னைப் பார்த்து நெய்தலங்கானல் நெடியோ  என்று வாழ்த்தி, இவ்வாறு உரைக்கின்றான். 
 
வழிபடுவோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே ;
நீ மெய் கண்ட தீதைகாணின்,
 ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி ;
வந்து, அடி பொருந்தி,முந்தை நிற்பின் 
தண்டமும்தணிதி ,நீபண்டையிற் பெரிதே
 
இதன்பொருள்:
 
நீண்டு நெடுங்காலம் வாழும் அரசனே, உன்னைப் போற்றி புகழ்ந்து வழிபடும் நபர்களைஆராய்ந்து அறிந்துகொள். அதாவது முகஸ்துதி செய்பவர்களிடம் ஜாக்கிரதையாக இரு! அடுத்தவர்களைப் பற்றி புறம் கூறுபவர்களின் பேச்சைக்கேட்காதே! ஒருவனின் தீமையை ஆராய்ந்து  தண்டனையை வழங்கு! தப்பு செய்தவர்கள் காலடியில் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டால் தன்டனையைக் குறைத்துகொடு! 
 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடப்பட்ட பாடலாக இருந்தாலும் இன்றைக்கும் இது பொருந்தும்! சங்ககால இலக்கியங்கள் சாகாவரம் பெற்றவை.காலம் கடந்து நிற்பவை.வாழ்க தமிழரின் அறம்!
 

Slider Image
8/29/2018 6:21:39 PM

இளைஞர் சக்தி

 தற்போயை இளைஞர்களைப் பற்றி வயது மூத்தவர்களிடமோ, நடுத்தர வயதுடையவர்களிடயே கேள்வி கேட்டும் பாருங்கள் உடனே பதில் வேகமாகவில்லேற்றப்பட்ட அம்பு மாதிரி வரும், எதற்கும்லாயக்கற்றவன், உதவாக்கரை ஊர்ச்சுற்றி, செல்பேசியும் கையுமாக அலைகின்றவன் என்று.ஒரு நிமிடம், நீங்கள் நினைத்தம் பார்க்கவும், இந்த இளைஞர்களுக்காக,திட்டுவதைத் தவிர வேறு எதாவது நீங்கள் செய்திருக்கிறீர்களா? நிச்சயமாக பதில் இல்லை என்றே வரும்.இந்தியாவின் மக்கட் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இளைஞர்கள் உள்ளனர்.உலகின் இளமையான நாடுகளில் முன்னணி வகிக்கிறது நமது நாடு. இந்த உலகத்திற்கே தேவையான உழப்பை நமது இளைஞர்களால் வழங்க முடியும்.

அதனால் தான் சுவாமி விவேகானந்தரும் இளைஞர்களே எதிர்காலம் என்றார்.அத்தகைய, எதிர்காலத்தின் தூண்களை போற்றி புகழாத நாடு எந்த விதத்திலும் முன்னேற முடியாது, எதிர்காலத்தின் கண்களாகத் திகழும் இளைஞர்களுக்காக நாம் செய்ய வேண்டியது ஒன்று,அது வாய்ப்புகள் மேலும் அந்த வாய்ப்புகளை தனதாக்கிக்கொள்வதற்கான திறமைகள்,அந்த திறைமகள் உருவாக்கத்தக்க கல்விமுறை இதைக் கொடுத்தால் இன்றைய இளைஞர்கள் இமயத்தில் என்ன சூரியனினில்கால் பதிக்கதயங்க மாட்டர்கள். தற்போதைய செய்தித்தாள்களில் பார்த்தால் இளைஞர்கள் ஒரு குழுவாகவோ,நற்பணி மன்றம் மூலமாகவோ அல்லது தமது நிறுவனங்கள் மூலமாகவோ ஏதாவது ஒரு சமூக சேவையை மேற்கொண்டு வருகின்றனர்.
 
அவர்கள் பல ஊர்களில் நீர்வள ஆதாரங்களை மறுச் சீரமைப்பு செய்து வருகின்றனர்.பல இடங்களில் பள்ளிகள்,கோயில்களை சுத்தம் செய்வது, மரங்கள் நடுதல், சுகாதாரம் பணிகள் மேற்கொள்வது என தமது நேரத்தை உபயோகமாக செலவழித்து வருகின்றனர்.ஆனால் இவை அனைத்தும் எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் நடந்துவருகிறது. நமது நாட்டை வலிவான, வளமான நாடாக மாற்ற வேண்டுமானால் இந்த இளைஞர் சக்தியை ஒழுங்குப் படுத்தி ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் இளைஞர் சக்தி விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.இளைஞர் சக்தி ஒரு காட்டாற்று வெள்ளம் அதை நல்வழியில் ஒழுங்குப் படுத்தி நாட்டைப் புனரமைக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்  அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது நமது கடமை.
 

Slider Image
4/15/2019 5:09:19 PM

பறக்கும் பெண்மணி

ராதிகா அஹிரே! ஜெட்  ஏர்வேஸ்  நிறுவனத்தில்  பணிபரியும்   25   வயது  ஏர்ஹேஸ்டஸ். இவர்   கடந்த   நவம்பர் 7ந் தேதி (2018 ஆம் ஆண்டு) மும்பையின் அந்தேரியில் உள்ள பல மாடிக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை தனது சாதுர்யத்தால் அணைத்து பெரும் விபத்தை தவிர்த்துள்ளார்.

பல மாடி கட்டிடத்தில் 9 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தை கண்டவுடன் சிறிதும் அஞ்சாமல் படி  மூலம்  9வது  மாடித்  தளத்தை   அடைந்து  அங்கிருந்து  தீ  அணைப்பான்களை உபயோகப்படுத்தி  விபத்தின் இழப்பை  குறைத்தது குறிப்பிடத்தக்கது. இவருடன் இவரது சகோதரர் ரோஹித் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் மகேஷ் உறுதுணையாக இருந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் தீ விபத்தை  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போதிலும் இவர் விமானப் பணிகளுக்காக பெற்ற பயிற்சியை தக்க நேரத்தில் விவேத்துடன் உபயோகப்படுத்தியது பெருமை அளிக்கிறது.இவரது சாதனையை பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் வசிப்பவர்கள் ஒன்று கூடி  குடியரசுத்  தினத்தன்று   பறைச் சாற்றி மற்றவர்களுக்கும் எடுத்தக்காட்டாக  புகழ்மாலை  சூட்டியுள்ளனர். அவரது  புகழ் என்றும்  வானில் பறக்கட்டும்!.

Slider Image
9/5/2018 3:10:19 PM

2.அர்ப்பணிப்பு ஆசிரியர்

 கடந்த பல நாட்களாக இந்தியா முழுவதும் மழை, வெள்ளம் தொடர்கிறது.மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. இருப்பினும்  இந்த  கஷ்டத்திலும் தன் கடமையைச் செவ்வனே செய்வதில் சிலர் எப்பொழுதுமே முன் மாதிரியாக விளங்குகின்றனர். ஆகஸ்ட்  மாதத்தின்  முதல்  வாரம் முதலே உத்தராகண்ட் மாநிலத்தில்  கடும் மழை எங்கும் வெள்ளக் காடு. ஆனாலும் அம்மாநிலத்தின் பித்தோர்கர்  மாவட்டத்தில்  தானிபாகர்  இலாக்காவில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியரான ஜோத் சிங் குன்வர், ஆற்றுப் பாலம் அடித்துச் செல்லப்பட்ட போதும் ஜிப்-லைன் மூலம் ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்.

தன் உயிரையும் பணயம் வைத்து பள்ளிக்குச் செல்லும் ஆசிரியரின்  கடமைக்கு வாழ்த்துக்கள்!

Slider Image
9/5/2018 6:16:21 PM

3. மனதில் உறுதி வேண்டும்!

 தற்போதைய  இளைஞர்கள்  ஏதாவதொரு  வேலையில் சேர்ந்துவிட்டாலே போதும், தான் உலகத்தை வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்கின்றனர். 

 
ஆனால், மானசி ஜோஷி என்ற 29 வயது பெண் ஆற்றிய சாதனை மகத்தானது. இந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற அகில உலக பாரா பாட்மிண்டன் போட்டியில் வெண்கல  பதக்கம்  பெற்ற  வீரப் பெண்மணி. இதில் என்ன அதிசயம்!  அவருக்கு  ஒரு கால்  இல்லை  என்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்தது. குஜராத்தைச் சார்ந்த சாஃப்ட்வேர்  பொறியாளரான  இவர்  ஏழு  ஆண்டுகளுக்கு  முன் நடந்த  சாலை விபத்தில்  தனது  ஒரு  காலை  இழந்தபோதிலும்  தனது  பாட்மிண்டன்   விளையாட்டை  கை விடவில்லை!
உடல் ஊனமாக இருப்பினும் மனதில் ஊனமில்லாதவர், மிகுந்த தைரியத்துடன் மன உறுதியுடன் தன் விளையாட்டை புறக்கணிக்காமல் தொடர் பயிற்சி மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பும் சில வெற்றிகளை குவித்த இவர் தற்போது இந்தோனேசியாவில் நடக்கவிருக்கும் பாரா - ஏஷியாட் விளையாட்டுப் போட்டிக்குத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது முக்கியம்.
 “முயற்சி  திருவினை  ஆக்கும்”  என்பதற்கு  இந்த  பெண்  ஒரு  உதாரணம்!
 

Slider Image
9/5/2018 4:25:31 PM

வானம் தொட்டுவிடும் உயரம்தான்!

 2. உங்கள் பேரார்வத்தை  பின்பற்றுங்கள்!


 வாழ்க்கையில் வெற்றி என்றால் பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் என்ற மனநிலை பலரிடத்திலும் காணப்படுகிறது. அதுவும் படித்தவர்களிடத்தில் இந்த எண்ணம்  அதிக அளவில்  புழங்குகிறது.  வெற்றியின் ஒரு பகுதிதான் பணம்.  இதனால்  திருப்தியும், ஆத்ம சந்தோ­மும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். 

 

வாழ்வில்  வெற்றி  பெற  வேண்டுமானால்  இலக்கு வேண்டும். அந்த இலக்கு மனதிற்குப் பிடித்தமான ஒன்றாகவும் இருக்க வேண்டும். இன்றைக்கு எத்தனைப் பேர் தன்  மனதிற்கு  பிடித்ததை செய்கிறார்கள்? பெரும்பாலானவர்கள் நண்பர்களுக்கு, குடும்ப உறுப்பினர்களுக்கு, மனைவிக்கு, இலக்கையே மாற்றிக் கொண்டு  ஏதோ  இருந்தால்  போதும்  என்று  வாழ்ந்து  வருகின்றனர். இதனால்  திருப்தியும்  சந்தோ­மும்  கிடைக்குமா  என்று  உறுதியாகக்  கூறமுடியாது, 

 

அதனால் தான்  follow your passion என்று கூறுகிறார்கள். 

 

அத்தகைய மனதிற்குப் பிடித்த இலக்கை அடையும் பொழுது பணமும், புகழும் மகிழ்ச்சியும் தானாக வந்து சேரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இதற்கு உதாரணமாக ஆப்பிள் கம்பெனியின் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களைக் கூறலாம். மனத்திற்கு விருப்பமானதை செய்யுங்கள் என்று அறிவுரைக் கூறியவர். தன்னுடையை   வேலையின்  மேல் காதல் கொள்ளவும்  என்று பறைச் சாற்றியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். 

 

ஃபேஸ்புக்கின் தலைவரான மார்க் ஜீக்கர்பெர்க் பணத்தை பின் தொடாதீர்கள்! மகிழ்ச்சியை பின்தொடருங்கள்! என்று கூறுகிறார். மனதிற்கு பிடித்ததை செய்வதால் பணம் கிடைக்காமல் போகலாம், ஆனால் மகிழ்ச்சி நிச்சயம் கிடைக்கும்! 

 

மாற்றி யோசிக்கவும்!  மகிழ்ச்சி உறுதி!

 

எது  உங்களது பேரார்வம் என்று கண்டறிய முடியவில்லை?

 

நேரம்  காலம்  பார்க்காமல்  எந்த   விதமான எதிர்ப்பார்ப்பும்  இல்லாமல், பணத்திற்காக  இல்லாமல் எந்த வேலையை  உங்களால்  செய்ய  முடிகிறதோ,  அதுவே  பேரார்வம்  எனலாம்!

 

Slider Image
9/5/2018 5:04:15 PM

தமிழரின் அறம் - 2

 மன்னர்களை தன்னுரையால் நயம்பட இடித்துரைப்பதில் வல்லவர்கள் தமிழ் புலவர்கள். தான் வறுமையில் வாடினாலும் செம்மையாக வாழ்ந்தாலும் கூற வேண்டியதை தக்க நேரத்தில் கூறாமல் விடுவதில்லை. அத்தகைய  உறவை  தமிழ் மன்னர்களும்  புலவர்களும் பேணிக் காத்தனர். இடித்துரைக்கும் புலவர்களை  கடிந்து கொண்ட  மன்னர்களை  காண்பதரிது.  அதனால்தான்  தமிழ் மன்னர்களால் செங்கோல்  ஆட்சி  புரிய  முடிந்தது.

மக்களும்  தம் மன்னனை தன் உயிராக  பாவித்து வந்தனர். இதனை புறநானூற்றுப் புலவன்  மோசிகீரனாரின்  இந்தப் பாடல்  மூலம்  நன்கு  அறிய  முடியும்!
 
நெல்லும்  உயிர்  அன்றே: நீரும்  உயிர்  அன்றே;
மன்னர்  உயிர்த்தே  மலர்தலை  உலகம்;
அதனால், யான் உயிர் என்பது  அறிகை
 வேன்மிகு  தானை  வேந்தற்குக்  கடனே.
 
மக்கள் வாழ்வதற்கு உணவும் ( நெல்லும் ) நீரும் அவசியம். அவற்றை உண்டுதான் அவர்கள் உயிர் வாழ்கின்றனர். ஆனால், அவை மக்களின் உயிர் கிடையாது. மன்னனின்  உயிரே அவர்கள் உயிர். எனவே மன்னன், மக்கள் உயிரை தன்னுயிராகக் கருதி அவர்களின் துன்பம் போக்கவேண்டும். அத்தகை இன்னலைத் துடைப்பதே வேந்தர்களின் கடமை. இதிலிருந்து, சங்க காலத்தில் மன்னனுக்கும் மக்களுக்கும்  இருந்த   நல்லுறவு புலப்படும்.
அதனால் தான் தெய்வப் புலவர் திருவள்ளுவரும் உலக உயிர்கள் அனைத்தும் மழையை நம்பி வாழ்வது போல, குடிமக்கள் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்  என்று பறைச் சாற்றினார்!
 

Slider Image
9/26/2018 2:01:55 PM

தமிழர்களின் அறம் - 4

 புறநானூறு தமிழ் வேந்தர்களின் அறத்தையும், மறத்தையும், கொடைத் தன்மையையும், உலகினை காக்க வேண்டி முறைப் பற்றியும்  எடுத்துரைக்கும் நன்னூலாகும்.

 

            மூவேந்தர்களின்  ஐந்து வகைப் பண்பு  நலன்களாகிய ஓதல், வேட்டல், ஈதல் படை வழங்குதல், குடியோம்புதல்  ஆகியவற்றை பறைச் சாற்றும் பழங்காப்பியம் புறநானூறு. 
            முடிஞ்சியூர் முடிநாகராயர் எனும் புலவன் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் மேல் பாடிய பாடல் மூலம் சங்க கால மன்னர்களின் அறம், தீரம், வீரம், கொடைப் பண்பு நன்கு புலப்படுகிறது. நிலம் போன்ற பொறுமையும், வான் போன்ற பரந்தத் தன்மையும், காற்றைப் போன்ற வலிமையும், தீயைப் போன்ற எரிக்கும் ஆற்றலும், நீரை  போன்ற  கொடைத் தன்மையும்   உடையவர்கள்   அக்காலத் தமிழ் மன்னர்கள். 
 
            சங்ககால மன்னர்கள் பால் புளித்தாலும், கதிரவன் மறைந்தாலும், நான் மறை வேதங்கள் திரிந்தாலும், குற்றமில்லாச் சுற்றத்தாருடன் வாழ்பவர்கள். அத்தகைய மன்னனை பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நீண்டு வாழ்க! என புலவர் முரஞ்சியூரார்   வாழ்த்துரைக்கின்றார். 

Slider Image
9/5/2018 5:16:52 PM

காக்க,காக்க, தண்ணீர் காக்க !

 நீர் இன்றி அமையாது உலகு என்றுரைத்தார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்!  இது நிதர்சன  உண்மை. இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு பக்கம் வெள்ளத்தினால் குடிப்பதற்கு கூட  நீர்  கிடைப்பத்தில்லை. மறுபக்கம்  வறட்சிக் காரணமாக  சொட்டு நீருக்கு மக்கள் அலைய வேண்டிய நிர்பந்தம். காரணம், நீர்வள மேலாண்மை இல்லாதது தான். தற்போது இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் குறிப்பாக கேரளா கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு போன்றவை வெள்ளத்திளால் பாதிக்கபட்டுள்ளன.

அதே சமயத்தில் நாட்டின் பல பகுதிகளில் போதுமான மழையில்லை. இந்தியப் பொருளாதாரம் வேளாண்மைச் சார்ந்தது. நாட்டில் 70% மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்.  ஆனால்  ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் சூதாட்டமாகவே விவசாயம்  நடைபெற்று  வருகிறது. மழைக்காலத்தில்  கிடைக்கும்  உபரி  நீரைச்  சேர்த்து  வைக்க  சரியான  திட்டமிடல் இல்லாதக் காரணத்தினால் பெருமளவு நீர் வீணாக கடலில் கலக்கின்ற சூழ்நிலை. உபரி நீர் சேகரம் குறைவதானால் ஏரிகளில் குளங்களில் போதுமான நீர் இருப்பு இல்லை. மழை மிகக்குறுகிய காலத்தில் பெய்து முடிந்து விடுவதால் அதனைச் சரியாக உபயோக படுத்த முடிவதில்லை. எனவே உபரி மழைநீரை சேகரிக்கவும் குளம், ஏரி, நீர்த் தேக்கங்களின் கொள்ளளவு உயர்த்தப்பட வேண்டியது  மிகவும் அவசியம். இதனால்  நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு குறைவான மழைக்காலத்தில் உபயோகத்துக்கு  தேவையான நீரும்  கிடைக்க வாய்ப்புள்ளது.
இது மட்டுமின்றி இந்தியாவின் ஆறுகள் உடனடியாக இணைக்கப்பட வேண்டும். குறைந்த  பட்சம்  தமிழக  ஆறுகளாவது  இணைக்கப்பட்டால்  ஒவ்வொரு ஆண்டும் எழும் தண்ணீர் பிரச்சினையைக் குறைக்கலாம். மாநிலங்களுக்கிடைய எழும் காழ்ப்புணர்ச்சி, வன்முறை போன்றவற்றையும் தவிர்க்க முடியும். தற்போது கூட கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவின் அனைத்து அணைகளும்  நிரம்பினாலும் தண்ணீர் பிரச்சனை  மீண்டும்  தலைதூக்கும் சூழ்நிலை ஏற்படக் கூடும். எனவே கிடைக்கும் மழை நீரை எப்படி சேகரிக்க வேண்டும்? நிலத்தடி நீரை உயர்ந்த என்ன செய்ய வேண்டும்?  தமிழக ஆறுகளை இணைக்க என்ன நடவமிக்கை தேவை என்பது குறித்த  நீண்டகால  மற்றும்  குறுகிய  கால  திட்டமிடல்  மிகவும்  அவசியம்!
 
“வங்கத்தில்  ஒடிவரும்  நீரின்  மிகையால்  மையத்து   நாடுகளில்  பயிர் செய்குவோம்”
என்ற  பாரதியின்  கனவு  எப்பொழுது  நனவாகும்!
 

Slider Image
9/5/2018 5:28:20 PM

ப்ளாஸ்டிக் என்னும் அரக்கனை ஒழிப்போம்!

 ப்ளாஸ்டிக் என்பது நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. “நீர் இன்றி அமையாது  உலகு” என்றான் வள்ளுவன். ஆனால், ப்ளாஸ்டிக் இன்றி அமையாது உலகு என்பது இன்றைய மக்களின் குரல். 

அனைத்து பணிகளுக்கும்  ப்ளாஸ்டிக்  உறுதுணையாக  இருப்பினும் இன்று உலகத்தை உருக்குலைக்க வைக்கக்கூடிய நிலையில் ப்ளாஸ்டிக் அரக்கன் தலைவிரித்து ஆடுகிறான். இதன் கொடூரத்தை  நாம் அறிந்த  போதிலும்  அதன் பயனைக் குறைக்க நாம் என்ன செய்திருக்கிறோம்? ஊருக்குத் தான் உபதேசம் ப்ளாஸ்டிக்கை  உபயோகப்  படுத்தாதே  என்று!
 நாம்  எழுதும் பேனாவிலிருந்து பறக்கும் விமானம் வரை எங்குப் பார்த்தாலும் ப்ளாஸ்டிக் மயம். எங்கும்  இறைவன் மயம்  காணாமல்  போய் எங்கும் ப்ளாஸ்டிக் மயம்!  ஒவ்வொரு  ஆண்டும்  இந்தியாவில்  ஏறக்குறைய 16000 டன்னுக்கும்  அதிகமாக ப்ளாஸ்டிக் கழிவு தூக்கி எறியப் படுகிறது. இதில் சுமார் 60 % மட்டுமே மறுசுழற்சி  செய்யப்படுகிறது.மீதம் நிலத்திலும் , நீரிலும்  ஆற்றிலும் குளம் குட்டைகளிலும் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் கழவுகள் அழிவதற்கு நூற்றுக் கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும். மனிதன் தன்னையும்  தன்  வருங்கால  சந்ததியையும்  காக்க  வேண்டுமெனில், சுற்றுச் சூழலை காக்க வேண்டுமெனில் அதனை மாசுப்படுத்தும் முக்கிய காரணியான ப்ளாஸ்டிகை ஒழிக்க  வேண்டும்.  ஆனால்  அது  முடியுமா!  முடியும், மனம்  இருந்தால்! 
ஒவ்வொரு ஆண்டும் நாம் உலகம் முழுவதும் 300  மில்லியன் டன் ப்ளாஸ்டிக் கழிவுகளை  உற்பதித்திச் செய்கிறோம். அது உலகின் மொத்த மக்கள் தொகையின் எடைக்குச் சமம். இந்தக்கழிவுகள் நீர் ஆதார அமைப்புகளை  கழிவு  நீர்  குட்டைகளாக  மாற்றிவிட்டது. ஆறுகள்  ப்ளாஸ்டிக்கை எடுத்து செல்லும் கருவிகளாக மாறிவிட்டன. நிலத்தில்  கொட்டப்படும்  கழிவுகள்  நிலத்தடி நீரை மாசுப்படுத்துவதுடன் நிற்காமல் நோய்களை பரப்பும் கொசு உற்பத்தி மையங்களாக மாறிவிட்டன. ஆற்றில் காணப்படும் கழிவுகள் கடலில் வாழும் உயிரினங்களை  அழிக்க ஆரம்பித்துவிட்டன. அவற்றின் உடலின் சேர்வது மூலம் நமது உணவுச் சங்கிலியில் நுழைந்து நோய்களை உருவாக்கி வருகிறது. 
இவ்வாறு நிலம், நீர், காற்று, விலங்குகள், நீர் வாழ் உயிரினங்கள், பறவைகள் என  உலகின் அனைத்துப்  பகுதிகளையும் பாதிக்கும்  ப்ளாஸ்டிக் அரக்கனை ஒழிக்க வேண்டியது நமது அனைவரின் கடமை! அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி தக்க நடவடிக்கைகளை நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், 
நாம், உலகம்  அழிவதை  நம்   கண்ணால்  காண  வேண்டிய  நாள்  வெகுதூரம்  இல்லை!
 

Slider Image
9/14/2018 5:00:50 PM

வரும் முன் காப்போம்!

             இந்த ஆண்டில் இந்தியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனை கேரளாவில் வந்த வெள்ளப் பெருக்கு. 1924 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளா இந்த பேரழிவைச் சந்தித்திருக்கிறது. இதற்கு  முக்கியமான காரணங்களில் ஒன்று  வரலாறு காணாத மழை. ஆகஸ்ட்  மாதத்தில்  ஒன்று  முதல்  இருபதாம் தேதி வரையில் மட்டுமே  கிட்டத்தட்ட 77 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த மாதத்தில் ஏற்பட்ட மழையளவு வழக்கமான மழையளவைக் காட்டிலும் மூன்று மடங்காகும். இதனை எதிர்பார்காத காரணத்தினால் ஏற்பட்ட அழிவு சுமார் இருபதாயிரம் கோடிக்கும் மேல் என்று வல்லுனர்கள் மதிப்பீட்டுள்ளனர். இதில்  தனிப்பட்ட மற்றும் பொதுச் சொத்துக்கள் அடக்கம். உயிர்  இழப்புகள்  தனி. 

           இத்தனை  அழிவுக்கு காரணமான அடிப்படைக் காரணிகளில் முக்கியமானது, அதிகரித்து  வரும்  வெப்பநிலையும்  அதனைச்  சார்ந்த  காலநிலை மாற்றமும். உலக  அளவில்  இந்த காலநிலை மாற்றத்தினால் மழை, வெள்ளம், கடல்மட்டம் உயர்வு, நிலப்பகுதிகள் மூழ்குவதோடு மட்டுமின்றி  சமீபகாலமாக  காட்டுத் தீயும் ஏற்பட ஆரம்பித்துள்ளது. 
 
           தெற்கு ஆசியாவை பொறுத்தமட்டில் தென்னிந்தியா ஒரு ஹாட் ஸ்பாட்டாக உள்ளது. இந்த  நூற்றாண்டில்  இறுதிக்குள்  நமது  நாட்டின்  வெப்ப நிலை 1.5 செ  - 3 செ  அதிகரிக்க  வாய்ப்புள்ளதாக  ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கேரளாவில் பெய்த கன மழையை  போல் வருங்காலத்தில் மத்திய மற்றும் தெற்கு                     இந்தியாவில் கனமழை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கேரளாவை பொறுத்தவரையில் மழை மட்டுமின்றி, போதிய முன்னேற்பாடின்மை, காடுகள் அழிப்பு, ஒழுங்குப்படுத்தப் படாத நகர வளர்ச்சி, சுரங்கப் பணிகள் என பல காரணங்களால் இன்று  அதிகப்படியான  அழிவு  ஏற்பட்டுள்ளது எனக் கூறலாம். வளர்ச்சி, மேம்பாடு என்ற  பெயரால்  மேற்குத் தொடர்ச்சி மலையின் வளங்கள் சூறையாடப் பட்டதால்தான் இந்த  அழிவு  என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் மாதவ் காட்கில் கூறியுள்ளார். 
 
             இவர், மேற்குத்  தொடர்ச்சி மலை சம்பந்தமான சுற்றுச்சூழல் கமிட்டியின் தலைவராவார். இந்தக் கமிட்டி சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கோவாவிலிருந்து கேரளா வரையுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை பாதுகாப்பது தொடர்பான தனது அறிக்கையை அரசுக்கு சம்ர்ப்பித்துள்ளது. அவற்றை அமல் படுத்தியிருந்தால் தற்போது ஏற்பட்டடுள்ள சேதத்தில் 50% வரை குறைந்திருக்கலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர் காட்கில் கூறியுள்ளார்.  கேரள அழிவுகளையும், காரணங்களையும்  ஆராய்ந்து வரும் பல்வேறு ஆராட்சியாளர்கள்  இது  ஆரம்பமே என்றும்  இதுபோல்  மேலும் பல நிகழ்வுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றும் கூறுகின்றனர்.
 
             நாம் கண் கெட்ட பின் சூரிய  நமஸ்காரம்  செய்வதைவிட “வருமுன் காப்பதே மேல்” என்று உணர்ந்தால் பேரழிவுகளை  தவிர்க்கலாம். அதனால் ஏற்படும்  இழப்புகளை குறைக்கலாம் !
 

Slider Image
9/27/2018 7:58:17 PM

4.உருவு கண்டு எள்ளாமை வேண்டும்

  இந்த வார சாதனையாளர் மும்பையைச் சார்ந்த ஜென் சடாவர்தே  என்ற 10 வயது பெண்.

 
மும்பையில் தாதர் பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவர் என்ற 17 மாடிக் கட்டிடத்தில் தீடீரென்று தீப் பிடித்தது. தீ 12வது மாடியில் ஏற்பட்ட போதும் வேக வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது. அப்போது 10 வயதான இந்தப் பெண் தனது மாடியிலும்  மற்றப் பகுதியிலும்  உள்ளவர்களையும் தன்னுடையக் அறிவுக் கூர்மையால்  காப்பாற்றி  உள்ளர். இந்தப் பெண்ணால்  உயிர்  பிழைத்தவர்கள்  16 பேர். புகையைப் பார்த்தவுடன், இந்தப் பெண் அங்கிருந்தவர்களிடம் பதட்டமடைய  வேண்டாம் என்றும் ஈரமான துணி காட்டன் போன்றவற்றை  கொண்டு வாய் மற்றும் மூக்கினை  முடிக்கொண்டு  சுவாசிக்கவும்  வேண்டுகோள்  கொடுத்தார்.
 
           இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மூச்சு திணறாமல் இவர்கள்  படிவழியாக பதட்டமின்றி  இறங்கி  தன்னுயிரை காப்பாற்றிக்  கொண்டுள்ளனர். ஈரத் துணியினால் 16 மக்களின் உயிரைக் காப்பாற்றிய  சிறுமிக்கு  கோடி  வணக்கங்கள்.
 
         “உருவு  கண்டு எள்ளாமை  வேண்டும்”  என்ற வள்ளுவனின் வாக்கு இங்கு உயிர் காப்பாற்றியிருக்கிறது.
 

Slider Image
9/14/2018 5:10:49 PM

தமிழர்களின் அறம் - 3

              சங்க கால மன்னர்கள் அறமும், மறமும் கொண்டவர்கள். இல்லையயன்று கூறாத இரக்க குணம் நிறைந்தவர்கள். எதிரிகளை புறமுதுகுக் காட்டி ஓடச்செய்த போதிலும் இல்லையயயன்று வருபவர்களை இன் முகம் காட்டி பரிசுப்பொருட்களை வழங்கும் வள்ளல்கள். அவர்கள், மக்களுக்கு நெல்லையும் நீரையும் உயிராகக் கருதாமல் தன் மன்னனை உயிராகக் கருதியவர்கள். 

           அத்தகைய  மன்னர்களின்  வழி வந்தவன் பாண்டியன் கருங்கை ஒர்வாள் பெரும் பெயர் வழுதி என்பவர். அவனது வீரத்தையும் தீரத்தையும்  பண்புகளையும் அழகாகப் பாடியுள்ளார் இரும்பிடர்த் தலையார். முழு நிலவு போன்ற  வெண்கொற்றக் குடையின் மூலம் மண்ணில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் குளிர்ச்சி தந்தவனே! இல்லையயன்று கூறாத நெஞ்சம் உடையவனே! பொற்கவசம் அணிந்த யானை மேல் அமர்ந்து போர் புரிபவனே! வீரக் கழலை அணிந்தவனே! ஈரச் சந்தனம் அணிந்த மார்புடையவனே! உன்னை நாடிவரும் இரவலருக்கு  வறுமை  நீங்கும்  அளவுக்கு அள்ளித்  தருவதுதான் உன்னுடைய வலிமை என்று அரசனது உண்மையான வலிமை என்ன என்று அழகாக எடுத்துரைக்கிறார்  இரும்பிடர்த் தலையார்!
         நிலம்  பெயர்ந்தாலும்  சொற்  பெயராத  மன்னனைப்  பார்த்து ஊர் இல்லாத, நீர் இல்லாத, நீளமான வழியை கடந்து வரும் வாழத் தெரியாத இரவலுருக்கு அவர்களது நிலையை எண்ணிப் பார்த்து வாரி வழங்குக!  என்று புலவர் அறம் பாடுகிறார். அதனையும்  இரவலரது  முகம் அறிந்து வழங்க வேண்டுமாம். 
 
அதனால் தான் மனத்தில் உள்ளதை குறிப்பதால்  உணர  வல்லவனை  தெய்வத்தோடு  ஒப்பிட்டான்  திருவள்ளுவன்.
 

Slider Image
9/14/2018 5:14:28 PM

வழி விடுங்கள்! வாழ விடுங்கள்!

சமீபத்தில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில், நீலகிரியில்  அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள 27 ரிசார்ட்களை உடனடியாக  மூடுவதற்கு  உத்தரவிட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கர்நாடகா தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் உள்ள பிரம்மகிரி, நீலகிரி, முதுமலை, பண்டிப்பூர், வயநாடு  காட்டுப் பகுதிகளில் சுமார் 6000 க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. யானைகளின் வழித்  தடங்கள் பல  இந்த மாநிலங்களில்  அமைந்துள்ளது, இந்த  வழித் தடங்களில்  காலப்  போக்கில்  அனுமதியின்றி பல கட்டிடங்கள், வீடுகள் மற்றும் ரிசார்ட்டுகள் கண் மூடித்தனமாக கட்டுப்பட்டுள்ளன. மற்றும் தொடர்ந்து எந்த விதமான சட்டம் தொடர்பான அச்சமின்றி இந்த  சட்ட  விரோத  கட்டுமானங்கள்   நடை பெற்று  வருகிறன்றன.
  
            இதுட்டுமின்றி  இந்தியாவில் ரயில் பாதை அமைப்பு, நீர்த் தேக்கங்கள், காடுகள் அழிக்கப்பட்டு பெரிய அளவிலான  தோட்டப் பயிர் எஸ்டேட்டுகள், சுரங்கப் பணிகள், குடியமர்வு போன்றவையும் யானைகளின் வாழிடங்களையும், வழித் தடங்களையும்  மெல்ல அழித்து வருகின்றன. 
            இதனால் யானைகளுக்கு தேவையான  வாழிடங்கள் சுருங்கி  உணவுக்காகவும்,  நீருக்காகவும்  அலைந்து  திரிய  வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. இதனால் மற்ற விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. தந்தங்களுக்காகவும் ஆண் யானைகள்  கொல்லப்பட்டு வருகின்றன. 
 
             யானைகளையும்  அவற்றின்  வாழிடங்களையும்   காப்பதற்காக  அரசு 1992-ம்  ஆண்டு யானை பாதுகாப்பு  திட்டத்தை தொடங்கியது.  தற்போதைய  நிலவரம்  படி  சுமார் 27.000 யானைகள் இந்தியாவில் உள்ளன. வாழிடங்களும், வழித் தடங்களும் அழிக்கப்படுவதால் யானை - மனிதன் இடையே  மோதல் அதிகரித்து பயிர் சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டு வருகிறது. எனவே, உடனடியாக  வனப்பகுதிகளில்  நடத்து  வரும்  அதிகாரப் பூர்வமற்ற   நடவடிக்கைகளை   நாம்   நிறுத்தியாக   வேண்டும்.
 
            வன விலங்குகளில் கம்பீரமான யானையை  நாம்  நம்முடைய குடும்பத்தில் ஒருவராக பாவித்தால் மட்டுமே அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும்! அதன் மூலம் பல்லூயிர்  பாதுகாப்பு  உறுதிச்செய்யபடும்!  இல்லாவிட்டால்  யானைகளை எதிர்காலத்தில்  வினாயகர்  சிலைகளில்  மட்டுமே  காணமுடியும்!
 யானைகளையும்  வாழ  விடுங்கள்!
 

Slider Image
9/14/2018 5:19:33 PM

வானம் தொட்டு விடும் உயரம்தான்!

 3. உச்சம்  தொட  கடுமையான  உழைப்பு  வேண்டும்!

 

வெற்றியின் விலை கடின உழைப்பு!

             எடுத்த  காரியத்தில்  வெற்றி   பெற  வேண்டுமானால்  அதற்கு  ஒரே வழி  கடின உழைப்பு  மட்டுமே. சிறந்த பெற்றோராக வேண்டுமா  இல்லை  ஆசிரியராக  வேண்டுமா  அல்லது ஒலிம்பிக்  போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டுமா! அனைத்திற்கும் ஒரே வழி உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே!

            வெற்றிக்கான குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. அவ்வாறு இருந்தாலும் அந்த  வெற்றி நீண்ட நாட்கள் நீடிக்காது. அது நீர்க் குமிழி போன்றது. குறுக்கு வழி வெற்றிகள் ஒரு மனிதனின் இமேஜை குறைப்பதுடன் இல்லாமல் அவனை ஒரு தன்னம்பிக்கையற்ற மனிதனாகவும் மாற்றிவிடும். கடின உழைப்பு,  இலக்கின்  உண்மை  தன்மையை  உணரவைக்கிறது.

           கடின  உழைப்பு  ஒருவனின் உறுதித் தன்மையை, சுய மரியாதயை, எதையும் தாங்கும் சக்தியைக் கொடுக்கிறது. கடின உழைப்பின் மூலம் கிடைக்கும் வெற்றி ஒருவனுக்கு  ஆத்ம  திருப்தியை  கொடுக்கிறது. உலகில் புகழ்பெற்ற கூடைப்பந்து வீரரான மிக்கேல்  ஜோர்டான்  தனது  சிறு வயதிலேயே கடுமையான  வாழ்வின் சுழலில் சிக்கித் தவித்தவர், ஆனால் அவரது தந்தையின் மூலம்  கடின உழைப்பின்      அனுபவத்தை  புரிந்து கொண்டு பயிற்சி செய்து இன்று பணக்கார புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவராக   திகழ்கிறார்.

           உலகின்  புகழ் பெற்ற நிறுவனமான ஜெனரல் மோட்டார் கம்பெனியின் தலைமை பொறுப்பை அடைந்த முதல் பெண் மேரி பர்ரா. தனது 18 வயதில்  அந்த  நிறுவனத்தின் சேர்ந்தவர், 33 ஆண்டுகள்  கடுமையான உழைப்பிற்கு பிறகு அந்நிறுவனத்தில் தலைமை  பொறுப்பை  அடைந்து  புகழ்  எய்தியுள்ளார்! 

             எந்த துறையாக இருந்தாலும், இலக்கு எதுவாக இருப்பினும், வெற்றிக்கு வழி கடுமையான உழைப்பு மட்டுமே!

 

Slider Image
9/26/2018 11:56:34 AM

ஆசிய விளையாட்டு போட்டியும் இந்தியாவும் !

 தற்போது முடிவடைந்த  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, மொத்தம் 69 பதக்கங்களுடன் 8- து இடத்தைப் பிடித்துள்ளது,நாம் பெருமையடைய வேண்டிய வி­யம். இதில் 17 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

இந்தோனேஷியாவில் கோலகலமாக நடந்த இந்த விளையாட்டுத் திருவிழாவில் வழக்கம் போல சீனா, 289 பதக்கங்கள் பெற்று முதலிடத்திலும், ஜப்பான்  நாடு 205 பதக்கங்களுடன் இரண்டாமிடத்திலும் தங்களது வெற்றியை நிலைநாட்டியுள்ளது. நமது நாட்டைக் காட்டிலும் சிறிய மற்றும் குறைந்த மக்கள் தொகையுடைய கொரியா,  இந்தோனேசியா, உஸ்பெக்கிஸ்தான் போன்ற  நாடுகள் அதிகப்  பதக்கங்களை  கொள்முதல்  செய்துள்ளதை   ஆய்ந்துப்  பார்க்க  வேண்டும்.
நமது நாடு 2010 ஆம் ஆண்டு சீனாவில் நடைப்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில்   பெற்ற  பதக்கங்களை  விட அதிகமானவற்றை தற்போது பெற்றிருந்தாலும் நமது நாட்டின் பரப்பளவு, மக்கள் தொகை, வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி  ஆகியவற்றுடன்  ஒப்பிடும்  பொழுது  இந்தப்  பதக்கங்களின்  எண்ணிக்கை குறைவேயாகும். குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்னவெனில், தொடர்ச்சியாக  நமது நாட்டின்  பதக்க  எண்ணிக்கை  உயர்ந்து  வருவதேயாகும். 
             இந்த ஆண்டு விளையாட்டில் பங்குப்பெற்ற வீரர்களில் 60% க்கும் மேலானவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாகும். தற்போது பல்வேறு மாநிலங்களும் வெற்றி பெறும் வீரர்களுக்கு பணத்தையும் பரிசையும் அள்ளி   வழங்கி  வருவதால்   இளைஞர்களிடையே  ஆர்வம்   பெருக  ஒரு  காரணம் எனலாம். முக்கியமாக தடகளப்போட்டிகளிலும். (Track and Field events) வில், பாட்மிட்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம், எடைத் தூக்குதல் போன்றவற்றிலும் வெற்றி வாய்ப்பு  அதிகமாக   கிடைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைப்பெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும்  66 பதக்கங்கள் பெற்று இந்தியா சிறப்பான இடத்தை தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.
மேற்கண்ட நிகழ்வுகளை காணும் போது 2020-ல் ஜப்பானில் நடக்கவிருக்கும்  ஒலிம்பக்  போட்டியிலும்  நமது வாய்ப்புகள்  பிரகாசமாக  உள்ளது.
எனவே  வீரர்களின் தேர்வுகளிலும் அவர்களின் பயிற்சி மற்றும் வசதிகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் தற்போது நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றிப்  பெற்ற  பெரும்பாலான  வீரர்கள்  சாதாரண  நிலையிலுள்ள குடும்பங்களிலிருந்தும், கிராமப்புறங்களிலிருந்தும்  வந்துள்ளனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.
கிராமங்கள் தான் இந்தியாவின் கெளரவம் என்பதை ஆசிய விளையாட்டுப் போட்டிகள்  நிரூப்பித்துள்ளன.
 

Slider Image
9/26/2018 12:28:35 PM

ஏட்டுச் சுரைக்காய் !

 உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடு இந்தியா. மக்கள் தொகையில் இரண்டாவது இடம். பால், பழம், காய்கறிகள் தானியங்கள் உற்பத்தியில் முன்னனி. அதே போன்று எதற்கும் உதவாத வாழ்வின் பயன்பாட்டிற்கு உபயோகமில்லாத கல்வி அளிக்கும்  நிறுவனங்களின் குறிப்பாக தொழில் நுட்பக் கல்லூரிகளின் பெரும் சந்தையாக  உள்ளது.

இந்த கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மையானவை  பணத்தைக் கொள்ளையடிக்கும் அமைப்புகளாகவும் பட்டங்களை வழங்கும் தொழிற்சாலைகளாகவும்   இயங்குகின்றன  என்றால்  மிகையாகது. 
 
நமது நாட்டில் ஏறக்குறைய 10,000 தொழில் நுட்பக் கல்லூரிகள் உள்ளன. இவற்றின் மாணவர் இருக்கை 40 இலட்சம் என்ற போதிலும் 2017-2018 ஆம் ஆண்டில்  கிட்டத்தட்ட  27  இலட்சம்   இருக்கைகள்   நிரம்பாமல்  காலியாகவே இருந்தன.
பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் போதிய  உள் கட்டமைப்பு வசதிகளும் கற்பிக்கும்  ஆசிரியர்களும்  இல்லாததால்  மாணவர்கள்  அவற்றில்  சேர போதிய ஆர்வம் காட்டவில்லை. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (AICTE) சுமார் 800 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு  நடவடிக்கை  எடுத்துள்ளது. இதற்கு  முக்கிய  காரணங்களில் ஒன்று கடந்த 5 ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான சேர்ப்பு என்பதே. அந்தக் கல்லூரிகள் வேண்டுமானால் மற்ற நல்ல கல்லூரிகளுடன் இணைக்கப்படலாம் அல்லது அவற்றின் மாணவர்  இருக்கை 50 சதவீதமாக குறைக்கப்படவும் கூடும் அல்லது முழுமையாக  மூட  நடவடிக்கை  எடுக்கப்படும்.
 
2016-2017 ஆம் ஆண்டில் மொத்தம் உள்ள 15.71 இலட்சம் பொறியியல் சீட்டுகளில் 7.87 இலட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய ஒரு இலட்சம் இடங்கள் காலியாக உள்ளன. 2014-2017-ல்  மட்டும்  ஏறக்குறைய 400 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
 
இதிலிருந்து  என்னத்  தெரிகிறது? பொறியியல் கல்லூரிகளில் உள்ள வசதிகளும், ஆசிரியர்களும் காலத்திற்கேற்ற வேலை வாய்ப்பை உறுதிச் செய்யவில்லை. பொறியியல் படித்த மாணவர்களில் 50% வேலையில்லாமல் உள்ளனர். தொழிற்சாலைகளின் கூற்றுப்படி பொறியியற் பட்டதாரிகளில் வெறும் 6% மட்டுமே வேலைக்கேற்ற தகுதிகளைப் பெற்றுள்ளனர். அதாவது 94% மாணவர்கள் படிக்கும் காலத்தில் தொழில் நிறுவனங்களுக்கேற்ற நுட்பத்தை பெறவில்லை என்பதே  உண்மை.
 
எனவே பொறியியற் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, தகுதி வாய்ந்த   ஆசிரியர்களை அமர்த்துதல், பல்வேறு படிப்புகளின் சிலபஸ்  முறையை தொழில் நிறுவனங்களுக்கு   உகந்தவாறு மாற்றியமைத்தல், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலை  உறவுகளை  மேம்படுத்தல் புதிய படிப்புகளை குறிப்பாக ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு  (Artificial Intelligence) சைபர்  செக்யூரிட்டி, க்ளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலிடிக்ஸ் போன்றவற்றை  அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை உடனடியாகச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் படித்த பொறியியற் பட்டதாரிகளுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி, கண்ணை மூடிக் கொண்டு   பொறியியற்  கல்லூரிகளை   திறக்க  அனுமதிக்கவும்  கூடாது.
 
 
இல்லாவிட்டால், படித்த  வல்லுனர்கள்  நொந்து   நூலாவதைத்  தவிர்க்க  முடியாது!
 
 

Slider Image
9/26/2018 1:18:45 PM

கும்பல் கொலையும் குடிமக்களும்!

 நமது நாட்டில் மக்கள் தொகையின் எண்ணிக்கைப்  போலவே சமுதாயப் பிரச்சினைகளும் அதிகம் பன்முகத் தன்மையில் ஒற்றுமை என்பது ஒரு கனவாகிவிடுமோ எனத் தோன்றுகிறது. நாட்டில் ஒரு பக்கம் மழை, வெள்ளம், வறட்சி, வேலை  வாய்ப்பின்மை  போன்ற  பல்வேறு இயற்கை மற்றும் சமூக இடர்பாடுகள்.   நடு நடுவே ரூபாயின் மதிப்புச் சரிவு, இறக்குமதி அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார பிரச்சினைகள் மறுப்பக்கம். இவற்றிற்கு இடையே சமீபகாலமாக ஒரு பெரிய பிரச்சினை, கும்பல் கொலை(Mob Lynching).

கடந்த சில மாதங்களாக நமது நாட்டில், பல மாநிலங்களில் குறிப்பாக அசாம், இராஜஸ்தான், உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகியவற்றில் திடீர் திடீரென பல இடங்களில் மனிதர்கள் மீது பல்வேறு காரணங்களுக்காக கொலைத் தாக்குதல் நடைப் பெற்று வருகிறது. பசுக்களை கடத்துதல், குழந்தைகளை கடத்துபவர்கள், கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என பல்தரப்பட்ட காரணங்கள் இதற்கு கூறப்படுகின்றன. இந்தத் தாக்குதலில் பெரும்பான்மையானவர்கள்  உயிர்  இழந்துவிட்டனர்.
 
 
இந்த நிகழ்ச்சிகளைக்  கண்டும்  காணாமல்   நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் தற்போது உச்ச நீதி மன்றம் கும்பல் கொலையைக் கட்டுப்படுத்த, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க  புதிய சிறப்பு சட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசைக் கேட்டுள்ளது. நம்மை  பொறுத்த வரையில் நாட்டில் இது தற்போதைய நிகழ்வாக  இருப்பினும்  கும்பல் கொலை  நிகழ்வுகள், அடிமைத்தனம் ஒழிவதற்கு முன்பு அமெரிக்காவிலும் இருந்திருக்கிறது. பல்வேறு ஐ.நா அறிக்கைகள் மூலம் சூடான், நைஜீரியா, ஹைத்தி  போன்ற  நாடுகளிலும்  இந்த  வன்கொடுமைகள் காணப்படுகின்றன.
 
 
ஆழமாகப் பார்த்தால் இந்த தாக்குதல் நடத்தப்படும் பொழுது பொதுமக்களோ, காவல் துறையோ உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சமூகக் கட்டுபாடுகள்  இந்த  பாதகச் செயல்களைத் தடுக்க தவறிவிட்டது. இந்த நிகழ்வுகள் நாட்டின் சட்டத்தைக் கேள்வி குறியாக்கி உள்ளது. நீதியின் மூலம் தண்டனை வழங்கும் முறையை இவை சிதைக்க கூடும். எதிர்காலம் ஒரு காட்டுமிரான்டித் தனமான போக்கினால் பெரும் பாதிப்படையக்கூடும். கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என ஒவ்வொருவரும் சட்டத்தையும் நீதியையும் தன் கையில் எடுத்தால் நாம் பெற்ற சுதந்திரத்திற்கு எந்தவித அர்த்தமும் இல்லை. நடவடிக்கை  எடுக்க வேண்டியவர்கள்  உடனடியாகத்   தலையிடுவது  நாட்டிற்கு  நல்லது.
 
 
நல்லதோர் வீனை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
 
 

Slider Image
9/26/2018 1:38:25 PM

நெஞ்சுப் பொறுக்கிதில்லையே!

  தற்போது எங்குப் பார்த்தாலும் எந்தச் செய்தித்தாளைப் பார்த்தாலும் ஒரு கொடுமையான வி­ச் செய்தியைக் காண்கின்றோம். அது குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கோரம், அதுவும் குழந்தைகளுக்கான காப்பகத்தில் நடைபெற்று  வரும்  கொடுமை.

         பெண்களையும்  குழந்தைகளையும்  தெய்வமாக  வணங்கும் நமது நாட்டில் இன்று   ஒரு  கலாச்சார  பேரழிவாக  மாறி  வரும்  அக்கிரமங்கள்,
         நாட்டில் பீஹார்,உத்திரப்பிரதேசம்,பஞ்சாப்,தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களில் உள்ள  அரசு மற்றும்  அரசு சாராக் காப்பகங்களில் தான் இந்த அக்கிரமம் காலம் காலமாக நடத்துவருவது நமக்குத் தெரியவில்லை அல்லது தெரிந்தவர்கள் அதை வெளியேச்  சொல்லவில்லை. 
 
         இத்தகைய காப்பகங்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் எந்தவொரு ஆதரவும் இல்லாதவர்கள், அன்பு காட்ட யாரும் இல்லாதவர்கள், வாழ்வின் கோரப்பிடியில் சிக்கி ஏதாவதொரு தவறுக்காக காப்பகத்தில் வைக்கப்பட்டிருப்பவர்கள். ஆறுதலும் அரவணைப்பும் கிடைக்க வேண்டிய இடத்தில் இவர்களுக்கு கிடைத்தது வன்முறையும் வசவுகளும் மட்டுமல்ல சொல்லமுடியாத பாலியல் தொல்லைகளும்தான். மறுவாழ்விற்காக வந்தவர்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம், கட்டாயம். 
 
           எடுப்பார்  கைப்பிள்ளை  என்ற  நிலை, இத்தகைய நிகழ்வுகள் வெளி உலகுக்கு வந்தது எப்படி? முதலில் பீஹாரில் சமூக அறிவியலுக்கான டாட்டா இன்ஸ்ட்டி யூட்டயால் நடத்தப்ட்ட ஆய்வு  தான் இதற்கெல்லாம்   மூல காரணம். அதைத் தொடர்ந்து பல மாநிலங்களும்   விழித்துக்   கொண்டன.  இதனால்  பல  கொடூரங்கள்  வெளிப்பட்டன. 
 
           பிரச்சினைகள்  உச்சத்தைத்  தொட்டவுடன்  உச்ச   நீதி மன்றம் தற்போது சாட்டையை  தன்கையில் எடுத்துள்ளது. குழந்தை  உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் உச்சநீதி மன்றத்தில் கொடுத்த  ரிப்போர்ட்டின்படி நாட்டில் உள்ள 2,874 குழந்தைகள் காப்பகத்தில் வெறும் 54 மட்டுமே திருப்திகரமாக உள்ளது. இதிலிருந்து கொடூரத்தின் வேர் எவ்வளவு ஆழமானது என்பது புரியும். இந்த கொடுமைகள் தொடரக் காரணம் காப்பங்களில் தொடர் ஆய்வு இல்லாததும் சிறு பிரச்சனைகளை முளையிலேயே   தடுக்காமல்   விட்டதும்தான். 
 
           பெரும்பாலான காப்பகங்கள் அரசு உதவி பெற்ற போதிலும் அவை அரசு சாரா அமைப்புகளால்  நடத்தப்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகளின்  பின்னணியில்  உள்ள  பலம் பொருத்தியவர்களால்தான் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல இருந்திருக்கலாம். பெண்கள் நகையணிந்து கொண்டு எப்பொழுது இரவில் சுதந்திரமாக நடமாடுகிறார்களோ அப்போதுதான் இந்தியவிற்கு  விடுதலை என்றார் காந்தி. ஆனால்  தற்போது   நிலைமையோ   தலைகீழாக  உள்ளது. 
 
           உடனடியாக அனைத்து தரப்பினரும் இந்தக் கொடுமையிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை காக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் விடுதலையில்லா விட்டாலும் பெண் கொடுமைகள் களையப்பட வேண்டும். பெண்கள் பாதுகாக்கப் படவேண்டும். அதுதான் உண்மையான  சுதந்திரம்.  அப்பொழுதுதான்  “நம்மை  பிடித்த பிசாசுகள் போயின”  என்ற   மீசைக்  கவிஞனின் கூற்று  நனவாகும்.
 

Slider Image
9/26/2018 1:48:21 PM

சத்திழக்கும் தானியங்கள்!

 தற்போது அனைவரும் பசுமைக்குடில் விளைவு பற்றியும் அதற்கான காரணங்களையும் அறிவர். ஆனால் அதற்கு மூலக் காரணமான பசுமைக் குடில் வாயுக்கள்தான் குறைந்தபாடில்லை. தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களின்  அளவு  தொடர்ந்து  அதிகரித்து  வருகிறது.

 

           மேத்யு ஸ்மித் தலைமையிலான ஹார்வர்ட் பல்கலைக் கழக ஆய்வுகுழு ஒன்று அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவலை வெளியிட்டிருக்கிறது. அதாவது, வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்து வருவதால் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் ( அதாவது, கி.பி.2050-ல் ) மக்களின்  முக்கிய  உணவு  தானியங்களான கோதுமை, அரிசி, சோளம், உருளைகிழங்கு, போன்றவற்றில் சத்துக் குறைப்பாடு ஏற்படும்   என  அந்த  ஆய்வறிக்கை  கூறுகிறது.
 
           குறிப்பாக தானியங்களில் உள்ள புரதம், ஜின்க், இரும்புச் சத்து போன்றவை ஏறக்குறைய 17 % குறைய வாய்ப்புள்ளது. இதனால் இந்தியா,சீனா,ஆப்பிரிக்கா,தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்காகிய நாடுகளின் ஏழை மக்கள் சத்துக் குறைப்பாட்டால் கடும் பாதிப்புக்குள்ளாவர், 
          ஜின்க் குறைப்பாட்டால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் தன்மை குறையும். வயிற்றுப் போக்கு நோய் அதிகரிக்கும். நுரையீரல் சம்பந்தமான சுவாசக் குறைபாடுகள் தலை  தூக்கும். இரும்புச் சத்து குறைவால் புத்திக் கூர்மை குறைவு மற்றும் அனீமியா, பிரசவத்தின் போது ஏற்படும் தாய் இறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுவாக, உடல், மூளை வளர்ச்சி கடும் பாதிப்பு அடையும். இதனால் இந்தியாவில் 40 - 50 மில்லியன் மக்கள் பாதிக்கப்படக் கூடும், வளர்ச்சி பேரழிவுக்கு அழைத்து   செல்கிறது.  
 
 
இயற்கையைப்  பாதுகாப்போம்,  மனித   இனத்தை   பாதுகாப்போம்!
 

Slider Image
8/8/2019 12:43:21 PM

 

còzD gì½ ÃM© ÃVçÅï^!

          20‡gD ±uÅVõ½_   Asl[   Øk©ÃWçé   cBì¡ Ö[® Îò ¶ÃVBï«\Vª  x½çk   ¼åVÂþ åïìÍm kòþÅm. cBìÍm kòD As Øk©ÃWçéBV_   °uÃ|D  ïVéWçé   \Vuźï^  Ãé clöªºï^ ¶ak>uz Ö[®  ïV«ð\Vþ  kòþÅm. ÷ç\  T| sçá¡   ¨[Ãm  >u¼ÃVm  gì½Âþ[ ÃM© ÃVçÅï^   ¶asuz    ïV«ð\Vþ c^á>Vï sÞQVMï^ >u¼ÃVm ïõ¦¤Ím  í¤¥^áªì.

            1990ï¹_  ÖòÍ>ç>s¦   J[¤_ Îòúz >V[ ÃM©ÃVçÅï¹[ >½\[ c^á>Vï ¶¤sB_ ¶¤Qìï^ ¶¤sÝm^áªì. ¼\KD ÃM©ÃVçÅï¹[ ¶½©Ãz]ï^ còzk>V_ ï¦_ clöªºï^ *m °uÃ|D sçá¡ïçá¥D g«VFÍm   kòk>Vï   åVìÝ  ï¼«VoªV s_tºÂ¦[ Ã_ïçé  ïwïÝç>ß   ÄVìÍ> ½_ ¼kÂªì   ¨ÐD  sÞQVM  ¶¤sÝm^áVì.

            ÷ç\ z½_ kV¥ÂïáV_ cò塚ÃVkm gì½Âþ[ ÃM©ÃVçÅ \â|\_é å\m   kVµÂçï¥D>V[!

            Ö>çª  cðìÍm  ]òÍ>  ¼kõ½Bm  å\m  ï¦ç\!

Slider Image
9/26/2018 2:17:57 PM

4. உன்னை நம்பு !

   வானம் தொட்டுவிடும் உயரம்தான்!

 

சாதிக்கப் பிறந்தவர்கள் நிர்ணயிக்க வேண்டியது, இலக்கு. அந்த  இலக்கை அடைய வேண்டுமெனில் தேவை  கடின உழைப்பு மற்றும் அந்த இலக்கு உங்கள் மனதின் விருப்பத்திற்கு அருகாமையில் இருக்க வேண்டும். அண்ணாந்து படுத்துக் கொண்டு  வெறும் ஆகாயத்தைப் பார்ப்பதை விட  மனதுக்கு பிடித்தமான இலக்கு எது என்பதை   உற்று   நோக்க   வேண்டும். 

 

           நீங்கள் மனதிற்குப் பிடித்த இலக்கை முடிவு செய்துவிட்டீர்கள்! கடின  உழைப்பிற்கும் தயாராகி விட்டீர்கள் அப்படியயன்றால் உங்கள் வெற்றி  உறுதியா? இல்லை, வெற்றிக்  கனியைப்  பறிக்கத்  தேவையானது  தன்னம்பிக்கை  எனும்  ஆயுதம். ஆம், தன்னம்பிக்கை இல்லாவிட்டால் ஒருவன் எத்துனை வல்லவனாக இருந்தாலும்   வாழ்க்கைப்  போரில்  வெற்றியடைய   முடியாது .
 
          தன்னம்பிக்கை என்பது உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை உங்களது உள் மனதிலிருந்து  எண்ணங்கள், செயல்கள் மூலமாக வெளிப்பட வேண்டும். எலியாக இருக்கும் நீங்கள் புலியாக வேண்டுமானால் முதலில் உங்களை புலியாக கற்பனை செய்து பாருங்கள்!   அவ்வளவு  நம்பிக்கை  உங்கள் மனதில் ஏற்படும். 
 
          எவரெஸ்டில் ஏறி வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமா, மலையேறும் வீரராக உங்களை நினைத்துப் பாருங்கள்! ஒலிம்பிக்கில் பதகக்கம் வெல்ல வேண்டுமா, விளையாட்டு வீரராக நினைத்து பாருங்கள்! ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆக வேண்டுமா, தன்னம்பிக்கையோடு   நினைத்துப் பாருங்கள்!  
 
            நீங்கள்  எந்த  நிலைமையில்  இருந்தாலும்  ஏழை, பணக்காரன், ஆண், பெண், யாராக  இருப்பினும் உங்களால் முடியும், என்று நம்புங்கள்.  நீங்கள் விரும்பிய   இலக்கை அடைந்தபின் உங்கள் வாழ்வு எப்படி இருக்கும் என்பது கற்பனைச் செய்து பாருங்கள்! இலக்கை அடையத் தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்துங்கள்! நடுவில் எந்தவொரு தடையேற்படினும் நிற்காதீர்கள்! தொடர்ந்து முன்னேறுங்கள்! இதையயல்லாம் நீங்கள் செய்யும் பொழுது தன்னம்பிக்கைத் தானாக மலரும்!   கனவு  கைக்கூடும்! வாழ்வில் ஒளி ஏற்படும்! தன் கையே தனக்கு உதவி என்பது  போன்று  தன்னம்பிக்கை  வாழ்வை   வளமாக்கும்!  
 
 
நீங்கள்   சாதிக்கப்  பிறந்தவர்கள் !
 
 
 

Slider Image
9/27/2018 8:01:10 PM

5.அடிப் பட்ட பெண் புலி

   சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடைப் பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி அறிந்திருப்பீர்கள்.  அதில்  இந்தியாவைச்  சேர்ந்த  பல  இளம்  விளையாட்டு வீரர்கள்  வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்! அவர்களில் ஒருவர்தான் இந்த அடிப்பட்ட பெண் புலி  ஸ்வப்னா பர்மன். 

 

          இவர் ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் பறித்துள்ளார்! இது 7 போட்டிகளை உள்ளடக்கிய  விளையாட்டு. இவரது  தந்தை ஒரு ரிகா ட்டி, தாய் தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர். மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தைச் சார்ந்தவர்.  இரண்டு  கால்களிலும் ஆறு- ஆறு விரல்களை கொண்ட இவருக்குச் சரியான  விளையாட்டு  ஷீ  கூட  கிடைக்கவில்லை. 
 
          அது மட்டுமல்ல போட்டிக்கு இரண்டு மாதத்திற்க்கு முன்பிருந்தே முதுகுவலி, மூட்டுவலி, கணுக்கால் வலி என்று தொடர்ச்சியாக கடுமையான வலிகளால் அவதிப்பட்டு வந்தவர். ஆனால்  இவரது பயிற்சியாளர் சுபாஷ் சர்க்கார் கொடுத்த ஊக்கம் மற்றும் தனது தாயாருக்கு தங்கம் இல்லாமல்,திரும்ப மாட்டேன் என்று கொடுத்த வாக்கு ஆகியவற்றால் வலிகளை மறந்து, அடிப்பட்ட புலியாக பாய்ந்து தங்கத்தை தட்டிப் பறித்துள்ளார்! 
 
“விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் வெற்றிகளை அள்ளித் தரும்” என்பதை ஸ்வப்னா  பர்மன்  நிரூபித்துள்ளார்!
 

Slider Image
10/3/2018 3:53:48 PM

கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பையை அகற்ற முயற்சி!

 உலகின் மிகப்பெரிய ஆறுகள் கடலில் கொண்டுச் சேர்க்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அளவிட முடியாத அளவிற்கு கடல் சுற்றுச் சூழலை பாதித்து வருகிறது, கடல் வாழ் உயிரினங்களான மீன், திமிங்கலம், மற்றும் இதர விலங்கினங்களும், தாவர இனங்களும் தங்கள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இவற்றையயல்லாம் கருத்தில் கொண்டு நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த   “Ocean Cleanup” என்ற  அரசு சாரா நிறுவனம் பசிபிக் கடலின் பிளாஸ்டிக் குப்பையை அகற்ற முதன் முயற்சியாக ஒரு எந்திரத்தை கடலில் இறக்கியுள்ளது.  தற்போது ஏறக்குறைய 1.8 டிரில்லியன் பிளாஸ்டிக் துண்டுகள் மிதக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் 50% குப்பையை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
 
வருடத்திற்கு கிட்டத்தட்ட 9 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலைச் சென்றடைகின்றன. எனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி சிறிதாக இருந்தாலும் சில ஆண்டுகளில் கடல் பாதிப்பைக் குறைக்கலாம். எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதுதான் ஒரே வழி. அது மட்டுமின்றி பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகளைச் சென்றடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும்  நமது கடமை  என  சுற்றுச் சூழல்  வல்லுனர்கள் கூறுகின்றனர்.
 

Slider Image
10/3/2018 3:40:37 PM

5.அச்சம் தவிர் !

 வானம் தொட்டு விடும் உயரம்தான்!

 
எந்தவொரு மனிதனுக்கும் அச்சம் என்பது பிறப்பிலேயே ஊறியது. அச்சம், பசி போன்றவை  நம்முடைய  அடிப்படைக்  குணங்களில்  ஒன்று.  ஆனால்  அந்த  அச்சமே    நமது  முன்னேற்றத்தைத்  தடுக்க  முயன்றால்  என்ன  செய்வது?
 
அச்சம்  ஒரு  மனிதனின் தற்காப்பிற்கான உணர்வு. அதுவே வாழ்வின் தடைக் கல்லாக மாறவிடலாமா? நிச்சயமாகக் கூடாது. அதனால்தான் தேசியக் கவிஞன் மகாகவி பாரதி உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை என்று  கவி பாடி  மக்களை  அச்சத்திலிருந்து  வெளிக் கொணர  பேரிகை  முழங்கினான்.
 
அச்சத்தின் ஊற்று கவலை. எனவே கவலையைத் தவிர்த்து தைரியத்தைப் பெருக்க வேண்டும். எந்தவொரு வி­யத்தின் மீது அச்சம் இருக்கிறதோ, அதனை மீண்டும் மீண்டும்  செய்கிறபோது  அச்சம் காணாமல் ஓடிப் போய் விடும். அதற்கு ஒரே வழி  அச்சத்தை  நேர்  கொண்டு  மோத  வேண்டும்.
 
நீங்கள் உங்களது இலக்கை அடைய முயலும்போது எந்தவிதமான அச்ச உணர்வையும் கொள்ளத் தேவையில்லை. என்னால் முடியும்! எனது ஆற்றல் எல்லையில்லாதது! என்று முழுமையாக நம்புங்கள். உங்களை நீங்களே நம்பும் பொழுது  கவலைகள்  நீங்கும்! அச்சம்  உங்களை  அடையப்  பயப்படும்.
 
உங்களுடைய இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகளை, செயல்களை படிப்படியாக செய்ய ஆரம்பித்தாலே போதும் கவலையும், அச்சமும் சிறிது சிறிதாக காணாமல் போவதை உங்களால் உணர முடியும். ஒருவனுடைய நோய், ஏழ்மை, தோல்வி  அனைத்திற்குமே  ஆதாராமாக  அமைவது  அச்சமே!
அச்சம்  தவிர்த்தால் உச்சம் நிச்சயம்!  இந்த  அச்சத்திலிருந்து  விடுபட்ட மகாத்மா காந்தியின்  வாழ்க்கையில்  நடைப்பெற்ற ஒரு சிறு நிகழ்ச்சியைப் பார்ப்போம்!
 
இங்கிலாந்தில் சட்டம் பயின்ற காந்தி முதன் முதலாக மும்பையில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் தனது முதல் வழக்கிற்காக வாதாட எழுந்தார். ஆரம்பத்திலிருந்தே அவருக்கு மற்றவர்களுக்கு முன்பு பேசுவதற்கு தயக்கம், பயம் இருந்து வந்தது. அவர் தன்னுடைய சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளபடி, வாதாட எழுந்தவுடன் தலைச் சுற்றியது, வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை, கைகள் நடுங்கின, நாக்கு வறண்டது, கண்கள் இருண்டன. எழுந்தவர் எந்த ஒரு வார்த்தையும் கூறாமல் அச்சத்தில் அமர்ந்து தன்னைத் தானே நொந்துக் கொண்டார். தன்னுடைய க்ளையன்ட்டுக்கான பணத்தையும் திருப்பிக் கொடுத்ததுடன் மட்டுமின்றி  வேறொரு வக்கீலைப்  பார்த்து  கொள்ளும்படியும்  கூறிவிட்டார்.
 
இப்படி, பல பேருக்கு முன்னால் எழுந்து பேசவும், வாதாடவும் தயங்கிய காந்தியடிகள்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த மகானாக மாறினார். இதற்கெல்லாம் ஒரே காரணம் அச்சத்தை அகற்றி தன்னம்பிக்கையோடு செயல்பட்டதுதான் எப்பொழுது நாம் செயல்பட தொடங்குகிறோமோ அப்பொழுது அச்சம் தூக்கி எறியப்படுகிறது. தன்னப்பிக்கை தலை தூக்குகிறது. வெற்றிக் கனி கைகளில்  விழுகிறது.
 

Slider Image
10/3/2018 4:15:52 PM

தமிழர்களின் அறம்-5

 தமிழர்களின் கொடை, ஒழுக்கம், அறம், வீரம், வன்மை, திண்மை போன்ற பெரும் பண்புகளைப் போற்றி பேசும் பெரும் இலக்கியம் புறநானூறு. அத்தகைய இலக்கியத்தின் ஒரு கனியாக விளங்குகிறது  புலவர் நரிவெரூஉத் தலையார் பாடியச் செய்யுள். இந்தப் பாடல் சேர மன்னன் சேரமான் கருவூரேறிய  ஏள்வாட்  கோப்பெருஞ் சேரல்  என்பவனின்  மேல்  பாடப்பட்டதாகும்.

அவனைப் பார்த்து,
எருமை அன்ன கருங்கல் இடை தோறு,
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்,
கானக நாடனை
என்று வாழ்த்துகிறான். எருமை போன்ற வலிவான, கருப்பான, பெரிய கருங்கற்களை கொண்ட பசுக் கூட்டம் போன்ற யானைக் கூட்டத்தைக் கொண்ட காட்டை சொந்தமாகக் கொண்டவனே! நீ ஒரு பெருமகன், நீ விரும்பினால் நான் ஒன்று  கூற  விரும்புகிறேன்  என்கிறான் புலவன்.
 
அருளையும் அன்பையும் ஒதுக்கிவிட்டு நரகத்தில் வாழும் மக்களைவிட்டு நீ தூரமாக இரு. அவர்கள் துயரத்தில் உழல்பவர்கள் இன்பம் அறியாதவர்கள். அத்தகையவருடன்  சேராதிரு  என்கிறான், சேரனைப் பார்த்து.
 
கிடைத்த அரிதானப் பதவியைக் கொண்டு உனது நாட்டை, குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல் பேணிப் பாதுகாக்க வேண்டும். அருளும் அன்பும் கொண்டு குழந்தையை பாதுகாப்பது போல் எனது நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என சங்கப் புலவன் வலியுறுத்துகின்றான். அருளும், அன்பும் மன்னனுக்கு  இரு  கண்கள்  போன்றது!
 

Slider Image
10/8/2018 2:18:49 PM

மிஸ். சென்னை

 உலகில் பல பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்துள்ளனர். இந்த சாதனைகளுக்குப் பின்னால் ஊக்கம் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. அவமானங்களும் பாதிப்புகளும் கூட சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன. இதற்கு உதாரணமாக  தமிழகத்தைச்  சார்ந்த  ரூபி பியூட்டி என்ற பெண்மணியை கூறலாம்.

உடல் பருமனாக இருந்ததால் கணவனால் கைவிடப்பட்டவர் இவர். ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தை. கணவனால் ஒதுக்கப்பட்ட இவர் மன வைராக்கியத்துடன் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மூலம் தனது எடையை குறைத்ததுடன் மட்டுமின்றி மன உறுதியுடன் ஃபிட்னஸ் பயிற்சி பெற்று இன்று மிஸ்.சென்னை பட்டம் பெற்று பெண்களுக்கு  வழிகாட்டியாக  திகழ்கிறார்.
 
பெரும்பாலான பெண்கள் ஒரு வருடத்தில் அடைய வேண்டிய இலக்கை, இவர்  ஆறு மாதங்களில் கடின பயிற்சி மூலம் தன்னுடைய இலக்கை அடைந்து வெற்றி வாகை சூடியுள்ளார், என அவரது பயிற்சியாளர் கார்த்தி கூறுகிறார்.
 
தன் உடலைப் பார்த்து வருத்தப்படும், வெட்கப் படும் பெண்களுக்கு  ஒரு  நம்பிக்கை நட்சத்திரமாக  இவர்  விளங்குவார்  என்பதில்  நமக்கு  மகிழ்ச்சி!
 

Slider Image
10/3/2018 4:28:54 PM

தற்கொலையைத் தடுப்போம் ! பெண்களை காப்போம் !

 பெண்ணின் பெருந் தக்க யாவுள! பெண்ணை விட பெருமை மிக்க வேறு என்ன இருக்கிறது, என்கின்றான் திருவள்ளுவன். ஆனால் பெண்களின் நிலை என்ன? சமீபத்தில் “லான்செட்” மருத்துவ இதழில் வெளியான தற்கொலைப் பற்றிய ஓர் ஆய்வறிக்கையின்  படி உலகின் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 37% பெண்கள் இந்தியர்கள்.

2016 –ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகில் தற்கொலைச் செய்து கொண்ட 8,17,000 பேரில் 2,30,314 பேர் இந்தியர்கள். இந்த ஆய்வறிக்கை 1990 லிருந்து 2016 வரை  கிடைத்த  விவரங்களை  அடிப்படையாகக்  கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் 1990 லிருந்து கிட்டதட்ட 40% (2016-ல்) அதிகரித்துள்ளது தற்கொலை விகிதம். தற்கொலை  செய்து  கொள்ளும்  உலக  ஆண்களில்  இந்திய ஆண்களின் பங்கு ஏறக்குறைய  24%  ஆகும்.
நம் நாட்டின்  பொருளாதார வளர்ச்சி உலகமயமாதல் காரணமாக வேகமாக வளர்ந்து  வந்த  போதிலும்,  வளர்ச்சியும் தற்கொலை வீதமும் ஏறுமுகமாகவே 1990 லிருந்து  உள்ளது. பெண்களைப் பொருத்த வரையில் 15-29 வயதுக்குட்பட்ட பெண்கள்தான் அதிகமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுவும்  திருமணமானப் பெண்களின்  எண்ணிக்கை  அதில்  அதிகம்.
 
மாநிலங்களைப் பொருத்தமட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம் இந்த தற்கொலைப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. குறைவான வளர்ச்சிக் கொண்ட வட மாநிலங்களில் தற்கொலை வீதம் குறைவாக உள்ளது. மாநிலங்களின்  வளர்ச்சிக்கும்  தற்கொலைக்கும்  இடையே உள்ள தொடர்பையும் ஆராய்ந்து  பார்க்கவேண்டியது  மிகவும்  முக்கியம்.
 
நமது   நாட்டை  பொருத்தமட்டில்  தற்கொலை வீதம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட போதிலும் முக்கிய காரணங்களாக நகரமயமாதலும் பாதிக்கப்பட்ட குடும்பச்சூழலும், கல்வியறிவு, வருமானம், நிதிப் பிரச்சினைகள், வீட்டு வன்கொடுமைகள், வரதட்சணை, மது, உளவியல் பிரச்சினைகள் மற்றும் இதர சமூக பொருளாதார காரணங்களும் விளங்குகின்றன.
 
இத்தகைய  தற்கொலை  பிரச்சினைகளை   உடனடியாக  தீர்க்க தகுந்த தற்கொலைத் தடுப்பு முயற்சிகளும், கொள்கைகளும் உருவாக்கப் படவேண்டும். முக்கியமாக  மக்களின் மன ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த தேச மன நலக்கொள்கை,2014  தக்க  முறையில்  அமல்  செய்யப்பட வேண்டும். இந்த பிரச்சினையை ஒரு  பேரிடராக  கருதாவிட்டால்  பொருளாதாரத்தில்  ஆறாவது  பெரிய நாடாக இருப்பினும் தற்கொலையில் முதலிடம் பெற்று அவமானப்படுவதை தவிர்க்க இயலாது. முக்கியமாக  பெண்களின்   வாழ்க்கையை  காப்பாற்ற வேண்டியது நமது கடமை. 
 
அப்பொழுதுதான், நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும்  கொண்ட மாதர்களை  நாம்  போற்ற முடியும்! தையல் வாழ்க பல்லாண்டு,பல்லாண்டு இங்கே என வாழ்த்த முடியும்.
 

Slider Image
10/8/2018 2:40:04 PM

வானம் தொட்டு விடும் உயரம்தான்!

 6. கவனக் குவிப்பு (FOCUS)

இளைஞர்கள், மாணவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் ஒரு இலக்கு வேண்டும். அந்த  இலக்கை அடைய வேண்டுமானால் தன்னம்பிக்கையோடு, அச்சம் இன்றி முயற்சி செய்ய வேண்டும். கடின உழைப்பு மட்டுமே வெற்றிக்கு வழி செய்யும். இத்துடன்  இலக்கை அடைய தகுந்த திட்டமிடலும், அந்த திட்டத்தை ஒரு முகத் தன்மையுடன்  மனதை  குவித்து  செயல்படுத்த  வேண்டியது  மிகவும்  அவசியம்.

ஒரு செயலை செய்ய துணிந்து விட்டால், இரவு பகல் பாராமல், சிந்தனை சிதறாமல் அதனை நிறைவேற்ற வேண்டும். சூரிய ஒளி எப்படி ஒரு லென்ஸ் மூலம் குவிக்கப்பட்டவுடன் காகிதத்தை எரியச் செய்கிறதோ அதுபோன்ற மனக்குவிப்பு, ஒரு முகத் தன்மை ஒவ்வொருவருக்கும்  அவசியம். ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டால் தேவையில்லாமல் பல செயல்களில் கை வைக்க கூடாது. அதனால் குவிப்பு சிதறி ஆற்றல் விரயமாகிவிடும். இதனால்  மூளையின் செயல்திறன் குறைவதுடன் சிந்தனையிலும்  சிதறல்  ஏற்படும்.

இலக்கை அடைவதற்கான வழியை தேர்ந்தெடுத்தவுடன் தேவையின்றி அவ்வழியை மாற்றக் கூடாது. அவ்வழியில் செல்லும்போது தவறுகள் நடக்கலாம். தோல்விகள் ஏற்படலாம். ஆனால் அதற்காகத் துவண்டு விடாமல் விடா முயற்சியோடு இலக்கு நோக்கி முன்னேற வேண்டும். அடி மேல் அடி வைத்தால்  அம்மியும்  நகரும் என்பார்கள் அதைப் போல.

வெற்றியை அடைய உங்களுடைய ஆற்றல், நேரம், கடின உழைப்பு அனைத்தையும்  முழு வீச்சோடு  பயன்படுத்துங்கள். தேவையற்ற கவனச் சிதறல்களை விட்டொழிக்கவும். தற்காலத்தில் செல்லிடப் பேசி, முகநூல், வாட்ஸ் அப் போன்ற கணக்கில் அடங்கா தொல்லைகள் அதிகம். இவற்றையயல்லாம் மூட்டைக் கட்டி  ஓரமாக  வைத்துவிட்டு  முன்னேறுவதற்கான  வழியைப் பாருங்கள்.

ஒரு முகத் தன்மையை, மனதை குவிக்க உங்களது திட்டத்தை எழுதி வைத்துக் கொண்டு நேரப்படி அவற்றை செயல்படுத்துங்கள். அப்பொழுதுதான் எவ்வளவு தூரம் நீங்கள் பயணம் செய்தீர்கள் என்பதும் இலக்கை அடைய இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டும் என்பதும் தெரியும். அதே நேரத்தில் ஒரே நாளில் இலக்கை அடைய எண்ணாதீர்கள். அதற்கு பொறுமையும் விடா முயற்சியும் அவசியம். ஒவ்வொரு அடியாக எடுத்து வையுங்கள். ஒரு நாள் வெற்றி நிச்சயம் ! எடுத்த வேலையை காரணமின்றி தள்ளிப் போடாதீர்கள்.

இலக்கு தெளிவாக உள்ளதா உங்களது முழுக் கவனமும் அதில் ஈடுபாட்டுடன் உள்ளதா என்பதற்கு மகாபாரதம் வழி சொல்கிறது. துரோணாச்சாரியார் பஞ்ச பாண்டவர்களுக்கு வில்வித்தை கற்று தருகிறார். அந்த பயிற்சி இடத்தில் உள்ள ஒரு மரத்தைப் பார்த்து, என்ன தெரிகிறது என்று பாண்டவர்களிடம் ஒவ்வொருவராக கேள்வி எழுப்புகிறார். ஒருவர் மரம் தெரிகிறது என்கிறார்! மற்றொருவர் இலை தெரிகிறது என்கிறார்! ஆனால் வில்வித்தையில் வீரனான அர்ஜுனன் மட்டுமே அம்மரத்தில் உள்ள பறவை தெரிகிறது, அதன் கண் தெரிகிறது என்கிறான்! உங்களுடைய மனக் குவிப்பு இதுபோன்று இருந்தால்தான் வெற்றிக் கனியை தட்டிப் பறிக்க முடியும். “கையில் உள்ள வேலையின் மீது உங்களது அனைத்து எண்ணங்களையும் ஒருமைப்படுத்துங்கள்” என தொலைப் பேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹம்பெல் கூறுகிறார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

 

Slider Image
10/8/2018 3:00:19 PM

இன்று கேரளா ! நாளை கொங்கன்!

 கடந்த மாதத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. சில மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார, இயற்கை அழிவுகளை சரிச்செய்ய பெரும் பணமும் சில ஆண்டுகளும் தேவைப்படலாம். இத்தகையப் பேரழிகளுக்கு, மக்கள் இயற்கையின் மேல் நடத்திய  கொடுந் தாக்குதல்தான்  முக்கிய  காரணம்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை பல்லுயிர் பண்முகத் தன்மையைப் பாதுகாக்க மாதவ் காட்கில் மற்றும் கஸ்தூரி ரங்கன் போன்ற சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் கொடுத்துள்ள அறிக்கையில் ஓரளவாவது பின்பற்றுதல் அவசியம்.
 
இன்று கேரளாவிற்கு ஏற்பட்டள்ள நிலைமை, நாளை கொங்கன் (கோவா மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகள்) பகுதியிலும்   ஏற்படாலாம் என்று காட்கில் கூறுகிறார். பூனாவில், பூனே இன்டர்நேஷ்னல் சென்டர் நடத்தி வரும்  ஒரு ஆய்வரங்கில்தான் இவர் இப்படிக் கூறியுள்ளார். இந்தப்  பகுதியின்  சுற்றுச் சூழலை பாதுகாக்க தொழிற்சாலைகளுக்கு தரப்படும் அனுமதிகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். வி­த்தை உமிழும் தொழிற்சாலைகளை அமைப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்றும் அத்தகைய முயற்சிகளை கிராமப் பஞ்சாயத்துகள் எதிர்க்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இவற்றையயெல்லாம் பார்க்கும் பொழுது நாம் “கண்களை விற்று சித்திரம் வாங்குகிறோமோ” என்று எண்ணத் தோன்றுகிறது. மக்களின்  விழிப்புணர்வு  இன்றையத் தேவை!

Slider Image
11/8/2018 2:45:42 PM

தங்கப் பெண்மணி, மனு பாக்கர்(Manu Bhaker)

 அர்ஜென்டினாவில் தற்போது நடைப் பெற்று வரும் இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்று  நமது  நாட்டிற்கு  பெருமைச் சேர்த்துள்ளார். துப்பாக்கி  சுடும்  போட்டியில்  இந்தியாவின்  முதல்  தங்கம் என்பது குறிப்பிடத் தக்கது.

கடந்த இந்தோனேசிய ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இவர் பங்கேற்றாலும் எந்த பதக்கமும் இவருக்கு கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த பாக்கருக்கு 
தற்போதைய  தங்கம்  தன்னம்பிக்கையைக்  கொடுத்துள்ளது.
 
ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜர் மாவட்டத்தில் உள்ள கொரியா என்ற கிராமத்தைச் சார்ந்தவர் மனு பாக்கர்.

Slider Image
10/8/2018 3:12:07 PM

தமிழர்களின் அறம் - 6

 போர் நெறி முறை

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட புற நானூற்றுப் பாடல்கள் அக்கால வாழ்வியல் முறைகளை எடுத்துக் கூறுவதுடன் மட்டுமின்றி அரசர்களின் வீரம், கொடை, பண்பு நலன்களையும், அக்கால சமூகத்தின் கட்டமைப்பு சமூகத்தின் நல்ல மற்றும் கெட்ட மாண்புகளையும்  எடுத்துரைப்பதில்  கண்ணாடியாக  விளங்குகிறது.

போர் என்பது மனிதன் தோன்றிய காலத்தே ஏற்பட்டுவிட்ட ஒன்று. முற்காலத்தில் ஆநிரைகளையும், நிலத்தையும் கைப்பற்ற ஏற்பட்ட போர் தற்காலத்தில் பொருளாதார காரணங்களுக்காகவும், இனங்களை  அழிப்பதற்காகவும்  நடைப்பெற்று  வருகின்றன.

அக்காலப்  போரின்போது  சில மாண்புகள் மற்றும் வரைமுறைகள் பின்பற்றப் பட்டன என்பதற்கு  புறநானூறு  சாட்சியம்  சொல்கிறது.

இதற்குச் சான்றாக, நெட்டிமையார் எனும் புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மேல் பாடிய பாடல் எனலாம்.

ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும்

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்

(புறநானூறு-9)

போர் என்பது வன்மையுடையோர் பிற வன்மையுடையோரிடும் மோதுவதே! எளியவர்களை, வறியவர்களை மோதலுக்கு அழைப்பது அறமாகாது ! அதனை மேற்கண்ட வரிகளில் காணலாம்.

போருக்கு முன்பு பசுக்களையும், பசு போன்ற பார்ப்பனர்களையும், பெண்களையும், நோய்  வாய் பட்டவர்களையும்  மன்னன்  எச்சரிக்கை விடுப்பதாக இந்தப் பாடல் கூறுகிறது. 

இத்தகைய நல்ல மனது உடையவனாக அரசன் இருப்பதால், அற நெறியில் நடப்பவனாக மன்னன் விளங்குவதால் அவன் பல்லாண்டுகள் வாழ வேண்டும் என நெட்டிமையார்  வாழ்த்துகிறார். அதுவும் எத்துணை ஆண்டுகள் தெரியுமா? பஃறுளி ஆற்றின் மணல் எண்ணிக்கையைக்  காட்டிலும்  பல  ஆண்டுகள்,  என  வாழ்த்துகிறான்.

 

இதிலிருந்து, தமிழ் மன்னர்கள் கெட்டப் போரிடும் சமயத்திலும் நீதி நெறி முறைகளைக்  கடைப்பிடித்தது  விளங்கும்.

 

Slider Image
10/8/2018 3:33:06 PM

சிறுமை கண்டு பொங்குவாய்!

 கடந்த சில வாரங்களில் மட்டும் நாட்டின் தலைநகரப் பகுதியில் ஆறு துப்புரவு தொழிலாளர்களும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐந்து பேரும் கழிவு நீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பொழுது தங்களது உயிரை இழந்துள்ளனர். மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண செய்தியாக  இருந்தாலும்  இறந்த  தொழிலாளர்களின் குடும்பங்களைப் பொறுத்த மட்டில் இது  ஒரு  பெரிய  அநீதி.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் கூற்றுப்படி கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஏறக்குறைய 120 துப்புரவு பணியாளர்கள் தங்களது உயிரை கழிவுகளையும்  செப்டிக்  டேங்க்  சுத்தம் செய்யும் பொழுது இழந்துள்ளனர். சராசரியாக ஐந்து  நாட்களுக்கு  ஒரு  இறப்பு  ஏற்பட்டுள்ளது.
1993-ஆம் ஆண்டிலேயே மனிதர்களால் கழிவுகளை அகற்றும் (Manual Scavenging) முறை  தடை செய்யப்பட்டு விட்டாலும், இன்றைக்கும் நகர்ப்புறங்களில் கழிவு நீர் வாய்க்கால்களை சுத்தம் செய்ய இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
 
இந்த தொழிலில் இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருப்பதாலும், எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாலும், நமது சுயநலத்தாலும்  யாரும் இவர்களைப் பற்றி  கவலைக் கொள்வதில்லை என்பது நிஜம். இந்தியாவில் இவர்களது குடும்பங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 1.8 லட்சம் என்று சமூக-பொருளாதார-சாதி சென்சஸ் (2011) தெரிவிக்கிறது.
 
இத்தகைய இறப்புகளையும், மனிதர்களை சாக்கடைக் கால்வாயில் இறக்கி சுத்தம் செய்ய வைக்கும் இழிவுகளையும், தடுக்க வேண்டுமானால் துப்புரவு பணியாளர்க் குடும்பங்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு வழங்குவதோடு மட்டுமின்றி கழிவுநீர் வாய்க்கால்களையும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்தல் போன்ற பணிகளையும் எந்திர மயமாக்கல்  வேண்டியது  காலத்தின்  கட்டாயம். இல்லாவிட்டால் இந்த மனித அவமானத்தை தடுக்கவும் தவிர்க்கவும் முடியாது. இதற்கானச் சட்டத்தையும் கடுமையாக அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

Slider Image
10/22/2018 12:14:48 PM

ஏழ்மையைக் கடந்து சாதனை!

 மத்திய பிரதேசம் இந்தூரைச் சார்ந்த ஜுஹி ஜா என்ற 20 வயதுப் பெண், ஆசிய சாம்பியன்ஷிப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவிற்கான கோ-கோ போட்டிக்கான டீமில் இடம் பெற்றுள்ளார்.

இதில் என்ன சாதனை என்கிறீர்களா? சுமார் 12 ஆண்டுகள் இந்தப் பெண் வசித்த இடம் ஒரு பொது டாய்லெட்டின் அறைதான். இவரது தந்தை இந்த டாய்லெட்டில் பராமரிப்பாளராக வேலைப் பார்த்து வந்தவர். அவருடன்  அவரது  குடும்பமும்  அங்குதான் வசித்து  வந்தனர். துர்நாற்றம்  வீசும் டாய்லெட்டில் வாழ்ந்த போதும், ஏழ்மையான நிலையில்  இருந்தபோதும் அவர் தன்னுடைய படிப்பிலும் விளையாட்டிலும் கவனம் செலுத்தி, தனது கடின உழைப்பாலும்  விடா  முயற்சியாலும்  தேசிய  அளவிலான  அணியில்  இன்று இடம் பெற்று இளைஞர்களுக்கு ஊக்கமாக விளங்குகிறார். ஏழ்மையும் வறுமையும்  சாதனை  செய்ய  நினைப்பவர்களுக்கு ஒரு போதும் தடையாக  இருப்பதில்லை  என்பதை   நிரூபித்துள்ளார்  ஜுஹி  ஜா.
 
இவரைப் பாராட்டி மத்திய பிரதேச அரசின் விளையாட்டுத் துறை விக்ரம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

Slider Image
10/22/2018 12:55:01 PM

தமிழர்களின் அறம்-7

 பண்டையத் தமிழ் மன்னர்கள் அறத்திலும், வீரத்திலும், கொடையிலும் மக்களைப் பேணுவதிலும் தலைச் சிறந்து விளங்கினர். இவற்றைப் போற்றி புகழ்ந்த புலவர்கள் வீரத்தோடு வேளாண்மையைப் போற்ற வேண்டும் என  பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்  குட புலவியனார்  என்ற  புலவர்  பாடுகிறார்.

நீர்  இன்று  அமையா  யாக்கைக்கு எல்லாம்
உண்டி  கொடுத்தோர்  உயிர்கொடுத்  தோரே ;
உண்டி  முதற்றே  உணவின்  பிண்டம் ;
உணவெனப் படுவது  நிலத்தோடு  நீரே;
நீரும்  நிலமும்  புணரியோர், ஈண்டு
உடம்பும்  உயிரும்  படைத்திசி னோரே ;
(புறநானூறு-18)
பாண்டிய நெடுஞ்செழியன் உலகம் முழுவதையும் வெல்ல நினைத்தாலும் நிலை பெற்ற புகழை வேண்டினாலும் அவன் செய்ய வேண்டியது என்னவன்றால், நீர் இன்றி அமையாது உடல், உணவை அந்த உடலுக்கு கொடுத்தவரே உயிர் கொடுத்தவர், உடல் என்பது உணவால் ஆனது. உணவு  என்பது  நிலத்திலிருந்து  விளையும்  பொருளும்  நீரும் ஆகும். எனவே, நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்து வேளாண்மைக்கு உதவி செய்! அவ்வாறு உதவி செய்பவர்களே உயிரையும் உடலையும் படைத்தவராவர்! இவ்வாறு வேளாண்மையின் புகழ் பற்றி எப்பொழுதும் போரிட்டுக் கொண்டிருக்கும் பாண்டிய நெடுஞ்செழியனுக்கு  புலவர்  அறிவுரைக்  கூறுகிறார்.

Slider Image
10/25/2018 11:11:14 AM

7. சிறிய வி­சையங்களும் பெரிய வெற்றியும்!

 வானம் தொட்டு விடும் உயரம்தான்!

 

பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு துறையில் வெற்றி அடைய வேண்டும், புகழ் பெற  வேண்டும் என நினைக்கிறான். அதற்காகப் பிறந்தது முதலே ஏதேனும்  ஒரு  உந்து  சக்தியைக்  கொண்டு  வழி தேடுகிறான்.

வெற்றி  என்பது  ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடக் கூடியது. குழந்தைக்கு எழுந்து நடப்பது வெற்றி; மாணவனுக்கு நல்ல மதிப்பெண் பெறுவது வெற்றி; இளைஞர்களுக்கு  வேலை கிடைப்பது வெற்றி; விளையாட்டு  வீரனுக்கு  பதக்கம்   வெல்வது  வெற்றி. ஆனால்  இந்த  வெற்றிகள்  அனைத்தும்  ஒரே  நாளில் ஏற்படுவதல்ல! சிறு  துளி  பெரு  வெள்ளம் போன்று சிறு வி­சையங்களின் கூட்டு விளைவுதான் பெரிய வெற்றி.

எனவே பெரிய வெற்றியடைய முனைபவர்கள் சிறு சிறு செயல்களில் கவனம்  செலுத்த  வேண்டியது அவசியம். ஒரு நல்ல காபி வேண்டுமென்றால் சரியான அளவில் பால், காபி மற்றம் சர்க்கரை  கலக்கப்பட  வேண்டும். இதில்  சர்க்கரை  சிறியதுதானே  என்று நினைத்தால் எதிர்பார்த்தச் சுவை கிடைக்காது. 

            எவரெஸ்டில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமானால் கடுமையான பயிற்சிகளை சிறிது சிறிதாக மேற்கொள்ள வேண்டும். வெற்றியோ, தோல்வியோ ஆரம்பம் என்பது சிறிய விசை­யம். வண்டியின் கடையாணி என்பது மிகச் சிறியது. ஆனால் அது விழுந்துவிட்டால் வண்டிக்கே ஆபத்து ஏற்படும் ரயில்வே  பாதையின்  சிறிய  விரிசல்  பெரிய  ரயிலைக்  கவிழ்த்து  விடும்.

எனவே வெற்றியை நோக்கி வீறு நடைபோடும் பொழுது சின்ன வி­சையங்களில் கவனத்தைச் செலுத்துங்கள். இல்லாவிட்டால் தடம் புரள வேண்டி வரும் .வாழ்வில் சிறிய சிறிய  உதவிகளை  தேவையானவர்களுக்கு  எந்த  எதிர்பார்ப்பும்  இன்றி  செய்து  பாருங்கள். வணக்கம், நன்றி என்று சிறிய மரியாதைக்கு உரிய செயல்களை செய்து பாருங்கள். வெற்றி அடைய  எடுக்கப்படும்  முயற்சி  ஒரு  மராத்தான்  ஓட்டப்பந்தயம். இது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல. 

          எனவே, வெற்றியின் பாதையில் செல்லும் போது இடையிடையே ஓய்வெடுத்து வாழ்க்ககையின் சிறு சிறு சந்தோ­ங்களையும் ருசிக்க, ரசிக்க   கற்றுக்  கொண்டால்  வெற்றியின்  பாதை  கடினமாக  இருக்காது.

Slider Image
10/22/2018 12:42:14 PM

உயிரிழக்கும் ஆசிய சிங்கங்கள்!

 உலகம் முழுவதுமே இந்தியா உட்பட வனவிலங்குகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் கங்காரு போன்ற விலங்குகளின்  எண்ணிக்கையை  குறைக்க அரசே அவற்றை கொன்று வருகிறது. இது ஒரு  புறமிக்க காரணமில்லாமல் தடீரென விலங்குகள் கொத்து கொத்தாக இறப்பதும் அதிர்ச்சி  அளிக்க  கூடிய  வி­யம்.

அது போன்ற  ஒரு  வி­யம்  தற்போது குஜராத்தில் கிர் சரணாலயத்தில் நடந்துள்ளது. கடந்த  ஒரு  மாதத்தில்  மட்டும்  இது நாள் வரை 23 ஆசிய சிங்கங்கள் திடிரென    இறந்துள்ளன. ஆரம்பத்தில் சிங்கங்களுக்கு இடையே நடைப் பெற்ற சண்டைகள் காரணமாக  இருந்திருக்கலாம்  என்று  கருதப்பட்டாலும்,  மருத்துவ ஆய்வுகள் இனம் புரியாத   Canine Distemper Virus (CDV) வைரஸ்களே  இந்த  இறப்பிற்கு  காரணம்  என்று தெரிவிக்கின்றன.
 
2015 ஆம் ஆண்டு கணக்குப் படி சிங்கங்களின் எண்ணிக்கை  ஏறக்குறைய  500 ஆக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70-80 சிங்கங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்னறன.
 
1994 ஆம் ஆண்டில் தான்சானியாவில் சுமார் 1000 சிங்கங்கள் திடீரென மூன்று வாரங்களில்  உயிரிழந்தது  குறிப்பிடத்தக்கது.  அதற்கு Canine Distemper Virus (CDV) வைரஸ்  காரணமாக  கூறப்பட்டது.
 
இந்தியாவின் கெளரவமாக விளங்கும் ஆசிய சிங்கங்களை காப்பாற்ற தக்க நடவடிக்கை  எடுக்கப்பட  வேண்டும்.
 
ஏற்கனவே நாம் பல வனவிலங்குகளை சமூக விரோதிகளுக்கு பலி கொடுத்துவிட்டோம், என்பதை  நினைவில்  வைக்க  வேண்டும்.

Slider Image
10/22/2018 12:42:16 PM

உயிரிழக்கும் ஆசிய சிங்கங்கள்!

 உலகம் முழுவதுமே இந்தியா உட்பட வனவிலங்குகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் கங்காரு போன்ற விலங்குகளின்  எண்ணிக்கையை  குறைக்க அரசே அவற்றை கொன்று வருகிறது. இது ஒரு  புறமிக்க காரணமில்லாமல் தடீரென விலங்குகள் கொத்து கொத்தாக இறப்பதும் அதிர்ச்சி  அளிக்க  கூடிய  வி­யம்.

அது போன்ற  ஒரு  வி­யம்  தற்போது குஜராத்தில் கிர் சரணாலயத்தில் நடந்துள்ளது. கடந்த  ஒரு  மாதத்தில்  மட்டும்  இது நாள் வரை 23 ஆசிய சிங்கங்கள் திடிரென    இறந்துள்ளன. ஆரம்பத்தில் சிங்கங்களுக்கு இடையே நடைப் பெற்ற சண்டைகள் காரணமாக  இருந்திருக்கலாம்  என்று  கருதப்பட்டாலும்,  மருத்துவ ஆய்வுகள் இனம் புரியாத   Canine Distemper Virus (CDV) வைரஸ்களே  இந்த  இறப்பிற்கு  காரணம்  என்று தெரிவிக்கின்றன.
 
2015 ஆம் ஆண்டு கணக்குப் படி சிங்கங்களின் எண்ணிக்கை  ஏறக்குறைய  500 ஆக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70-80 சிங்கங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்னறன.
 
1994 ஆம் ஆண்டில் தான்சானியாவில் சுமார் 1000 சிங்கங்கள் திடீரென மூன்று வாரங்களில்  உயிரிழந்தது  குறிப்பிடத்தக்கது.  அதற்கு Canine Distemper Virus (CDV) வைரஸ்  காரணமாக  கூறப்பட்டது.
 
இந்தியாவின் கெளரவமாக விளங்கும் ஆசிய சிங்கங்களை காப்பாற்ற தக்க நடவடிக்கை  எடுக்கப்பட  வேண்டும்.
 
ஏற்கனவே நாம் பல வனவிலங்குகளை சமூக விரோதிகளுக்கு பலி கொடுத்துவிட்டோம், என்பதை  நினைவில்  வைக்க  வேண்டும்.

Slider Image
10/22/2018 1:07:36 PM

150-வது பிறந்த நாள் காணும் காந்தி!

 காந்தி என்ற மாமனிதர் இறந்தாலும் காந்தியின் தத்துவங்கள் அவரது குணங்கள் மக்களின் மனதிலிருந்து மறைவது என்பது சாத்தியம் இல்லை. ஏன் என்றால் உண்மை என்றும் அழிவதில்லை! காந்தியின்  ஒவ்வொரு  நடவடிக்கையும் வாழ்வின் உண்மையைத்  தேடுவதாகவே  அமைந்தன  என்றால்  மிகையாகாது.

இவரது சத்தியத்துடன் சோதனைகள், பெரும்பாலானவை, தெற்கு ஆப்பிக்காவில் தான் நிகழ்த்தப்பட்டன. மனத் தூய்மை, உடல் தூய்மை, ஊர் தூய்மை, சத்தியாகிரகம், அகிம்சை  என  அனைத்து  விதமான பிரயோகங்களுக்கும்   தன்னையே ஓர்  ஆய்வுக்  கூடமாக  மாற்றிக்  கொண்டவர்  மகாத்மா!
தவறுகளும்  போராட்டங்களின் திசைகளும் மாறும்பொழுதும்  தனக்குத் தானே  தண்டனை  கொடுத்துக் கொண்ட நீதி மான் காந்தி!  மக்கள் தங்களது உணவு, உடை மற்றும்  இதர  தேவைகளைக் குறைத்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக  விளங்கியவர்  காந்தி.
புலால் மறுப்பு, மது மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சனைகளில் தன்னையே முன்னிருத்தி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்! தென்னாப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணையும், குஜராத்தில் சேவாகிரமும் நிறுவி தன் வாழ்க்கையை  ஒரு  திறந்தப் புத்தகமாக  நடத்திக்  காட்டிய  பெருமகனார்  காந்தி.
 
எதிரிகளிடமும் இரக்கம் காட்டியவர். பிரிட்டிஷ்  அரசாங்கத்தை  எதிர்த்த  போதிலும் சில நேரங்களில் அவர்களது இன்னலைப் போக்க ஒத்துழைப்புக் கொடுத்தவர். அவருக்கு நாட்டு  விடுதலையே  முழு முதல் கனவாக இருந்த போதிலும் அதனை அடைய அகிம்சையும் சத்தியாகிரகமும் மட்டுமே கருவிகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக விளங்கியவர். தனது வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கத்திற்காக போராடியவர் காந்தி. அந்த ஒரு காரணத்திற்காகவே தன் உயிரை இழந்த பெருமகனார்! நெல்சன் மண்டலோ, மார்ட்டின் லூதர் கிங் ஜீனியர் போன்ற பெருந்தலைவர்களுக்கு வழிக்காட்டியாக  விளங்கியவர்.
 
இந்த சமயத்தில் அவரது கொள்கைகளை நாம் பின்பற்றுவதே அவருக்கு நாம் செய்யும் கை மாறாகும். மக்கள் மனதில் நீ என்றும் வாழ்க என வாழ்த்துவோம் அந்த பெருமகனாரை!

Slider Image
11/8/2018 2:23:17 PM

வானம் தொட்டு விடும் உயரம்தான்!

 பொறுத்தார் பூமி ஆள்வார்!

இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கை என்பது உடனடியாக விரும்பியதை அடைய வேண்டும் என்ற தவறான மனோபாவம் ஏற்பட்டுள்ளது. இந்த பொறுமையற்ற, விவேகமற்ற, வேகமான மனப்பான்மை அவர்களை சரியான வழிக்கு அழைத்துச் செல்லாது. அவசரம் என்பது  ஏனோதானோ என்று ஒரு வேலையை முடிக்க உதவுமே தவிர விரும்பிய விளைவுகளைத் தராது. அதிகப்படியான அவசரம் ஒரு மனிதனை பைத்தியக்காரனாக்கி விட வாய்ப்புள்ளது. அவனது குண நலன்களை மாற்றிவிடும். இதனால் அவனுக்கு ஏற்படும் இலாபங்களைக் காட்டிலும் அதிக நஷ்டங்களே ஏற்படும்.

மலையின் உச்சியை அடைய வேண்டுமானால் நீங்கள் நடந்துதான் அதனை அடைய முடியும். நவீன காலமாக இருப்பதால் நீங்கள் வசதி படைத்தவராக இருந்தால் ஹெலிகாப்டரை பயன்படுத்தி உச்சத்தை அடைய முடியும். ஆனாலும், அதற்கும் பொறுமை அவசியம்.

தற்காலத்தில் இன்டர்நெட்  சிறிது மெதுவாக வேலை செய்தாலே பொறுமையை இழந்து டென்ஷ­னாகும் குழந்தைகளையும் இளைஞர்களையும் பார்த்து வருகிறோம். வேகம் தேவை தான், அதற்காக வேகம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. விதைகள் முளைத்து செடியாகி, மரமாகி கனிகள் கிடைக்க வேண்டுமானால் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பொறுமையையும் சோம்பேறித் தனத்தையும் ஒன்றாக கருதக் கூடாது. பொறுமை என்பது கஷ்டமான நேரங்களிலும் உங்களது விருப்பமான இலக்கை அடைய நீங்கள் ஏதேனும் முயற்சித்துக் கொண்டேயிருக்க வேண்டும். வெறுமனே சோம்பேறியாக இருந்தால் எந்த  வெற்றியும் கிடைக்காது.

ஒரு நிமிட அவசரம் உங்களது வாழ்வை சீர் குலைத்து விடும். சூரியன் கூட உதிப்பதற்கும் மறைவதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை எடுத்துக் கொண்டு பொறுமையாகவே  செல்கிறது. உடனே  தோன்றி  உடனே மறைந்தால் பகல் என்ற அற்புதம் நமக்கு கிடைக்காமல் போய்விடும். அது போன்றுதான்  இரவும்! இயற்கை  எப்படி தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளதோ அதுபோன்று மனிதனும் பொறுமை என்னும் ஆயுதத்தை கையாளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த ஆயுதத்தை கொண்டு வழியில் வரும்  துன்பங்களையும்  தடைகளையும்  கடப்பதற்கு  முயற்சிக்க  வேண்டும்.

“ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு”

அதுபோல அடைய வேண்டிய இலக்கை அடைய அவசரப்படாதீர்கள்! அதற்காக முயற்சி செய்யாமல் சோம்பேறித் தனத்தோடு இருக்காதீர்கள். முயற்சியோடு பொறுமையாக காத்திருங்கள்! வானம்  உங்கள் வசப்படும்!

Slider Image
11/8/2018 2:22:01 PM

தமிழர்களின் அறம்-8

 சங்க காலத் தமிழ் மன்னர்கள் போரில் மட்டும் வல்லவர்களாகத் திகழவில்லை! அமைதியை நிலைநாட்டி பகைவர்களின் படையயடுப்பிலிருந்தும் மக்களை தன் உயிர் போல் பாதுகாத்து வந்தனர். தன்னுடைய வலிமையைக் கொண்டு எதிரிகள் நாட்டின் மீது படையயடுத்து துன்பம் ஏற்படாமல் அனைவரையும் கண் இமை போல பாதுகாத்து அறம் காத்தனர். தனது வீரத்தை தேவையில்லாமல் பயன்படுத்தியதாக எங்கும் காணக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் நாட்டில் நுழைந்த பகைவர்களை துரத்தியடிக்க துளிப்பொழுதும்  யோசித்தது  இல்லை.

 

இதனை சேரமன்னன் சேரல் இரும்பொறை மேல் குறுங்கோழியூர் கிழார் எனும் புலவர் பாடிய பாடல் மூலம் அறிக முடிகிறது.
             சோறுபடுக்கும் தீயோடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிதுதெறல் அறியார் நின்நிழல் வாழ்வோரே;
திருவில் அல்லது கொலைவில் அறியார்;
(புறநானூறு-20)
 
ஆழமான கடலையும், பரந்த நிலத்தையும், விரிந்த  வானத்தையும் தன்கீழ் கொண்ட இம்மன்னின் ஆட்சியில் சோறாக்கும் நெருப்பின் சூட்டையும், சூரியனின் வெப்பத்தையும் தவிர வேறு எந்த போர் வெப்பத்தையும் அறியாமல் வாழ்ந்து வந்தனர். பகைவர் மண்ணை மன்னன் கைப்பற்றினாலும் இவனது மண்ணை எந்த பகைவனும் வெற்றிக் கொள்ள முடியவில்லை. கர்ப்பமான பெண்கள் மட்டுமே இவனது மண்ணை உண்டு வந்தனர். நாட்டு மக்கள் இந்திரனது வில்லை மட்டுமே அறிந்து வைத்திருந்தனர். கொலைத் தொழில் புரியும் வில்லைப்பற்றி எதுவும் அறியாது இருந்தனர். அறத்தையே செங்கோலாகக்  கொண்டு  ஆட்சி  அமைத்தனர்  அக்கால  தமிழ்  மன்னர்கள்! 

Slider Image
11/8/2018 2:59:59 PM

கொலைப் பயணமாகும் சாலைப் பயணங்கள்!

 நமது நாடு உலகின் ஆறாவது பெரிய பொருளாதார வளர்ச்சிடைந்த நாடு. இந்தப் பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மை, தொழிற்சாலைகள், சேவைகள் என பல துறைகளும், தங்களது பங்களிப்பைக் கொடுத்துள்ளன. உற்பத்தி பொருள்களும் சேவைகளும்  நுகர்வோரை  சென்றடைய  சாலைகள்  பெரும்  பங்காற்றுகின்றன.

நாட்டின் வளர்ச்சிக்கேற்ப சாலைகளின் நீளமும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. பெருகி வரும் போக்குவரத்தினால் ஏற்படும் விபத்துகளும் உயிர்ப் பலிகளும்   ஏறுமுகமாக  உள்ளது. 2016-ஆம் ஆண்டில்  சுமார்  1,47,000  பேரும்   2017-ஆம் ஆண்டில் சுமார் 1,50,000 பேரும் சாலை விபத்தில் உயிர் இழந்துள்ளனர். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் மற்றும் உத்திரபிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. கடந்த ஆண்டு விபத்தில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 4,70,000 ஆகும்.
 
உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி இத்தகைய சாலை விபத்தில் உயிர்களை பலிகொல்வது மட்டுமின்றி அவர்களின் குடும்ப பொருளாதார நிலையையும் முற்றிலும் சீர்குலைத்து விடுகிறது. விபத்தில் உயிர் பிழைத்தாலும் வாழ்நாள் முழுதும் மருத்துவச் செலவுகள்  பல குடும்பங்களை  வறுமையில் தள்ளியுள்ளது.
 
விபத்துகளுக்கு ஓட்டுநரின் கவனக் குறைவு, வாகனங்களின் பழுது, சாலையின் வடிவமைப்பு குறைபாடு, மழை வெள்ளம் போன்ற காரணங்கள், விலங்குகள் மற்றும் பாதசாரிகள் சாலையின் நடுவில் செல்தல் போன்ற பல இருந்தாலும் ஓட்டுநரின் கவனக் குறைவுதான் விபத்திற்கு பெருங்காரணமாக அமைந்துள்ளது. அதிலும்  அதிவேகம்  மற்றும் குடித்துவிட்டு ஓட்டுதல், தவறானப் பாதையில் ஓட்டுதல் ஆகியவை இந்த விபத்துகளுக்கு அடிப்டைக் காரணங்களாகும்.
 
இத்தகைய விபத்துகளை தடுக்க வேண்டுமெனில் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி மேம்படுத்தப் படவேண்டும். கண்மூடித் தனமாக உரிமங்களை வழங்க கூடாது. சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் சாலை  விதிகளை  மீறுபவர்கள்  மீது  கடும்  நடவடிக்கை  எடுக்கப்பட  வேண்டும்.

Slider Image
11/8/2018 3:25:20 PM

பூமி எரிகிறது, நாம் என்ன செய்யப் போகிறோம்!

 தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்களில் எரிக்கப்படும் நிலக்கரி, வாகன எரிபொருளில்  இருந்து  வெளிப்படும்  புகை என அனைத்து உமிழ்வுகளும் பூமியை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதை மறுக்க முடியாது! இந்த  பசுமைக் குடில் வாயுக்களால் பூமியின் வெப்பநிலை அதிவேகமாக  உயர்ந்து  வருகிறது.

இந்த உயர்வால் ஏற்கெனவே பூமியின் பல பகுதிகளில் அதிக மற்றும் காலநிலை தவறிய மழை அதனால் ஏற்படும் வெள்ளம், வறட்சி, குடிநீர்ப் பிரச்சினை, காட்டு தீ, வெப்ப அலைகள்  என தொடர்ந்து  ஏற்பட்டு  பல் வேறு  இழப்புகளை  உருவாக்கியுள்ளது.
 
இந்த  சூழலைக்  கருத்தில்  கொண்டு 2015-ஆம் ஆண்டில் அமெரிக்கா, இந்தியா, சீனா உட்பட 195 நாடுகள் சேர்ந்து பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு கையயழுத்துட்டுள்ளது. அதன்படி அதிகரித்து வரும் புமியின் வெப்பநிலை உயர்வு 1.5 சென்டி கிரேட்  தாண்டாதவாறும் அதிகபட்சம் 2 செ என்ற நிலையில் அதை நிறுத்தவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் இதில் எந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியவில்லை! அமெரிக்காவும்  இதில்  அதிக  ஆர்வம்  காட்டவில்லை.
 
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு நடைபெற்ற தென்கொரியாவில் இன்சியான் நகரில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட அமைப்பு (Inter Governmental Panel on Climate Change) வெளியிட்டுள்ள சிறப்பு ஆய்வறிக்கை மிகவும் அதிர்ச்சியளிக்க வைக்கிறது.
 
இதன்படி பூமியின் வெப்பநிலை உயர்வு 1.5 செ-க்கு மேல் தாண்டாமல் இருத்தல் வேண்டும் எனவும் இல்லாவிட்டால் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை சீரழிவுகள் (வெள்ளம், கனமழை, காட்டுத் தீ மற்றும் அனல் அலைகள்) உணவு உற்பத்தி பாதிப்பு, நோய் மற்றும் ஆரோக்கிய பிரச்சினைகள், குடிநீர்  மற்றும்  விவசாய  பிரச்சினைகள் மிக அதிகமாகும் என எச்சரித்துள்ளது. மேலும்  வெப்பநிலை  உயர்வு  2-செ என்பது  இதைவிட  அதிக  பேரிழிவுகளை  உருவாக்கும்  எனவும்  எடுத்துக்  கூறுகிறது.
 
எனவே வெப்பநிலை உயர்வை 1.5 செ-ல் நிறுத்த வேண்டும் எனில் அனைத்து நாடுகளும் தங்களது நிலக்கரி எண்ணெய் நுகர்வை அதிரடியாக குறைக்க வேண்டும். வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை குறைக்க திறன் மிக்க தொழில்நுட்பங்களையும் அரசின் கொள்கைகளையும் அதற்கேற்ப மாற்றி அமைக்கவும் தகுந்த நடவடிக்கைகள் உருவாக்கப் பட வேண்டும் ஏற்கெனவே சுமார் 1 செ அளவுக்கு உயர்ந்துள்ள வெப்பநிலை, 2030-2052-க்கு இடைப்பட்ட காலத்தில் தற்போதைய கணக்குப்படி 1.5 செ  ஆக  உயர  வாய்ப்புள்ளது.
 
அவசரத்தை   உணர்ந்து  அனைத்து நாடுகளும் உடனடியாக பூமியைக் காப்பாற்றும் நோக்கில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க உறுதி பூண வேண்டும். இல்லாவிட்டால் உள்ளதும் போச்சே! என்று பின்னர் வருந்த வேண்டியிருக்கும். எல்லாம் அழிந்தபின்  வருந்தி  எந்தப்  பயனும்  இல்லை!
 
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை
எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்”
 
என்ற வள்ளுவனின் வாக்கு உண்மையாகி விடும்.
 
 
 
 

Slider Image
11/17/2018 2:52:55 PM

விரட்டப்படும் தொழிலாளர்கள்

 கடந்த  சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் 14 வயது பெண் குழந்தையயான்று பீஹார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் குறிப்பாக பீஹார், உத்திரப்பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளைச்  சேர்ந்தவர்கள்  அச்சம் மற்றும் தாக்குதலுக்கு பயந்து வெளியேறி வருகின்றனர். 

தவறு செய்த ஒரு நபரை சட்டத்தின் மூலம் தண்டிப்பதே முறையானது. மாற்று மாநிலத்தைச் சார்ந்த ஒரு தொழிலாளி செய்த குற்றத்தை மனதில் வைத்துக் கொண்டு வெளிமாநிலத்தைச் சேர்ந்த அனைத்து உழைப்பாளர்களையும் தவறானக் கண்ணோட்டத்தில்  பார்ப்பது  எந்தவிதத்தில்  நியாயம்?
 
நமது நாட்டைப் பொறுத்தவரையில் எந்த ஒரு நபரும் எந்த ஒரு மாநிலத்திலும் தொழில் செய்யவோ, வேலை செய்யவோ தடையேதும் இல்லை. மேலும், குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு  போன்ற  முன்னேறிய மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் வெளிமாநிலத்தைச் சார்ந்தவர்கள் பெருமளவில் உள்ளனர். அவர்களை நம்பித்தான் இந்த மாநிலங்களின் வளர்ச்சி அமைந்துள்ளது. எனவே, வெளிமாநிலத் தொழிலாளர்களை விரட்டியடிப்பதின் மூலம் சிலருக்கு அரசியில் இலாபம் கிடைத்தாலும் மாநிலத்தின் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இதனால் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. இது யானை தன் தலையில்  தானே  மண்ணை  அள்ளிப்போட்டு  கொள்வதைப்  போன்றதே  ஆகும்.
 
இதுமட்டுமின்றி, இந்த  தாக்குதலுக்குப் பின்னால் குஜராத்தைச் சேர்ந்தவர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும், அவரது வாய்ப்புகளை வெளி மாநிலத்தவர்கள்  தட்டிப் பறித்துக் கொள்கின்றனர் என்றும் ஒரு  கருத்து  விளங்குகிறது. அதற்காக, வெளி மாநிலத்தவர்களை விரட்டி அடிப்பது தீர்வாகாது. உடனடித் தேவை, வெளி மாநில தொழிலதாளர்களின் பாதுகாப்பு உறுதிச்செய்யப் படவேண்டும். அதே நேரத்தில் வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்களும் உருவாக்க வேண்டும். இதனால் தொழிலாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்வதும் குறையும். அவர்கள் சொந்த இடத்தில் இருந்து கொண்டு வேலை செய்வதன் மூலம் ஊதியத்தின் பெரும்பகுதியை சேமிக்கவும், குடும்பத்துடன் சேர்ந்திருக்கவும் வழிவகை  ஏற்படும்.
 
இதுபோன்ற வெளிமாநிலத்தவர்களின் தாக்குதல் ஏற்கனவே, மஹாராஷ்ராவிலும் கர்நாடகாவிலும், தமிழர்கள் மீது தாக்குதல் மற்றும் பெங்களூரில் வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் என, பல  இடங்களில்  நடைப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறுகிய நோக்கத்திற்காக நடைபெறும் இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

Slider Image
11/17/2018 3:38:10 PM

நலிந்த இளைய பாரதம்

 இந்தியாவில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒருவருக்கு போதுமான ஊட்டச் சத்து கிடைப்பதில்லை. போதுமான உணவு கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு வயதிற்கேற்ற எடை, உயரம், இருப்பதில்லை. மேலும் ஊட்டச் சத்துக் குறைபாடால் நோய் எதிர்ப்பும் குறைவாக உள்ளது. இதனை நாம் கூறவில்லை! குளோபல் ங்கர் இன்டெக்ஸ் (Global Hungar Index ) 2018ன்  அறிக்கைத்  தெரிவிக்கிறது.

இந்த  முறையானது,   உலகின்  அனைத்து நாடுகளிலும்  குழந்தைகளின் (5 வயதுக்குட்பட்ட) வயதுக்கேற்ப ஊட்டசத்தும் உணவும் கிடைக்கிறதா, இல்லாவிட்டால் அதனை எப்படி சரிசெய்வது, ஊட்டப் பற்றாக்குறையால் எத்தனை சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டள்ளனர்  என்று  வருடாவருடம்  கணக்கெடுக்கிறது.
 
இந்தப் பட்டியலில் நமது நாடு 103 வது இடத்தில் உள்ளது. மொத்தம் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 119 ஆகும்.
 
இந்த இன்டெக்சை கணக்கெடுக்க, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கிடைக்கும் உணவுக் கலோரிகள், உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமை, வயதிற்கேற்ற உயரம் இல்லாமை, குழந்தை இறப்பு விகிதம் போன்ற காரணிகள் கருத்தில் கொள்ளப் படுகிறன்றன. இதற்காக 2013-2017  வரையிலான  டேட்டா  பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
இதன்படி, சேட், ஹைத்தி, மடகாஸ்கர், சியோரா, லியோன், ஏமென், ஜாம்பியா போன்ற நாடுகள் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ள 119 நாடுகளில் 45 நாடுகள் மோசமான (Serious) நிலையில் உள்ளது. இந்தியாவும் இதில் அடங்கும்.
 
உள்நாட்டுப் போர், இனக்குழு கலவரங்கள், மக்களிடம் உணவு வாங்குவதற்கான வாங்கும் தன்மை இல்லாதது, இளம் குழந்தைகளுக்குப் போதுமான தாய்ப்பால் கிடைக்காதது. கர்ப்பிணி பெண்களுக்கும் பால் கொடுக்கும் தாய்மார்க்களுக்கும் போதிய ஊட்டம், உணவு கிடைக்காதது என பல காரணங்கள் இந்த ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமாகும்.
 
மேலே கூறப்பட்ட நான்கு காரணிகளில் மூன்றில் நமது நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு குறைந்துள்ளது. குழந்தை இறப்பு பெருமளவில் குறைந்துள்ளது. குழந்தை உயர வளர்ச்சியில் ஏற்றம் கண்டுள்ளோம், ஆனாலும் உயரத்திற்கேற்ற உடல் எடையில் நாம் இன்னும் போதுமான அளவிற்கு முன்னேறவில்லை. 2005 ஆம் ஆண்டில் 20% அக இருந்த இந்த காரணி 2018-ல் 21% ஆக உள்ளது. அதாவது  போதிய  முன்னேற்றம்  இதில்  இல்லை என்பதிலிருந்து போதுமான உணவும், ஊட்டமும்  இளம்  குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை என்பது தெரிய வருகிறது.
 
வலிவான பாரதம் வேண்டுமெனில் இளைய பாரதத்தை நாம் உடனடியாகக் கவனிக்க வேண்டும். அவர்களது  உணவிலும்  ஊட்டத்திலும்  கவனம் செலுத்த வேண்டியது  காலத்தின் கட்டாயம்.

Slider Image
11/17/2018 3:48:07 PM

தமிழர்களின் அறம் -9

 புறநானூறு  சங்க கால மன்னர்களின், மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும்  செவ்வியலக்கியம். மன்னர்களின் பண்புகள் என்னென்ன என்பதை படம் பிடித்துக் காட்டுவதுடன் நில்லாமல் அந்த பண்பு நலன் தவறும் பொழுது மன்னர்கள் எவ்வாறு இருத்தல் வேண்டும் என சங்கப் புலவர்கள் இடித்துரைத்தனர். மக்களின் சமூக வாழ்க்கையையும் பரதிபலிக்கும் வகையில் சங்ககால புறநானூறு விளங்குகிறது. மன்னனின்  மாண்புகளோடு  மக்களின்  மாண்புகளையும்  பேசும்  பேரிலக்கியம்  இது!

மன்னரின் பணி, போர் தொழில் மட்டுமன்று. கொடைத் தொழிலும் மக்களின் வாழ்வாதாரமான வேளாண்மையும் இன்றியமையாதன என்று சங்கப் புலவர்கள் எடுத்துரைக்கின்றனர்.
 
சேரமான் சேரல் இரும்பொறைப் பற்றி  குறுங்கோழியூர்  கிழார் பாடிய பாடல் இதனை வலியுறுத்துவது போல் உள்ளது. அவனது  நாட்டில்  அமைதி  நிலவுகிறது  என்பதை அசைந்த கையும், நிமிர்ந்த நடையும், ஒலிக்கும் மணியும், உயர்ந்த கோடும், பிறைவடி மத்தகமும், சினந்த நோக்கும், பரந்த அடியும், தேனீ மொய்க்கும் மதநீரும் உடைய இளங்களிறு இடுப்பில் வாளிலில்லாதவருக்கு எந்த இடையூறும் விளைவிக்காமல் கம்பத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதன் மூலம் உணர்த்துகிறார். 
 
              பாசறைகள் எந்த காவலும் இன்றி அமைந்துள்ளன. பகைவரின் திறை மூலம் சுற்றத்தாரை வாழ வைப்பவன்! நின்னைப் பாடியவருக்கு அள்ளி அள்ளி தருபவன் இத்தகைய  வீரமும், ஈகையும்  கொண்ட  நீ  அத்துடன் நின்றுவிடாதே! 
            
            பெரும் முனிவிலை
வேறுபுலத்து இறுக்கும் தானையயாடு
சோறுபட நடத்தி, நீ துஞ்சா மாறே! (புறம் :22)
 
              சோறு பெருகுவதற்கான முயற்சிகளையும் நீ மேற்கொள்க! இதன் மூலம் வீரம், கொடை  இவற்றைவிட மக்களுக்கு உணவளிக்கும் வேளாண் தொழிலில் ஈடுபட வேண்டும்  என்று  குறுங்கோழியூர்  கிழார்  வலியுறுத்துகிறார்.

Slider Image
11/17/2018 3:58:38 PM

வி­ஷத்தை சுவாசிக்கும் இந்தியா!

 கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட அறிக்கையின்படி உலகின் 93% குழந்தைகள் வி­ஷ­க் காற்றை சுவாசிக்கின்றனர். பத்தில் ஒன்பது பேர் அதிக அளவில் மாசடைந்த காற்றை சுவாசிக்கின்றனர் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 80% வரையறுக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான மாசடைந்த காற்றை சுவாசிப்பது  மிகவும்  கவலை  அளிக்க  கூடிய  விஷ­யமாகும்.

நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்கள் மட்டுமின்றி 2.5 மைக்ரானுக்கும் சிறியதான துகள்கள் பெருமளவு காற்று மாசை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய துகள் மாசைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் 11 நகரங்கள் மிகவும் மோசமான நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு வாகனப் புகைதான் முக்கிய காரணமாகும். கான்பூர் இதில் முதல் இடத்தில் உள்ளது.
 
10 மைக்ரான் அளவுள்ள துகள் மாசைப் பொறுத்தமட்டில் டெல்லி முன்னனியில் உள்ளது.
விறகு சமையல், தாவரத் தண்டுகளை எரிப்பது (பஞ்சாப், ஹரியானா) போன்றவற்றால் கிராமபுற பகுதிகள் மட்டுமின்றி டெல்லி போன்ற பெரு நகரங்களும் பாதிப்படைகின்றன. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைவதுடன் சுவாச நோய்களும்  பெருகி  வருகிறது.
 
மாசுக் கட்டுப்பாட்டை உடனடியாக நடைமுறை படுத்தவிட்டால் மக்களின் வாழ்வே கேள்வி குறியாகி விடும் அபாயம் உள்ளது. இதில் மக்களின் பங்கு அதிகமாக உள்ளது. தொடர்புடைய அனைத்து உறுப்பு நிறவனங்களும் இணைந்து செயல்பட வேண்டியத் தருணம் இது! தென்னிந்திய நகரங்கள் எதுவும் இந்தப் பட்டியலில் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய வி­யம்.

Slider Image
11/28/2018 3:19:25 PM

மேரி கோம் (Mary Kom)

 இந்தியா  மட்டுமல்ல  உலக அளவிலும் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பல சாதனைகளைப் புரிந்தவர் மேரி கோம். மணிப்பூரைச் சார்ந்தவர். ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக்கில் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு பதக்கங்கள் என பல சாதனைகளை தன் வசமாக்கியவர். இளவயதில் குத்துச் சண்டைப் பழகுவதற்காக மைமாற்றுப் பணத்தில்தான் கையுறைகளை அவரால் வாங்க முடிந்தது. முயற்சி  ஒன்றே  அவரைப்  புகழின்  உச்சிக்கு  கொண்டுச்  சென்றது.

35 வயதான போதும், மூன்று குழந்தைகளுக்குத் தாயானபோதும் விடா முயற்சியுடன் மீண்டும்  தற்போது  டெல்லியில்  நடைபெற்று  வரும்   புணூயபு  பெண்கள் உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்று வருகிறார். இது மட்டுமல்ல,  2020ல் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் பங்குபெறத் தன்னை ஆயத்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.
 
வெற்றிக்கு வயது ஒரு தடையல்ல என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்  மேரி கோம்

Slider Image
11/17/2018 4:18:27 PM

குறைவாகப் பேசு, நிறைய கேள்!

 அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். குறைவாகப் பேசு, வாழ்க்கை இனிக்கும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். அதனால்தான் இறைவன் ஒரு வாயையும் இரண்டு காதுகளையும் படைத்துள்ளான். குறைவாக பேசுவதற்காகவும், நிறைய கேட்பதற்காகவும்!

வெற்றியாளர்கள் அனைவரும் அடுத்தவர்களின் கருத்தையும் உணர்வுகளையும் கேட்டுக் கொண்ட பிறகே இறுதியில் தங்களது வார்த்தைகளை வெளியிடுகின்றனர். இதனால்  தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப் படுவது மட்டுமின்றி அனைவருக்கும் ஏற்ற  ஒரு  தீர்வும்  கிடைக்கிறது  என்பதை  மறுக்க  முடியாது.
 
எனவே, நீங்கள் உங்களது திருவாயை திறப்பதற்குமுன், பேச வேண்டியது அவசியமானால் மட்டுமே, தேவையானவற்றை மட்டுமே பேசவும்! தேவையயனில் பேசுவதைக் காட்டிலும் அமைதியாக இருப்பதே மேல்! பேசுவதற்கு முன் அதனால் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ ஏதாவது பயன் இருக்கிறதா என்று ஆராய்ந்துப் பார்த்துவிட்டு பேசவும்.
 
அதனால்தான் வள்ளுவனும்,
நயன்ஈன்று  நன்றி பயக்கும்  பயன்ஈன்று
பண்பின்  தலைப்பிரியாச்  சொல்.
 
என்கின்றான். பிறருக்கு நன்மை பயக்க கூடியச் சொற்கள், நல்ல பண்பிலிருந்து நீங்காதச் சொற்கள்  அந்த  வார்த்தையைப்  பேசுபவனுக்கும்  சேர்த்து  பயன் செய்யும்.
 
எனவே, வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமானால் உங்களது வாக்குச் செம்மையானதா இருக்க வேண்டும். சொல்ல வேண்டியவற்றை குறைவான, தெளிவான சொற்கள் மூலம் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் வேண்டும். அந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்! வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்!

Slider Image
11/28/2018 3:31:39 PM

“முடியாது” என்ற வார்த்தை - வெற்றிக்கு மந்திரம்!

 வானம் தொட்டுவிடும் உயரம் தான்!

 

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? முடியாது, No,  வேண்டாம் போன்ற வார்த்தைகள் வெற்றிக்கு எப்படி வழிகோலும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? நீங்கள் தானே கூறினீர்கள் எப்பொழுதும் பாஸிட்டிவ் மனப்பான்மையோடு இருக்க வேண்டுமென்று! இப்பொழுது, என்ன புதிர் போடுகிறீர்கள்?

நாம்   ஒவ்வொருவரும் பிறந்ததே ஒரு சாதனைதான். பிறந்த பிறகு சாதிக்க துடிப்பதும் இயற்கை! இதற்காகவே குழந்தையாக இருப்பதிலிருந்தே நாம் ஏதோ ஒரு கனவோடு வாழ்க்கையைத் தொடங்குகிறோம். இதில் வெற்றி அடைவதும், தோல்வி அடைவதும்  அவரது  முயற்சியைப்  பொறுத்தே  அமைகிறது.

இவ்வாறு  ஒரு  இலக்கு நோக்கி முன்னேறும் பொழுது, இலக்கை அடைய முயற்சிகள் செய்யும் பொழுது பல்வேறு எதிர்ப்புகள், பல்வேறு கவனச் சிதறல்கள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. திடீரென யாராவது புதிய ஐடியாக்களைத் தரலாம். பலர் புதிய வழிகளைப் பற்றிக் கூறலாம். ஆனால் அனைவரதுக் கருத்துக்களுக்கும் நீங்கள் தலையாயட்ட  ஆரம்பித்தால்  என்ன ஆகும்? அனைவருக்கும் நல்லவராகத் திகழவேண்டும் என்று நினைத்தால் நீங்கள் பைத்தியமாகத் தான் இருக்கவேண்டும். தேவையில்லாதவற்றை, முக்கியம் இல்லாதவற்றை, அனாவசியான சிதறல்களை நீங்கள் ஒதுக்கித் தள்ளினால்தான், வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியையும் முக்கியமான நிகழ்வுகளுக்கு உங்களால் ஒதுக்க முடியும். 

             எனவே சரியான நேரத்தில், தேவையற்றவைகளுக்கு No   சொல்லப் பழகுங்கள் உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். அந்த நேரத்தை உங்களது இலக்கை அடைய உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையற்றச் செயல்களைத் தவிர்த்துப் பாருங்கள், இலக்கை  அடைவதற்கான  வழித் தெளிவாகப்  புலப்படும்.

 

என்ன, No  சொல்வதற்கு தைரியத்தை வரவழைத்து விட்டீர்களா! வெற்றி நிச்சயம்.

Slider Image
11/28/2018 3:46:06 PM

உயர் தொழில்நுட்பமும் இயற்கையும்

 சில நாட்களுக்கு முன்பு நெதர்லாந்து நாட்டில் 5G  நெட்வொர்க் ஆரம்பிக்கப்பட்டது. அதன் காரணமாக, 5G தொழில்நுட்ப டவர்களிலிருந்து வெளிப்படும் அதிக ஆற்றல் கொண்ட கதிர்வீச்சுக் காரணமாக ஆயிரக் கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன. அந்தப் பறவைகளின் உடலில் எந்த விதமான நோய் தாக்குதலோ, கிருமிகளோ இல்லை, எனவே, தொலைப்பேசி டவர்களிலிந்து வெளிவரும் நுண்ணலைகளால் அந்தப் பறவைகளின்  இதயங்கள்  பாதிக்கப்பட்டு  உயிரழந்திருக்கலாம்  என்று  கூறப்படுகிறது.

பீட்டர் கேலிஸ், “சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர்கள்” என்ற அரசு சாரா அமைப்பின், தலைவரின் கூற்றுப்படி இந்த கதிர் வீச்சினால் கேன்சர் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
 
இன்டெர்நெட்டின்  வேகம்  அவசியமா, தொழில் நுட்பம் அவசியமா,  இல்லை சுற்றுச் சூழலும்  உயிர் பாதுகாப்பும் அவசியமா? என்பதை மனிதர்கள் முடிவுசெய்ய வேண்டிய நேரம்  வந்துவிட்டது!

Slider Image
11/28/2018 4:56:12 PM

அதிகரித்து வரும் காய்ச்சல் நோய்கள்!

 மழைக் காலம் ஆரம்பித்தவுடன்  ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பல்வேறு விதமான  காய்ச்சல்  நோய்கள்  குறிப்பாக டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்றவை அதிகரித்து வருகிறது வழக்கமாகிவிட்டது. அரசுத் தரப்பில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த நோய்கள் மூலம் ஏற்படும் இறப்புகளை குறிப்பாக குழந்தை இறப்புகளை காணும் பொழுது பெரியக் கேள்வி குறி கண்முன் தோன்றுகிறது. 

          இத்தகைய காய்ச்சல் நோய்களுக்கு கொசு, அசுத்தமான சூழல் போன்றவை காரணமாக இருந்தபோதிலும், மக்களும், அரசும், அரசு சாரா அமைப்புகளும் முன்தடுப்பு நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்துகிறதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் உயிர் இழப்புகள் ஏற்படும்பொழுது போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் இதே வேகம் முன் தடுப்பு நடவடிக்கைகளில் எடுக்கப்படுகின்றனவா  எனத்  தெரியவில்லை. 
 
            கல்வி, சுகாதாரத்தில் முன்னனி மாநிலமாக திகழும் தமிழகம் இந்த நோய்களை முற்றிலும் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும். குறிப்பாக மக்கள் தங்களது சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளும் குப்பைக் கூளங்களை கையாளுவதில் திறன்பட செயல்பட வேண்டும். இல்லாவிட்டால்  இந்த  நோய்களால்  ஏற்படும் உயிரிழப்புகள் தமிழகத்திற்கு ஒரு களங்கமாக மாறிவிடுவது மட்டுமல்ல பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வில் ஒரு பெருந்துயராகவும்  அமைந்து விடும். இதனைத் தவிர்க்க அனைவரும் இணைந்து செயல்பட  வேண்டியது  காலத்தின்  கட்டாயம்.

Slider Image
11/28/2018 4:34:07 PM

தமிழர்களின் அறம் -10

 சங்க மன்னர்கள் வீரம், கொடையில் வல்வலர்களாகத் திகழ்ந்தவர்கள். போரின் போது  தங்களுக்கென  சில  வரை முறைகளை, நீதி நெறி முறைகளைப் பின்பற்றினர். போர் நடக்கும் சமயத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயுற்றவர்கள் என சமூகத்தின் விளிம்பில் வாழ்பவர்களுக்கு தொந்தரவு ஏதும் செய்யாமல் தங்களை ஒரு எல்லைக்குள் நிறுத்திக் கொண்டவர்கள். இருப்பினும், போரில் எதிரிகள், அவர்களது மன்னர்கள், படைத்தலைவர்கள் கொல்லப்படுவது இயல்பே! அத்தகைய இக்கட்டான சமயங்களில் புலவர்கள் வெற்றி பெறும் மன்னர்களிடம், தோற்றுப் போகும் மன்னர்களுக்காக தூது சென்று உயிர் காக்க வேண்டுவதும் நடப்பதுண்டு. எதிரிகளின் மேல்  இரக்கம்  காட்ட  வேண்டும்  என்றும்  சங்கப் புலவர்கள்  இரந்ததுண்டு.

இதனை, தலையாலங்கானத்துச்  செரு வென்ற  நெடுஞ்செழியன் மேல் கல்லாடனார்  எனும்  புலவர்  பாடிய  பாடல்  மூலம்  அறியலாம்.
 
கல்லாடனார், நெடுஞ்செழியனைப் பார்த்து வேண்டுகோள் விடுகிறார். தலையாலங்கானத்துப் போர்க்களத்தின் திங்களும், ஞாயிறும் மறைவது போன்று சோழ, சேர மன்னர்களின் அரசுகளை கைப்பற்றும் போது, அம்மன்னர்களின் மனைவி மார்கள் கைமை  கோலம் அடையாதவாரும், கூந்தல் களையா வண்ணமும் பார்த்துக் கொள்க! என்று கூறுகிறார். அதாவது, சோழ, சேர மன்னர்களை கொல்ல வேண்டாம். அவர்களை உயிரோடு  விட்டுவிடு  என்று மறைமுகமாக கூறுகிறார்.
 
செழிய!
முலைபொலி அகம் உருப்ப கூறி,
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர்அறல் கடுக்கும் அம்மென்
குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே!
(புறம் -25)

Slider Image
12/5/2018 12:15:23 PM

சாதனைகளுக்கு வயது தடையில்லை!

 ஆம்! சாதனைகளுக்கு வயது தடையாக இருக்கமுடியாது என்பதை கேரளாவைச் சேர்ந்த  96  வயது மூதாட்டி நிரூபித்துள்ளார். கேரள எழுத்தறிவு இயக்கம் நடத்திய நான்காம் வகுப்பிற்கானத் தேர்வில் 98% மதிப்பெண் பெற்று சாதனை நிகழ்த்திய  மூதாட்டிக்கு முன்னால் எந்த சாதனை நிற்க முடியும்!

கார்த்தியாயினியம்மாவின் இந்த முயற்சிக்குப் பின்னால் இருந்தது அவரது ஊக்கம்தான். இவரது மகள்  அம்மினி  அம்மாவும்  பத்தாவது  வகுப்பிற்கு  சமமான தேர்வில்  வெற்றிப்  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, இந்த பெண்மணியின் வயது 60.
 
கார்த்தியாயினியம்மாவால், தற்போது  செய்தித் தாள்கள், பத்திரிகைகளை தானாகவே  எவருடைய  உதவியுமின்றி  படிக்க  முடியும்  என்பது  குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னால் மழைக்கு கூட பள்ளிக் கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை. ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்த இவர் ஒரு துப்புரவு பணியாளாகத் தொழில் புரிந்தவர். அடுத்தவர்களின் குப்பையை அகற்றியவர் இன்று கல்லாமை எனும் குப்பையை தன்னிடமிருந்து அகற்றியுள்ளார் என்பதில் மிகவும் மகிழ்ச்சி!

Slider Image
12/5/2018 12:52:46 PM

கேள்விக் குறியாகும் உணவு பாதுகாப்பு!

 உலகம்  முழுவதும்  ஏறக்குறைய 820  மில்லியன்  மக்களுக்குப்  போதுமான அளவு  உணவு  கிடைக்கவில்லை.  இதனால் ஊட்டச் சத்துக் குறைபாடுகள் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள்   சபையின் பசி ஒழிப்பு திட்டத்திற்கு காலநிலை மாற்றம் ஒரு பெரியத் தடையாக  இருக்கலாம் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்    அமைப்பு  தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் மக்கள் தொகையினை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனில் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அதிக உணவு உற்பத்தி வேண்டுமெனில் அதிகப்படியான உரம், பூச்சிக் கொல்லிகள், அதிக நீர் தேவை. இதனால் நிலவளமும்  நீர்வளமும்  பாதிக்கப்பட்டு  சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.           தற்போது உணவு உற்பத்தி போதுமான அளவிற்கு இருந்தபோதிலும் அதிக விலை, மக்களின் குறைவான வாங்கும் திறன், ஏழ்மை மற்றும் உள்நாட்டுப்போர் போன்ற காரணங்களால் ஏமென், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
            மேலும் காலநிலை மாற்றம், விவசாய நிலங்கள் வேளாண் அல்லாத மற்ற பணிகளுக்கு  ஒதுக்கப்படுவது குறிப்பாக நகர்மயமாதல் போன்றவற்றால் வேளாண் உற்பத்தி குறைவதற்கு வாய்ப்புள்ளது. உடனடியாக நிலநீர் வளங்கள் பாதிக்கப்படாமல் போதுமான அளவு உணவு உற்பத்தி செய்யப்படுவதற்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும்  வேளாண் கொள்கைகள் உருவாக்கப்படுவதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பசி ஒழிப்பு என்பது கனவாகவே இருக்கும்!

Slider Image
12/5/2018 12:37:33 PM

அனுபவஸ்தர்களின் அறிவுரையை கேளுங்கள்!

 வானம் தொட்டுவிடும் உயரம்தான்!

 

வாழ்க்கையில் வெற்றியடைய யாருக்குத்தான் ஆசையில்லை! வெற்றி என்பது பணம் சம்பாதிப்பதாக இருக்கலாம். வேலை வாய்ப்பாக இருக்கலாம் இல்லை சுய தொழிலாக  இருக்கலாம்  அல்லது  விளையாட்டுத்  துறையில்  வெல்வதாக  இருக்கலாம்.

உங்களது இலக்கு என்ன, நீங்கள் எதனை சாதிக்க விரும்புகிறீர்கள் என்தை முடிவு செய்துவிட்டீர்களா, அப்படி என்றால் பாதி கிணறு தாண்டியாகிவிட்டது. மீதி கிணற்றை தாண்டுவது எப்படி? அதுதான்  உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். இல்லாவிட்டால்  ஆழ்  கிணற்றில்  விழ  வேண்டியிருக்கும்.

எனவே, மீதி கிணற்றைத் தாண்ட வேண்டுமானால் அதற்கான வழிகள் என்ன என்று  ஆராய்ந்து பார்க்கவும், உங்களால் தனியாக யோசிக்க முடியவில்லையா, குழப்பமாக இருக்கிறதா அச்சப்படாதீர்கள்!

             உங்களுக்கு வழிகாட்ட ஆயிரக்கணக்கானவர் உள்ளனர். அது ஒரு புத்தகமாக இருக்கலாம். அவர்  ஒரு  துறைச் சார்ந்த  நிபுணராக இருக்கலாம். இல்லாவிட்டால் உங்களது  குடும்ப  உறுப்பினராக  இருக்கலாம்,  அல்லது உங்களது நண்பராக இருக்கலாம், ஆனால் யார் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ மற்றும் யாரிடம் உங்களை  வழி  நடத்தத்  தேவையான  நிபுணத்துவம், அனுபவம்  இருக்கிறதோ   அவரிடம்  அறிவுரை  கேளுங்கள். மற்றவர்களின் பல்லாண்டு அனுபவம் உங்களுக்கு    சில  நிமிடங்களில்  வெற்றியைத்  தேடி தரலாம்! நீங்கள் அறிவாளியாக இருக்கலாம். ஆனால் வெற்றிக்கு அறிவு மட்டுமே உதவாது. வெற்றிக்குத் தேவை அறிவை எங்கு எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற திறமையும் அனுபவமும்! இவை, அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்துதான் கிடைக்கும். 

           மேலும், மற்றவர்களிடம் உதவியை, அறிவுரையை நாடும் பொழுது அவர்கள் தங்களது பிறத் தொடர்புகள்  மூலம்  ஏதாவது  வழியைக்  காட்டலாம். நாம் தற்போது படிக்கும்  பெரும்பாலான இதிகாசங்களும், புராணங்களும், நல்வழி நூல்களும் ஆரம்பத்தில் வாய்மொழியாக வந்தவைதான். எனவே, வாழ்வில் வெற்றி பெற தகுந்த அறிவுரை கூறுபவர்களை நாடத் தயங்காதீர்கள். எதையும் காலத்தே செய்தால்தான் வெற்றிக்கு  மகத்துவம்  இருக்கும்.

எனவே, தன்னை தவறாக நினைப்பார்களோ என்ற கூச்சம் இல்லாமல் தகுந்த நபர்களிடம் உதவியை அறிவுரையைக் கேட்க தயங்காதீர்கள்! தயங்கினால் நஷ்டம் உங்களுக்குத்தான்!

அதனால் தான் வள்ளுவரும்

           தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு ளெல்லாந் தலை.

என்கிறார்.

 

வல்லமைகளில் தலைசிறந்தது, அறிவு முதலியவற்றால் பெரியவர்களை தன்னோடு சேர்த்துக் கொள் என்கிறார் தெய்வப் புலவர்.

Slider Image
12/5/2018 1:27:28 PM

கஜா புயலும் தமிழகமும் !

 வருடா  வருடம்  திருவிழா  வருவது  போல்  ஏதாவது ஒரு பெயரில் புயல் தமிழகத்தை தாக்குவது வழக்கமாகிவிட்டது. தானே, ஒக்கி, தித்லி என்று வெவ்வேறு விதமான பெயர்கள். இந்த ஆண்டு வந்தது கஜா! கடந்த பத்து தினங்களுக்கு முன் வந்த இந்தப்  புயல் தமிழகத்தின் நெற் களஞ்சியத்தை போர்க் களமாக மாற்றியுள்ளது. ஆம். மக்கள்  தங்கள்  வாழ்க்கையுடன்  போரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு பக்கம் ஐம்பதுக்கும் அதிகமான உயிரிழப்புகள். ஆயிரக்கணக்கான கால்நடைகளும்  விலங்குகளும் உயிரிழந்ததால் விவசாயக் குடும்பங்களுக்கு பேரிழப்பு. தென்னை  மரங்கள்  தலைகீழாக  வீழ்ந்து கிடக்கின்றன,  மாவட்ட மக்களைப் போலவே! மாமரங்களும்  பிற மரங்களும் வேரோடு பிடுங்கப்பட்டு தூக்கியயறியப் பட்டிருக்கின்றன, வழக்கமான  வாழ்க்கை  எப்படி  தூக்கியயறியப்  பட்டுள்ளதோ  அதைப்  போன்று! 
 
            தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை என  சோழ மண்டலத்தை  கஜா  இல்லாத  இடமாக்கிவிட்டது. இம்மாவட்டத்தின் விவசாயிகள் தற்போது உணவிற்காகவும் குடி தண்ணீருக்காகவும் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.பல பகுதிகளில் மின்சாரம் கிடையாது. மின் கட்டமைப்புகளும் புயலால் பிடுங்கியயறியப்பட்டுள்ளன. நிவாரண பணிகள் வழக்கம்போல நடந்து வந்தாலும் தாக்குதலின் கொடூரம் அதிகம் என்பதால் நிவாரணம் வழங்குவதில் தாமதம். இதனால் மக்களின்  கோபம்  ஒருபுறம்  வன்முறைக்கு வழிகோலியிருக்கிறது,
 
இத்தகைய நேரத்தில் அரசும், அரசு சாரா அமைப்புகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை  குறிப்பாக  குடிநீர்  உணவு, மின்  வசதிகளை  உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும்.
பேய்க்கு  வாழ்க்கைப்பட்டால்  அதனுடன்  சேர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அதுபோன்று தமிழகமும் புயலுடன் வாழ்க்கை என்று தெரிந்துகொண்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், விவசாயிகள், மீனவர்களின் துயரம் மற்றும் பொது உடமைகளுக்கு ஏற்படும்  நஷ்டம்  ஆகியவற்றை  தவிர்ப்பது  இயலாத  காரியம்  ஆகிவிடும்.
 
விவசாயிகளுக்கு மட்டுமின்றி மீனவர்களின் வீடுகள், மீன்பிடிக் கப்பல்கள், வலைகள், உப்புத் தயாரிப்பாளர்களின் பல நாள் உழைப்பான உப்பு போன்ற இந்தப் புயலால் நாசமடைந்துள்ளன. மழையில் அழும் விவசாயிகளின் கண்ணீர் துளிகளை துடைக்க  வேண்டியது  நமது  ஒவ்வொருவரின்  கடமை.

Slider Image
12/5/2018 1:38:52 PM

அந்தமானில் கொல்லப்பட்ட அன்னிய நாட்டவர்!

 அந்தமான், ஒரு தனியாக அமைந்துள்ள தீவுத் தொகுப்பு, அங்கு பல பழங்குடி இனத்தினர் காட்டுக்குள் வசித்து வருகின்றனர். ஜாரவா, சென்டினெல் போன்ற இனத்தினர் முக்கியமானவர்கள். அம்மக்கள் தாம் வசிக்கும் பகுதிக்குள் எவரையும் அனுமதி அளிப்பதில்லை. ஏறக்குறைய 30,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழங்குடியினர் இப்பகுதியில்  வாழ்வதாகக்  கூறப்படுகிறது.

அங்குதான், வடக்கு சென்டினெல் தீவுப் பகுதியில் ஜான் ஆலன் செள என்ற வெளிநாட்டுப் பயணி ஒரு பழங்குடி மனிதனால் அம்பினால் தாக்கப்பட்டு இறந்துள்ளார். பொதுவாகப் பழங்குடிப் மக்கள், குறிப்பாக அந்தமானில் வசிப்பவர்கள் மிகவும் தனிமை விரும்பிகள். தங்களது  இருப்பிடத்திற்குள்  அயலாரை  அனுமதிப்பதில்லை.  இதையயல்லாம்  தெரிந்து கொண்ட ஒரு நபர், ஏன் அங்குச் சென்றார் என்பது புரியாத புதிராக   உள்ளது. அவர்  பழங்குடியினரை  மதமாற்றம்  செய்வதற்காகச்   சென்றார்  என்றும் கூறப்படுகிறது. 
 
              எதுவாக இருப்பினும், பழங்குடி மக்களை யாரும் தொந்தரவு செய்யாமல் அவர்களது இஷ்டப்படி அவர்களது  வாழிடத்தில்  வசிப்பதை  உறுதி செய்ய வேண்டும்,  ஒவ்வொரு  இனத்திற்குமான அடிப்படை வாழ்வுரிமை இது. அவர்களை நவீனமாக்குகிறோம் என்ற  பெயரில்  தேவையற்ற தொல்லைகளை உருவாக்க கூடாது. அதை  மீறிச்  செயல்படும் பொழுதுதான்  இது போன்ற  நிகழ்வுகள்  ஏற்படுவது  தவிர்க்க  முடியாததாகி விடுகிறது.

Slider Image
1/4/2019 3:13:02 PM

ஆசியாவின் புயல் பெண்மணி!

 ÖòÃm kB>Vª ¼k>Vºþ z_ïVM ¨[Å ¯ªVçkß ÄVìÍ> ØÃõ ·\Vì 29000 þ.*. #«Ýç> 159 åVâï¹_ çÄÂþ^ JéD ï¦Ím gEBVs[ AB_ ØÃõ\è ¨[Å ØÃòç\çB ¶ç¦Ím^áVì ¨ª ÖÍ]B ¼>EB sçáBVâ|ï^ þá© ¨ÐD ¶ç\©A ¶¤sÝm^ám. Ökì >ªm ÃBðÝç> gü]¼«oBVs[ ØÃìÝ  ¨ÐD  åï«Ý]_  Ø>V¦ºþ  ï_ïÝ>Vs_  x½Ým^áVì.  Îò  åVçáÂz  300 þ.*.  ¨[Å  T>Ý]_  Ökì  ÃBðD  ØÄFm  >ªm  ÄV>çªçB  °uÃ|Ý]  c^áVì.

            >ªm ÃBðÝ][ ¼ÃVm ÄJï s¼«V]ï¹[ >VÂz>_, ïV|ï^, \çéï^, kªséºzï^, ïVâ|Ýy, AB_, \çw  ¨ª  ¶çªÝmD  ¨]ì  ØïVõ| ÄV>çª AöÍ>  ØÃõ\è  Ökì.

            gü]¼«oBV. WREéVÍm, 益V, ¼ÃVìß·ï_, üØÃl[, ¸«V[ü, ØÃ_÷BD, ØÛì\M, ئ[\VìÂ, üT¦[, «iBV ¨[® Ãé åV|ïçá >[ªÍ>MBVï ·u¤ kÍ>kì ¨[Ãm z¤©¸¦Ý>Âïm. Eé Ö¦ºï¹_\â|D Ök«m ØÃu¼ÅVìï^ mçðBVïß ØÄ[Ūì.

            ÖºþéVÍ]_ c^á ¼ÃVì[\¡Ý Ã_ïçé ïwïÝ]_ sçáBVâ| ¼\éVõç\Ý  mçÅl_ ýÂzDØÃV¿m ÖÝ>çïB ¨õðD >ªÂzÝ ¼>V[¤B>Vï í®þÅVì.

            ÖÍ> ÄV>çªÂïVª Aïçw ¼k>Vºþ >ªm ØÃu¼ÅVìïÓÂz ¶ì©ÃèÝm^áVì! gD, ¼Ãu¼ÅVìï^ Ö_éV\_ ÄV>çª °m?

Slider Image
1/4/2019 4:47:51 PM

சாதனைக்கு முன்னால் வயது தடையல்ல!

 தனது 99 ஆவது வயதில் கேரளாவைச் சார்ந்த சித்ரன் நம்பூதிரிபாத்  என்ற  ஓய்வு பெற்ற அரசு அலுவலர் இமய மலைகளில் 29 வது முறை ட்ரெக்கிங் செய்து சாதனை புரிந்துள்ளார். தனது நூறாவது வயதில் 30வது முறையை முடிக்க வேண்டும் என இப்பொழுதிலிருந்தே   தன்னை  தயார்ப்  படுத்தக்  கொண்டு  வருகிறார்.

1952-ல் ஆரம்பித்த இந்த முயற்சி இன்றும் இவரது விடா முயற்சியால் வெற்றிகரமாக  நடந்துக்  கொண்டு  வருகிறது.
 
தினசரி நடையும், மிதமான உணவும், அமைதியான வாழ்க்கையும் தன்னை ஃபிட்டாக வைத்திருப்பதாக கூறுகிறார். இந்த 99 வயது இளைஞர்! ஆம் வயது என்பது வெறும்   எண்ணிக்கையே,  மனதிற்கு  வயது  கிடையாது.

Slider Image
12/27/2018 11:19:52 AM

காற்று மாசும் மனித உயிர்களும்!

 உலக  அளவிலும்  இந்தியாவிலும்  அதிகரித்து  வரும் காற்று மாசு, மற்றும் அதிகரித்து வரும் வளி மண்டல வெப்பநிலை அதிவேகமாக மக்களின் உயிருக்கும், சுற்றுச்சூழல் அழிவிற்கும் வில்லனாக மாறி வருகிறது. இது தொடர்பாக பாரீஸ் ஒப்பந்தம் போடப் பட்டிருந்தாலும்  அதை நடைமுறை படுத்துவதில் இன்னும் குழப்பம் தான் நிலவுகிறது. தொடர் கூட்டங்களும்  இதனை உறுதிப்படுத்த உலக முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நமது நாட்டில் தற்போது மத்திய சுகாதார அமைச்சகமும் ஏறக்குறைய  100  நிறுவனங்களும்  இணைந்து நடத்திய காற்று மாசு மற்றும் ஆரோக்கியம்  தொடர்பான  ஆய்வு  ஒரு  அதிர்ச்சி  தகவலை  தெரிவிக்கிறது.
 
இந்தியாவில் இறக்கும் 8ல் ஒரு நபர் காற்று மாசினால் இறக்கின்றனர் என்கிறது, இந்த ஆய்வறிக்கை. மேலும் இந்திய மக்களில் 77% பேர் மாசுக் காற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வட இந்திய மாநிலங்கள் இந்த மாசினால் அதிக பாதிப்படைந்துள்ளன. டெல்லி மாநகரம்  காற்று  மாசில்  முதல்  இடத்தில்  உள்ளது,
2017 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 12.4 லட்சம் மக்கள் காற்று மாசினால் உயிர் இழந்துள்ளனர். காற்றில் உள்ள துகள்களின் அளவு, 2,5 மைக்ரானை விட அதிகமுள்ளவை, மிகவும் அதிகமாகும் பொழுது சுவாச மற்றும் இதர நோய்கள் தலை தூக்குகின்றன. மேற்கண்ட இறப்பில் 6.7 லட்சம்  வெளிக் காற்று  மாசினாலும், 4.8 லட்சம் பேர் வீட்டில் உள்ள காற்று மாசினாலும் (சமைத்தலுக்கு விறகுகள், கரிகள் பயன்படுத்துவதன்  மூலம்) இறந்துள்ளதாக  இந்த  அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அளவிற்கு மாசு ஏற்படாமலிருந்தால் இந்தியர்களின் ஆயுள் 1,7 வருடம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறது இந்த அறிக்கை.
 
எனவே, காசுமற்றை குறைக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசரம்.

Slider Image
12/5/2018 2:37:40 PM

தமிழர்களின் அறம் - 11

 சங்க இலக்கியத்தின் அகமும் புறமும் தமிழ்ச் சமுதாயத்தின் இரண்டு கண்கள் போன்றவை. கணவன்-மனைவி அன்பை அடிப்படையாகக் கொண்ட அகத்திற்கு ஈடாக மன்னர்களின், மக்களின் போர்முறை, புகழ், வீரம், கொடை, ஈகை போன்ற வாழ்வியல் நெறி முறைகளைப் பற்றி புறநானூறுப் பேசுகிறது. மன்னர்கள் வல்லவர்களாக இருந்தால் மட்டுமே போதாது. நல்லவர்களாகவும், அருள் உள்ளம் படைத்தவர்களாகவும் இருத்தல் வேண்டும்  என்பதை  சங்கப் புலவர்கள்  எடுத்துரைக்கின்றனர்.

உறையூர்  முதுண்ணன்  சாத்தனார், சோழன் நலங்கிள்ளி மேல் பாடிய பாடல் மூலம்  இதனை  அறியலாம். மன்னர்கள் கொடை வள்ளல்களாக திகழ வேண்டும் என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்துக் கூறுவதில் சங்க கால புலவர்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள்.
சேற்றில் மலரும் நூற்றுக்கணக்கான செந்தாமரை மலர்கள் எந்தவித வேற்றுமையும்  இல்லாமல்  திகழ்கின்றன. அதுபோல, வேற்றுமை   இல்லாத  உயர் குடியில்  பிறந்தவர்கள்  பலராக  இருப்பினும்  அதில்  ஒரு  சிலரே புகழ் பெற்று வாழ்கின்றனர். பலர், தாமரை  இலைகளைப்  போல  புகழின்றியே  வாழ்கின்றனர்.
           செயற்கரியச்  செயல்களை  செய்பவர்கள்  வானூர்தி  செல்லும்  உயர  அளவிற்கு  புகழ் வாய்ந்தவர்கள். அத்தகைய  சிறப்புடைய  நலங்கிள்ளியே! பசியால் வருந்தி வருபவர்களுக்கு  அருள்  புரிவாயாக  என்று   அறிவுரைக்  கூறுகிறார்.
 
இதனை,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி. (புறம் – 27)
என்ற அடிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Slider Image
12/27/2018 11:28:14 AM

தமிழர்களின் அறம் -12

 புற நானூற்றுப் பாடல்கள் பல, மன்னர்களின் வீரத்தையும் புகழையும் பறைச் சாற்றுவதில் இணையற்றவை. அதே நேரத்தில் மன்னர்கள் போர் முடிந்தவுடன் செய்ய வேண்டிய  கடமைகளை  எடுத்துரைக்கவும்  அப்பாடல்கள்  தயங்கியதில்லை.

உறையூர்   முதுகண்ணன் சாத்தனார், சோழன் நலங்கிள்ளியைப் பற்றி பாடிய பாடல்  மூலம்  இது  வெளிப்படுகிறது.
 
பாணர்கள் உன்னை  விட்டு போனபின் தேவியர்களை தழுவி மகிழும்     வேந்தனே! கொடியவர்களை கொன்று நல்லவர்களை காப்பதில் வல்லவனே! நீ ஒரு போதும் சோம்பலுடன் இருக்காதே! இளநீரை உதிர்க்கும் தென்னை மரங்கள் கொண்ட வடநாட்டை உடையவனே! போர் முடிந்தபின் உன்னை நாடிவரும் வறியவர்க்கு வாரி வழங்குவாயாக!  தேடி வருபவர்களுக்கு  பொருள் வழங்கி அந்தப் பொருட்களுக்கு பெருமைச் சேர்ப்பாயாக! அதாவது, போர் முடிந்தவுடன், நல்வாழ்வில் ஈடுபட வேண்டும் வேந்தன்  என்பதை எடுத்துரைக்கிறார் புலவர்.
            இளநீர் உதிர்க்கும் வளமிகு நான்னாடு
பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
சிறுமனை வாழ்க்கையின் ஓரீஇ, வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின், பண்புடை
ஊழிற்று, ஆக, நின் செய்கை! ஆம்
          
(புறம் – 29)
 

Slider Image
12/27/2018 12:14:06 PM

இன்றே செய்! நன்றே செய்!

வானம் தொட்டு விடும் உயரம்தான்!

 

எந்த வொரு சாதனையாளரின் வாழ்க்கையைப் படித்து பாருங்கள், ஒரு விஷ­யம் நிச்சயமாகத்  தென்படும்!  அது செய்ய வேண்டியதை முடிவு செய்தவுடன், அடைய வேண்டிய இலக்கு எது, என்று  முடிவு  செய்தவுடன்  சட்டென்று  காரியத்தில் இறங்கவும்!

             சூடு ஆறிவிட்டால், சோறு சுவை தராது! தனக்கு ஏற்ற சூழ்நிலை வரும் என காத்திருப்பவன்  முட்டாள். உனக்கு   ஏற்றவாறு சூழல்களை மாற்றிக் கொள், வெற்றி நிச்சயம்! இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு உங்களது நடைமுறைகளை மாற்றிக் கொள்ளுங்கள்! வெற்றி உங்களது கையில்! மழை பெய்கிறதா குடையுடன், செல்லவும். வெயில் அதிகமா அதே குடை உதவும்! ஆனால் வெயில் மழை இல்லாத நாளுக்காக காத்திருந்தால்  நீங்கள் வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லமுடியாது. எதனையும் சாதிக்க இயலாது. எனவே, செய்ய வேண்டிய செயல்களை தள்ளிப் போடாதீர்கள். எல்லா நாளும்  நல்ல நாள்தான். எல்லா நேரமும் நல்ல நேரம்தான். சரியான நேரத்தில் கிளம்பாமல்  வாழ்க்கையைத்  தொலைத்தவர்கள்  பலர்.

தேர்விற்கு  முன்  படிப்பதைவிட  தினம் தினம் கொஞ்சமாக படித்தால் வெற்றி நிச்சயம். எல்லாம் நளைக்கப் பார்த்துக் கொள்ளலாம் என்று  நினைப்பவர்களுக்கு  நாளை என்பதே  விடியாத  ஒன்றாகவே  இருக்கும்.

 

திட்டமிட்டு  செயல்படுங்கள்!  நாளை என்று தள்ளிப்போடாதீர்கள்!  இன்றே  நல்ல நாள் என்று நினைத்துக் கொண்டு முழு முயற்சியோடு செயல்பட்டால் வெற்றிக்கனி உங்களது மடியில்! பெரும்பாலானவர்கள் தோல்வி பயத்தினால்தான் தள்ளிப் போடுகின்றனர். எனவே அச்சத்தை துச்சமாக எண்ணி துள்ளி எழுந்தால் நீங்கள்தான் வெற்றியாளர்!

Slider Image
12/27/2018 11:59:31 AM

திண்டாடும் தமிழக இளைஞர்கள்!

 நமது நாட்டைப் பொறுத்தவரையில்  ஓராயிரம் பிரச்சினைகள். ஏழ்மை, வறுமை, கல்வி, அறிவின்மை, போதுமான அளவிற்கு தொழில் வளர்ச்சியின்மை என்று சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் மக்கட் தொகைப் பெருக்கும்! இருந்தாலும், தற்போதைய நிலையில், தமிழகம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி விட்ட போதிலும். பெருகி வரும்  வேலையின்மை, இளைஞர்களின் வாழ்க்கையைக்  கேள்வி  குறியாக்கியுள்ளது,

2015-16 ஆம் ஆண்டில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் வேலையின்மை   விகிதம்  3.8%  ஆக உள்ளது. தெலங்கானாவில் 2.7% ஆக  உள்ளது.  தேசிய  அளவில்  இந்த  விகிதம்  3.7%  ஆகும்.
 
கல்வியறிவில், குறிப்பாக உயர் கல்வியில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தாலும், படித்தவர்களுக்கு வேலையில்லாத  நிலையே  காணப்படுகிறது. கிட்டத்தட்ட  80 லட்சம்   பேர் தமிழகத்தின் பல்வேறு வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துவிட்டு இலவு காத்த கிளியாக உள்ளனர்.
 
போதுமான அளவிற்கு வேலைகள் உருவாக்கப்படாதது ஒரு காரணம் எனில், தொழில்நுட்பம்  மற்றொரு  காரணமாகும்.  அது  மட்டுமின்றி  வேலைக்கேற்ற திறமைகளை படிப்புகள் உருவாக்காததும் ஒரு காரணமாகும். படித்து முடித்தவுடன்தான், தெரிய வருகிறது அவர்களுக்கேற்ற வேலைவாய்ப்பு இல்லை என்பது.
 
நாட்டின் எதிர்காலமாகத் திகழும் இளைஞர்களுக்குத் தேவை ஒரு தெளிவான வழிகாட்டி.

Slider Image
12/27/2018 12:07:58 PM

அழிக்கப்படும் புலிகள்

 உலகில்   வாழும்   புலிகளில்  பெரும்பான்மையானவை இந்தியாவில்தான் உள்ளன. அழிந்து வரும் புலிகளை காப்பதற்காகவும், புலிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் 1973-ல் “புராஜெக்ட் டைகர்”  எனும்  திட்டம்  அரசால்  ஆரம்பிக்கப்பட்டது.

சமீபத்தில் கணக்குப் படி சுமார் 2,200 புலிகள் இந்தியாவில் உள்ளன. பல ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. போதிலும் அவற்றின் வாழிடங்கள் குறைந்து வருவதால் பல இடங்களில் மனிதர்களும். கால் நடைகளும் தாக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் கவனிக்கப்பட வேண்டியது  என்னவெனில்  கடந்த  10  ஆண்டுகளில்,  2008 முதல் 2018 (நவம்பர்) வரை 384 புலிகள் கொல்லப்பட்டதாக வனவிலங்குகள் குற்ற தடுப்பு ப்யூரோ கூறுகிறது. இவற்றை  வேட்டையாடியதாக  961 பேர் மீது  நடவடிக்கை  எடுக்கப்பட்டு  வருகிறது.
 
இது ஒரு புறமிருக்க, புலிகளின் வாழிடம், பொருளாதார காரணங்களுக்காக கொண்டு  வரப்படும்  அணைகள், தொழிற்சாலைகள், நீர்மின் திட்டங்கள், காடுகள், அழிப்பு திட்டங்கள்   ஆகியன  மூலம் அழிந்து வருவதை மறுக்க இயலாது. புலிகளும் இந்த பூமியின் ஒரு உயிரனம்தான். அவைகள் வாழ்வதற்கான உரிமையை நாம் பறிக்க முயற்சித்தல்  கூடாது. இல்லாவிட்டால், புலிகள்  விரைவில்  அழிவதை  தடுக்க  முடியாது.

Slider Image
1/4/2019 3:01:44 PM

வேட்டையா டப்படும் சிறுத்தைகள்!

 வன விலங்குகளை குறிப்பாக யானைகள், புலிகள், சிங்கங்கள், காண்டாமிருகம் போன்றவை அவற்றின் மதிப்பு மிக்க உறுப்புகளுக்காவும் மருத்துவ குணத்திற்காகவும் மக்களையும் கால் நடைகளையும் தாக்குவதற்கு பழிவாங்கும் செயல்கள் மூலமாகவும் கொல்லப்படுவது வழக்கமான ஒரு செயலாகிவிட்டது. அந்த வகையில் சிறுத்தைகளும் மனிதர்களின் நடவடிக்கையிலிருந்து தப்பவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1500க்கும் அதிகமான சிறுத்தைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளதாக வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கைப்படி 2015 முதல் 2018 வரை  260  சிறுத்தைகள்  கொல்லப்பட்டுள்ளன. இந்த  வேட்டையில் உத்தராகண்ட் மற்றும்  இமாச்சல  பிரதேசம்  முன்னணியில்  உள்ளது.
 
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர்  உள்ளிட்ட  ஏறக்குறைய 19 மாநிலங்களில் இருந்து இந்த தகவல் மூலம் பெரும்பாலான சிறுத்தைகள் மனிதர்களின் வேட்டைக்கு பலியாகி உள்ளன. சில மாநிலங்களில், குறிப்பாக மஹாராஷ்டிரா, கர்நாடகாவில் இவை சாலை விபத்திலும்  இறந்துள்ளன.
 
சிறுத்தைகள் இந்திய  வன விலங்குகள் சட்டம் (பாதுகாப்பு) 1972ன் படி பாதுகாக்கப் பட்டவையாக  அறிவிக்கப்பட்டிருந்தாலும்  தாக்குதல்கள்  குறைந்தபாடில்லை.
 
மனிதன் ஒவ்வொரு விலங்கினமாக அழித்துக் கொண்டிருந்தால் தனியாக இந்தப் பூமியில் தவிக்கப் போவது திண்ணம்! பல் உயிர் தன்மைதான் பூமிக்கு அழகு. அந்த அழகைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. சிறுத்தைகளை பாதுகாக்க குரல் கொடுங்கள்!

Slider Image
1/4/2019 4:13:50 PM

கள்ளத் தனமான சுரங்கப் பணிகள்

 டிசம்பர்  13  ஆம் நாள் மேகாலயாவின் 13 தொழிலாளர்களுக்கு ஒரு மோசமான நாள்.  ஜைந்தியா மலைகளில் உள்ள மூடப்பட்ட நிலக்கரிச் சுரங்கத்தில் நிலக்கரி எடுப்பதற்காக நுழைந்த இவர்களின் கதி என்ன, என்று இதுவரை தெரியவில்லை. 

             எலி-வலை சுரங்க முறைகளை 2014ஆம் ஆண்டே தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை  செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தடையை பொருட்படுத்தாமல் தங்களது சொந்த ஆதாயத்திற்காக  இந்த  தொழிலாளர்கள்  மாட்டிக்  கொண்டுள்ளனர்.   பணத்தாசைப்  பிடித்தவர்களின்  கைப்பாவையாக  வேறு  வழியின்றி இத்தகைய தொழிலில் ஏழை மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு மாட்டிக் கொண்டுள்ள 13 தொழிலாளர்களை  மீட்க  தேசிய  பேரிடர்  மீட்பு  படை  ஈடுபட்ட  போதிலும் சுரங்கத்தின் அதிக நீர் அளவு காரணமாக மீட்புப் பணியில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
 
சான்  சுரங்கத்தில்  ஏற்பட்டுள்ள  நிகழ்ச்சி முதன் முறையல்ல, ஏற்கனவே இதுபோன்ற  விபத்துக்கள்  ஜார்க்கண்ட்  மாநிலத்திலும்  நடந்துள்ளது.
 
இத்தகைய நிகழ்வுகளைத் தவிர்க்க சுரங்கங்களில் பாதுகாப்பு முறைகளை பலப்படுத்தவேண்டும், மேலும் கள்ளத் தனமான சுரங்கப் பணிகள் மீது கடுமையாக நடவடிக்கை  மேற்கொள்ளப்பட  வேண்டும்.

Slider Image
1/23/2019 1:45:19 PM

மாணவர்களா இல்லை விலங்குகளா?

 2018 ஆம் வருடத்தில் மட்டும் ஏறக்குறைய 20 மாணவர்கள் ராஜஸ்தானில்      உள்ள  கோட்டாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. டிசம்பர்  மாதத்தில் 4 நாட்களில் 3 பேர் தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். கோட்டா    வட  இந்தியாவில்  தனியார்  பயிற்சி  நிறுவனங்களின்  தலைநகரமாகத்   திகழ்கிறது. 


          அங்கு  ஆயிரக் கணக்கான மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை வளமாக்க பயிற்சி என்ற கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். கடுமையானப் போட்டி, பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் அழுத்தம் மாணவர்கள் மேல் தேவையின்றி திணிக்கப்படுகிறது. பொறியியல், குறிப்பாக ஐ.ஐ.டி.க்கான நுழைவுத் தேர்வு மற்றும் நீட் தேர்விற்கு மாணவர்கள்  இங்கு  தங்கி  தங்களை தயார் படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஐ.டியில் உள்ள சுமார் 15000 இடத்திற்கு 10 லட்சம் மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர். இக்காலப் பெற்றோர்கள், மாணவர்களுக்கு பணம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. வாழ்வதற்காகத்தான் பணம் தேவையே ஒழிய, பணத்திற்காக வாழ்க்கை இல்லை! என்பதை  இவர்கள் உணர்ந்து கொண்டால்தான் இத்தகைய இழப்புகளை தவிர்க்க முடியும்.

 

Slider Image
1/4/2019 4:29:41 PM

வெற்றி வேண்டுமா! மனதில் திரைப்படத்தை ஓட்டுங்கள்!

 வானம் தொட்டு விடும் உயரம்தான்!

வெற்றியாளர்கள் தான் சாதிக்க நினைத்ததை ஒரே நாளில் சாதிப்பதில்லை. அந்த சாதனையை நிகழ்த்த கடுமையாகவும் தொடர்ச்சியாகவும் முயற்சி செய்ய வேண்டும். தான் செய்யப்போகும் முயற்சிகள் வெற்றியடைவதாக தனது மனத்திரையில் ஒரு திரைப்படம் போல ஓட்டிபார்க்கும் நபர்களால்தான் வாழ்வில் வெற்றியடைய முடியும். எண்ணமே வாழ்க்கை! நல்ல எண்ணங்களை மீண்டும் மீண்டும் மனத் திரையில் ஓட்டிப் பார்த்தால் நல்ல விளைவுகள் ஏற்படும்.

ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா, எங்காவது வெளியே சுற்றுலா நினைக்கிறீர்களா, ஏதாவது உணவகத்திற்கு சென்று விசே­மான உணவுப் பதார்த்தத்தை உண்ண விரும்புகிறீர்களா, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இந்த அனைத்து நிகழ்வுகளுக்கும்   உங்கள்  மனதில்  ஒரு காட்சி உங்களை அறிந்தோ, அறியாமலோ ஓடியது  நினைவு வருகிறதா!

எனவே, கனவுகளை   திரைப்பட காட்சியாக மாற்றி மனதில் ஓட்டிப் பாருங்கள் வெற்றி  நிச்சயம்.

“அறிவு என்பதைவிட இமேஜினே­ன் என்பது சக்தி வாய்ந்தது, அறிவுக்கு எல்லை உண்டு. ஆனால் மனக் காட்சிக்கு எல்லைகள் கிடையாது” என்கிறார் ஆல்பர்ட் ஜன்ஸ்டீன்.

எனவே, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கேற்றவாறு மனத் திரையில் படத்தை ஓட்டுங்கள் தாவரம் வளர்வதற்கு மண் எப்படி தேவைப்படுகிறதோ. அதுபோன்று வெற்றிக்குத்  தேவை  இமேஜினே­ன்  அதுதான்  உங்களது  வெற்றிக்கான  விதை.

கற்பனைகளுக்கு சிறகு கொடுங்கள் அவை உங்களை வாழ்வின் உச்சத்துக்கு அழைத்துச்  செல்லும்.

 

“இமேஜினே­னை சரியாக பயன்படுத்தும் போது அது நமது நண்பனாக விளங்குகிறது. அதற்கான காரண காரியங்கள் கிடையாது, அது நம்மை அனைத்து இடங்களுக்கும்  அழைத்துச்  செல்லும்  ஒளி” என்கிறார்  சுவாமி விவேகானந்தர்.

 

Slider Image
1/4/2019 4:36:51 PM

தமிழர்களின் அறம்-13

 சங்க கால மன்னர்கள் வீரத்திற்கு இணையாக கொடையிலும் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். இதனை கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளி மேல் பாடிய பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம். கொடையும் ஏனோ தானோ என்று இருப்பதில்லை. இரவலரின் மனம் நிரம்பும்படியான கொடையைத் தானமாக வழங்குவதில் வல்லவராக திகழ்ந்தவர் சங்க  மன்னர்கள்.

கடும்பின்  அடுகலம்  நிறையாக  நெடுங்கொடிப்
பூவா  வஞ்சியும்  தருகுவன்,பணைத்தோள்,
ஒண்ணுதல், விறலியர், பூவியை பெறுக!
           என மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் 
 
                                                           (புறம் : 32)
 
நலங்கிள்ளி   சோழன் பகைவரை அழிக்கும் திறல் மிக்கவன். எனினும் இரவலர்பால் பேரருள் பாராட்டுபவன். அவனிடம்  சென்று  உணவில்லையயன அடுகலம் நீட்டினால்  அதில் சோற்றிற்கு பதிலாக அவனது தலைநகரான வஞ்சி நகரத்தையே தருவான். விறலியர்கள் அவனை மகிழ்வித்துப் பூவிலை தகுதி என வேண்டினால் மாட மதுரையையே  பரிசிலாகத்  தருவான்.
 
இதிலிருந்து, சங்க மன்னர்களின்  கொடைத்  தன்மை  எவ்வாறு  இருந்தது   என்பதை  அறிந்து  பெருமை  கொள்ளலாம்.

Slider Image
1/23/2019 1:39:31 PM

ஒரு துளி இரண்டு உயிர்கள்!

 தமிழகத்தின்  சாத்தூரை  சார்ந்த  ஒரு  கர்ப்பிணி  பெண்ணுக்கு HIV  தொற்று   ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பரிசோதனைக் கூடத்தில் நடந்த  மனித தவறு ஒரு கர்ப்பிணி பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டது. தவறு நடக்க காரணமாக இருந்த மூன்று தொழில்நுட்ப வல்லுனர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட அப்பெண்ணின், குழந்தையின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. அரசு அந்தப் பெண்ணிற்கு வேலை மற்றும் வீடு, ஆரோக்கியச் செலவு என அனைத்து  உதவிகளை  செய்தாலும்  நடந்த  தவறுக்கு  சமமாகாது. 


          அதுமட்டுமின்றி கிருமி தொற்றிய ரத்தத்தை தானமாக அளித்த நபரும் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருந்தத்தக்கது. தனக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது தெரிந்தவுடன் அவர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கிக்கு தொடர்பு கொண்டு தனது ரத்தத்தை எவருக்கும் ஏற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே ரத்த பரிமாற்றம் கர்ப்பிணி பெண்ணுக்கு செய்யப்பட்டு விட்டது. அரசு   உயர்தர  மருத்துவ  சிகிச்சை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளித்தாலும் நிகழ்ந்த தவறு தமிழகத்தில் ஒரு களங்கமாகவே காணப்படும்.

எதிர்காலத்தில் இத்தகையத் தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

 

Slider Image
1/22/2019 3:39:37 PM

தமிழகர்களின் அறம் -14

 வீரத்திலும்  கொடையிலும்  சிறந்து  விளங்கிய  சங்க  கால  மன்னர்களின்    கொடைச் சிறப்பை  சங்கப் புலவர்கள் தங்களது பாடல்கள் மூலம் உலகிற்கு பறைச் சாற்றினர். கொடை என்பது சங்க மன்னர்களைப் பொறுத்தவரையில் இரந்தவர்க்கு எதிர்பார்ப்பைக்  காட்டிலும்  அதிகமாக  வாரி  வழங்குவதேயாகும்.

பசுவின் முலையை அறுத்தலும், கர்ப்பிணி பெண்ணின் கருவைச் சிதைத்தல், பார்ப்பனை அடித்தல் போன்றவை பாவச் செயல்கள் ஆகும். ஆனால் இந்தப் பாவங்களை கழுவாய்  செய்து   போக்கிக்  கொள்ளலாம். ஆனால் செய் நன்றி மறத்தல் என்பது மிகப்பெரிய  பாவம். அந்தப்  பாவத்திலிருந்து  தப்புவது  என்பது  இயலாத  காரியமாகும்.
 
இதனை  ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத்  துஞ்சிய   கிள்ளி  வளவன்   மேல் பாடிய   பாடல்  மூலம்  அறிந்து  கொள்ளலாம்.
பாணர்களுக்கு அவர்கள் தமது குடும்பத்தோடு இரத்தி மர நிழலில் அமர்ந்து உண்ணுவதற்கு ஏற்றவாறு தனது செல்வத்தை மறைத்து வைத்துக் கொள்ளாமல் பாணர்களுக்கு வெண்சோறு வழங்கியவன் நீ என்று மன்னனின் கொடைத் தனத்தை புகழ்ந்து பாடுகிறார் ஆலத்தூர் கிழார். அத்தகைய மன்னன் மழைத் துளிகளின் எண்ணிக்கையை  விட  அதிக  ஆண்டுகள்  வாழ  வேண்டும்  எனவும்  விழைகிறார் புலவர்.
 
ஆன்மலை  அறுத்த அறினி லோர்க்கும்
           மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
           குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும் 
           வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என,
           நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன் 
           செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
           அறம் பாடின்றே ஆயிழை கணவ!
 

Slider Image
1/23/2019 6:50:13 PM

காற்றை சுத்தப்படுத்தும் செடிகள்!

     தற்போது  காற்று  மாசு  என்பது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தலைநகர்  டெல்லி மிகவும் அதிக மாசடைந்த   மாநகரங்களில்    முதல்  இடத்தில்  உள்ளது.




  இதனால் மக்கள் தங்கள் இல்லங்களில் காற்று சுத்தப்படுத்தும் உபகரணங்களை (Air Purifier ) பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதில் காற்று மாசு முற்றிலும் நீக்கப் படுவதில்லை. குறிப்பாக மிகவும் ஆபத்தான பென்சீன், குளோரோஃபார்ம் போன்ற கெமிக்கல்களை இந்த உபகரங்களால் எதுவும் செய்ய முடியாது! இந்தக் கெமிக்கல்கள் கேன்சரை  உருவாக்கும்  முக்கிய காரணிகளாகும்.


 


தற்போது வா´ங்டன் பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் “போதோஸ் ஐவி” (Pothos Ivy ) என்ற உள்ளறை தாவரத்தை  ஜீன் மாற்றம் செய்து மேற்கண்ட பாதிப்பு உருவாக்கக்கூடிய   கெமிக்கல்களை  உட்கவர்ந்து  கொள்ளும்  வகையில்  புதிய தாவரத்தை உருவாக்கியுள்ளனர். இத்தகைய  தாவரங்கள் தங்களது வளர்ச்சிக்கு இந்த கெமிக்கலை  பயன்படுத்திக் கொள்கிறது.


 


  இந்த முயற்சி வெற்றி அடைந்தால் வீட்டிற்குள் இருக்கும் காற்றை சுத்தப் படுத்துவதற்கு  மிகவும் உதவியாக இருக்கும். மேலும்  இயற்கையான  முறை  என்பதால் பக்க விளைவுகளும் இருக்காது, என ஆய்வறிக்கைத் தெரிவிப்பதாக சுற்றுச்சூழல் அறிவியல்  மற்றும்  தொழில்நுட்பம்  பத்திரிகைத்  தெரிவிக்கிறது.


 


 

Slider Image
1/23/2019 1:58:05 PM

வானம் தொட்டு விடும் உயரம்தான்!

 வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமெனில் உங்களது இலக்கும் பெரியதாக இருத்தல் அவசியம். பெரிய இலக்கு கடினமானதாகவும் பயமுறுத்தக் கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் உயரமான பெரிய இலக்கு நிர்ணயிக்கப்படும் பொழுது உங்களது முழு ஆற்றலும்  அதனை  சாதிக்க தயாராகிறது. உங்களது மனம் அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக திட்டமிட  ஆரம்பிக்கிறது. பெரிய  இலக்குகளை  சிறு  சிறு  நடவடிக்கைகள் மூலமே அடைய முடியும். அதற்கு அதிக காலமும் ஆகலாம்.  அதற்காக அச்சமடையக் கூடாது.


நிலவுக்கு மனிதனை அனுப்பிய அமெரிக்காவும். ராக்கெட் ஏவும் வாகனங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனைப் படைத்த இந்தியாவும் ஒரு  நாளிலோ       இல்லை  ஒரு  வருடத்திலோ  இந்தச்  சாதனையை  நிகழ்த்தவில்லை.


இதற்கு  பல  ஆண்டுகள்  ஆயின. ஆனால்  அடைந்த  வெற்றியோ  மிகப் பெரியது!


மாரத்தான்  ஒட  வேண்டுமெனில்   ஒரே நாளில் நீங்கள் பயிற்சியை முடிக்க முடியாது. அதற்காக மாதக் கணக்கில் பயிற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நீண்ட தூர  ஓட்டத்தில்  வெற்றி  பெற முடியும்.


பெரியதாக எண்ணுங்கள்! சிறியதாக ஆரம்பியுங்கள்! சிறு துளி, பெரு வெள்ளம்! வெற்றி  உங்கள் கைகளில் தவழும்!


 

Slider Image
1/23/2019 2:45:14 PM

பனி மனிதன்

 கோலின் ஒ பிராடி, 33 வயது அமெரிக்கர் 54 நாட்களில் சுமார் 1600 கி.மீ    தூரத்தை   தன்னந்தனியாக அண்டார்டிகாவின் வட-தென் திசையில் பயணித்து சாதனை புரிந்துள்ளார். எவ்விதமான  சாதனமும், துணையும் இன்றி இந்த சாதனை புரிந்துள்ள முதல் நபர் இவர். இவரின் முழு பயணமும் GPS மூலம் கண்காணிக்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக  அவரது இணையதளத்திளும்  பதிவேற்றம்  செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது.


தனது கடைசி 32 மணி நேரம் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்றும் முக்கியத்துவம்  வாய்ந்தது  என்றும்  கூறுகிறார்  கோலின்,

நவம்பர் 3ம் தேதி  170  கிலோ  எடையுடன்  கூடிய  பொருட்களை  எடுத்துக்  கொண்டு கொடிய பனிக்காற்றில்  மிகக்குரைந்த வெப்பநிலையில் பயணிப்பது இறப்பதற்கு சமமானது, என்று கூறினார் கோலின். பயணம் கிளம்பியதற்கும், முடிவதற்கும் இடைப்பட்ட  நேரத்தில்  தான் மிகவும்  வாடிய போதிலும்  சிரிப்பு, நடனம், அழுகை  என தனது  பயணத்தை  வெற்றிகரமாக  முடித்துள்ளார்.

 

Slider Image
4/15/2019 6:59:33 PM

பூச்சிகள் இல்லாவிட்டால் உலகம் இருக்காது!

 பயலாஜிகல் கன்சர்வே­ன் எனும் பத்திரிக்கையின் கட்டுரைப்படி அடுத்த சில பத்தாண்டுகளில்   உலகில் வாழும் பூச்சி இனங்களில் 40% அழிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் இதற்கு முதன்மையானக்  காரணமாகும். இந்த  அழிவு வருடத்திற்கு 2.5% ஆக உள்ளது. சிட்னி மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் விவசாய அறிவியலுக்கான சீன அகாதமியுடன் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது.உலகின் விலங்குத் தொகுப்பில்  70%   பூச்சியினங்களாகும்.  இவை  உணவு   சங்கிலியில் பெரும்பங்கு வசிக்கிறது.

வாழிடங்கள் அழிப்பு, உரங்கள், பூச்சி கொல்லிகள், நகர் மயமகுதல் மற்றும் இதர உயிரியல்  காரணங்களால்  பூச்சியினம்  அழிந்துக்  கொண்டிருக்கிறது  எனக்  கூறுகிறது    இந்த  ஆய்வறிக்கை. பூச்சிகள்  அழிவதால் இயற்கையான மகரந்த சேர்க்கை பாதிக்கப்படுகிறது. பறவைகளுக்கு  உணவு கிடைப்பதில்  சிக்கல் ஏற்படுகிறது. இதனால்  சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படையக் கூடும். இதனை தடுக்க வேண்டுமானால் பூச்சிக் கொல்லிகளின் உபயோகத்தைக் குறைத்து இயற்கை விவசாய  முறைகளை பின்பற்ற  வேண்டியது அவசியம். பூச்சிகள்  அளவில்  சிறியதாக  இருக்கலாம் .ஆனால் பூச்சியினம் அழிவதால்  ஏற்படும்   விளைவுகள்   மிகப்  பெரியது  மட்டுமல்ல. ஈடு  செய்ய  முடியாததும்  கூட!

Slider Image
4/15/2019 6:23:24 PM

எளிமை வெற்றிக்கு வழி கோலும்!

 வாழ்க்கை என்பது எளிமையானது, நாம்தான்  அதை  சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்கிறார்  கன்பூஷியஸ். எளிமையாக   இருப்பது அவ்வளவு எளிதன்று அதனை கடைப்பிடிப்பது மிகவும் கடினமாகும். மகாத்மா காந்தியின் எளிமையான வாழ்வை கடைப்பிடிக்க  எத்தனை  பயிற்சிகள்  அவசியம்  என்பது அனைவருக்கும் புரியும். ஆனால் அந்த எளிமைதான் இந்தியாவிற்கு சுதந்திரம்  வாங்கிக் கொடுத்தது. பகட்டான ஆடைகளும் ஆடம்பரமான பேச்சும் அடுத்தவர்களை  கீழ்ழனவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்க பயன்படுமேயன்றி வெற்றிக்கு வழிக்காட்டாது. சொல்ல வேண்டியவற்றை குழப்பமின்றி தெளிவாக  எளிமையாக  எடுத்துக்  கூறுவது  என்பது  ஒரு  கலை. 

          இயற்கையில் இருக்கும்  பூக்களையும் இலைகளையும் உற்று பாருங்கள். அதில் விளங்கும் எளிமையின் சூத்திரம் உங்களுக்கு புரியும். எந்தவொரு  பிரச்சனைக்கும்  பதில் சிக்கலாக   இருக்க வேண்டும்  என்பது முக்கியமில்லை. கடுமையான சிக்கலான பிரச்சினைகள் மிகவும் எளிமையான வழிகள் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. மாவீரன் நெப்போலியன்  போனப்பார்ட்டைப்  பற்றி  அனைவருக்கும்  தெரியும்.   ஆனால் அவனது   கப்பல் படையை  நீர் மூலம்   ஆக்கிய    இங்கிலாந்தின்  கேப்டன் நெல்சனைப் பற்றித்  தெரியுமா!
 
பிரான்சும்  ஸ்பெயினும் சேர்ந்து 33 கப்பல்களுடன் இங்கிலாந்தின் மேல் போர் தொடுத்தது. 1805 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந் தேதி அரம்பத்தில் நெப்போலியனின் கடற்படையைக் கண்டு பிரமித்த நெல்சன் சுதாகரித்துக் கொண்டு ஒரு எளிய முறையை எதிரிகளின் மேல் செயல்படுத்தினார்.தனது கடற்ப் படையை அழிவிலிருந்து பாதுகாக்கவும் வெற்றியை   உறுதிப்படுத்தவும்  தனது கப்பல்  படையை இரண்டு பெரிய மற்றும்  சிறு குழுக்களாக் பிரித்தார்.முதலில் சிறிய குழுக்களை  அனுப்பி சண்டையை ஆரம்பித்தார். நெப்போலியனின்    அனைத்துக்  கப்பல்களும்   சிறிய  குழுவைத் தாக்கி கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று பெரிய குழுவையும் கடலில் இறக்கினார் .எதிர்பார்க்காத நேரத்தில் எதிரிகளை தாக்கி இங்கிலாந்திற்கு வெற்றியை தேடி  தந்தார்  நெல்சன். உலகமே நெப்போலியனைப் பார்த்து அஞ்சிய வேளையில் தனது சிறிய எளிமையான சாதுர்யமான முடிவால்  பெரிய  வெற்றி   இங்கிலாந்திற்கு  கிடைத்தது. எனவே   சிக்கலான   பிரச்சனைகளுக்கு  எளிமையான  வழியை   தேடுங்கள்  வெற்றிக்கு  வழி   கிடைக்கும்! 

Slider Image
4/15/2019 7:17:15 PM

தமிழர்களின் அறம்-16

 வீரத்தில் கொடையிலும் வல்லவர்களாகவும்  நல்லவர்களாகவும் விளங்கிய சங்க மன்னர்கள்  போரின் போது மகளிரையும் பசுக்களையும் நோய்வாய்ப் பட்டவர்களையும், பிராமணர்களையும் தாக்குவதில்லை என்ற நியதியைக்  கடைப்பிடித்து வந்தனர். அது மட்டுமின்றி  போருக்கு புறங்காட்டியவர்களையும் போருக்கு அஞ்சியவர்களையும் கூட தாக்குவது ஓரு இழுக்காக கருதப்பட்டது. இதனை ஆலத்தூர் கிழார், சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி  வளவன் மேல் பாடிய பாடல் மூலம்  அறியலாம்.சோழன் கருவூரைச் சுற்றி முற்றுகையிட்ட  போதும் சேர மன்னன் போர் முரசு கேட்ட  பின்னரும் போர் செய்ய கோட்டையை விட்டு வெளியே வரவில்லை.சோழ வீரர்கள் கருவூருக்கு காவலாக இருக்கும் மரங்களை   கூரான  கோடரிக் கொண்டு  வெட்டுகின்றனர். அதனால்  பூ நாறும்  அம்மரங்களின் நெடியக் கொம்புகள் நிலை கலங்கி வீழ்கின்றன. இவ்வாறு வெட்டும் ஒலி நெடுமதில்   சூழ்ந்த  அரண்மனைக்குள் இருக்கும் சேரனின் காதில் கேட்டும்  அவன் போருக்கும்  வராமல்  இனிதாக வீற்றிருக்கானே, அத்தகையவனுடன் போர் செய்ய வேண்டுமா, செய்ய வேண்டாமா என்பதை ஆராய்ந்து முடிவு செய்க  என்கிறார் ஆலத்தூர் கிழார். 

கடி மரம்  தடியும்  ஓசை  தன் ஊர்
நெடுமதில்  வரைப்பின்  கடிமனை  இயம்ப
ஆங்கு இனி  திருந்த  வேந்னோடு  ஈங்கு நின்
சிலைத்தார்  முரசம் கறங்க
மலைத் தனை  என்பது நானுத்தகவு உடைத்தே

Slider Image
4/16/2019 11:10:18 AM

சின்ன தம்பி அல்ல, பெரியத் தம்பி !

 கடந்த  சில  வருடங்களாகவே தமிழகத்தில்  சின்ன தம்பி என்ற யானையால் ஏற்பட்டுவரும்  தொல்லைகள் சொல்லிமாளாது. ஆனால்  சின்னத்தம்பியை  குறைச் சொல்லும்  மக்கள்  விவசாயிகள்  மற்றும்  இதரப்பிரிவினர்  முதலில்  தங்களது  தவறுகளை இனம்     கண்டு களைய  வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் வனப் பகுதிகள் அழிக்கப்பட்டதுடன்  மட்டுமன்றி  ஆக்கிரமிப்புகள்  யானைகளின் வழித்தடங்களை அழித்து வருவது இத்தகைய  யானை  மனிதன்  மோதலுக்கு  வழி வகுத்துள்ளது. 

           கடந்த   மூன்று ஆண்டுகளில்  அரசு புள்ளி விவரப்படி  2015-18 ஆம்  ஆண்டுகளில்    373   யானைகள்  இறந்துள்ளன. மின்  கம்பிகள்  மூலம் 226 யானைகளும்  ரயில் விபத்தில் 62 யானைகளும் வேட்டையாடுதல்  மூலம் 59 யானைகளும் விஷ­ம் மூலம் 26 யானைகளும்  இறந்துள்ளன. இதேக் காலக்கட்டத்தில் யானைகள் மூலம் இறந்துள்ள மனிதர்களின்   எண்ணிக்கை 1713 ஆகும். இத்தகைய மோதல் ஏற்பட காரணம்  யானைகளின்   வாழிடங்கள் அழிவதும் வழிதடங்கள்  அழிவதும் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மேயாகும். எனவே   மனிதன்  சின்னத்     தம்பியை   வேட்டையாடுவதை விட்டு விட்டு  தனது  பேராசைகளை   குறைத்துக் கொண்டால்தான் யானைகள் பாதுகாக்கப்படும். இத்தகைய   மோதல்கள் எதிர் காலத்தில்   நிகழாமல்  தடுக்க  வேண்டியது   மனிதர்களாகிய  நமது  கைகளில்தான்  உள்ளது.

Slider Image
5/18/2019 11:22:06 AM

கல்வியைப் பாதிக்கும் கால நிலை மாற்றம்!

 ஏழ்மையையும் வறுமையையும் விரட்டுவதில் கல்வியின் பங்கு முக்கியமானது. அனைத்து நாடுகளுமே தங்களது குழந்தைகளை குறைந்த பட்ச கல்வியை நோக்கி முன்னேற்ற பாதையில் செல்கிறது. இந்த முயற்சியிலும் பருவ கால மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும்  என  மேரிலாண்ட்  பல்கலை  கழகம்  நடத்திய  ஆய்வு தெரிவிக்கிறது.

கடுமையான வெப்பமும் அதிக மழையும் கொண்ட வெப்ப நாடுகளில், இந்த பாதிப்பு அதிகமாக வாய்ப்புள்ளதாகவும், மிகவும் வசதியான குழந்தைகள் கூட இதனால் பாதிப்படையக் கூடும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக தென்கிழக்கு ஆசியா நாடுகளில்  உள்ள  குழந்தைகள் இந்த  காலநிலையை சந்திக்கும் போது  அவர்களின் பள்ளி நாட்களின் எண்ணிக்கை குறைந்து கற்றல் திறனும் பொதுவான பள்ளிகல்வியும் பாதிப்படையக்  கூடும்  என்கிறது  ஆய்வு.
மேலும் இத்தகையை காலநிலை மாற்றங்களை கணக்கில் கொண்டு குழந்தைகளின் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் மாற்றப்பட வேண்டும் என்கிறது இந்த ஆய்வு.
 

Slider Image
5/18/2019 11:59:24 AM

திருச்சியைச் சார்ந்த தங்கப் பெண்மனி!

 கத்தார்  நாட்டில் தற்போது நடந்து வரும் 23 வது ஏசியன் அத்லெட்டிக் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சோர்ந்த கோமதி என்ற 30 வயது பெண் 800 மீட்டர்  ஓட்டத்தில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்று சாதனைப் புரிந்துள்ளார்.

சாதாரண  விவசாயின் மகளான கோமதி தனது கடின உழைப்பு, விடா முயற்சி மூலம் இன்று தங்கப் பெண்ணாக ஜொலிக்கிறார். தற்போது வருமான வரித்துறையில் பணியாற்றி வரும் இவர், தனது தந்தையை இழந்த போதிலும் அவரது கனவை  நனவாக்கி  இந்தியாவின்  பெருமையை  நிலை நாட்டியுள்ளார்.
மென்மேலும் பதக்கங்களைக் வெல்ல  அவருக்கு  வாழ்த்துக்கள்!

Slider Image
7/4/2019 12:11:42 PM

மக்கள் தொகை அதிகரிப்பு!

ஐக்கிய நாடுகள் அமைப்பின், சமூக பொருளாதார மக்கள் தொகைப் பிரிவு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி 2027 ல் உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தலையயடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2019 -2050 க்கு இடைப்பட்ட காலத்தில் சீனா உள்ளிட்ட •மார் 55 நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி குறையவிருக்கிறது. ஆனால் தற்போது •மார் 1.37 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட நமது நாடு 2028 ல் •மார் 1.45 மில்லியன் மக்கள் தொகையை எட்டும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 1950 ல் 37.6 கோடியாக இருந்த நமது மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்தன. விளைவாக நாட்டில் பல சமூக பொருளாதர விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் தொகை அதிகரிப்பால் இந்தியாவின் நீர் மற்றும் நில வளங்கள் மீதான உபயோகம் கடுமையாக அதிகரித்துள்ளது. உணவுத் தேவை அதிகரிப்பு காரணமாக வேளாண்துறை இன்று இரசாயனங்களின் நுகர்வு துறையாக மாறி •ற்றுச் •ழலை பாதிப்பதுடன் மக்களுக்கும் விலங்குகளுக்கும் புதிய புதிய நோய்களை உருவாக்கி வருகின்றன. மக்களின் ஏழ்மை நிலையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அடிப்படைத் தேவைகளான உணவு இருப்பிடம் குறித்து முழுமையான வளர்ச்சி மற்றும் தேவை பூர்த்தி இன்னும் ஏற்படவில்லை. இதுமட்டுமன்றி படித்த இளைஞர்களுக்குப் போதுமான வேலை வாய்ப்புகள் இன்னும் ஏற்படவில்லை. நாடு முழுவதும் நீர் , நிலம், உணவு, மின் உற்பத்தி, இருப்பிட வசதிகள், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, ஏழ்மை ஒழிப்பு என பல துறைகளில் நாம் பெரிய சாவல்களை எதிர் நோக்கி காத்திருக்கின்றோம். நமது நாட்டைப் பொருத்த வரையில் தென்னிந்திய மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப் படுத்திய போதிலும் வட இந்திய மாநிலங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்! இல்லாவிட்டால் உலகின் ஆறாவது பெரியப் பொருளாதாரம் என்ற நிலை நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை வெளிப்படுத்தாது! தற்போதைய முயற்சி மக்கள் தொகை கட்டுப்பாட்டை நோக்கி அமைய வேண்டும், என்பதே அனைவரின் விருப்பம்.

Slider Image
5/18/2019 11:12:20 AM

தமிழர்களின் அறம்-17

 அறத்தையும் மறத்தையும்  போற்றிய தமிழக சங்கக் கால மன்னர்கள் தங்களது நாட்டை பகை நாட்டவரும் விரும்பும்  வண்ணம் ஆட்சி செய்தனர். வீரம் விளைந்த மண்ணில் ஈரத்தையும் காத்தவர்கள் சங்க மன்னர்கள். இதனை ஆவூர் மூலங்கிழார் எனும் புலவர் சோழன் குளமுற்றத்துக் அஞ்சிய கிள்ளிவளவன் எனும் சோழ மன்னன்  மேல்  பாடிய  பாடல்  மூலம் அறியலாம்.

குன்றுகளைப் போன்ற இளங்களிறுகளை படைத் திரளாகக் கொண்டவன். சினங் கொண்டு பார்க்கும் இடத்தில் நெருப்பை  உருவாக்குபவன்! அருள் கொண்டு பார்க்கும் இடத்தில் பொன்னை விளைவிப்பவன்! நிலவிலே வெயிலையும்  தண்மையையும் உருவாக்க வல்லவன் நீ! செல்வர்கள் வறியவர்களுக்கும் வாரி வழங்குதல் உனது நாட்டில் நிகழும்! பகைவர் நாட்டு பரிசிலரும் உனது நாட்டில் கிடைக்கும் இன்பம் விண்ணுலகிலும் கிடைக்காது, என உனது   நாட்டைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பர்.
உடையோர்  ஈதலும்,  இல்லோர் இரத்தலும் 
            கடவத்  தன்மையின் கையறவு  உடைத்த, என 
            ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
            நின் நாடு உள்ளுவர், பரிசிலர்;
(புறம்-38)
இந்தப் பாடல் மூலம் வலிமைப் பொருந்திய சங்கக் கால தமிழ் மன்னர்கள் தமது நாட்டை வறியவர்களுக்கும், பகை நாட்டவருக்கும் கூட இன்ப மயமான  சூழலை  கொண்ட ஒரு   இடமாக  வைத்திருந்தனர்  என்பது  துலங்கும்.

Slider Image
5/18/2019 11:34:12 AM

வானம் தொட்டு விடும் உயரம் தான்!

 இன்றைய  இளைஞர்கள் உடலிலும் உள்ளத்திலும் ஊக்கம் மிக்கவர்கள்.கல்வியிலும் தொழில் நுட்பத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.ஆனால் அதே சமயத்தில் ஏதேனும் ஒரு முயற்சி,அதுவும் கடினமான இலக்கை அடைய வேண்டும் என நினைக்கும் போதே சோர்வடைந்து விடுகின்றனர்.அத்தகையைச் செயல் வெற்றி எனும் கனியை பறிக்க முடியாதவாறு செய்கிறது. அதனால்தான் பெரும் அறிஞர்கள் பலரும் வெற்றி எனும்  இலக்கை  அடையும்  வரை  முயற்சியை   நிறுத்தாதீர்கள் என்கிறனர்.

“வெற்றியை  உறுதிப்படுத்த  மேலும் ஒரு தடவை முயற்சி செய்து பாருங்கள்” என்கிறார், தாமஸ் ஆல்வா எடிசன். எளிமையாக கிடைக்கும் எதுவும் வெற்றியாக அமையாது. உடலாலும் உள்ளத்தாலும் செய்யும் உண்மையான முயற்சிகளே வெற்றியை சுவையுள்ளதாக ஆக்கும்! எனவே வெற்றியை நோக்கிய பயணத்தை ஒரு போதும் நிறுத்தாதீர்கள்! களைப்பாக  இருக்கிறதா  சிறிது  ஓய்வு எடுங்கள்! ஒவ்வொரு நாளையும் ஒரு புது  நாளாக  எண்ணவும்! வெளிச்சம் கிடைக்கும்!
இந்த உலகம் கோழைகளுக்கானதல்ல. ஒரே நாளில் நீங்கள் பறக்க நினைக்காதீர்கள். வெற்றி தோல்வி பற்றிய எந்த சிந்தனையும்   இல்லாமல் நீங்கள் உங்களது   கடைமையை  செய்யும்  போது  மனம்  வெற்றி  நோக்கி  பயணிக்கிறது.

Slider Image
7/4/2019 12:27:04 PM

எதிர் நீச்சல்

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இல்லாமல் இல்லை! அதற்காக பலர் சோர்ந்திட நேர்ந்தாலும் பலர் அவற்றை எதிர்கொண்டு வெற்றியடைந்து கொண்டுதான் உள்ளனர். உடல் ஊனமடைந்திருந்தாலும் உள்ளத்தால் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டவர்கள் பலர். அத்தகையவர்களில் பெங்களூரைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற ஊனமுற்ற 24 வயது நிரம்பிய நீச்சல் வீரரை ஒரு உதாரணமாகக் கூறலாம். இவர் பிறப்பிலிருந்தே ஸ்பைனா பிபிடா என்ற தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர். இதை சரி செய்ய குதிரை சவாரி அல்லது நீச்சல் பழகும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். சிறிய நீச்சல் தொட்டில் ஆரம்பித்த பயிற்சி பெரிய நீச்சல் குளத்தில் அவரை சாதனை செய்ய தூண்டியது. 8 வயதில் ஆரம்பித்த பயிற்சி, அரை மணி ஒரு மணி எனத் தொடங்கி 9 மணி நேர பயிற்சி வரை முடிந்த போதிலும் எதற்கும் அயராதவர் நிரஞ்சன்! இதில் என்ன விசே­ம் என்றால் அவரது உடலில் 17 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் தனது விடா முயற்சியில் ஜீன் மாதம் நடைபெற்ற நார்வேஜியன் நீச்சல் சேம்பியன்´ப் போட்டியில் 200மீட்டர், 100 மீட்டர், 50மீட்டர் என பல்வேறு போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனைப் புரிந்துள்ளார். அவரது வெற்றி மந்திரங்கள்! 1. நீங்கள் யாருக்கும் குறைந்தவர் இல்லை! 2. தன்னபிக்கையும் தைரியமும் தேவை! 3 . ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது, அதைக் கண்டுபிடித்து அதில் வெற்றியடை முயற்சி செய்ய வேண்டும்! 4. உங்கள் மனதிற்குப் பிடித்ததைச் செய்யவும் நீங்கள் செய்வதை விருப்பத்தோடு செய்யவும்!

Slider Image
5/18/2019 12:05:23 PM

உலகப் புத்தக நாள்

 “புத்தகத்தைப் போன்ற சிறந்த நண்பன் அதுவும் நம்பிக்கை மிகுந்த நண்பன் வேறு  எதுவும்  கிடையாது”, எர்னெஸ்ட் எமிங்வே

புத்தகங்கள் என்பது வெறும் மையினால் காகிதத்தினால் ஆனதல்ல! அவை  அறிவின்  விதை! மாற்றத்தின் தூண்டுகோல்! வாழ்வில் ஒளியேற்றும் விளக்கு!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ந் தேதி உலகக் புத்தக தினமாக 1995 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.வில்லியம் ஷேக்ஸ்பியர், மிகுள் செர்வான்டெஸ் இன்கா கார்சிலாஸோ போன்ற மேதைகளின் நினைவு நாள்தான் யுனஸ்போ மூலம் உலகப் புத்தக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஷார்ஜா நகரம் உலக புத்தக தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.புத்தகங்கள் உலகின் கலை, இலக்கிய, கலாச்சாரங்களை ஒரு தலை முறையிலிருந்து  மறு  தலைமுறைக்கு எடுத்து  செல்வதுடன் கலாச்சார பரிமாற்றங்களுக்கும் அறிவு  பரிமாற்றங்களுக்கும் வழி வகை செய்கிறது. உலகில் ஏற்பட்ட பெரும்பாலான கண்டு பிடிப்புகள், சமூக மாற்றங்கள்,அரசியல் மாற்றங்கள் என எதை எடுத்துக்கொண்டாலும்  அவற்றின்  பின்னால்  புத்தகங்கள்  இருப்பது  விளங்கும்.
எனவே நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டியது நமது கடமை மட்டுமல்ல! நாம் அனைவரும் இதை வாசிப்பு இயக்கமாக மாற்ற வேண்டியது அவசியமாகும். புத்தக வாசிப்பின்  முக்கியத்துவத்தை  அறிஞர் அண்ணாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி மூலம்  தெரிந்து  கொள்ளலாம்.
நோயுற்றிருந்த அண்ணாவிற்கு அறுவை சிகிச்சை இன்றே செய்யப்பட வேண்டும் என மருவத்துவர் கூறுகிறார். ஆனால் அண்ணாவோ அறுவை சிகிச்சையை நாளை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் மருத்துவர் ஏன் நாளை, என்ன நல்ல நாளா? என்று  வினவ  அண்ணா கூறுகிறார், இல்லை, ஐயா! நான் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்,அதை முடித்தவுடன் அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளுங்கள் என்றேன் என பதில் அளித்தார். இதிலிருந்து புத்தகங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.

 
 

Slider Image
7/4/2019 12:36:59 PM

தமிழர்களின் அறம் -18

சங்கப் புலவர்கள் அக்கால மன்னர்களின் வீரம், வலிமை, கொடை, புகழ் என ப லவற்றை பாடிய போதும் அவர்களின் வீரமும் வலிமையும் தேவையில்லாமல் மற்ற நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் தொல்லை தரும் விதமாக அமைதல் கூடாது என அவ்வப்பொழுது இடித்துரைத்தனர்! அதனை இடைக்காடனார் எனும் புலவர் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவன் மேல் பாடிய பாடல் மூலம் அறியலாம். மலை போன்ற யானை; கடல் போன்ற படை; மின்னும் வேலைப் பார்த்து பகை அரசர்கள் நடுங்கும் நிலை! இது தவறன்று! நீ உனது நாட்டில் ஆற்று நீரின் மோதல் அன்றி வேறு மோதல் இல்லாமல் ஆட்சி செய்க! புலி தன் குட்டியைப் பாதுகாப்பது போன்று செங்கோல் ஆட்சி புரிய இத்தகைய நன்செய் நாட்டு மன்னனே, புன்செய் நாட்டின் மீது (பாண்டிய நாடு) படை எடுக்காதே! ஆமை, தேன், குவளை மலர்களை பரிசாக அளிப்பவர்கள் உன் நாட்டு மக்கள்! மலையில் இருந்து இறங்கும் ஆற்றலைப் போல புலவர்களுக்கும் வாரி வழங்குபவன் நீ! ஆனால் நீ கூற்றுவன் போல மாற்று அரசர்களின் மண்ணைப் பார்த்து கொண்டிக்கிறாயே! என இடித்துரைக்கின்றார்! மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவரெல்லாம் நின் நோக்கினரே நீயே ருந்தில் கனிச்சி வருந்த வட்டித்துக் கூற்றுவெகுண் டன்ன முன்பொடு மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே! (புறம்-42)

Slider Image
7/4/2019 12:42:16 PM

வானம் தொட்டு விடும் உயரம் தான்!

மனதை திறந்து வைக்கவும், வழி பிறக்கும்! செக்கு மாடு பற்றி என்ன உங்களுக்குத் தெரியும்தானே! அது போன்றதுதான் மனதும். பழைய நினைவுகள், தீவிர நம்பிக்கைகள், அடுத்தவர்கள் செய்த வஞ்சனைகள், தான் சொல்வதும் செய்வதுமே சரி என்ற பிடிவாதம் போன்ற பல பழக்க வழக்கங்கள் மனிதனை ஒரு கூண்டுப் பறவையாக அடைத்து வைத்துள்ளது. இதனால் அவனது முழு ஆற்றலும் அவனுக்கு தெரிவதில்லை. அதையே கட்டவிழ்த்து விட்ட காளையைப் பாருங்கள்! கூண்டை விட்டு வெளியேறிப் பறவையைப் பாருங்கள்! அவை எவ்வளவு •தந்திரமாகவும் மகிழச்சியாகவும் உள்ளது. உலகைப் பார்க்கும் உங்களது எண்ணத்தை மாற்றுங்கள் அனைத்தும் மாறும் . கட்டற்ற மனம் என்பது உங்களது மனதை கண்ட கண்ட வழிகளில் அலைய விடுவதன்று! மனதைக் கட்டி இழுக்கும் அவலங்கள் நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்களில் இருந்து மனதை விடுவிப்பதே உண்மையான வெற்றி! மனதை திறப்பதால் புதிய புதிய எண்ணங்களுக்கு நீங்கள் வழியை திறக்கிறீர்கள் என்பதே உண்மை. புதிய எண்ணங்கள் புதிய வழியைக் காட்டும் என்பது நிச்சயம்! எந்த ஊர்க்கும் போகாத வழியில் •ற்றிக் கொண்டியிருப்பதைவிட ஊர் சேர உதவும் வழியை தேர்ந்தேடுங்கள்! ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கலாம் பழகப் பழக எதுவும் இனிக்கும்!

Slider Image
7/4/2019 12:54:47 PM

குடிநீருக்காக !

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் குடிநீர் இன்றி பரிதவித்துள்ள நிலையைப் பற்றி கடந்த ஆண்டு அனைவரும் படித்திருப்பீர்கள். அந்த நிலை தமக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் நேரும் என தொழில் நுட்ப நகரமான சென்னை எதிர்ப்பார்த்திருக்காது. இந்த ஆண்டு கோடைக்காலம் ஒவ்வொரு வீட்டிலும் குடிநீருக்காக காத்திருப்பதைப் பார்த்தால் வருண பகவானும் கண்ணீர் வடிப்பான்! பல இடங்களில் தண்ணீர் இல்லாததால் உணவகங்கள், பள்ளிகள், ஐ.டி. நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலை. இதற்கெல்லாம் காரணம் யார், வேறு யார் மனிதர்களாகிய நாம் தான். இயற்கை வளங்களை குறிப்பாக நீரை சேமிக்காமல் கண் மூடித்தனமான உபயோகம் தான் மூலக்காரணம். கடந்த 6-7 மாதங்களாக தமிழகத்தில் மழை இல்லை; ஏரிகளும் குளம், குட்டைகளும் வறண்டு நாளாகிறது. குடி நீர்த்தேக்கங்களில் 1 சதவீதத்துக்கு குறைவான நீர் . சென்னை நகரின் சாதாரணமாக தினசரி நீர் தேவை •மார் 1300 மில்லியன் லிட்டர் இதில் பாதியளவு கூட தற்போது வழங்கப்பட வில்லை. சென்னையைச் •ற்றி அமைந்துள்ள ஏரிகளின் மாவட்டமான காஞ்சிபுரம் இம்முறை கைக்கொடுக்கவில்லை . மழை இல்லாதது, பெய்த மழை நீரை சேமிக்காதது, ஆறுகளின் மணலை அதிகப்படியாக எடுப்பது, நீலத்தடி நீரை அதிகமாக எடுப்பது, நீர் ஆதாரங்களான ஏரிகள் தூர்வாரப்படாதது, செலவு செய்யும் நீரை மறு •ழற்சி செய்யாதது என பல்வேறு பிரச்சனைகளும் ஒன்று கூடி இன்றைய மனிதனை ஆட்டி வைக்கிறது. இதற்கனைத்தும் காரணம் மனிதனே! நீரின்றி அமையாது உலகு ! என்ற வள்ளுனின் வாக்கு இன்று உண்மையாகியுள்ளது. மனிதர்கள் திருந்த வேண்டும்.

Slider Image
8/8/2019 1:24:24 PM

பணத்திற்காக வேலை செய்யாதீர்கள்!


  
                 இன்றைய  இளைஞர்கள்  எதற்கெடுத்தாலும்  அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று  நினைக்கிறார்களே  ஒழிய அவர்களுக்கு பிடித்தமான வேலையை செய்ய வேண்டும்  என்று  நினைப்பதில்லை.  வாழ்க்கையில்  பணத்தைவிட மகிழ்ச்சியே முக்கியம்! மகிழ்ச்சி என்பது உங்களுக்கு பிடித்த மனதின் விருப்பங்களுக்கு இசைந்த பணிகளை செய்யும் பொழுதுதான் கிடைக்கும் தவறான வழிகளில் கூட பணம் ஈட்ட முடியும். ஆனால் அதனால் மகிழ்ச்சி கிடைக்காது. துயரம்தான் மிஞ்•ம்.
          வாழ்க்கைக்காக பணமே தவிர பணத்திற்காக வாழ்க்கை இல்லை. இன்பத்தை இழந்துவிட்டு  கோடிக் கணக்கில் புரள்வதில்  அர்த்தம்  இல்லை.
          வாழ்க்கையில் பெரிதாக சாதித்த எவரும் வாழ்வின் ஆரம்பத்தில் பணக்காரனாக இருந்ததில்லை. அவர்கள் படிப்படியாக முன்னேறியவர்கள் அவர்களால்தான் பணத்தோடு புகழையும் ஈட்ட முடியும்.
          பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றாலும் அளவான செல்வமே வாழ்விற்கு   இனிமை  தரும். என்ன  கிளம்பி விட்டீர்களா! மனதிற்கு பிடித்ததை செய்வதற்கு!

Slider Image
8/8/2019 12:56:06 PM

 தங்கத்தை அள்ளிக் குவிக்கும் ஹீமா தாஸ்!
 
           19    வயதே ஆன அசாம் மாநிலத்தை சேர்ந்த  ஹீமா தாஸ்  ஒரு  ஓட்டப்பந்தய     புயல். ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்தவராக  இருப்பினும்  தனது  ஓட்டத்   திறமையால் இன்று  உலகையே  தனதுப்  பக்கம்  உற்றுப்  பார்க்க  வைத்திருக்கிறார்.
           கடந்த   மூன்று வாரங்களில் ஐரோப்பாவில்  நடைப் பெற்று வரும் பல்வேறு       ஓட்டப் பந்தய போட்டிகளில் ஐந்து தங்கப் பதக்கங்களை தட்டி   வந்து  நாட்டிற்கு  பெருமைச் சேர்த்துள்ளார்   ஹீமா!
      அடுத்த ஆண்டு 2020‡ல் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில்  தனது திறமையை மிளிரச் செய்வதற்காக ஹீமாதாஸ் தற்போதிலிருந்த தன்னை  தயார்ப்  படுத்தி  வருகிறார்.
         அசாமின்  நெளகாவும்  மாவட்டத்தைச்  சேர்ந்த திங்  நகரத்திலிருந்து வருவதால் இவரை “திங் எக்ஸ்பிரஸ்” என்று அன்போடு அனைவரும் அழைக்கின்றனர்.

Slider Image
8/8/2019 12:42:28 PM

 

ÄÍ]«VB[ ‡2

          ÄÍ]«ÐÂz ÖÍ]BV ¶Ð©¸B sõïé\Vª ÄÍ]«VB[‡1Âz ¸Åz, ÃÝ>Võ|ï^  ïaÝm  ¶|Ý>  xBuEBVï ÄÍ]«VB[‡2 sõïéD Øku¤ï«\Vï å\m sÞQVMïáV_ °k©Ãâ|^ám. Ö>[  EÅ©ÃDÄD   Wés[  Ø>[  mòkÝ]_ ÖÍ> sõïéD Öźþ gF¡ ØÄFB sòÂþÅm. ØÃVmkVï Wés[ \Ý]B ¼ïVâ½_>V[ sõïéºï^ Öźþ gF¡ ØÄFkm kwÂïD. gªV_, æªVsuz ¶|Ý>ýBVï å\m åV| ÖÍ> A]B xBuEçB ¼\uØïVõ½ò©Ãm ¶çªkòÂzD ØÃòç\BVzD. ÖÍ> sõïéD WésoòÍm 100 þ.*. #«Ý]_ >ªm ·u®© ÃVç>çB  ¶ç\Ým  ØïVõ|  >ªm  gF¡© ÃèçB ¼\uØïV^ÓD \ºï_BV[, ÄÍ]«VB[‡1 Âz© ¸Åz  ÖÍ>  Wﵡ  Öü¼«V  sÞQVMïÓÂzD   å\m  åVâ½uzD  céïD  >¿sB  Aïçw ¼>½Ý >Ím^ám. ¼\KD å\m sõØk¹Ý ]⦺ï^ Øku¤Bç¦B ¶çªÝm sÞQVMïÓÂzD å\m kVµÝmÂïçá  ÃöÄVï  ¶¹Âþ¼ÅVD!

Slider Image
8/8/2019 12:58:40 PM

 உருகும் ஆர்க்டிக் பனிப் பாறைகள்!


      20 ஆம் நூற்றாண்டில்   புவியின்   வெப்பநிலை   உயர்வு இன்று ஒரு அபாயகரமான  முடிவை   நோக்கி நகர்ந்து வருகிறது. உயர்ந்து வரும் புவி வெப்பநிலையால்   ஏற்படும்  காலநிலை   மாற்றங்கள்  பல உயிரினங்கள் அழிவதற்கு இன்று  காரணமாகி  வருகிறது. ப•மை  வீடு விளைவு   என்பது  தற்போது  ஆர்க்டிக்கின் பனிப் பாறைகள்   அழிவிற்கு    காரணமாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து  கூறியுள்ளனர்.
    1990களில்  இருந்ததைவிட   மூன்றில் ஒருபங்கு தான் பனிப்பாறைகளின் தடிமன் உள்ளதாக அறிவியல் அறிஞர்கள் அறிவித்துள்ளனர். மேலும் பனிப்பாறைகளின் அடிப்பகுதிகள் உருகுவதால் கடல் உயிரினங்கள் மீது ஏற்படும் விளைவுகளையும் ஆராய்ந்து   வருவதாக   நார்த்  கரோலினா வில்மிங்க்டன் பல்கலைக்  கழகத்தைச்   சார்ந்த டில் வேக்னர்   எனும்  விஞ்ஞானி  அறிவித்துள்ளார்.
   ப•மை குடில் வாயுக்களால் உருகப்போவது ஆர்க்டிக்கின் பனிப்பாறை மட்டுமல்ல நமது   வாழ்க்கையும்தான்!


      இதனை  உணர்ந்து  திருந்த  வேண்டியது  நமது  கடமை!

Slider Image
8/8/2019 1:15:26 PM

தமிழர்களின் அறம் ‡ 19

 

      சங்க மன்னர்கள் வீரம், அறம், கொடை, புகழ் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதில் சோழ மன்னர்களில் ஒருவரான சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் பற்றி தாமப்பல் கண்ணனார் எனும் புலவர் பாடிய புறப்பாடல் அவர்களின் வீரத்துடன் செம்மையான குணத்தையும் பறைச் சாற்றுவதாக அமைந்துள்ளது.
    மக்களின் துன்பம் நீங்க தவம் செய்யும் அவிர்சடை முனிவர்கள் மருளும்படியும் புள்ளினங்கள் வாழும் படியும் சிபி மன்னன் ஆட்சிப் புரிந்தான். பருந்தின் பிடியிலிருந்து புறாவைக் காப்பாற்றுவதற்காக தனது தொடையிலிருந்து சதையை அரிந்து கொடுத்த அத்தகைய சிபியின் வழி வந்தவன் சோழ மன்னன்! அத்தகைய மரபில் வந்த நீ, நான் செய்த பிழையை தான் செய்ததாக நினைந்து வருந்தினாய்! நாணினாய்! தம்மை பிழை செய்தோரைப் பொறுத்துக் கொள்ளும் செம்மாப்பு இந்த சோழர் குடிக்கு எளிது என்பதை புகழ்ந்துரைத்து  அத்தகைய  புகழை  உடைய  நீ காவிரியாறு குவித்துள்ள மேட்டு மணலின்  எண்ணிக்கையைக்   காட்டிலும்  பல்லாண்டு வாழ்கவே! என வாழ்த்துரைக்கிறார்  அப் புலவர்!


 நின்யான்  பிழைத்தது  நோவாய்  என்னினும்,
 நீ  பிழைத்தாய்  போல்  நனி  நாணினையே,
 தம்மைப்  பிழைத்தோர்ப்  பொறுக்குஞ்  செம்மல்!
       (புறம் ‡ 43)
 

Slider Image
8/8/2019 1:18:55 PM

சந்திராயன் - 2

 
        சந்திரனுக்கு இந்தியா அனுப்பிய விண்கலமான சந்திராயன்‡1க்கு பிறகு, பத்தாண்டுகள்  கழித்து  அடுத்த  முயற்சியாக சந்திராயன்‡2 விண்கலம் வெற்றிகரமாக நமது விஞ்ஞானிகளால் ஏவப்பட்டுள்ளது.
                இதன்  சிறப்பம்சம்   நிலவின்  தென்  துருவத்தில் இந்த விண்கலம் இறங்கி ஆய்வு செய்ய விருக்கிறது. பொதுவாக நிலவின் மத்தியக் கோட்டில்தான் விண்கலங்கள் இறங்கி ஆய்வு செய்வது வழக்கம். ஆனால், சீனாவிற்கு அடுத்தபடியாக நமது நாடு இந்த புதிய முயற்சியை மேற்கொண்டிருப்பது அனைவருக்கும் பெருமையாகும். இந்த விண்கலம் நிலவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் தனது •ற்றுப் பாதையை  அமைத்துக்  கொண்டு  தனது  ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் மங்கல்யான், சந்திராயன்‡1 க்குப் பிறகு  இந்த  நிகழ்வு  இஸ்ரோ  விஞ்ஞானிகளுக்கும்   நமது  நாட்டிற்கும்  உலகம்  தழுவிய  புகழை தேடித் தந்துள்ளது. மேலும் நமது விண்வெளித் திட்டங்கள் வெற்றியடைய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நமது வாழ்த்துக்களை  பரிசாக  அளிக்கிறோம்!