எனது பெயர் கிருஷ்ண.செந்தில்குமார் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்ட சோழபுரத்தைச் சாந்தவன். பள்ளிக்கல்விக்குப் பிறகு கோவையில், கோவைத் தொழில்நுட்பக் கல்லூரியில் B.E. ( Electrical and Electronics )பட்ட படிப்பும், சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில்( Power Systems) முதுகலை பட்டப் படிப்பும் பயின்றேன். அதன் பிறகு இந்தியக் குடிமையியல் பணிக்கான (Indian Civil Service) தேர்வு எழுதி 1996 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிபணியில் (Indian Administrative Service) சேர்ந்தேன். தற்போது பீஹார் மாநிலத்தில் பணியாற்றி வருகிறேன்.ஆட்சி பணி தவிர, சமூகச் சேவையிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்,தமிழ் இலக்கியம் உட்பட வாசிப்பில் தீவிர ஆர்வம்உண்டு .
உலகமயமாதல்,தொழிற்மயமாதல்,பொருளாதார வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களில் மக்களுக்குத் தேவையான உணவு,உடை இருப்பிடம் வேண்டுமானால் இந்த நூற்றாண்டில் தேவையான அளவிற்கு கிடைத்திருக்கலாம் . ஆனால் இந்த வளர்ச்சி எதை நோக்கி செல்கிறது.உலகம் உயிருடன் இருக்குமா,இருப்பின் எத்தனை ஆண்டுகள்.இது மிகப்பிரிய கேள்விக் குறி.சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தொடந்து எச்சரித்து வந்த போதும்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது.காடுகள் தொடர்ந்து அக்கப்படுகிறது.மக்களுக்கு வேலைத் தேவை.ஆனால் பூமி தேவையில்லையா.நமது அடுத்துவரவிருக்கின்ற தலைமுறை வாழ்வதற்கான காலச்சூழல் இருக்கிறதா
கடந்த மாதத்தில் நடந்து முடிந்த இந்தோனேசிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த தருண் அய்யாசாமி 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவர், 48.96 வினாடிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
அர்ஜென்டினாவில் தற்போது நடைப்பெற்று வரும் இளைஞர்களுக்கான (Youth Olympics) ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தைச் சார்ந்த 15 வயது ஜெரிமி லால்ரின்னுங்கா என்ற சிறுவன், எடை தூக்கும் போட்டியில் (62 கிலோ பிரிவு) தங்கம் வென்று சாதனைப் புரிந்துள்ளார். இந்த ஆண்டு நடைப்பெற்ற ஏசியன் சேம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை ஏற்கனவே பெற்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.
1.வெற்றியின் திறவுகோல் - தோல்வி
இன்றைய இளைஞர்களுக்கு வானத்தில் பறக்கவும் ஆசை, ஆழ்கடலில் நீச்சல் அடிக்கவும் ஆசை.ஆனால் சமூகக்கட்டுப்பாடுகளும் காலங்காலாமாக சுகந்திரமாகவும் சுயமாகவும் செயல்பட விடுவதில்லை என்பதே உண்மை.அவர்களின் மனத்திற்க்கு பிடித்த இலக்குகளை அடைய முடிவதில்லை.வாழ்க்கையின் இலக்கு, சமூகத்தின் பார்வையால் குடும்ப உறுப்பினர்களின் விப்பத்தால் நிர்ணயிக்குப்படுகிறது.அதனால் தனது சுகந்திரத்தையும் நிர்ணயிருக்கும் உரிமையையும் அடுத்தவர்களுக்காக மாற்றிக்கொள்ளவோ,விட்டு கொடுக்கவோ, நிர்பந்திக்கப்படுகின்றனர்,சமூகத்தின் மரபுச்சார்ந்த பழக்கவழக்கங்கள் இளைஞர்களை தன்னிச்சையாக சுகந்திரமாக முடிவெடுக்கவோ இயங்கவோ விடுவதில்லை.
இளைஞர்களின் சிறகுகள் குழந்தையாக இருக்கும் போழுதே வெட்டப்படுகின்றன.வாழ்நாள் முழுவதும் கூண்டுக்கிளியாகவே வாழ்கின்றனர். வானத்தில் உச்சத்தைதொடவேண்டியவர்கள் வானத்தைப் பார்த்தவண்ணம் தரையிலேயே தத்தித்தத்தி காலத்தைகடந்த வேண்டிய நிலையில் வாழ்ந்துவருகின்றனர். இளைஞர்கள் வானத்துச்சூரியனாக பிரகாசிக்காவிட்டாலும் ஒரு நட்சத்திரமாக மின்னுவதற்குகாவது முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இக்காலத்தில் இளைஞர்கள் தோல்வியை நினைத்தேதுவண்டுவிடுவதால் முயற்சி என்றால் என்ன என்பதை அறிய முற்படுவதில்லை தோல்வி என்றச்சொல்லை ஒருவிபரீதமானச் சொல் என்று நினைத்துக் கொண்டு கண்ணையும் காதையும் பொத்திக் கொள்கின்றனர். அவர்கள் வெற்றியின் படிக்கட்டு தோல்வியே என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
தோல்வியைக்காட்டிலும் தோல்வியைப் பற்றிய பயம் தான் மனிதனை பாழாக்கிறது அவனைச் சாதிக்க இயலாமல் குடத்தில் இட்ட விளக்காக வாழ்நாள் முழுவதும் அடக்கிவைக்கிறது. இப்போது எந்த இளைஞரையாவது பார்த்து தம்பி நீ ஏதாவது வேலைக்கும் தேர்வுக்கும்தயார் செய்கிறாயா என்றுக் கேட்டவுடனே அவர் அதற்கு அதெல்லாம் எங்கே நமக்குகிடைக்கப் போடுகிறது என்ற அலட்சிய பதிலையே தருவார். அதாவது முயற்சி செய்வதற்கு முன்பே தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளுகிற நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டனர் இன்றைய இளைஞர்கள் இவர்கள் தாமஸ் ஆல்வா எடிசனைப் பார்க்க வேண்டும்.ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானி.இவையனைத்தும் என்ன ஒரே நாளிலா அவர்கண்டுபிடித்தார். இதனை உருவாக்க பத்தாயிரத்கும் அதிகமான முறை அவர் தோல்வியை தழுவியிருக்கிறார்.
இன்று நாம் மின்விளக்கு, திரைப்பட வசதிகளை மகிழ்ச்சியோடு அனுபவிக்க அவரது முயற்சி தான் காரணம். தோல்வியடையும் ஒவ்வொரு முறையும் நான் வெற்றி பெறுவதற்கான மாற்று வழியை தெரிந்து கொள்கிறேன் என்றார் அவர்.தன்னுடைய முழு ஆய்வகமும் எரிந்துசாம்பலான பொழுதும், மனம் தளராத அந்த மாமனிதன் தனது மனைவியிடம் தனது தவறுகள் அனைத்தும் எரிந்துவிட்டன, இனிமேல் வெற்றிக்கான வழி பிறக்கும் என்று உத்வேகத்தோடு உரைத்தவர். இத்தகைய முயற்சியும் விழுந்தால் மீண்டும் எழுந்து ஓட வேண்டிய மனப்பாங்கும், உத்வேகமும் கொண்டு தோல்வியைக் கண்டு மனம் தளராமல் அதேயே வெற்றிக்கான திறவுகோலாக பயன் படுத்த இளையசமுதாயம் எழுச்சியோடு எழவேண்டும். எனவே, பெற்றோர்களும், சமுதாயமும் இன்றைய மாணவர்களை, இளைஞர்களை தோல்வியை எதிர் நோக்கும் மனப்பான்மையோடு வளர்க்க விழைய வேண்டும்.மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய அவர்களை ஊக்குவிக்க வேண்டும்,அதுவே இளைஞர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கடமையாகும்,
தோல்வியே வெற்றிக்கான திறவுகோல்!
தோல்வியே வெற்றிக்கான படிக்கட்டு!
தோல்வியே வெற்றிக்கான வெற்றி !
தமிழ் மொழியின் சிறப்பு அனைவரும் அறிந்தே.உலகின் மூத்தக் குடியும் முதல் குடியும் தமிழ்க் குடியே. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மொழி நம் மொழி.தமிழ் மொழியின் பொற்காலம் என்றால் அது சங்ககாலம். பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் சங்க இலக்கியத்தின் இரு கண்கள். எட்டுத் தொகையில் ஒன்று புறநானூறு.தமிழர்களின் அறத்தையும் வீரத்தையும் பேசும் பேரிலக்கியம்.அதிலிருந்து சிலவற்றை தற்காலத் தமிழ்ச் சமூதாயத்திற்கு நினைவும்படுத்துவது. அவசியம், அவசரமும் கூட.
தற்போயை இளைஞர்களைப் பற்றி வயது மூத்தவர்களிடமோ, நடுத்தர வயதுடையவர்களிடயே கேள்வி கேட்டும் பாருங்கள் உடனே பதில் வேகமாகவில்லேற்றப்பட்ட அம்பு மாதிரி வரும், எதற்கும்லாயக்கற்றவன், உதவாக்கரை ஊர்ச்சுற்றி, செல்பேசியும் கையுமாக அலைகின்றவன் என்று.ஒரு நிமிடம், நீங்கள் நினைத்தம் பார்க்கவும், இந்த இளைஞர்களுக்காக,திட்டுவதைத் தவிர வேறு எதாவது நீங்கள் செய்திருக்கிறீர்களா? நிச்சயமாக பதில் இல்லை என்றே வரும்.இந்தியாவின் மக்கட் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இளைஞர்கள் உள்ளனர்.உலகின் இளமையான நாடுகளில் முன்னணி வகிக்கிறது நமது நாடு. இந்த உலகத்திற்கே தேவையான உழப்பை நமது இளைஞர்களால் வழங்க முடியும்.
ராதிகா அஹிரே! ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபரியும் 25 வயது ஏர்ஹேஸ்டஸ். இவர் கடந்த நவம்பர் 7ந் தேதி (2018 ஆம் ஆண்டு) மும்பையின் அந்தேரியில் உள்ள பல மாடிக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை தனது சாதுர்யத்தால் அணைத்து பெரும் விபத்தை தவிர்த்துள்ளார்.
பல மாடி கட்டிடத்தில் 9 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தை கண்டவுடன் சிறிதும் அஞ்சாமல் படி மூலம் 9வது மாடித் தளத்தை அடைந்து அங்கிருந்து தீ அணைப்பான்களை உபயோகப்படுத்தி விபத்தின் இழப்பை குறைத்தது குறிப்பிடத்தக்கது. இவருடன் இவரது சகோதரர் ரோஹித் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் மகேஷ் உறுதுணையாக இருந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் தீ விபத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போதிலும் இவர் விமானப் பணிகளுக்காக பெற்ற பயிற்சியை தக்க நேரத்தில் விவேத்துடன் உபயோகப்படுத்தியது பெருமை அளிக்கிறது.இவரது சாதனையை பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் வசிப்பவர்கள் ஒன்று கூடி குடியரசுத் தினத்தன்று பறைச் சாற்றி மற்றவர்களுக்கும் எடுத்தக்காட்டாக புகழ்மாலை சூட்டியுள்ளனர். அவரது புகழ் என்றும் வானில் பறக்கட்டும்!.
கடந்த பல நாட்களாக இந்தியா முழுவதும் மழை, வெள்ளம் தொடர்கிறது.மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. இருப்பினும் இந்த கஷ்டத்திலும் தன் கடமையைச் செவ்வனே செய்வதில் சிலர் எப்பொழுதுமே முன் மாதிரியாக விளங்குகின்றனர். ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் முதலே உத்தராகண்ட் மாநிலத்தில் கடும் மழை எங்கும் வெள்ளக் காடு. ஆனாலும் அம்மாநிலத்தின் பித்தோர்கர் மாவட்டத்தில் தானிபாகர் இலாக்காவில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியரான ஜோத் சிங் குன்வர், ஆற்றுப் பாலம் அடித்துச் செல்லப்பட்ட போதும் ஜிப்-லைன் மூலம் ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்.
தற்போதைய இளைஞர்கள் ஏதாவதொரு வேலையில் சேர்ந்துவிட்டாலே போதும், தான் உலகத்தை வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்கின்றனர்.
2. உங்கள் பேரார்வத்தை பின்பற்றுங்கள்!
வாழ்க்கையில் வெற்றி என்றால் பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் என்ற மனநிலை பலரிடத்திலும் காணப்படுகிறது. அதுவும் படித்தவர்களிடத்தில் இந்த எண்ணம் அதிக அளவில் புழங்குகிறது. வெற்றியின் ஒரு பகுதிதான் பணம். இதனால் திருப்தியும், ஆத்ம சந்தோமும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம்.
வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் இலக்கு வேண்டும். அந்த இலக்கு மனதிற்குப் பிடித்தமான ஒன்றாகவும் இருக்க வேண்டும். இன்றைக்கு எத்தனைப் பேர் தன் மனதிற்கு பிடித்ததை செய்கிறார்கள்? பெரும்பாலானவர்கள் நண்பர்களுக்கு, குடும்ப உறுப்பினர்களுக்கு, மனைவிக்கு, இலக்கையே மாற்றிக் கொண்டு ஏதோ இருந்தால் போதும் என்று வாழ்ந்து வருகின்றனர். இதனால் திருப்தியும் சந்தோமும் கிடைக்குமா என்று உறுதியாகக் கூறமுடியாது,
அதனால் தான் follow your passion என்று கூறுகிறார்கள்.
அத்தகைய மனதிற்குப் பிடித்த இலக்கை அடையும் பொழுது பணமும், புகழும் மகிழ்ச்சியும் தானாக வந்து சேரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இதற்கு உதாரணமாக ஆப்பிள் கம்பெனியின் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களைக் கூறலாம். மனத்திற்கு விருப்பமானதை செய்யுங்கள் என்று அறிவுரைக் கூறியவர். தன்னுடையை வேலையின் மேல் காதல் கொள்ளவும் என்று பறைச் சாற்றியவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
ஃபேஸ்புக்கின் தலைவரான மார்க் ஜீக்கர்பெர்க் பணத்தை பின் தொடாதீர்கள்! மகிழ்ச்சியை பின்தொடருங்கள்! என்று கூறுகிறார். மனதிற்கு பிடித்ததை செய்வதால் பணம் கிடைக்காமல் போகலாம், ஆனால் மகிழ்ச்சி நிச்சயம் கிடைக்கும்!
மாற்றி யோசிக்கவும்! மகிழ்ச்சி உறுதி!
எது உங்களது பேரார்வம் என்று கண்டறிய முடியவில்லை?
நேரம் காலம் பார்க்காமல் எந்த விதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், பணத்திற்காக இல்லாமல் எந்த வேலையை உங்களால் செய்ய முடிகிறதோ, அதுவே பேரார்வம் எனலாம்!
மன்னர்களை தன்னுரையால் நயம்பட இடித்துரைப்பதில் வல்லவர்கள் தமிழ் புலவர்கள். தான் வறுமையில் வாடினாலும் செம்மையாக வாழ்ந்தாலும் கூற வேண்டியதை தக்க நேரத்தில் கூறாமல் விடுவதில்லை. அத்தகைய உறவை தமிழ் மன்னர்களும் புலவர்களும் பேணிக் காத்தனர். இடித்துரைக்கும் புலவர்களை கடிந்து கொண்ட மன்னர்களை காண்பதரிது. அதனால்தான் தமிழ் மன்னர்களால் செங்கோல் ஆட்சி புரிய முடிந்தது.
புறநானூறு தமிழ் வேந்தர்களின் அறத்தையும், மறத்தையும், கொடைத் தன்மையையும், உலகினை காக்க வேண்டி முறைப் பற்றியும் எடுத்துரைக்கும் நன்னூலாகும்.
நீர் இன்றி அமையாது உலகு என்றுரைத்தார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்! இது நிதர்சன உண்மை. இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு பக்கம் வெள்ளத்தினால் குடிப்பதற்கு கூட நீர் கிடைப்பத்தில்லை. மறுபக்கம் வறட்சிக் காரணமாக சொட்டு நீருக்கு மக்கள் அலைய வேண்டிய நிர்பந்தம். காரணம், நீர்வள மேலாண்மை இல்லாதது தான். தற்போது இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் குறிப்பாக கேரளா கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு போன்றவை வெள்ளத்திளால் பாதிக்கபட்டுள்ளன.
ப்ளாஸ்டிக் என்பது நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. “நீர் இன்றி அமையாது உலகு” என்றான் வள்ளுவன். ஆனால், ப்ளாஸ்டிக் இன்றி அமையாது உலகு என்பது இன்றைய மக்களின் குரல்.
இந்த ஆண்டில் இந்தியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனை கேரளாவில் வந்த வெள்ளப் பெருக்கு. 1924 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளா இந்த பேரழிவைச் சந்தித்திருக்கிறது. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று வரலாறு காணாத மழை. ஆகஸ்ட் மாதத்தில் ஒன்று முதல் இருபதாம் தேதி வரையில் மட்டுமே கிட்டத்தட்ட 77 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த மாதத்தில் ஏற்பட்ட மழையளவு வழக்கமான மழையளவைக் காட்டிலும் மூன்று மடங்காகும். இதனை எதிர்பார்காத காரணத்தினால் ஏற்பட்ட அழிவு சுமார் இருபதாயிரம் கோடிக்கும் மேல் என்று வல்லுனர்கள் மதிப்பீட்டுள்ளனர். இதில் தனிப்பட்ட மற்றும் பொதுச் சொத்துக்கள் அடக்கம். உயிர் இழப்புகள் தனி.
இந்த வார சாதனையாளர் மும்பையைச் சார்ந்த ஜென் சடாவர்தே என்ற 10 வயது பெண்.
சங்க கால மன்னர்கள் அறமும், மறமும் கொண்டவர்கள். இல்லையயன்று கூறாத இரக்க குணம் நிறைந்தவர்கள். எதிரிகளை புறமுதுகுக் காட்டி ஓடச்செய்த போதிலும் இல்லையயயன்று வருபவர்களை இன் முகம் காட்டி பரிசுப்பொருட்களை வழங்கும் வள்ளல்கள். அவர்கள், மக்களுக்கு நெல்லையும் நீரையும் உயிராகக் கருதாமல் தன் மன்னனை உயிராகக் கருதியவர்கள்.
3. உச்சம் தொட கடுமையான உழைப்பு வேண்டும்!
வெற்றியின் விலை கடின உழைப்பு!
எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு ஒரே வழி கடின உழைப்பு மட்டுமே. சிறந்த பெற்றோராக வேண்டுமா இல்லை ஆசிரியராக வேண்டுமா அல்லது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டுமா! அனைத்திற்கும் ஒரே வழி உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே!
வெற்றிக்கான குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. அவ்வாறு இருந்தாலும் அந்த வெற்றி நீண்ட நாட்கள் நீடிக்காது. அது நீர்க் குமிழி போன்றது. குறுக்கு வழி வெற்றிகள் ஒரு மனிதனின் இமேஜை குறைப்பதுடன் இல்லாமல் அவனை ஒரு தன்னம்பிக்கையற்ற மனிதனாகவும் மாற்றிவிடும். கடின உழைப்பு, இலக்கின் உண்மை தன்மையை உணரவைக்கிறது.
கடின உழைப்பு ஒருவனின் உறுதித் தன்மையை, சுய மரியாதயை, எதையும் தாங்கும் சக்தியைக் கொடுக்கிறது. கடின உழைப்பின் மூலம் கிடைக்கும் வெற்றி ஒருவனுக்கு ஆத்ம திருப்தியை கொடுக்கிறது. உலகில் புகழ்பெற்ற கூடைப்பந்து வீரரான மிக்கேல் ஜோர்டான் தனது சிறு வயதிலேயே கடுமையான வாழ்வின் சுழலில் சிக்கித் தவித்தவர், ஆனால் அவரது தந்தையின் மூலம் கடின உழைப்பின் அனுபவத்தை புரிந்து கொண்டு பயிற்சி செய்து இன்று பணக்கார புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
உலகின் புகழ் பெற்ற நிறுவனமான ஜெனரல் மோட்டார் கம்பெனியின் தலைமை பொறுப்பை அடைந்த முதல் பெண் மேரி பர்ரா. தனது 18 வயதில் அந்த நிறுவனத்தின் சேர்ந்தவர், 33 ஆண்டுகள் கடுமையான உழைப்பிற்கு பிறகு அந்நிறுவனத்தில் தலைமை பொறுப்பை அடைந்து புகழ் எய்தியுள்ளார்!
எந்த துறையாக இருந்தாலும், இலக்கு எதுவாக இருப்பினும், வெற்றிக்கு வழி கடுமையான உழைப்பு மட்டுமே!
தற்போது முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, மொத்தம் 69 பதக்கங்களுடன் 8- து இடத்தைப் பிடித்துள்ளது,நாம் பெருமையடைய வேண்டிய வியம். இதில் 17 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடு இந்தியா. மக்கள் தொகையில் இரண்டாவது இடம். பால், பழம், காய்கறிகள் தானியங்கள் உற்பத்தியில் முன்னனி. அதே போன்று எதற்கும் உதவாத வாழ்வின் பயன்பாட்டிற்கு உபயோகமில்லாத கல்வி அளிக்கும் நிறுவனங்களின் குறிப்பாக தொழில் நுட்பக் கல்லூரிகளின் பெரும் சந்தையாக உள்ளது.
நமது நாட்டில் மக்கள் தொகையின் எண்ணிக்கைப் போலவே சமுதாயப் பிரச்சினைகளும் அதிகம் பன்முகத் தன்மையில் ஒற்றுமை என்பது ஒரு கனவாகிவிடுமோ எனத் தோன்றுகிறது. நாட்டில் ஒரு பக்கம் மழை, வெள்ளம், வறட்சி, வேலை வாய்ப்பின்மை போன்ற பல்வேறு இயற்கை மற்றும் சமூக இடர்பாடுகள். நடு நடுவே ரூபாயின் மதிப்புச் சரிவு, இறக்குமதி அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார பிரச்சினைகள் மறுப்பக்கம். இவற்றிற்கு இடையே சமீபகாலமாக ஒரு பெரிய பிரச்சினை, கும்பல் கொலை(Mob Lynching).
தற்போது எங்குப் பார்த்தாலும் எந்தச் செய்தித்தாளைப் பார்த்தாலும் ஒரு கொடுமையான விச் செய்தியைக் காண்கின்றோம். அது குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கோரம், அதுவும் குழந்தைகளுக்கான காப்பகத்தில் நடைபெற்று வரும் கொடுமை.
தற்போது அனைவரும் பசுமைக்குடில் விளைவு பற்றியும் அதற்கான காரணங்களையும் அறிவர். ஆனால் அதற்கு மூலக் காரணமான பசுமைக் குடில் வாயுக்கள்தான் குறைந்தபாடில்லை. தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
còzD gì½ ÃM© ÃVçÅï^!
20‡gD ±uÅVõ½_ Asl[ Øk©ÃWçé cBì¡ Ö[® Îò ¶ÃVBï«\Vª x½çk ¼åVÂþ åïìÍm kòþÅm. cBìÍm kòD As Øk©ÃWçéBV_ °uÃ|D ïVéWçé \Vuźï^ Ãé clöªºï^ ¶ak>uz Ö[® ïV«ð\Vþ kòþÅm. ÷ç\ T| sçá¡ ¨[Ãm >u¼ÃVm gì½Âþ[ ÃM© ÃVçÅï^ ¶asuz ïV«ð\Vþ c^á>Vï sÞQVMï^ >u¼ÃVm ïõ¦¤Ím í¤¥^áªì.
1990ï¹_ ÖòÍ>ç>s¦ J[¤_ Îòúz >V[ ÃM©ÃVçÅï¹[ >½\[ c^á>Vï ¶¤sB_ ¶¤Qìï^ ¶¤sÝm^áªì. ¼\KD ÃM©ÃVçÅï¹[ ¶½©Ãz]ï^ còzk>V_ ï¦_ clöªºï^ *m °uÃ|D sçá¡ïçá¥D g«VFÍm kòk>Vï åVìÝ ï¼«VoªV s_tºÂ¦[ Ã_ïçé ïwïÝç>ß ÄVìÍ> ½_ ¼kÂªì ¨ÐD sÞQVM ¶¤sÝm^áVì.
÷ç\ z½_ kV¥ÂïáV_ cò塚ÃVkm gì½Âþ[ ÃM©ÃVçÅ \â|\_é å\m kVµÂçï¥D>V[!
Ö>çª cðìÍm ]òÍ> ¼kõ½Bm å\m ï¦ç\!
வானம் தொட்டுவிடும் உயரம்தான்!
சாதிக்கப் பிறந்தவர்கள் நிர்ணயிக்க வேண்டியது, இலக்கு. அந்த இலக்கை அடைய வேண்டுமெனில் தேவை கடின உழைப்பு மற்றும் அந்த இலக்கு உங்கள் மனதின் விருப்பத்திற்கு அருகாமையில் இருக்க வேண்டும். அண்ணாந்து படுத்துக் கொண்டு வெறும் ஆகாயத்தைப் பார்ப்பதை விட மனதுக்கு பிடித்தமான இலக்கு எது என்பதை உற்று நோக்க வேண்டும்.
சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடைப் பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி அறிந்திருப்பீர்கள். அதில் இந்தியாவைச் சேர்ந்த பல இளம் விளையாட்டு வீரர்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்! அவர்களில் ஒருவர்தான் இந்த அடிப்பட்ட பெண் புலி ஸ்வப்னா பர்மன்.
உலகின் மிகப்பெரிய ஆறுகள் கடலில் கொண்டுச் சேர்க்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அளவிட முடியாத அளவிற்கு கடல் சுற்றுச் சூழலை பாதித்து வருகிறது, கடல் வாழ் உயிரினங்களான மீன், திமிங்கலம், மற்றும் இதர விலங்கினங்களும், தாவர இனங்களும் தங்கள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
வானம் தொட்டு விடும் உயரம்தான்!
தமிழர்களின் கொடை, ஒழுக்கம், அறம், வீரம், வன்மை, திண்மை போன்ற பெரும் பண்புகளைப் போற்றி பேசும் பெரும் இலக்கியம் புறநானூறு. அத்தகைய இலக்கியத்தின் ஒரு கனியாக விளங்குகிறது புலவர் நரிவெரூஉத் தலையார் பாடியச் செய்யுள். இந்தப் பாடல் சேர மன்னன் சேரமான் கருவூரேறிய ஏள்வாட் கோப்பெருஞ் சேரல் என்பவனின் மேல் பாடப்பட்டதாகும்.
உலகில் பல பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்துள்ளனர். இந்த சாதனைகளுக்குப் பின்னால் ஊக்கம் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. அவமானங்களும் பாதிப்புகளும் கூட சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன. இதற்கு உதாரணமாக தமிழகத்தைச் சார்ந்த ரூபி பியூட்டி என்ற பெண்மணியை கூறலாம்.
பெண்ணின் பெருந் தக்க யாவுள! பெண்ணை விட பெருமை மிக்க வேறு என்ன இருக்கிறது, என்கின்றான் திருவள்ளுவன். ஆனால் பெண்களின் நிலை என்ன? சமீபத்தில் “லான்செட்” மருத்துவ இதழில் வெளியான தற்கொலைப் பற்றிய ஓர் ஆய்வறிக்கையின் படி உலகின் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 37% பெண்கள் இந்தியர்கள்.
6. கவனக் குவிப்பு (FOCUS)
இளைஞர்கள், மாணவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் ஒரு இலக்கு வேண்டும். அந்த இலக்கை அடைய வேண்டுமானால் தன்னம்பிக்கையோடு, அச்சம் இன்றி முயற்சி செய்ய வேண்டும். கடின உழைப்பு மட்டுமே வெற்றிக்கு வழி செய்யும். இத்துடன் இலக்கை அடைய தகுந்த திட்டமிடலும், அந்த திட்டத்தை ஒரு முகத் தன்மையுடன் மனதை குவித்து செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
ஒரு செயலை செய்ய துணிந்து விட்டால், இரவு பகல் பாராமல், சிந்தனை சிதறாமல் அதனை நிறைவேற்ற வேண்டும். சூரிய ஒளி எப்படி ஒரு லென்ஸ் மூலம் குவிக்கப்பட்டவுடன் காகிதத்தை எரியச் செய்கிறதோ அதுபோன்ற மனக்குவிப்பு, ஒரு முகத் தன்மை ஒவ்வொருவருக்கும் அவசியம். ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டால் தேவையில்லாமல் பல செயல்களில் கை வைக்க கூடாது. அதனால் குவிப்பு சிதறி ஆற்றல் விரயமாகிவிடும். இதனால் மூளையின் செயல்திறன் குறைவதுடன் சிந்தனையிலும் சிதறல் ஏற்படும்.
இலக்கை அடைவதற்கான வழியை தேர்ந்தெடுத்தவுடன் தேவையின்றி அவ்வழியை மாற்றக் கூடாது. அவ்வழியில் செல்லும்போது தவறுகள் நடக்கலாம். தோல்விகள் ஏற்படலாம். ஆனால் அதற்காகத் துவண்டு விடாமல் விடா முயற்சியோடு இலக்கு நோக்கி முன்னேற வேண்டும். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள் அதைப் போல.
வெற்றியை அடைய உங்களுடைய ஆற்றல், நேரம், கடின உழைப்பு அனைத்தையும் முழு வீச்சோடு பயன்படுத்துங்கள். தேவையற்ற கவனச் சிதறல்களை விட்டொழிக்கவும். தற்காலத்தில் செல்லிடப் பேசி, முகநூல், வாட்ஸ் அப் போன்ற கணக்கில் அடங்கா தொல்லைகள் அதிகம். இவற்றையயல்லாம் மூட்டைக் கட்டி ஓரமாக வைத்துவிட்டு முன்னேறுவதற்கான வழியைப் பாருங்கள்.
ஒரு முகத் தன்மையை, மனதை குவிக்க உங்களது திட்டத்தை எழுதி வைத்துக் கொண்டு நேரப்படி அவற்றை செயல்படுத்துங்கள். அப்பொழுதுதான் எவ்வளவு தூரம் நீங்கள் பயணம் செய்தீர்கள் என்பதும் இலக்கை அடைய இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டும் என்பதும் தெரியும். அதே நேரத்தில் ஒரே நாளில் இலக்கை அடைய எண்ணாதீர்கள். அதற்கு பொறுமையும் விடா முயற்சியும் அவசியம். ஒவ்வொரு அடியாக எடுத்து வையுங்கள். ஒரு நாள் வெற்றி நிச்சயம் ! எடுத்த வேலையை காரணமின்றி தள்ளிப் போடாதீர்கள்.
இலக்கு தெளிவாக உள்ளதா உங்களது முழுக் கவனமும் அதில் ஈடுபாட்டுடன் உள்ளதா என்பதற்கு மகாபாரதம் வழி சொல்கிறது. துரோணாச்சாரியார் பஞ்ச பாண்டவர்களுக்கு வில்வித்தை கற்று தருகிறார். அந்த பயிற்சி இடத்தில் உள்ள ஒரு மரத்தைப் பார்த்து, என்ன தெரிகிறது என்று பாண்டவர்களிடம் ஒவ்வொருவராக கேள்வி எழுப்புகிறார். ஒருவர் மரம் தெரிகிறது என்கிறார்! மற்றொருவர் இலை தெரிகிறது என்கிறார்! ஆனால் வில்வித்தையில் வீரனான அர்ஜுனன் மட்டுமே அம்மரத்தில் உள்ள பறவை தெரிகிறது, அதன் கண் தெரிகிறது என்கிறான்! உங்களுடைய மனக் குவிப்பு இதுபோன்று இருந்தால்தான் வெற்றிக் கனியை தட்டிப் பறிக்க முடியும். “கையில் உள்ள வேலையின் மீது உங்களது அனைத்து எண்ணங்களையும் ஒருமைப்படுத்துங்கள்” என தொலைப் பேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹம்பெல் கூறுகிறார்.
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
கடந்த மாதத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. சில மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார, இயற்கை அழிவுகளை சரிச்செய்ய பெரும் பணமும் சில ஆண்டுகளும் தேவைப்படலாம். இத்தகையப் பேரழிகளுக்கு, மக்கள் இயற்கையின் மேல் நடத்திய கொடுந் தாக்குதல்தான் முக்கிய காரணம்.
அர்ஜென்டினாவில் தற்போது நடைப் பெற்று வரும் இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்று நமது நாட்டிற்கு பெருமைச் சேர்த்துள்ளார். துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கம் என்பது குறிப்பிடத் தக்கது.
போர் நெறி முறை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட புற நானூற்றுப் பாடல்கள் அக்கால வாழ்வியல் முறைகளை எடுத்துக் கூறுவதுடன் மட்டுமின்றி அரசர்களின் வீரம், கொடை, பண்பு நலன்களையும், அக்கால சமூகத்தின் கட்டமைப்பு சமூகத்தின் நல்ல மற்றும் கெட்ட மாண்புகளையும் எடுத்துரைப்பதில் கண்ணாடியாக விளங்குகிறது.
போர் என்பது மனிதன் தோன்றிய காலத்தே ஏற்பட்டுவிட்ட ஒன்று. முற்காலத்தில் ஆநிரைகளையும், நிலத்தையும் கைப்பற்ற ஏற்பட்ட போர் தற்காலத்தில் பொருளாதார காரணங்களுக்காகவும், இனங்களை அழிப்பதற்காகவும் நடைப்பெற்று வருகின்றன.
அக்காலப் போரின்போது சில மாண்புகள் மற்றும் வரைமுறைகள் பின்பற்றப் பட்டன என்பதற்கு புறநானூறு சாட்சியம் சொல்கிறது.
இதற்குச் சான்றாக, நெட்டிமையார் எனும் புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மேல் பாடிய பாடல் எனலாம்.
ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும்
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்
(புறநானூறு-9)
போர் என்பது வன்மையுடையோர் பிற வன்மையுடையோரிடும் மோதுவதே! எளியவர்களை, வறியவர்களை மோதலுக்கு அழைப்பது அறமாகாது ! அதனை மேற்கண்ட வரிகளில் காணலாம்.
போருக்கு முன்பு பசுக்களையும், பசு போன்ற பார்ப்பனர்களையும், பெண்களையும், நோய் வாய் பட்டவர்களையும் மன்னன் எச்சரிக்கை விடுப்பதாக இந்தப் பாடல் கூறுகிறது.
இத்தகைய நல்ல மனது உடையவனாக அரசன் இருப்பதால், அற நெறியில் நடப்பவனாக மன்னன் விளங்குவதால் அவன் பல்லாண்டுகள் வாழ வேண்டும் என நெட்டிமையார் வாழ்த்துகிறார். அதுவும் எத்துணை ஆண்டுகள் தெரியுமா? பஃறுளி ஆற்றின் மணல் எண்ணிக்கையைக் காட்டிலும் பல ஆண்டுகள், என வாழ்த்துகிறான்.
இதிலிருந்து, தமிழ் மன்னர்கள் கெட்டப் போரிடும் சமயத்திலும் நீதி நெறி முறைகளைக் கடைப்பிடித்தது விளங்கும்.
கடந்த சில வாரங்களில் மட்டும் நாட்டின் தலைநகரப் பகுதியில் ஆறு துப்புரவு தொழிலாளர்களும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐந்து பேரும் கழிவு நீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பொழுது தங்களது உயிரை இழந்துள்ளனர். மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண செய்தியாக இருந்தாலும் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களைப் பொறுத்த மட்டில் இது ஒரு பெரிய அநீதி.
மத்திய பிரதேசம் இந்தூரைச் சார்ந்த ஜுஹி ஜா என்ற 20 வயதுப் பெண், ஆசிய சாம்பியன்ஷிப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவிற்கான கோ-கோ போட்டிக்கான டீமில் இடம் பெற்றுள்ளார்.
பண்டையத் தமிழ் மன்னர்கள் அறத்திலும், வீரத்திலும், கொடையிலும் மக்களைப் பேணுவதிலும் தலைச் சிறந்து விளங்கினர். இவற்றைப் போற்றி புகழ்ந்த புலவர்கள் வீரத்தோடு வேளாண்மையைப் போற்ற வேண்டும் என பாண்டியன் நெடுஞ்செழியன் மேல் குட புலவியனார் என்ற புலவர் பாடுகிறார்.
வானம் தொட்டு விடும் உயரம்தான்!
பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு துறையில் வெற்றி அடைய வேண்டும், புகழ் பெற வேண்டும் என நினைக்கிறான். அதற்காகப் பிறந்தது முதலே ஏதேனும் ஒரு உந்து சக்தியைக் கொண்டு வழி தேடுகிறான்.
வெற்றி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடக் கூடியது. குழந்தைக்கு எழுந்து நடப்பது வெற்றி; மாணவனுக்கு நல்ல மதிப்பெண் பெறுவது வெற்றி; இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது வெற்றி; விளையாட்டு வீரனுக்கு பதக்கம் வெல்வது வெற்றி. ஆனால் இந்த வெற்றிகள் அனைத்தும் ஒரே நாளில் ஏற்படுவதல்ல! சிறு துளி பெரு வெள்ளம் போன்று சிறு விசையங்களின் கூட்டு விளைவுதான் பெரிய வெற்றி.
எனவே பெரிய வெற்றியடைய முனைபவர்கள் சிறு சிறு செயல்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு நல்ல காபி வேண்டுமென்றால் சரியான அளவில் பால், காபி மற்றம் சர்க்கரை கலக்கப்பட வேண்டும். இதில் சர்க்கரை சிறியதுதானே என்று நினைத்தால் எதிர்பார்த்தச் சுவை கிடைக்காது.
எவரெஸ்டில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமானால் கடுமையான பயிற்சிகளை சிறிது சிறிதாக மேற்கொள்ள வேண்டும். வெற்றியோ, தோல்வியோ ஆரம்பம் என்பது சிறிய விசையம். வண்டியின் கடையாணி என்பது மிகச் சிறியது. ஆனால் அது விழுந்துவிட்டால் வண்டிக்கே ஆபத்து ஏற்படும் ரயில்வே பாதையின் சிறிய விரிசல் பெரிய ரயிலைக் கவிழ்த்து விடும்.
எனவே வெற்றியை நோக்கி வீறு நடைபோடும் பொழுது சின்ன விசையங்களில் கவனத்தைச் செலுத்துங்கள். இல்லாவிட்டால் தடம் புரள வேண்டி வரும் .வாழ்வில் சிறிய சிறிய உதவிகளை தேவையானவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்து பாருங்கள். வணக்கம், நன்றி என்று சிறிய மரியாதைக்கு உரிய செயல்களை செய்து பாருங்கள். வெற்றி அடைய எடுக்கப்படும் முயற்சி ஒரு மராத்தான் ஓட்டப்பந்தயம். இது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல.
எனவே, வெற்றியின் பாதையில் செல்லும் போது இடையிடையே ஓய்வெடுத்து வாழ்க்ககையின் சிறு சிறு சந்தோங்களையும் ருசிக்க, ரசிக்க கற்றுக் கொண்டால் வெற்றியின் பாதை கடினமாக இருக்காது.
உலகம் முழுவதுமே இந்தியா உட்பட வனவிலங்குகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் கங்காரு போன்ற விலங்குகளின் எண்ணிக்கையை குறைக்க அரசே அவற்றை கொன்று வருகிறது. இது ஒரு புறமிக்க காரணமில்லாமல் தடீரென விலங்குகள் கொத்து கொத்தாக இறப்பதும் அதிர்ச்சி அளிக்க கூடிய வியம்.
உலகம் முழுவதுமே இந்தியா உட்பட வனவிலங்குகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் கங்காரு போன்ற விலங்குகளின் எண்ணிக்கையை குறைக்க அரசே அவற்றை கொன்று வருகிறது. இது ஒரு புறமிக்க காரணமில்லாமல் தடீரென விலங்குகள் கொத்து கொத்தாக இறப்பதும் அதிர்ச்சி அளிக்க கூடிய வியம்.
காந்தி என்ற மாமனிதர் இறந்தாலும் காந்தியின் தத்துவங்கள் அவரது குணங்கள் மக்களின் மனதிலிருந்து மறைவது என்பது சாத்தியம் இல்லை. ஏன் என்றால் உண்மை என்றும் அழிவதில்லை! காந்தியின் ஒவ்வொரு நடவடிக்கையும் வாழ்வின் உண்மையைத் தேடுவதாகவே அமைந்தன என்றால் மிகையாகாது.
பொறுத்தார் பூமி ஆள்வார்!
இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கை என்பது உடனடியாக விரும்பியதை அடைய வேண்டும் என்ற தவறான மனோபாவம் ஏற்பட்டுள்ளது. இந்த பொறுமையற்ற, விவேகமற்ற, வேகமான மனப்பான்மை அவர்களை சரியான வழிக்கு அழைத்துச் செல்லாது. அவசரம் என்பது ஏனோதானோ என்று ஒரு வேலையை முடிக்க உதவுமே தவிர விரும்பிய விளைவுகளைத் தராது. அதிகப்படியான அவசரம் ஒரு மனிதனை பைத்தியக்காரனாக்கி விட வாய்ப்புள்ளது. அவனது குண நலன்களை மாற்றிவிடும். இதனால் அவனுக்கு ஏற்படும் இலாபங்களைக் காட்டிலும் அதிக நஷ்டங்களே ஏற்படும்.
மலையின் உச்சியை அடைய வேண்டுமானால் நீங்கள் நடந்துதான் அதனை அடைய முடியும். நவீன காலமாக இருப்பதால் நீங்கள் வசதி படைத்தவராக இருந்தால் ஹெலிகாப்டரை பயன்படுத்தி உச்சத்தை அடைய முடியும். ஆனாலும், அதற்கும் பொறுமை அவசியம்.
தற்காலத்தில் இன்டர்நெட் சிறிது மெதுவாக வேலை செய்தாலே பொறுமையை இழந்து டென்ஷனாகும் குழந்தைகளையும் இளைஞர்களையும் பார்த்து வருகிறோம். வேகம் தேவை தான், அதற்காக வேகம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. விதைகள் முளைத்து செடியாகி, மரமாகி கனிகள் கிடைக்க வேண்டுமானால் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பொறுமையையும் சோம்பேறித் தனத்தையும் ஒன்றாக கருதக் கூடாது. பொறுமை என்பது கஷ்டமான நேரங்களிலும் உங்களது விருப்பமான இலக்கை அடைய நீங்கள் ஏதேனும் முயற்சித்துக் கொண்டேயிருக்க வேண்டும். வெறுமனே சோம்பேறியாக இருந்தால் எந்த வெற்றியும் கிடைக்காது.
ஒரு நிமிட அவசரம் உங்களது வாழ்வை சீர் குலைத்து விடும். சூரியன் கூட உதிப்பதற்கும் மறைவதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை எடுத்துக் கொண்டு பொறுமையாகவே செல்கிறது. உடனே தோன்றி உடனே மறைந்தால் பகல் என்ற அற்புதம் நமக்கு கிடைக்காமல் போய்விடும். அது போன்றுதான் இரவும்! இயற்கை எப்படி தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளதோ அதுபோன்று மனிதனும் பொறுமை என்னும் ஆயுதத்தை கையாளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த ஆயுதத்தை கொண்டு வழியில் வரும் துன்பங்களையும் தடைகளையும் கடப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
“ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு”
அதுபோல அடைய வேண்டிய இலக்கை அடைய அவசரப்படாதீர்கள்! அதற்காக முயற்சி செய்யாமல் சோம்பேறித் தனத்தோடு இருக்காதீர்கள். முயற்சியோடு பொறுமையாக காத்திருங்கள்! வானம் உங்கள் வசப்படும்!
சங்க காலத் தமிழ் மன்னர்கள் போரில் மட்டும் வல்லவர்களாகத் திகழவில்லை! அமைதியை நிலைநாட்டி பகைவர்களின் படையயடுப்பிலிருந்தும் மக்களை தன் உயிர் போல் பாதுகாத்து வந்தனர். தன்னுடைய வலிமையைக் கொண்டு எதிரிகள் நாட்டின் மீது படையயடுத்து துன்பம் ஏற்படாமல் அனைவரையும் கண் இமை போல பாதுகாத்து அறம் காத்தனர். தனது வீரத்தை தேவையில்லாமல் பயன்படுத்தியதாக எங்கும் காணக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் நாட்டில் நுழைந்த பகைவர்களை துரத்தியடிக்க துளிப்பொழுதும் யோசித்தது இல்லை.
நமது நாடு உலகின் ஆறாவது பெரிய பொருளாதார வளர்ச்சிடைந்த நாடு. இந்தப் பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மை, தொழிற்சாலைகள், சேவைகள் என பல துறைகளும், தங்களது பங்களிப்பைக் கொடுத்துள்ளன. உற்பத்தி பொருள்களும் சேவைகளும் நுகர்வோரை சென்றடைய சாலைகள் பெரும் பங்காற்றுகின்றன.
தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்களில் எரிக்கப்படும் நிலக்கரி, வாகன எரிபொருளில் இருந்து வெளிப்படும் புகை என அனைத்து உமிழ்வுகளும் பூமியை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதை மறுக்க முடியாது! இந்த பசுமைக் குடில் வாயுக்களால் பூமியின் வெப்பநிலை அதிவேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் 14 வயது பெண் குழந்தையயான்று பீஹார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் குறிப்பாக பீஹார், உத்திரப்பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அச்சம் மற்றும் தாக்குதலுக்கு பயந்து வெளியேறி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒருவருக்கு போதுமான ஊட்டச் சத்து கிடைப்பதில்லை. போதுமான உணவு கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு வயதிற்கேற்ற எடை, உயரம், இருப்பதில்லை. மேலும் ஊட்டச் சத்துக் குறைபாடால் நோய் எதிர்ப்பும் குறைவாக உள்ளது. இதனை நாம் கூறவில்லை! குளோபல் ங்கர் இன்டெக்ஸ் (Global Hungar Index ) 2018ன் அறிக்கைத் தெரிவிக்கிறது.
புறநானூறு சங்க கால மன்னர்களின், மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும் செவ்வியலக்கியம். மன்னர்களின் பண்புகள் என்னென்ன என்பதை படம் பிடித்துக் காட்டுவதுடன் நில்லாமல் அந்த பண்பு நலன் தவறும் பொழுது மன்னர்கள் எவ்வாறு இருத்தல் வேண்டும் என சங்கப் புலவர்கள் இடித்துரைத்தனர். மக்களின் சமூக வாழ்க்கையையும் பரதிபலிக்கும் வகையில் சங்ககால புறநானூறு விளங்குகிறது. மன்னனின் மாண்புகளோடு மக்களின் மாண்புகளையும் பேசும் பேரிலக்கியம் இது!
கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட அறிக்கையின்படி உலகின் 93% குழந்தைகள் விஷக் காற்றை சுவாசிக்கின்றனர். பத்தில் ஒன்பது பேர் அதிக அளவில் மாசடைந்த காற்றை சுவாசிக்கின்றனர் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 80% வரையறுக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான மாசடைந்த காற்றை சுவாசிப்பது மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயமாகும்.
இந்தியா மட்டுமல்ல உலக அளவிலும் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பல சாதனைகளைப் புரிந்தவர் மேரி கோம். மணிப்பூரைச் சார்ந்தவர். ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக்கில் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு பதக்கங்கள் என பல சாதனைகளை தன் வசமாக்கியவர். இளவயதில் குத்துச் சண்டைப் பழகுவதற்காக மைமாற்றுப் பணத்தில்தான் கையுறைகளை அவரால் வாங்க முடிந்தது. முயற்சி ஒன்றே அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். குறைவாகப் பேசு, வாழ்க்கை இனிக்கும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். அதனால்தான் இறைவன் ஒரு வாயையும் இரண்டு காதுகளையும் படைத்துள்ளான். குறைவாக பேசுவதற்காகவும், நிறைய கேட்பதற்காகவும்!
வானம் தொட்டுவிடும் உயரம் தான்!
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? முடியாது, No, வேண்டாம் போன்ற வார்த்தைகள் வெற்றிக்கு எப்படி வழிகோலும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? நீங்கள் தானே கூறினீர்கள் எப்பொழுதும் பாஸிட்டிவ் மனப்பான்மையோடு இருக்க வேண்டுமென்று! இப்பொழுது, என்ன புதிர் போடுகிறீர்கள்?
நாம் ஒவ்வொருவரும் பிறந்ததே ஒரு சாதனைதான். பிறந்த பிறகு சாதிக்க துடிப்பதும் இயற்கை! இதற்காகவே குழந்தையாக இருப்பதிலிருந்தே நாம் ஏதோ ஒரு கனவோடு வாழ்க்கையைத் தொடங்குகிறோம். இதில் வெற்றி அடைவதும், தோல்வி அடைவதும் அவரது முயற்சியைப் பொறுத்தே அமைகிறது.
இவ்வாறு ஒரு இலக்கு நோக்கி முன்னேறும் பொழுது, இலக்கை அடைய முயற்சிகள் செய்யும் பொழுது பல்வேறு எதிர்ப்புகள், பல்வேறு கவனச் சிதறல்கள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. திடீரென யாராவது புதிய ஐடியாக்களைத் தரலாம். பலர் புதிய வழிகளைப் பற்றிக் கூறலாம். ஆனால் அனைவரதுக் கருத்துக்களுக்கும் நீங்கள் தலையாயட்ட ஆரம்பித்தால் என்ன ஆகும்? அனைவருக்கும் நல்லவராகத் திகழவேண்டும் என்று நினைத்தால் நீங்கள் பைத்தியமாகத் தான் இருக்கவேண்டும். தேவையில்லாதவற்றை, முக்கியம் இல்லாதவற்றை, அனாவசியான சிதறல்களை நீங்கள் ஒதுக்கித் தள்ளினால்தான், வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியையும் முக்கியமான நிகழ்வுகளுக்கு உங்களால் ஒதுக்க முடியும்.
எனவே சரியான நேரத்தில், தேவையற்றவைகளுக்கு No சொல்லப் பழகுங்கள் உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். அந்த நேரத்தை உங்களது இலக்கை அடைய உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையற்றச் செயல்களைத் தவிர்த்துப் பாருங்கள், இலக்கை அடைவதற்கான வழித் தெளிவாகப் புலப்படும்.
என்ன, No சொல்வதற்கு தைரியத்தை வரவழைத்து விட்டீர்களா! வெற்றி நிச்சயம்.
சில நாட்களுக்கு முன்பு நெதர்லாந்து நாட்டில் 5G நெட்வொர்க் ஆரம்பிக்கப்பட்டது. அதன் காரணமாக, 5G தொழில்நுட்ப டவர்களிலிருந்து வெளிப்படும் அதிக ஆற்றல் கொண்ட கதிர்வீச்சுக் காரணமாக ஆயிரக் கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன. அந்தப் பறவைகளின் உடலில் எந்த விதமான நோய் தாக்குதலோ, கிருமிகளோ இல்லை, எனவே, தொலைப்பேசி டவர்களிலிந்து வெளிவரும் நுண்ணலைகளால் அந்தப் பறவைகளின் இதயங்கள் பாதிக்கப்பட்டு உயிரழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மழைக் காலம் ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பல்வேறு விதமான காய்ச்சல் நோய்கள் குறிப்பாக டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்றவை அதிகரித்து வருகிறது வழக்கமாகிவிட்டது. அரசுத் தரப்பில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த நோய்கள் மூலம் ஏற்படும் இறப்புகளை குறிப்பாக குழந்தை இறப்புகளை காணும் பொழுது பெரியக் கேள்வி குறி கண்முன் தோன்றுகிறது.
சங்க மன்னர்கள் வீரம், கொடையில் வல்வலர்களாகத் திகழ்ந்தவர்கள். போரின் போது தங்களுக்கென சில வரை முறைகளை, நீதி நெறி முறைகளைப் பின்பற்றினர். போர் நடக்கும் சமயத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயுற்றவர்கள் என சமூகத்தின் விளிம்பில் வாழ்பவர்களுக்கு தொந்தரவு ஏதும் செய்யாமல் தங்களை ஒரு எல்லைக்குள் நிறுத்திக் கொண்டவர்கள். இருப்பினும், போரில் எதிரிகள், அவர்களது மன்னர்கள், படைத்தலைவர்கள் கொல்லப்படுவது இயல்பே! அத்தகைய இக்கட்டான சமயங்களில் புலவர்கள் வெற்றி பெறும் மன்னர்களிடம், தோற்றுப் போகும் மன்னர்களுக்காக தூது சென்று உயிர் காக்க வேண்டுவதும் நடப்பதுண்டு. எதிரிகளின் மேல் இரக்கம் காட்ட வேண்டும் என்றும் சங்கப் புலவர்கள் இரந்ததுண்டு.
ஆம்! சாதனைகளுக்கு வயது தடையாக இருக்கமுடியாது என்பதை கேரளாவைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி நிரூபித்துள்ளார். கேரள எழுத்தறிவு இயக்கம் நடத்திய நான்காம் வகுப்பிற்கானத் தேர்வில் 98% மதிப்பெண் பெற்று சாதனை நிகழ்த்திய மூதாட்டிக்கு முன்னால் எந்த சாதனை நிற்க முடியும்!
உலகம் முழுவதும் ஏறக்குறைய 820 மில்லியன் மக்களுக்குப் போதுமான அளவு உணவு கிடைக்கவில்லை. இதனால் ஊட்டச் சத்துக் குறைபாடுகள் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பசி ஒழிப்பு திட்டத்திற்கு காலநிலை மாற்றம் ஒரு பெரியத் தடையாக இருக்கலாம் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
வானம் தொட்டுவிடும் உயரம்தான்!
வாழ்க்கையில் வெற்றியடைய யாருக்குத்தான் ஆசையில்லை! வெற்றி என்பது பணம் சம்பாதிப்பதாக இருக்கலாம். வேலை வாய்ப்பாக இருக்கலாம் இல்லை சுய தொழிலாக இருக்கலாம் அல்லது விளையாட்டுத் துறையில் வெல்வதாக இருக்கலாம்.
உங்களது இலக்கு என்ன, நீங்கள் எதனை சாதிக்க விரும்புகிறீர்கள் என்தை முடிவு செய்துவிட்டீர்களா, அப்படி என்றால் பாதி கிணறு தாண்டியாகிவிட்டது. மீதி கிணற்றை தாண்டுவது எப்படி? அதுதான் உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். இல்லாவிட்டால் ஆழ் கிணற்றில் விழ வேண்டியிருக்கும்.
எனவே, மீதி கிணற்றைத் தாண்ட வேண்டுமானால் அதற்கான வழிகள் என்ன என்று ஆராய்ந்து பார்க்கவும், உங்களால் தனியாக யோசிக்க முடியவில்லையா, குழப்பமாக இருக்கிறதா அச்சப்படாதீர்கள்!
உங்களுக்கு வழிகாட்ட ஆயிரக்கணக்கானவர் உள்ளனர். அது ஒரு புத்தகமாக இருக்கலாம். அவர் ஒரு துறைச் சார்ந்த நிபுணராக இருக்கலாம். இல்லாவிட்டால் உங்களது குடும்ப உறுப்பினராக இருக்கலாம், அல்லது உங்களது நண்பராக இருக்கலாம், ஆனால் யார் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ மற்றும் யாரிடம் உங்களை வழி நடத்தத் தேவையான நிபுணத்துவம், அனுபவம் இருக்கிறதோ அவரிடம் அறிவுரை கேளுங்கள். மற்றவர்களின் பல்லாண்டு அனுபவம் உங்களுக்கு சில நிமிடங்களில் வெற்றியைத் தேடி தரலாம்! நீங்கள் அறிவாளியாக இருக்கலாம். ஆனால் வெற்றிக்கு அறிவு மட்டுமே உதவாது. வெற்றிக்குத் தேவை அறிவை எங்கு எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற திறமையும் அனுபவமும்! இவை, அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்துதான் கிடைக்கும்.
மேலும், மற்றவர்களிடம் உதவியை, அறிவுரையை நாடும் பொழுது அவர்கள் தங்களது பிறத் தொடர்புகள் மூலம் ஏதாவது வழியைக் காட்டலாம். நாம் தற்போது படிக்கும் பெரும்பாலான இதிகாசங்களும், புராணங்களும், நல்வழி நூல்களும் ஆரம்பத்தில் வாய்மொழியாக வந்தவைதான். எனவே, வாழ்வில் வெற்றி பெற தகுந்த அறிவுரை கூறுபவர்களை நாடத் தயங்காதீர்கள். எதையும் காலத்தே செய்தால்தான் வெற்றிக்கு மகத்துவம் இருக்கும்.
எனவே, தன்னை தவறாக நினைப்பார்களோ என்ற கூச்சம் இல்லாமல் தகுந்த நபர்களிடம் உதவியை அறிவுரையைக் கேட்க தயங்காதீர்கள்! தயங்கினால் நஷ்டம் உங்களுக்குத்தான்!
அதனால் தான் வள்ளுவரும்
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
என்கிறார்.
வல்லமைகளில் தலைசிறந்தது, அறிவு முதலியவற்றால் பெரியவர்களை தன்னோடு சேர்த்துக் கொள் என்கிறார் தெய்வப் புலவர்.
வருடா வருடம் திருவிழா வருவது போல் ஏதாவது ஒரு பெயரில் புயல் தமிழகத்தை தாக்குவது வழக்கமாகிவிட்டது. தானே, ஒக்கி, தித்லி என்று வெவ்வேறு விதமான பெயர்கள். இந்த ஆண்டு வந்தது கஜா! கடந்த பத்து தினங்களுக்கு முன் வந்த இந்தப் புயல் தமிழகத்தின் நெற் களஞ்சியத்தை போர்க் களமாக மாற்றியுள்ளது. ஆம். மக்கள் தங்கள் வாழ்க்கையுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அந்தமான், ஒரு தனியாக அமைந்துள்ள தீவுத் தொகுப்பு, அங்கு பல பழங்குடி இனத்தினர் காட்டுக்குள் வசித்து வருகின்றனர். ஜாரவா, சென்டினெல் போன்ற இனத்தினர் முக்கியமானவர்கள். அம்மக்கள் தாம் வசிக்கும் பகுதிக்குள் எவரையும் அனுமதி அளிப்பதில்லை. ஏறக்குறைய 30,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழங்குடியினர் இப்பகுதியில் வாழ்வதாகக் கூறப்படுகிறது.
ÖòÃm kB>Vª ¼k>Vºþ z_ïVM ¨[Å ¯ªVçkß ÄVìÍ> ØÃõ ·\Vì 29000 þ.*. #«Ýç> 159 åVâï¹_ çÄÂþ^ JéD ï¦Ím gEBVs[ AB_ ØÃõ\è ¨[Å ØÃòç\çB ¶ç¦Ím^áVì ¨ª ÖÍ]B ¼>EB sçáBVâ|ï^ þá© ¨ÐD ¶ç\©A ¶¤sÝm^ám. Ökì >ªm ÃBðÝç> gü]¼«oBVs[ ØÃìÝ ¨ÐD åï«Ý]_ Ø>V¦ºþ ï_ïÝ>Vs_ x½Ým^áVì. Îò åVçáÂz 300 þ.*. ¨[Å T>Ý]_ Ökì ÃBðD ØÄFm >ªm ÄV>çªçB °uÃ|Ý] c^áVì.
>ªm ÃBðÝ][ ¼ÃVm ÄJï s¼«V]ï¹[ >VÂz>_, ïV|ï^, \çéï^, kªséºzï^, ïVâ|Ýy, AB_, \çw ¨ª ¶çªÝmD ¨]ì ØïVõ| ÄV>çª AöÍ> ØÃõ\è Ökì.
gü]¼«oBV. WREéVÍm, 益V, ¼ÃVìß·ï_, üØÃl[, ¸«V[ü, ØÃ_÷BD, ØÛì\M, ئ[\VìÂ, üT¦[, «iBV ¨[® Ãé åV|ïçá >[ªÍ>MBVï ·u¤ kÍ>kì ¨[Ãm z¤©¸¦Ý>Âïm. Eé Ö¦ºï¹_\â|D Ök«m ØÃu¼ÅVìï^ mçðBVïß ØÄ[Ūì.
ÖºþéVÍ]_ c^á ¼ÃVì[\¡Ý Ã_ïçé ïwïÝ]_ sçáBVâ| ¼\éVõç\Ý mçÅl_ ýÂzDØÃV¿m ÖÝ>çïB ¨õðD >ªÂzÝ ¼>V[¤B>Vï í®þÅVì.
ÖÍ> ÄV>çªÂïVª Aïçw ¼k>Vºþ >ªm ØÃu¼ÅVìïÓÂz ¶ì©ÃèÝm^áVì! gD, ¼Ãu¼ÅVìï^ Ö_éV\_ ÄV>çª °m?
தனது 99 ஆவது வயதில் கேரளாவைச் சார்ந்த சித்ரன் நம்பூதிரிபாத் என்ற ஓய்வு பெற்ற அரசு அலுவலர் இமய மலைகளில் 29 வது முறை ட்ரெக்கிங் செய்து சாதனை புரிந்துள்ளார். தனது நூறாவது வயதில் 30வது முறையை முடிக்க வேண்டும் என இப்பொழுதிலிருந்தே தன்னை தயார்ப் படுத்தக் கொண்டு வருகிறார்.
உலக அளவிலும் இந்தியாவிலும் அதிகரித்து வரும் காற்று மாசு, மற்றும் அதிகரித்து வரும் வளி மண்டல வெப்பநிலை அதிவேகமாக மக்களின் உயிருக்கும், சுற்றுச்சூழல் அழிவிற்கும் வில்லனாக மாறி வருகிறது. இது தொடர்பாக பாரீஸ் ஒப்பந்தம் போடப் பட்டிருந்தாலும் அதை நடைமுறை படுத்துவதில் இன்னும் குழப்பம் தான் நிலவுகிறது. தொடர் கூட்டங்களும் இதனை உறுதிப்படுத்த உலக முழுவதும் நடைபெற்று வருகிறது.
சங்க இலக்கியத்தின் அகமும் புறமும் தமிழ்ச் சமுதாயத்தின் இரண்டு கண்கள் போன்றவை. கணவன்-மனைவி அன்பை அடிப்படையாகக் கொண்ட அகத்திற்கு ஈடாக மன்னர்களின், மக்களின் போர்முறை, புகழ், வீரம், கொடை, ஈகை போன்ற வாழ்வியல் நெறி முறைகளைப் பற்றி புறநானூறுப் பேசுகிறது. மன்னர்கள் வல்லவர்களாக இருந்தால் மட்டுமே போதாது. நல்லவர்களாகவும், அருள் உள்ளம் படைத்தவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்பதை சங்கப் புலவர்கள் எடுத்துரைக்கின்றனர்.
புற நானூற்றுப் பாடல்கள் பல, மன்னர்களின் வீரத்தையும் புகழையும் பறைச் சாற்றுவதில் இணையற்றவை. அதே நேரத்தில் மன்னர்கள் போர் முடிந்தவுடன் செய்ய வேண்டிய கடமைகளை எடுத்துரைக்கவும் அப்பாடல்கள் தயங்கியதில்லை.
வானம் தொட்டு விடும் உயரம்தான்!
எந்த வொரு சாதனையாளரின் வாழ்க்கையைப் படித்து பாருங்கள், ஒரு விஷயம் நிச்சயமாகத் தென்படும்! அது செய்ய வேண்டியதை முடிவு செய்தவுடன், அடைய வேண்டிய இலக்கு எது, என்று முடிவு செய்தவுடன் சட்டென்று காரியத்தில் இறங்கவும்!
சூடு ஆறிவிட்டால், சோறு சுவை தராது! தனக்கு ஏற்ற சூழ்நிலை வரும் என காத்திருப்பவன் முட்டாள். உனக்கு ஏற்றவாறு சூழல்களை மாற்றிக் கொள், வெற்றி நிச்சயம்! இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு உங்களது நடைமுறைகளை மாற்றிக் கொள்ளுங்கள்! வெற்றி உங்களது கையில்! மழை பெய்கிறதா குடையுடன், செல்லவும். வெயில் அதிகமா அதே குடை உதவும்! ஆனால் வெயில் மழை இல்லாத நாளுக்காக காத்திருந்தால் நீங்கள் வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லமுடியாது. எதனையும் சாதிக்க இயலாது. எனவே, செய்ய வேண்டிய செயல்களை தள்ளிப் போடாதீர்கள். எல்லா நாளும் நல்ல நாள்தான். எல்லா நேரமும் நல்ல நேரம்தான். சரியான நேரத்தில் கிளம்பாமல் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர்.
தேர்விற்கு முன் படிப்பதைவிட தினம் தினம் கொஞ்சமாக படித்தால் வெற்றி நிச்சயம். எல்லாம் நளைக்கப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு நாளை என்பதே விடியாத ஒன்றாகவே இருக்கும்.
திட்டமிட்டு செயல்படுங்கள்! நாளை என்று தள்ளிப்போடாதீர்கள்! இன்றே நல்ல நாள் என்று நினைத்துக் கொண்டு முழு முயற்சியோடு செயல்பட்டால் வெற்றிக்கனி உங்களது மடியில்! பெரும்பாலானவர்கள் தோல்வி பயத்தினால்தான் தள்ளிப் போடுகின்றனர். எனவே அச்சத்தை துச்சமாக எண்ணி துள்ளி எழுந்தால் நீங்கள்தான் வெற்றியாளர்!
நமது நாட்டைப் பொறுத்தவரையில் ஓராயிரம் பிரச்சினைகள். ஏழ்மை, வறுமை, கல்வி, அறிவின்மை, போதுமான அளவிற்கு தொழில் வளர்ச்சியின்மை என்று சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் மக்கட் தொகைப் பெருக்கும்! இருந்தாலும், தற்போதைய நிலையில், தமிழகம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி விட்ட போதிலும். பெருகி வரும் வேலையின்மை, இளைஞர்களின் வாழ்க்கையைக் கேள்வி குறியாக்கியுள்ளது,
உலகில் வாழும் புலிகளில் பெரும்பான்மையானவை இந்தியாவில்தான் உள்ளன. அழிந்து வரும் புலிகளை காப்பதற்காகவும், புலிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் 1973-ல் “புராஜெக்ட் டைகர்” எனும் திட்டம் அரசால் ஆரம்பிக்கப்பட்டது.
வன விலங்குகளை குறிப்பாக யானைகள், புலிகள், சிங்கங்கள், காண்டாமிருகம் போன்றவை அவற்றின் மதிப்பு மிக்க உறுப்புகளுக்காவும் மருத்துவ குணத்திற்காகவும் மக்களையும் கால் நடைகளையும் தாக்குவதற்கு பழிவாங்கும் செயல்கள் மூலமாகவும் கொல்லப்படுவது வழக்கமான ஒரு செயலாகிவிட்டது. அந்த வகையில் சிறுத்தைகளும் மனிதர்களின் நடவடிக்கையிலிருந்து தப்பவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1500க்கும் அதிகமான சிறுத்தைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளதாக வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் அறிவித்துள்ளன.
டிசம்பர் 13 ஆம் நாள் மேகாலயாவின் 13 தொழிலாளர்களுக்கு ஒரு மோசமான நாள். ஜைந்தியா மலைகளில் உள்ள மூடப்பட்ட நிலக்கரிச் சுரங்கத்தில் நிலக்கரி எடுப்பதற்காக நுழைந்த இவர்களின் கதி என்ன, என்று இதுவரை தெரியவில்லை.
2018 ஆம் வருடத்தில் மட்டும் ஏறக்குறைய 20 மாணவர்கள் ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. டிசம்பர் மாதத்தில் 4 நாட்களில் 3 பேர் தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். கோட்டா வட இந்தியாவில் தனியார் பயிற்சி நிறுவனங்களின் தலைநகரமாகத் திகழ்கிறது.
அங்கு ஆயிரக் கணக்கான மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை வளமாக்க பயிற்சி என்ற கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். கடுமையானப் போட்டி, பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் அழுத்தம் மாணவர்கள் மேல் தேவையின்றி திணிக்கப்படுகிறது. பொறியியல், குறிப்பாக ஐ.ஐ.டி.க்கான நுழைவுத் தேர்வு மற்றும் நீட் தேர்விற்கு மாணவர்கள் இங்கு தங்கி தங்களை தயார் படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஐ.டியில் உள்ள சுமார் 15000 இடத்திற்கு 10 லட்சம் மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர். இக்காலப் பெற்றோர்கள், மாணவர்களுக்கு பணம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. வாழ்வதற்காகத்தான் பணம் தேவையே ஒழிய, பணத்திற்காக வாழ்க்கை இல்லை! என்பதை இவர்கள் உணர்ந்து கொண்டால்தான் இத்தகைய இழப்புகளை தவிர்க்க முடியும்.
வானம் தொட்டு விடும் உயரம்தான்!
வெற்றியாளர்கள் தான் சாதிக்க நினைத்ததை ஒரே நாளில் சாதிப்பதில்லை. அந்த சாதனையை நிகழ்த்த கடுமையாகவும் தொடர்ச்சியாகவும் முயற்சி செய்ய வேண்டும். தான் செய்யப்போகும் முயற்சிகள் வெற்றியடைவதாக தனது மனத்திரையில் ஒரு திரைப்படம் போல ஓட்டிபார்க்கும் நபர்களால்தான் வாழ்வில் வெற்றியடைய முடியும். எண்ணமே வாழ்க்கை! நல்ல எண்ணங்களை மீண்டும் மீண்டும் மனத் திரையில் ஓட்டிப் பார்த்தால் நல்ல விளைவுகள் ஏற்படும்.
ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா, எங்காவது வெளியே சுற்றுலா நினைக்கிறீர்களா, ஏதாவது உணவகத்திற்கு சென்று விசேமான உணவுப் பதார்த்தத்தை உண்ண விரும்புகிறீர்களா, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் உங்கள் மனதில் ஒரு காட்சி உங்களை அறிந்தோ, அறியாமலோ ஓடியது நினைவு வருகிறதா!
எனவே, கனவுகளை திரைப்பட காட்சியாக மாற்றி மனதில் ஓட்டிப் பாருங்கள் வெற்றி நிச்சயம்.
“அறிவு என்பதைவிட இமேஜினேன் என்பது சக்தி வாய்ந்தது, அறிவுக்கு எல்லை உண்டு. ஆனால் மனக் காட்சிக்கு எல்லைகள் கிடையாது” என்கிறார் ஆல்பர்ட் ஜன்ஸ்டீன்.
எனவே, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கேற்றவாறு மனத் திரையில் படத்தை ஓட்டுங்கள் தாவரம் வளர்வதற்கு மண் எப்படி தேவைப்படுகிறதோ. அதுபோன்று வெற்றிக்குத் தேவை இமேஜினேன் அதுதான் உங்களது வெற்றிக்கான விதை.
கற்பனைகளுக்கு சிறகு கொடுங்கள் அவை உங்களை வாழ்வின் உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்.
“இமேஜினேனை சரியாக பயன்படுத்தும் போது அது நமது நண்பனாக விளங்குகிறது. அதற்கான காரண காரியங்கள் கிடையாது, அது நம்மை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் ஒளி” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
சங்க கால மன்னர்கள் வீரத்திற்கு இணையாக கொடையிலும் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். இதனை கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளி மேல் பாடிய பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம். கொடையும் ஏனோ தானோ என்று இருப்பதில்லை. இரவலரின் மனம் நிரம்பும்படியான கொடையைத் தானமாக வழங்குவதில் வல்லவராக திகழ்ந்தவர் சங்க மன்னர்கள்.
தமிழகத்தின் சாத்தூரை சார்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு HIV தொற்று ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பரிசோதனைக் கூடத்தில் நடந்த மனித தவறு ஒரு கர்ப்பிணி பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டது. தவறு நடக்க காரணமாக இருந்த மூன்று தொழில்நுட்ப வல்லுனர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட அப்பெண்ணின், குழந்தையின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. அரசு அந்தப் பெண்ணிற்கு வேலை மற்றும் வீடு, ஆரோக்கியச் செலவு என அனைத்து உதவிகளை செய்தாலும் நடந்த தவறுக்கு சமமாகாது.
அதுமட்டுமின்றி கிருமி தொற்றிய ரத்தத்தை தானமாக அளித்த நபரும் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருந்தத்தக்கது. தனக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது தெரிந்தவுடன் அவர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கிக்கு தொடர்பு கொண்டு தனது ரத்தத்தை எவருக்கும் ஏற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே ரத்த பரிமாற்றம் கர்ப்பிணி பெண்ணுக்கு செய்யப்பட்டு விட்டது. அரசு உயர்தர மருத்துவ சிகிச்சை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளித்தாலும் நிகழ்ந்த தவறு தமிழகத்தில் ஒரு களங்கமாகவே காணப்படும்.
எதிர்காலத்தில் இத்தகையத் தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
வீரத்திலும் கொடையிலும் சிறந்து விளங்கிய சங்க கால மன்னர்களின் கொடைச் சிறப்பை சங்கப் புலவர்கள் தங்களது பாடல்கள் மூலம் உலகிற்கு பறைச் சாற்றினர். கொடை என்பது சங்க மன்னர்களைப் பொறுத்தவரையில் இரந்தவர்க்கு எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிகமாக வாரி வழங்குவதேயாகும்.
தற்போது காற்று மாசு என்பது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தலைநகர் டெல்லி மிகவும் அதிக மாசடைந்த மாநகரங்களில் முதல் இடத்தில் உள்ளது.
இதனால் மக்கள் தங்கள் இல்லங்களில் காற்று சுத்தப்படுத்தும் உபகரணங்களை (Air Purifier ) பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதில் காற்று மாசு முற்றிலும் நீக்கப் படுவதில்லை. குறிப்பாக மிகவும் ஆபத்தான பென்சீன், குளோரோஃபார்ம் போன்ற கெமிக்கல்களை இந்த உபகரங்களால் எதுவும் செய்ய முடியாது! இந்தக் கெமிக்கல்கள் கேன்சரை உருவாக்கும் முக்கிய காரணிகளாகும்.
தற்போது வா´ங்டன் பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் “போதோஸ் ஐவி” (Pothos Ivy ) என்ற உள்ளறை தாவரத்தை ஜீன் மாற்றம் செய்து மேற்கண்ட பாதிப்பு உருவாக்கக்கூடிய கெமிக்கல்களை உட்கவர்ந்து கொள்ளும் வகையில் புதிய தாவரத்தை உருவாக்கியுள்ளனர். இத்தகைய தாவரங்கள் தங்களது வளர்ச்சிக்கு இந்த கெமிக்கலை பயன்படுத்திக் கொள்கிறது.
இந்த முயற்சி வெற்றி அடைந்தால் வீட்டிற்குள் இருக்கும் காற்றை சுத்தப் படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இயற்கையான முறை என்பதால் பக்க விளைவுகளும் இருக்காது, என ஆய்வறிக்கைத் தெரிவிப்பதாக சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பத்திரிகைத் தெரிவிக்கிறது.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமெனில் உங்களது இலக்கும் பெரியதாக இருத்தல் அவசியம். பெரிய இலக்கு கடினமானதாகவும் பயமுறுத்தக் கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் உயரமான பெரிய இலக்கு நிர்ணயிக்கப்படும் பொழுது உங்களது முழு ஆற்றலும் அதனை சாதிக்க தயாராகிறது. உங்களது மனம் அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக திட்டமிட ஆரம்பிக்கிறது. பெரிய இலக்குகளை சிறு சிறு நடவடிக்கைகள் மூலமே அடைய முடியும். அதற்கு அதிக காலமும் ஆகலாம். அதற்காக அச்சமடையக் கூடாது.
நிலவுக்கு மனிதனை அனுப்பிய அமெரிக்காவும். ராக்கெட் ஏவும் வாகனங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனைப் படைத்த இந்தியாவும் ஒரு நாளிலோ இல்லை ஒரு வருடத்திலோ இந்தச் சாதனையை நிகழ்த்தவில்லை.
இதற்கு பல ஆண்டுகள் ஆயின. ஆனால் அடைந்த வெற்றியோ மிகப் பெரியது!
மாரத்தான் ஒட வேண்டுமெனில் ஒரே நாளில் நீங்கள் பயிற்சியை முடிக்க முடியாது. அதற்காக மாதக் கணக்கில் பயிற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நீண்ட தூர ஓட்டத்தில் வெற்றி பெற முடியும்.
பெரியதாக எண்ணுங்கள்! சிறியதாக ஆரம்பியுங்கள்! சிறு துளி, பெரு வெள்ளம்! வெற்றி உங்கள் கைகளில் தவழும்!
கோலின் ஒ பிராடி, 33 வயது அமெரிக்கர் 54 நாட்களில் சுமார் 1600 கி.மீ தூரத்தை தன்னந்தனியாக அண்டார்டிகாவின் வட-தென் திசையில் பயணித்து சாதனை புரிந்துள்ளார். எவ்விதமான சாதனமும், துணையும் இன்றி இந்த சாதனை புரிந்துள்ள முதல் நபர் இவர். இவரின் முழு பயணமும் GPS மூலம் கண்காணிக்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக அவரது இணையதளத்திளும் பதிவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தனது கடைசி 32 மணி நேரம் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறுகிறார் கோலின்,
நவம்பர் 3ம் தேதி 170 கிலோ எடையுடன் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு கொடிய பனிக்காற்றில் மிகக்குரைந்த வெப்பநிலையில் பயணிப்பது இறப்பதற்கு சமமானது, என்று கூறினார் கோலின். பயணம் கிளம்பியதற்கும், முடிவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் தான் மிகவும் வாடிய போதிலும் சிரிப்பு, நடனம், அழுகை என தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
பயலாஜிகல் கன்சர்வேன் எனும் பத்திரிக்கையின் கட்டுரைப்படி அடுத்த சில பத்தாண்டுகளில் உலகில் வாழும் பூச்சி இனங்களில் 40% அழிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் இதற்கு முதன்மையானக் காரணமாகும். இந்த அழிவு வருடத்திற்கு 2.5% ஆக உள்ளது. சிட்னி மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் விவசாய அறிவியலுக்கான சீன அகாதமியுடன் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது.உலகின் விலங்குத் தொகுப்பில் 70% பூச்சியினங்களாகும். இவை உணவு சங்கிலியில் பெரும்பங்கு வசிக்கிறது.
வாழ்க்கை என்பது எளிமையானது, நாம்தான் அதை சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்கிறார் கன்பூஷியஸ். எளிமையாக இருப்பது அவ்வளவு எளிதன்று அதனை கடைப்பிடிப்பது மிகவும் கடினமாகும். மகாத்மா காந்தியின் எளிமையான வாழ்வை கடைப்பிடிக்க எத்தனை பயிற்சிகள் அவசியம் என்பது அனைவருக்கும் புரியும். ஆனால் அந்த எளிமைதான் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. பகட்டான ஆடைகளும் ஆடம்பரமான பேச்சும் அடுத்தவர்களை கீழ்ழனவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்க பயன்படுமேயன்றி வெற்றிக்கு வழிக்காட்டாது. சொல்ல வேண்டியவற்றை குழப்பமின்றி தெளிவாக எளிமையாக எடுத்துக் கூறுவது என்பது ஒரு கலை.
வீரத்தில் கொடையிலும் வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும் விளங்கிய சங்க மன்னர்கள் போரின் போது மகளிரையும் பசுக்களையும் நோய்வாய்ப் பட்டவர்களையும், பிராமணர்களையும் தாக்குவதில்லை என்ற நியதியைக் கடைப்பிடித்து வந்தனர். அது மட்டுமின்றி போருக்கு புறங்காட்டியவர்களையும் போருக்கு அஞ்சியவர்களையும் கூட தாக்குவது ஓரு இழுக்காக கருதப்பட்டது. இதனை ஆலத்தூர் கிழார், சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவன் மேல் பாடிய பாடல் மூலம் அறியலாம்.சோழன் கருவூரைச் சுற்றி முற்றுகையிட்ட போதும் சேர மன்னன் போர் முரசு கேட்ட பின்னரும் போர் செய்ய கோட்டையை விட்டு வெளியே வரவில்லை.சோழ வீரர்கள் கருவூருக்கு காவலாக இருக்கும் மரங்களை கூரான கோடரிக் கொண்டு வெட்டுகின்றனர். அதனால் பூ நாறும் அம்மரங்களின் நெடியக் கொம்புகள் நிலை கலங்கி வீழ்கின்றன. இவ்வாறு வெட்டும் ஒலி நெடுமதில் சூழ்ந்த அரண்மனைக்குள் இருக்கும் சேரனின் காதில் கேட்டும் அவன் போருக்கும் வராமல் இனிதாக வீற்றிருக்கானே, அத்தகையவனுடன் போர் செய்ய வேண்டுமா, செய்ய வேண்டாமா என்பதை ஆராய்ந்து முடிவு செய்க என்கிறார் ஆலத்தூர் கிழார்.
கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் சின்ன தம்பி என்ற யானையால் ஏற்பட்டுவரும் தொல்லைகள் சொல்லிமாளாது. ஆனால் சின்னத்தம்பியை குறைச் சொல்லும் மக்கள் விவசாயிகள் மற்றும் இதரப்பிரிவினர் முதலில் தங்களது தவறுகளை இனம் கண்டு களைய வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் வனப் பகுதிகள் அழிக்கப்பட்டதுடன் மட்டுமன்றி ஆக்கிரமிப்புகள் யானைகளின் வழித்தடங்களை அழித்து வருவது இத்தகைய யானை மனிதன் மோதலுக்கு வழி வகுத்துள்ளது.
ஏழ்மையையும் வறுமையையும் விரட்டுவதில் கல்வியின் பங்கு முக்கியமானது. அனைத்து நாடுகளுமே தங்களது குழந்தைகளை குறைந்த பட்ச கல்வியை நோக்கி முன்னேற்ற பாதையில் செல்கிறது. இந்த முயற்சியிலும் பருவ கால மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என மேரிலாண்ட் பல்கலை கழகம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
கத்தார் நாட்டில் தற்போது நடந்து வரும் 23 வது ஏசியன் அத்லெட்டிக் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சோர்ந்த கோமதி என்ற 30 வயது பெண் 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்று சாதனைப் புரிந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின், சமூக பொருளாதார மக்கள் தொகைப் பிரிவு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி 2027 ல் உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தலையயடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2019 -2050 க்கு இடைப்பட்ட காலத்தில் சீனா உள்ளிட்ட •மார் 55 நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி குறையவிருக்கிறது. ஆனால் தற்போது •மார் 1.37 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட நமது நாடு 2028 ல் •மார் 1.45 மில்லியன் மக்கள் தொகையை எட்டும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 1950 ல் 37.6 கோடியாக இருந்த நமது மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்தன. விளைவாக நாட்டில் பல சமூக பொருளாதர விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் தொகை அதிகரிப்பால் இந்தியாவின் நீர் மற்றும் நில வளங்கள் மீதான உபயோகம் கடுமையாக அதிகரித்துள்ளது. உணவுத் தேவை அதிகரிப்பு காரணமாக வேளாண்துறை இன்று இரசாயனங்களின் நுகர்வு துறையாக மாறி •ற்றுச் •ழலை பாதிப்பதுடன் மக்களுக்கும் விலங்குகளுக்கும் புதிய புதிய நோய்களை உருவாக்கி வருகின்றன. மக்களின் ஏழ்மை நிலையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அடிப்படைத் தேவைகளான உணவு இருப்பிடம் குறித்து முழுமையான வளர்ச்சி மற்றும் தேவை பூர்த்தி இன்னும் ஏற்படவில்லை. இதுமட்டுமன்றி படித்த இளைஞர்களுக்குப் போதுமான வேலை வாய்ப்புகள் இன்னும் ஏற்படவில்லை. நாடு முழுவதும் நீர் , நிலம், உணவு, மின் உற்பத்தி, இருப்பிட வசதிகள், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, ஏழ்மை ஒழிப்பு என பல துறைகளில் நாம் பெரிய சாவல்களை எதிர் நோக்கி காத்திருக்கின்றோம். நமது நாட்டைப் பொருத்த வரையில் தென்னிந்திய மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப் படுத்திய போதிலும் வட இந்திய மாநிலங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்! இல்லாவிட்டால் உலகின் ஆறாவது பெரியப் பொருளாதாரம் என்ற நிலை நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை வெளிப்படுத்தாது! தற்போதைய முயற்சி மக்கள் தொகை கட்டுப்பாட்டை நோக்கி அமைய வேண்டும், என்பதே அனைவரின் விருப்பம்.
அறத்தையும் மறத்தையும் போற்றிய தமிழக சங்கக் கால மன்னர்கள் தங்களது நாட்டை பகை நாட்டவரும் விரும்பும் வண்ணம் ஆட்சி செய்தனர். வீரம் விளைந்த மண்ணில் ஈரத்தையும் காத்தவர்கள் சங்க மன்னர்கள். இதனை ஆவூர் மூலங்கிழார் எனும் புலவர் சோழன் குளமுற்றத்துக் அஞ்சிய கிள்ளிவளவன் எனும் சோழ மன்னன் மேல் பாடிய பாடல் மூலம் அறியலாம்.
இன்றைய இளைஞர்கள் உடலிலும் உள்ளத்திலும் ஊக்கம் மிக்கவர்கள்.கல்வியிலும் தொழில் நுட்பத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.ஆனால் அதே சமயத்தில் ஏதேனும் ஒரு முயற்சி,அதுவும் கடினமான இலக்கை அடைய வேண்டும் என நினைக்கும் போதே சோர்வடைந்து விடுகின்றனர்.அத்தகையைச் செயல் வெற்றி எனும் கனியை பறிக்க முடியாதவாறு செய்கிறது. அதனால்தான் பெரும் அறிஞர்கள் பலரும் வெற்றி எனும் இலக்கை அடையும் வரை முயற்சியை நிறுத்தாதீர்கள் என்கிறனர்.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இல்லாமல் இல்லை! அதற்காக பலர் சோர்ந்திட நேர்ந்தாலும் பலர் அவற்றை எதிர்கொண்டு வெற்றியடைந்து கொண்டுதான் உள்ளனர். உடல் ஊனமடைந்திருந்தாலும் உள்ளத்தால் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டவர்கள் பலர். அத்தகையவர்களில் பெங்களூரைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற ஊனமுற்ற 24 வயது நிரம்பிய நீச்சல் வீரரை ஒரு உதாரணமாகக் கூறலாம். இவர் பிறப்பிலிருந்தே ஸ்பைனா பிபிடா என்ற தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர். இதை சரி செய்ய குதிரை சவாரி அல்லது நீச்சல் பழகும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். சிறிய நீச்சல் தொட்டில் ஆரம்பித்த பயிற்சி பெரிய நீச்சல் குளத்தில் அவரை சாதனை செய்ய தூண்டியது. 8 வயதில் ஆரம்பித்த பயிற்சி, அரை மணி ஒரு மணி எனத் தொடங்கி 9 மணி நேர பயிற்சி வரை முடிந்த போதிலும் எதற்கும் அயராதவர் நிரஞ்சன்! இதில் என்ன விசேம் என்றால் அவரது உடலில் 17 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் தனது விடா முயற்சியில் ஜீன் மாதம் நடைபெற்ற நார்வேஜியன் நீச்சல் சேம்பியன்´ப் போட்டியில் 200மீட்டர், 100 மீட்டர், 50மீட்டர் என பல்வேறு போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனைப் புரிந்துள்ளார். அவரது வெற்றி மந்திரங்கள்! 1. நீங்கள் யாருக்கும் குறைந்தவர் இல்லை! 2. தன்னபிக்கையும் தைரியமும் தேவை! 3 . ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது, அதைக் கண்டுபிடித்து அதில் வெற்றியடை முயற்சி செய்ய வேண்டும்! 4. உங்கள் மனதிற்குப் பிடித்ததைச் செய்யவும் நீங்கள் செய்வதை விருப்பத்தோடு செய்யவும்!
“புத்தகத்தைப் போன்ற சிறந்த நண்பன் அதுவும் நம்பிக்கை மிகுந்த நண்பன் வேறு எதுவும் கிடையாது”, எர்னெஸ்ட் எமிங்வே
சங்கப் புலவர்கள் அக்கால மன்னர்களின் வீரம், வலிமை, கொடை, புகழ் என ப லவற்றை பாடிய போதும் அவர்களின் வீரமும் வலிமையும் தேவையில்லாமல் மற்ற நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் தொல்லை தரும் விதமாக அமைதல் கூடாது என அவ்வப்பொழுது இடித்துரைத்தனர்! அதனை இடைக்காடனார் எனும் புலவர் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவன் மேல் பாடிய பாடல் மூலம் அறியலாம். மலை போன்ற யானை; கடல் போன்ற படை; மின்னும் வேலைப் பார்த்து பகை அரசர்கள் நடுங்கும் நிலை! இது தவறன்று! நீ உனது நாட்டில் ஆற்று நீரின் மோதல் அன்றி வேறு மோதல் இல்லாமல் ஆட்சி செய்க! புலி தன் குட்டியைப் பாதுகாப்பது போன்று செங்கோல் ஆட்சி புரிய இத்தகைய நன்செய் நாட்டு மன்னனே, புன்செய் நாட்டின் மீது (பாண்டிய நாடு) படை எடுக்காதே! ஆமை, தேன், குவளை மலர்களை பரிசாக அளிப்பவர்கள் உன் நாட்டு மக்கள்! மலையில் இருந்து இறங்கும் ஆற்றலைப் போல புலவர்களுக்கும் வாரி வழங்குபவன் நீ! ஆனால் நீ கூற்றுவன் போல மாற்று அரசர்களின் மண்ணைப் பார்த்து கொண்டிக்கிறாயே! என இடித்துரைக்கின்றார்! மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவரெல்லாம் நின் நோக்கினரே நீயே ருந்தில் கனிச்சி வருந்த வட்டித்துக் கூற்றுவெகுண் டன்ன முன்பொடு மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே! (புறம்-42)
மனதை திறந்து வைக்கவும், வழி பிறக்கும்! செக்கு மாடு பற்றி என்ன உங்களுக்குத் தெரியும்தானே! அது போன்றதுதான் மனதும். பழைய நினைவுகள், தீவிர நம்பிக்கைகள், அடுத்தவர்கள் செய்த வஞ்சனைகள், தான் சொல்வதும் செய்வதுமே சரி என்ற பிடிவாதம் போன்ற பல பழக்க வழக்கங்கள் மனிதனை ஒரு கூண்டுப் பறவையாக அடைத்து வைத்துள்ளது. இதனால் அவனது முழு ஆற்றலும் அவனுக்கு தெரிவதில்லை. அதையே கட்டவிழ்த்து விட்ட காளையைப் பாருங்கள்! கூண்டை விட்டு வெளியேறிப் பறவையைப் பாருங்கள்! அவை எவ்வளவு •தந்திரமாகவும் மகிழச்சியாகவும் உள்ளது. உலகைப் பார்க்கும் உங்களது எண்ணத்தை மாற்றுங்கள் அனைத்தும் மாறும் . கட்டற்ற மனம் என்பது உங்களது மனதை கண்ட கண்ட வழிகளில் அலைய விடுவதன்று! மனதைக் கட்டி இழுக்கும் அவலங்கள் நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்களில் இருந்து மனதை விடுவிப்பதே உண்மையான வெற்றி! மனதை திறப்பதால் புதிய புதிய எண்ணங்களுக்கு நீங்கள் வழியை திறக்கிறீர்கள் என்பதே உண்மை. புதிய எண்ணங்கள் புதிய வழியைக் காட்டும் என்பது நிச்சயம்! எந்த ஊர்க்கும் போகாத வழியில் •ற்றிக் கொண்டியிருப்பதைவிட ஊர் சேர உதவும் வழியை தேர்ந்தேடுங்கள்! ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கலாம் பழகப் பழக எதுவும் இனிக்கும்!
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் குடிநீர் இன்றி பரிதவித்துள்ள நிலையைப் பற்றி கடந்த ஆண்டு அனைவரும் படித்திருப்பீர்கள். அந்த நிலை தமக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் நேரும் என தொழில் நுட்ப நகரமான சென்னை எதிர்ப்பார்த்திருக்காது. இந்த ஆண்டு கோடைக்காலம் ஒவ்வொரு வீட்டிலும் குடிநீருக்காக காத்திருப்பதைப் பார்த்தால் வருண பகவானும் கண்ணீர் வடிப்பான்! பல இடங்களில் தண்ணீர் இல்லாததால் உணவகங்கள், பள்ளிகள், ஐ.டி. நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலை. இதற்கெல்லாம் காரணம் யார், வேறு யார் மனிதர்களாகிய நாம் தான். இயற்கை வளங்களை குறிப்பாக நீரை சேமிக்காமல் கண் மூடித்தனமான உபயோகம் தான் மூலக்காரணம். கடந்த 6-7 மாதங்களாக தமிழகத்தில் மழை இல்லை; ஏரிகளும் குளம், குட்டைகளும் வறண்டு நாளாகிறது. குடி நீர்த்தேக்கங்களில் 1 சதவீதத்துக்கு குறைவான நீர் . சென்னை நகரின் சாதாரணமாக தினசரி நீர் தேவை •மார் 1300 மில்லியன் லிட்டர் இதில் பாதியளவு கூட தற்போது வழங்கப்பட வில்லை. சென்னையைச் •ற்றி அமைந்துள்ள ஏரிகளின் மாவட்டமான காஞ்சிபுரம் இம்முறை கைக்கொடுக்கவில்லை . மழை இல்லாதது, பெய்த மழை நீரை சேமிக்காதது, ஆறுகளின் மணலை அதிகப்படியாக எடுப்பது, நீலத்தடி நீரை அதிகமாக எடுப்பது, நீர் ஆதாரங்களான ஏரிகள் தூர்வாரப்படாதது, செலவு செய்யும் நீரை மறு •ழற்சி செய்யாதது என பல்வேறு பிரச்சனைகளும் ஒன்று கூடி இன்றைய மனிதனை ஆட்டி வைக்கிறது. இதற்கனைத்தும் காரணம் மனிதனே! நீரின்றி அமையாது உலகு ! என்ற வள்ளுனின் வாக்கு இன்று உண்மையாகியுள்ளது. மனிதர்கள் திருந்த வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் எதற்கெடுத்தாலும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே ஒழிய அவர்களுக்கு பிடித்தமான வேலையை செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. வாழ்க்கையில் பணத்தைவிட மகிழ்ச்சியே முக்கியம்! மகிழ்ச்சி என்பது உங்களுக்கு பிடித்த மனதின் விருப்பங்களுக்கு இசைந்த பணிகளை செய்யும் பொழுதுதான் கிடைக்கும் தவறான வழிகளில் கூட பணம் ஈட்ட முடியும். ஆனால் அதனால் மகிழ்ச்சி கிடைக்காது. துயரம்தான் மிஞ்•ம்.
வாழ்க்கைக்காக பணமே தவிர பணத்திற்காக வாழ்க்கை இல்லை. இன்பத்தை இழந்துவிட்டு கோடிக் கணக்கில் புரள்வதில் அர்த்தம் இல்லை.
வாழ்க்கையில் பெரிதாக சாதித்த எவரும் வாழ்வின் ஆரம்பத்தில் பணக்காரனாக இருந்ததில்லை. அவர்கள் படிப்படியாக முன்னேறியவர்கள் அவர்களால்தான் பணத்தோடு புகழையும் ஈட்ட முடியும்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றாலும் அளவான செல்வமே வாழ்விற்கு இனிமை தரும். என்ன கிளம்பி விட்டீர்களா! மனதிற்கு பிடித்ததை செய்வதற்கு!
ÄÍ]«VB[ ‡2
ÄÍ]«ÐÂz ÖÍ]BV ¶Ð©¸B sõïé\Vª ÄÍ]«VB[‡1Âz ¸Åz, ÃÝ>Võ|ï^ ïaÝm ¶|Ý> xBuEBVï ÄÍ]«VB[‡2 sõïéD Øku¤ï«\Vï å\m sÞQVMïáV_ °k©Ãâ|^ám. Ö>[ EÅ©ÃDÄD Wés[ Ø>[ mòkÝ]_ ÖÍ> sõïéD Öźþ gF¡ ØÄFB sòÂþÅm. ØÃVmkVï Wés[ \Ý]B ¼ïVâ½_>V[ sõïéºï^ Öźþ gF¡ ØÄFkm kwÂïD. gªV_, æªVsuz ¶|Ý>ýBVï å\m åV| ÖÍ> A]B xBuEçB ¼\uØïVõ½ò©Ãm ¶çªkòÂzD ØÃòç\BVzD. ÖÍ> sõïéD WésoòÍm 100 þ.*. #«Ý]_ >ªm ·u®© ÃVç>çB ¶ç\Ým ØïVõ| >ªm gF¡© ÃèçB ¼\uØïV^ÓD \ºï_BV[, ÄÍ]«VB[‡1 Âz© ¸Åz ÖÍ> Wﵡ Öü¼«V sÞQVMïÓÂzD å\m åVâ½uzD céïD >¿sB Aïçw ¼>½Ý >Ím^ám. ¼\KD å\m sõØk¹Ý ]⦺ï^ Øku¤Bç¦B ¶çªÝm sÞQVMïÓÂzD å\m kVµÝmÂïçá ÃöÄVï ¶¹Âþ¼ÅVD!
உருகும் ஆர்க்டிக் பனிப் பாறைகள்!
20 ஆம் நூற்றாண்டில் புவியின் வெப்பநிலை உயர்வு இன்று ஒரு அபாயகரமான முடிவை நோக்கி நகர்ந்து வருகிறது. உயர்ந்து வரும் புவி வெப்பநிலையால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் பல உயிரினங்கள் அழிவதற்கு இன்று காரணமாகி வருகிறது. ப•மை வீடு விளைவு என்பது தற்போது ஆர்க்டிக்கின் பனிப் பாறைகள் அழிவிற்கு காரணமாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து கூறியுள்ளனர்.
1990களில் இருந்ததைவிட மூன்றில் ஒருபங்கு தான் பனிப்பாறைகளின் தடிமன் உள்ளதாக அறிவியல் அறிஞர்கள் அறிவித்துள்ளனர். மேலும் பனிப்பாறைகளின் அடிப்பகுதிகள் உருகுவதால் கடல் உயிரினங்கள் மீது ஏற்படும் விளைவுகளையும் ஆராய்ந்து வருவதாக நார்த் கரோலினா வில்மிங்க்டன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த டில் வேக்னர் எனும் விஞ்ஞானி அறிவித்துள்ளார்.
ப•மை குடில் வாயுக்களால் உருகப்போவது ஆர்க்டிக்கின் பனிப்பாறை மட்டுமல்ல நமது வாழ்க்கையும்தான்!
இதனை உணர்ந்து திருந்த வேண்டியது நமது கடமை!
தமிழர்களின் அறம் ‡ 19
சங்க மன்னர்கள் வீரம், அறம், கொடை, புகழ் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதில் சோழ மன்னர்களில் ஒருவரான சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் பற்றி தாமப்பல் கண்ணனார் எனும் புலவர் பாடிய புறப்பாடல் அவர்களின் வீரத்துடன் செம்மையான குணத்தையும் பறைச் சாற்றுவதாக அமைந்துள்ளது.
மக்களின் துன்பம் நீங்க தவம் செய்யும் அவிர்சடை முனிவர்கள் மருளும்படியும் புள்ளினங்கள் வாழும் படியும் சிபி மன்னன் ஆட்சிப் புரிந்தான். பருந்தின் பிடியிலிருந்து புறாவைக் காப்பாற்றுவதற்காக தனது தொடையிலிருந்து சதையை அரிந்து கொடுத்த அத்தகைய சிபியின் வழி வந்தவன் சோழ மன்னன்! அத்தகைய மரபில் வந்த நீ, நான் செய்த பிழையை தான் செய்ததாக நினைந்து வருந்தினாய்! நாணினாய்! தம்மை பிழை செய்தோரைப் பொறுத்துக் கொள்ளும் செம்மாப்பு இந்த சோழர் குடிக்கு எளிது என்பதை புகழ்ந்துரைத்து அத்தகைய புகழை உடைய நீ காவிரியாறு குவித்துள்ள மேட்டு மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல்லாண்டு வாழ்கவே! என வாழ்த்துரைக்கிறார் அப் புலவர்!
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே,
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
(புறம் ‡ 43)