தமிழர்களின் அறம் ‡ 19
சங்க மன்னர்கள் வீரம், அறம், கொடை, புகழ் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதில் சோழ மன்னர்களில் ஒருவரான சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் பற்றி தாமப்பல் கண்ணனார் எனும் புலவர் பாடிய புறப்பாடல் அவர்களின் வீரத்துடன் செம்மையான குணத்தையும் பறைச் சாற்றுவதாக அமைந்துள்ளது.
மக்களின் துன்பம் நீங்க தவம் செய்யும் அவிர்சடை முனிவர்கள் மருளும்படியும் புள்ளினங்கள் வாழும் படியும் சிபி மன்னன் ஆட்சிப் புரிந்தான். பருந்தின் பிடியிலிருந்து புறாவைக் காப்பாற்றுவதற்காக தனது தொடையிலிருந்து சதையை அரிந்து கொடுத்த அத்தகைய சிபியின் வழி வந்தவன் சோழ மன்னன்! அத்தகைய மரபில் வந்த நீ, நான் செய்த பிழையை தான் செய்ததாக நினைந்து வருந்தினாய்! நாணினாய்! தம்மை பிழை செய்தோரைப் பொறுத்துக் கொள்ளும் செம்மாப்பு இந்த சோழர் குடிக்கு எளிது என்பதை புகழ்ந்துரைத்து அத்தகைய புகழை உடைய நீ காவிரியாறு குவித்துள்ள மேட்டு மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல்லாண்டு வாழ்கவே! என வாழ்த்துரைக்கிறார் அப் புலவர்!
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே,
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
(புறம் ‡ 43)
சங்கப் புலவர்கள் அக்கால மன்னர்களின் வீரம், வலிமை, கொடை, புகழ் என ப லவற்றை பாடிய போதும் அவர்களின் வீரமும் வலிமையும் தேவையில்லாமல் மற்ற நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் தொல்லை தரும் விதமாக அமைதல் கூடாது என அவ்வப்பொழுது இடித்துரைத்தனர்! அதனை இடைக்காடனார் எனும் புலவர் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவன் மேல் பாடிய பாடல் மூலம் அறியலாம். மலை போன்ற யானை; கடல் போன்ற படை; மின்னும் வேலைப் பார்த்து பகை அரசர்கள் நடுங்கும் நிலை! இது தவறன்று! நீ உனது நாட்டில் ஆற்று நீரின் மோதல் அன்றி வேறு மோதல் இல்லாமல் ஆட்சி செய்க! புலி தன் குட்டியைப் பாதுகாப்பது போன்று செங்கோல் ஆட்சி புரிய இத்தகைய நன்செய் நாட்டு மன்னனே, புன்செய் நாட்டின் மீது (பாண்டிய நாடு) படை எடுக்காதே! ஆமை, தேன், குவளை மலர்களை பரிசாக அளிப்பவர்கள் உன் நாட்டு மக்கள்! மலையில் இருந்து இறங்கும் ஆற்றலைப் போல புலவர்களுக்கும் வாரி வழங்குபவன் நீ! ஆனால் நீ கூற்றுவன் போல மாற்று அரசர்களின் மண்ணைப் பார்த்து கொண்டிக்கிறாயே! என இடித்துரைக்கின்றார்! மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவரெல்லாம் நின் நோக்கினரே நீயே ருந்தில் கனிச்சி வருந்த வட்டித்துக் கூற்றுவெகுண் டன்ன முன்பொடு மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே! (புறம்-42)
அறத்தையும் மறத்தையும் போற்றிய தமிழக சங்கக் கால மன்னர்கள் தங்களது நாட்டை பகை நாட்டவரும் விரும்பும் வண்ணம் ஆட்சி செய்தனர். வீரம் விளைந்த மண்ணில் ஈரத்தையும் காத்தவர்கள் சங்க மன்னர்கள். இதனை ஆவூர் மூலங்கிழார் எனும் புலவர் சோழன் குளமுற்றத்துக் அஞ்சிய கிள்ளிவளவன் எனும் சோழ மன்னன் மேல் பாடிய பாடல் மூலம் அறியலாம்.
வீரத்தில் கொடையிலும் வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும் விளங்கிய சங்க மன்னர்கள் போரின் போது மகளிரையும் பசுக்களையும் நோய்வாய்ப் பட்டவர்களையும், பிராமணர்களையும் தாக்குவதில்லை என்ற நியதியைக் கடைப்பிடித்து வந்தனர். அது மட்டுமின்றி போருக்கு புறங்காட்டியவர்களையும் போருக்கு அஞ்சியவர்களையும் கூட தாக்குவது ஓரு இழுக்காக கருதப்பட்டது. இதனை ஆலத்தூர் கிழார், சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவன் மேல் பாடிய பாடல் மூலம் அறியலாம்.சோழன் கருவூரைச் சுற்றி முற்றுகையிட்ட போதும் சேர மன்னன் போர் முரசு கேட்ட பின்னரும் போர் செய்ய கோட்டையை விட்டு வெளியே வரவில்லை.சோழ வீரர்கள் கருவூருக்கு காவலாக இருக்கும் மரங்களை கூரான கோடரிக் கொண்டு வெட்டுகின்றனர். அதனால் பூ நாறும் அம்மரங்களின் நெடியக் கொம்புகள் நிலை கலங்கி வீழ்கின்றன. இவ்வாறு வெட்டும் ஒலி நெடுமதில் சூழ்ந்த அரண்மனைக்குள் இருக்கும் சேரனின் காதில் கேட்டும் அவன் போருக்கும் வராமல் இனிதாக வீற்றிருக்கானே, அத்தகையவனுடன் போர் செய்ய வேண்டுமா, செய்ய வேண்டாமா என்பதை ஆராய்ந்து முடிவு செய்க என்கிறார் ஆலத்தூர் கிழார்.
வீரத்திலும் கொடையிலும் சிறந்து விளங்கிய சங்க கால மன்னர்களின் கொடைச் சிறப்பை சங்கப் புலவர்கள் தங்களது பாடல்கள் மூலம் உலகிற்கு பறைச் சாற்றினர். கொடை என்பது சங்க மன்னர்களைப் பொறுத்தவரையில் இரந்தவர்க்கு எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிகமாக வாரி வழங்குவதேயாகும்.
சங்க கால மன்னர்கள் வீரத்திற்கு இணையாக கொடையிலும் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். இதனை கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளி மேல் பாடிய பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம். கொடையும் ஏனோ தானோ என்று இருப்பதில்லை. இரவலரின் மனம் நிரம்பும்படியான கொடையைத் தானமாக வழங்குவதில் வல்லவராக திகழ்ந்தவர் சங்க மன்னர்கள்.
புற நானூற்றுப் பாடல்கள் பல, மன்னர்களின் வீரத்தையும் புகழையும் பறைச் சாற்றுவதில் இணையற்றவை. அதே நேரத்தில் மன்னர்கள் போர் முடிந்தவுடன் செய்ய வேண்டிய கடமைகளை எடுத்துரைக்கவும் அப்பாடல்கள் தயங்கியதில்லை.
சங்க இலக்கியத்தின் அகமும் புறமும் தமிழ்ச் சமுதாயத்தின் இரண்டு கண்கள் போன்றவை. கணவன்-மனைவி அன்பை அடிப்படையாகக் கொண்ட அகத்திற்கு ஈடாக மன்னர்களின், மக்களின் போர்முறை, புகழ், வீரம், கொடை, ஈகை போன்ற வாழ்வியல் நெறி முறைகளைப் பற்றி புறநானூறுப் பேசுகிறது. மன்னர்கள் வல்லவர்களாக இருந்தால் மட்டுமே போதாது. நல்லவர்களாகவும், அருள் உள்ளம் படைத்தவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்பதை சங்கப் புலவர்கள் எடுத்துரைக்கின்றனர்.
சங்க மன்னர்கள் வீரம், கொடையில் வல்வலர்களாகத் திகழ்ந்தவர்கள். போரின் போது தங்களுக்கென சில வரை முறைகளை, நீதி நெறி முறைகளைப் பின்பற்றினர். போர் நடக்கும் சமயத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயுற்றவர்கள் என சமூகத்தின் விளிம்பில் வாழ்பவர்களுக்கு தொந்தரவு ஏதும் செய்யாமல் தங்களை ஒரு எல்லைக்குள் நிறுத்திக் கொண்டவர்கள். இருப்பினும், போரில் எதிரிகள், அவர்களது மன்னர்கள், படைத்தலைவர்கள் கொல்லப்படுவது இயல்பே! அத்தகைய இக்கட்டான சமயங்களில் புலவர்கள் வெற்றி பெறும் மன்னர்களிடம், தோற்றுப் போகும் மன்னர்களுக்காக தூது சென்று உயிர் காக்க வேண்டுவதும் நடப்பதுண்டு. எதிரிகளின் மேல் இரக்கம் காட்ட வேண்டும் என்றும் சங்கப் புலவர்கள் இரந்ததுண்டு.
புறநானூறு சங்க கால மன்னர்களின், மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும் செவ்வியலக்கியம். மன்னர்களின் பண்புகள் என்னென்ன என்பதை படம் பிடித்துக் காட்டுவதுடன் நில்லாமல் அந்த பண்பு நலன் தவறும் பொழுது மன்னர்கள் எவ்வாறு இருத்தல் வேண்டும் என சங்கப் புலவர்கள் இடித்துரைத்தனர். மக்களின் சமூக வாழ்க்கையையும் பரதிபலிக்கும் வகையில் சங்ககால புறநானூறு விளங்குகிறது. மன்னனின் மாண்புகளோடு மக்களின் மாண்புகளையும் பேசும் பேரிலக்கியம் இது!
சங்க காலத் தமிழ் மன்னர்கள் போரில் மட்டும் வல்லவர்களாகத் திகழவில்லை! அமைதியை நிலைநாட்டி பகைவர்களின் படையயடுப்பிலிருந்தும் மக்களை தன் உயிர் போல் பாதுகாத்து வந்தனர். தன்னுடைய வலிமையைக் கொண்டு எதிரிகள் நாட்டின் மீது படையயடுத்து துன்பம் ஏற்படாமல் அனைவரையும் கண் இமை போல பாதுகாத்து அறம் காத்தனர். தனது வீரத்தை தேவையில்லாமல் பயன்படுத்தியதாக எங்கும் காணக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் நாட்டில் நுழைந்த பகைவர்களை துரத்தியடிக்க துளிப்பொழுதும் யோசித்தது இல்லை.
பண்டையத் தமிழ் மன்னர்கள் அறத்திலும், வீரத்திலும், கொடையிலும் மக்களைப் பேணுவதிலும் தலைச் சிறந்து விளங்கினர். இவற்றைப் போற்றி புகழ்ந்த புலவர்கள் வீரத்தோடு வேளாண்மையைப் போற்ற வேண்டும் என பாண்டியன் நெடுஞ்செழியன் மேல் குட புலவியனார் என்ற புலவர் பாடுகிறார்.
போர் நெறி முறை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட புற நானூற்றுப் பாடல்கள் அக்கால வாழ்வியல் முறைகளை எடுத்துக் கூறுவதுடன் மட்டுமின்றி அரசர்களின் வீரம், கொடை, பண்பு நலன்களையும், அக்கால சமூகத்தின் கட்டமைப்பு சமூகத்தின் நல்ல மற்றும் கெட்ட மாண்புகளையும் எடுத்துரைப்பதில் கண்ணாடியாக விளங்குகிறது.
போர் என்பது மனிதன் தோன்றிய காலத்தே ஏற்பட்டுவிட்ட ஒன்று. முற்காலத்தில் ஆநிரைகளையும், நிலத்தையும் கைப்பற்ற ஏற்பட்ட போர் தற்காலத்தில் பொருளாதார காரணங்களுக்காகவும், இனங்களை அழிப்பதற்காகவும் நடைப்பெற்று வருகின்றன.
அக்காலப் போரின்போது சில மாண்புகள் மற்றும் வரைமுறைகள் பின்பற்றப் பட்டன என்பதற்கு புறநானூறு சாட்சியம் சொல்கிறது.
இதற்குச் சான்றாக, நெட்டிமையார் எனும் புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மேல் பாடிய பாடல் எனலாம்.
ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும்
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்
(புறநானூறு-9)
போர் என்பது வன்மையுடையோர் பிற வன்மையுடையோரிடும் மோதுவதே! எளியவர்களை, வறியவர்களை மோதலுக்கு அழைப்பது அறமாகாது ! அதனை மேற்கண்ட வரிகளில் காணலாம்.
போருக்கு முன்பு பசுக்களையும், பசு போன்ற பார்ப்பனர்களையும், பெண்களையும், நோய் வாய் பட்டவர்களையும் மன்னன் எச்சரிக்கை விடுப்பதாக இந்தப் பாடல் கூறுகிறது.
இத்தகைய நல்ல மனது உடையவனாக அரசன் இருப்பதால், அற நெறியில் நடப்பவனாக மன்னன் விளங்குவதால் அவன் பல்லாண்டுகள் வாழ வேண்டும் என நெட்டிமையார் வாழ்த்துகிறார். அதுவும் எத்துணை ஆண்டுகள் தெரியுமா? பஃறுளி ஆற்றின் மணல் எண்ணிக்கையைக் காட்டிலும் பல ஆண்டுகள், என வாழ்த்துகிறான்.
இதிலிருந்து, தமிழ் மன்னர்கள் கெட்டப் போரிடும் சமயத்திலும் நீதி நெறி முறைகளைக் கடைப்பிடித்தது விளங்கும்.
தமிழர்களின் கொடை, ஒழுக்கம், அறம், வீரம், வன்மை, திண்மை போன்ற பெரும் பண்புகளைப் போற்றி பேசும் பெரும் இலக்கியம் புறநானூறு. அத்தகைய இலக்கியத்தின் ஒரு கனியாக விளங்குகிறது புலவர் நரிவெரூஉத் தலையார் பாடியச் செய்யுள். இந்தப் பாடல் சேர மன்னன் சேரமான் கருவூரேறிய ஏள்வாட் கோப்பெருஞ் சேரல் என்பவனின் மேல் பாடப்பட்டதாகும்.
புறநானூறு தமிழ் வேந்தர்களின் அறத்தையும், மறத்தையும், கொடைத் தன்மையையும், உலகினை காக்க வேண்டி முறைப் பற்றியும் எடுத்துரைக்கும் நன்னூலாகும்.
சங்க கால மன்னர்கள் அறமும், மறமும் கொண்டவர்கள். இல்லையயன்று கூறாத இரக்க குணம் நிறைந்தவர்கள். எதிரிகளை புறமுதுகுக் காட்டி ஓடச்செய்த போதிலும் இல்லையயயன்று வருபவர்களை இன் முகம் காட்டி பரிசுப்பொருட்களை வழங்கும் வள்ளல்கள். அவர்கள், மக்களுக்கு நெல்லையும் நீரையும் உயிராகக் கருதாமல் தன் மன்னனை உயிராகக் கருதியவர்கள்.
மன்னர்களை தன்னுரையால் நயம்பட இடித்துரைப்பதில் வல்லவர்கள் தமிழ் புலவர்கள். தான் வறுமையில் வாடினாலும் செம்மையாக வாழ்ந்தாலும் கூற வேண்டியதை தக்க நேரத்தில் கூறாமல் விடுவதில்லை. அத்தகைய உறவை தமிழ் மன்னர்களும் புலவர்களும் பேணிக் காத்தனர். இடித்துரைக்கும் புலவர்களை கடிந்து கொண்ட மன்னர்களை காண்பதரிது. அதனால்தான் தமிழ் மன்னர்களால் செங்கோல் ஆட்சி புரிய முடிந்தது.
தமிழ் மொழியின் சிறப்பு அனைவரும் அறிந்தே.உலகின் மூத்தக் குடியும் முதல் குடியும் தமிழ்க் குடியே. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மொழி நம் மொழி.தமிழ் மொழியின் பொற்காலம் என்றால் அது சங்ககாலம். பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் சங்க இலக்கியத்தின் இரு கண்கள். எட்டுத் தொகையில் ஒன்று புறநானூறு.தமிழர்களின் அறத்தையும் வீரத்தையும் பேசும் பேரிலக்கியம்.அதிலிருந்து சிலவற்றை தற்காலத் தமிழ்ச் சமூதாயத்திற்கு நினைவும்படுத்துவது. அவசியம், அவசரமும் கூட.