இன்றைய இளைஞர்கள் எதற்கெடுத்தாலும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே ஒழிய அவர்களுக்கு பிடித்தமான வேலையை செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. வாழ்க்கையில் பணத்தைவிட மகிழ்ச்சியே முக்கியம்! மகிழ்ச்சி என்பது உங்களுக்கு பிடித்த மனதின் விருப்பங்களுக்கு இசைந்த பணிகளை செய்யும் பொழுதுதான் கிடைக்கும் தவறான வழிகளில் கூட பணம் ஈட்ட முடியும். ஆனால் அதனால் மகிழ்ச்சி கிடைக்காது. துயரம்தான் மிஞ்•ம்.
வாழ்க்கைக்காக பணமே தவிர பணத்திற்காக வாழ்க்கை இல்லை. இன்பத்தை இழந்துவிட்டு கோடிக் கணக்கில் புரள்வதில் அர்த்தம் இல்லை.
வாழ்க்கையில் பெரிதாக சாதித்த எவரும் வாழ்வின் ஆரம்பத்தில் பணக்காரனாக இருந்ததில்லை. அவர்கள் படிப்படியாக முன்னேறியவர்கள் அவர்களால்தான் பணத்தோடு புகழையும் ஈட்ட முடியும்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றாலும் அளவான செல்வமே வாழ்விற்கு இனிமை தரும். என்ன கிளம்பி விட்டீர்களா! மனதிற்கு பிடித்ததை செய்வதற்கு!
மனதை திறந்து வைக்கவும், வழி பிறக்கும்! செக்கு மாடு பற்றி என்ன உங்களுக்குத் தெரியும்தானே! அது போன்றதுதான் மனதும். பழைய நினைவுகள், தீவிர நம்பிக்கைகள், அடுத்தவர்கள் செய்த வஞ்சனைகள், தான் சொல்வதும் செய்வதுமே சரி என்ற பிடிவாதம் போன்ற பல பழக்க வழக்கங்கள் மனிதனை ஒரு கூண்டுப் பறவையாக அடைத்து வைத்துள்ளது. இதனால் அவனது முழு ஆற்றலும் அவனுக்கு தெரிவதில்லை. அதையே கட்டவிழ்த்து விட்ட காளையைப் பாருங்கள்! கூண்டை விட்டு வெளியேறிப் பறவையைப் பாருங்கள்! அவை எவ்வளவு •தந்திரமாகவும் மகிழச்சியாகவும் உள்ளது. உலகைப் பார்க்கும் உங்களது எண்ணத்தை மாற்றுங்கள் அனைத்தும் மாறும் . கட்டற்ற மனம் என்பது உங்களது மனதை கண்ட கண்ட வழிகளில் அலைய விடுவதன்று! மனதைக் கட்டி இழுக்கும் அவலங்கள் நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்களில் இருந்து மனதை விடுவிப்பதே உண்மையான வெற்றி! மனதை திறப்பதால் புதிய புதிய எண்ணங்களுக்கு நீங்கள் வழியை திறக்கிறீர்கள் என்பதே உண்மை. புதிய எண்ணங்கள் புதிய வழியைக் காட்டும் என்பது நிச்சயம்! எந்த ஊர்க்கும் போகாத வழியில் •ற்றிக் கொண்டியிருப்பதைவிட ஊர் சேர உதவும் வழியை தேர்ந்தேடுங்கள்! ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கலாம் பழகப் பழக எதுவும் இனிக்கும்!
இன்றைய இளைஞர்கள் உடலிலும் உள்ளத்திலும் ஊக்கம் மிக்கவர்கள்.கல்வியிலும் தொழில் நுட்பத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.ஆனால் அதே சமயத்தில் ஏதேனும் ஒரு முயற்சி,அதுவும் கடினமான இலக்கை அடைய வேண்டும் என நினைக்கும் போதே சோர்வடைந்து விடுகின்றனர்.அத்தகையைச் செயல் வெற்றி எனும் கனியை பறிக்க முடியாதவாறு செய்கிறது. அதனால்தான் பெரும் அறிஞர்கள் பலரும் வெற்றி எனும் இலக்கை அடையும் வரை முயற்சியை நிறுத்தாதீர்கள் என்கிறனர்.
வாழ்க்கை என்பது எளிமையானது, நாம்தான் அதை சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்கிறார் கன்பூஷியஸ். எளிமையாக இருப்பது அவ்வளவு எளிதன்று அதனை கடைப்பிடிப்பது மிகவும் கடினமாகும். மகாத்மா காந்தியின் எளிமையான வாழ்வை கடைப்பிடிக்க எத்தனை பயிற்சிகள் அவசியம் என்பது அனைவருக்கும் புரியும். ஆனால் அந்த எளிமைதான் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. பகட்டான ஆடைகளும் ஆடம்பரமான பேச்சும் அடுத்தவர்களை கீழ்ழனவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்க பயன்படுமேயன்றி வெற்றிக்கு வழிக்காட்டாது. சொல்ல வேண்டியவற்றை குழப்பமின்றி தெளிவாக எளிமையாக எடுத்துக் கூறுவது என்பது ஒரு கலை.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமெனில் உங்களது இலக்கும் பெரியதாக இருத்தல் அவசியம். பெரிய இலக்கு கடினமானதாகவும் பயமுறுத்தக் கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் உயரமான பெரிய இலக்கு நிர்ணயிக்கப்படும் பொழுது உங்களது முழு ஆற்றலும் அதனை சாதிக்க தயாராகிறது. உங்களது மனம் அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக திட்டமிட ஆரம்பிக்கிறது. பெரிய இலக்குகளை சிறு சிறு நடவடிக்கைகள் மூலமே அடைய முடியும். அதற்கு அதிக காலமும் ஆகலாம். அதற்காக அச்சமடையக் கூடாது.
நிலவுக்கு மனிதனை அனுப்பிய அமெரிக்காவும். ராக்கெட் ஏவும் வாகனங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனைப் படைத்த இந்தியாவும் ஒரு நாளிலோ இல்லை ஒரு வருடத்திலோ இந்தச் சாதனையை நிகழ்த்தவில்லை.
இதற்கு பல ஆண்டுகள் ஆயின. ஆனால் அடைந்த வெற்றியோ மிகப் பெரியது!
மாரத்தான் ஒட வேண்டுமெனில் ஒரே நாளில் நீங்கள் பயிற்சியை முடிக்க முடியாது. அதற்காக மாதக் கணக்கில் பயிற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நீண்ட தூர ஓட்டத்தில் வெற்றி பெற முடியும்.
பெரியதாக எண்ணுங்கள்! சிறியதாக ஆரம்பியுங்கள்! சிறு துளி, பெரு வெள்ளம்! வெற்றி உங்கள் கைகளில் தவழும்!
வானம் தொட்டு விடும் உயரம்தான்!
வெற்றியாளர்கள் தான் சாதிக்க நினைத்ததை ஒரே நாளில் சாதிப்பதில்லை. அந்த சாதனையை நிகழ்த்த கடுமையாகவும் தொடர்ச்சியாகவும் முயற்சி செய்ய வேண்டும். தான் செய்யப்போகும் முயற்சிகள் வெற்றியடைவதாக தனது மனத்திரையில் ஒரு திரைப்படம் போல ஓட்டிபார்க்கும் நபர்களால்தான் வாழ்வில் வெற்றியடைய முடியும். எண்ணமே வாழ்க்கை! நல்ல எண்ணங்களை மீண்டும் மீண்டும் மனத் திரையில் ஓட்டிப் பார்த்தால் நல்ல விளைவுகள் ஏற்படும்.
ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா, எங்காவது வெளியே சுற்றுலா நினைக்கிறீர்களா, ஏதாவது உணவகத்திற்கு சென்று விசேமான உணவுப் பதார்த்தத்தை உண்ண விரும்புகிறீர்களா, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் உங்கள் மனதில் ஒரு காட்சி உங்களை அறிந்தோ, அறியாமலோ ஓடியது நினைவு வருகிறதா!
எனவே, கனவுகளை திரைப்பட காட்சியாக மாற்றி மனதில் ஓட்டிப் பாருங்கள் வெற்றி நிச்சயம்.
“அறிவு என்பதைவிட இமேஜினேன் என்பது சக்தி வாய்ந்தது, அறிவுக்கு எல்லை உண்டு. ஆனால் மனக் காட்சிக்கு எல்லைகள் கிடையாது” என்கிறார் ஆல்பர்ட் ஜன்ஸ்டீன்.
எனவே, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கேற்றவாறு மனத் திரையில் படத்தை ஓட்டுங்கள் தாவரம் வளர்வதற்கு மண் எப்படி தேவைப்படுகிறதோ. அதுபோன்று வெற்றிக்குத் தேவை இமேஜினேன் அதுதான் உங்களது வெற்றிக்கான விதை.
கற்பனைகளுக்கு சிறகு கொடுங்கள் அவை உங்களை வாழ்வின் உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்.
“இமேஜினேனை சரியாக பயன்படுத்தும் போது அது நமது நண்பனாக விளங்குகிறது. அதற்கான காரண காரியங்கள் கிடையாது, அது நம்மை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் ஒளி” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
வானம் தொட்டு விடும் உயரம்தான்!
எந்த வொரு சாதனையாளரின் வாழ்க்கையைப் படித்து பாருங்கள், ஒரு விஷயம் நிச்சயமாகத் தென்படும்! அது செய்ய வேண்டியதை முடிவு செய்தவுடன், அடைய வேண்டிய இலக்கு எது, என்று முடிவு செய்தவுடன் சட்டென்று காரியத்தில் இறங்கவும்!
சூடு ஆறிவிட்டால், சோறு சுவை தராது! தனக்கு ஏற்ற சூழ்நிலை வரும் என காத்திருப்பவன் முட்டாள். உனக்கு ஏற்றவாறு சூழல்களை மாற்றிக் கொள், வெற்றி நிச்சயம்! இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு உங்களது நடைமுறைகளை மாற்றிக் கொள்ளுங்கள்! வெற்றி உங்களது கையில்! மழை பெய்கிறதா குடையுடன், செல்லவும். வெயில் அதிகமா அதே குடை உதவும்! ஆனால் வெயில் மழை இல்லாத நாளுக்காக காத்திருந்தால் நீங்கள் வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லமுடியாது. எதனையும் சாதிக்க இயலாது. எனவே, செய்ய வேண்டிய செயல்களை தள்ளிப் போடாதீர்கள். எல்லா நாளும் நல்ல நாள்தான். எல்லா நேரமும் நல்ல நேரம்தான். சரியான நேரத்தில் கிளம்பாமல் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர்.
தேர்விற்கு முன் படிப்பதைவிட தினம் தினம் கொஞ்சமாக படித்தால் வெற்றி நிச்சயம். எல்லாம் நளைக்கப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு நாளை என்பதே விடியாத ஒன்றாகவே இருக்கும்.
திட்டமிட்டு செயல்படுங்கள்! நாளை என்று தள்ளிப்போடாதீர்கள்! இன்றே நல்ல நாள் என்று நினைத்துக் கொண்டு முழு முயற்சியோடு செயல்பட்டால் வெற்றிக்கனி உங்களது மடியில்! பெரும்பாலானவர்கள் தோல்வி பயத்தினால்தான் தள்ளிப் போடுகின்றனர். எனவே அச்சத்தை துச்சமாக எண்ணி துள்ளி எழுந்தால் நீங்கள்தான் வெற்றியாளர்!
வானம் தொட்டுவிடும் உயரம்தான்!
வாழ்க்கையில் வெற்றியடைய யாருக்குத்தான் ஆசையில்லை! வெற்றி என்பது பணம் சம்பாதிப்பதாக இருக்கலாம். வேலை வாய்ப்பாக இருக்கலாம் இல்லை சுய தொழிலாக இருக்கலாம் அல்லது விளையாட்டுத் துறையில் வெல்வதாக இருக்கலாம்.
உங்களது இலக்கு என்ன, நீங்கள் எதனை சாதிக்க விரும்புகிறீர்கள் என்தை முடிவு செய்துவிட்டீர்களா, அப்படி என்றால் பாதி கிணறு தாண்டியாகிவிட்டது. மீதி கிணற்றை தாண்டுவது எப்படி? அதுதான் உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். இல்லாவிட்டால் ஆழ் கிணற்றில் விழ வேண்டியிருக்கும்.
எனவே, மீதி கிணற்றைத் தாண்ட வேண்டுமானால் அதற்கான வழிகள் என்ன என்று ஆராய்ந்து பார்க்கவும், உங்களால் தனியாக யோசிக்க முடியவில்லையா, குழப்பமாக இருக்கிறதா அச்சப்படாதீர்கள்!
உங்களுக்கு வழிகாட்ட ஆயிரக்கணக்கானவர் உள்ளனர். அது ஒரு புத்தகமாக இருக்கலாம். அவர் ஒரு துறைச் சார்ந்த நிபுணராக இருக்கலாம். இல்லாவிட்டால் உங்களது குடும்ப உறுப்பினராக இருக்கலாம், அல்லது உங்களது நண்பராக இருக்கலாம், ஆனால் யார் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ மற்றும் யாரிடம் உங்களை வழி நடத்தத் தேவையான நிபுணத்துவம், அனுபவம் இருக்கிறதோ அவரிடம் அறிவுரை கேளுங்கள். மற்றவர்களின் பல்லாண்டு அனுபவம் உங்களுக்கு சில நிமிடங்களில் வெற்றியைத் தேடி தரலாம்! நீங்கள் அறிவாளியாக இருக்கலாம். ஆனால் வெற்றிக்கு அறிவு மட்டுமே உதவாது. வெற்றிக்குத் தேவை அறிவை எங்கு எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற திறமையும் அனுபவமும்! இவை, அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்துதான் கிடைக்கும்.
மேலும், மற்றவர்களிடம் உதவியை, அறிவுரையை நாடும் பொழுது அவர்கள் தங்களது பிறத் தொடர்புகள் மூலம் ஏதாவது வழியைக் காட்டலாம். நாம் தற்போது படிக்கும் பெரும்பாலான இதிகாசங்களும், புராணங்களும், நல்வழி நூல்களும் ஆரம்பத்தில் வாய்மொழியாக வந்தவைதான். எனவே, வாழ்வில் வெற்றி பெற தகுந்த அறிவுரை கூறுபவர்களை நாடத் தயங்காதீர்கள். எதையும் காலத்தே செய்தால்தான் வெற்றிக்கு மகத்துவம் இருக்கும்.
எனவே, தன்னை தவறாக நினைப்பார்களோ என்ற கூச்சம் இல்லாமல் தகுந்த நபர்களிடம் உதவியை அறிவுரையைக் கேட்க தயங்காதீர்கள்! தயங்கினால் நஷ்டம் உங்களுக்குத்தான்!
அதனால் தான் வள்ளுவரும்
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
என்கிறார்.
வல்லமைகளில் தலைசிறந்தது, அறிவு முதலியவற்றால் பெரியவர்களை தன்னோடு சேர்த்துக் கொள் என்கிறார் தெய்வப் புலவர்.
வானம் தொட்டுவிடும் உயரம் தான்!
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? முடியாது, No, வேண்டாம் போன்ற வார்த்தைகள் வெற்றிக்கு எப்படி வழிகோலும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? நீங்கள் தானே கூறினீர்கள் எப்பொழுதும் பாஸிட்டிவ் மனப்பான்மையோடு இருக்க வேண்டுமென்று! இப்பொழுது, என்ன புதிர் போடுகிறீர்கள்?
நாம் ஒவ்வொருவரும் பிறந்ததே ஒரு சாதனைதான். பிறந்த பிறகு சாதிக்க துடிப்பதும் இயற்கை! இதற்காகவே குழந்தையாக இருப்பதிலிருந்தே நாம் ஏதோ ஒரு கனவோடு வாழ்க்கையைத் தொடங்குகிறோம். இதில் வெற்றி அடைவதும், தோல்வி அடைவதும் அவரது முயற்சியைப் பொறுத்தே அமைகிறது.
இவ்வாறு ஒரு இலக்கு நோக்கி முன்னேறும் பொழுது, இலக்கை அடைய முயற்சிகள் செய்யும் பொழுது பல்வேறு எதிர்ப்புகள், பல்வேறு கவனச் சிதறல்கள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. திடீரென யாராவது புதிய ஐடியாக்களைத் தரலாம். பலர் புதிய வழிகளைப் பற்றிக் கூறலாம். ஆனால் அனைவரதுக் கருத்துக்களுக்கும் நீங்கள் தலையாயட்ட ஆரம்பித்தால் என்ன ஆகும்? அனைவருக்கும் நல்லவராகத் திகழவேண்டும் என்று நினைத்தால் நீங்கள் பைத்தியமாகத் தான் இருக்கவேண்டும். தேவையில்லாதவற்றை, முக்கியம் இல்லாதவற்றை, அனாவசியான சிதறல்களை நீங்கள் ஒதுக்கித் தள்ளினால்தான், வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியையும் முக்கியமான நிகழ்வுகளுக்கு உங்களால் ஒதுக்க முடியும்.
எனவே சரியான நேரத்தில், தேவையற்றவைகளுக்கு No சொல்லப் பழகுங்கள் உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். அந்த நேரத்தை உங்களது இலக்கை அடைய உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையற்றச் செயல்களைத் தவிர்த்துப் பாருங்கள், இலக்கை அடைவதற்கான வழித் தெளிவாகப் புலப்படும்.
என்ன, No சொல்வதற்கு தைரியத்தை வரவழைத்து விட்டீர்களா! வெற்றி நிச்சயம்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். குறைவாகப் பேசு, வாழ்க்கை இனிக்கும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். அதனால்தான் இறைவன் ஒரு வாயையும் இரண்டு காதுகளையும் படைத்துள்ளான். குறைவாக பேசுவதற்காகவும், நிறைய கேட்பதற்காகவும்!
பொறுத்தார் பூமி ஆள்வார்!
இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கை என்பது உடனடியாக விரும்பியதை அடைய வேண்டும் என்ற தவறான மனோபாவம் ஏற்பட்டுள்ளது. இந்த பொறுமையற்ற, விவேகமற்ற, வேகமான மனப்பான்மை அவர்களை சரியான வழிக்கு அழைத்துச் செல்லாது. அவசரம் என்பது ஏனோதானோ என்று ஒரு வேலையை முடிக்க உதவுமே தவிர விரும்பிய விளைவுகளைத் தராது. அதிகப்படியான அவசரம் ஒரு மனிதனை பைத்தியக்காரனாக்கி விட வாய்ப்புள்ளது. அவனது குண நலன்களை மாற்றிவிடும். இதனால் அவனுக்கு ஏற்படும் இலாபங்களைக் காட்டிலும் அதிக நஷ்டங்களே ஏற்படும்.
மலையின் உச்சியை அடைய வேண்டுமானால் நீங்கள் நடந்துதான் அதனை அடைய முடியும். நவீன காலமாக இருப்பதால் நீங்கள் வசதி படைத்தவராக இருந்தால் ஹெலிகாப்டரை பயன்படுத்தி உச்சத்தை அடைய முடியும். ஆனாலும், அதற்கும் பொறுமை அவசியம்.
தற்காலத்தில் இன்டர்நெட் சிறிது மெதுவாக வேலை செய்தாலே பொறுமையை இழந்து டென்ஷனாகும் குழந்தைகளையும் இளைஞர்களையும் பார்த்து வருகிறோம். வேகம் தேவை தான், அதற்காக வேகம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. விதைகள் முளைத்து செடியாகி, மரமாகி கனிகள் கிடைக்க வேண்டுமானால் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பொறுமையையும் சோம்பேறித் தனத்தையும் ஒன்றாக கருதக் கூடாது. பொறுமை என்பது கஷ்டமான நேரங்களிலும் உங்களது விருப்பமான இலக்கை அடைய நீங்கள் ஏதேனும் முயற்சித்துக் கொண்டேயிருக்க வேண்டும். வெறுமனே சோம்பேறியாக இருந்தால் எந்த வெற்றியும் கிடைக்காது.
ஒரு நிமிட அவசரம் உங்களது வாழ்வை சீர் குலைத்து விடும். சூரியன் கூட உதிப்பதற்கும் மறைவதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை எடுத்துக் கொண்டு பொறுமையாகவே செல்கிறது. உடனே தோன்றி உடனே மறைந்தால் பகல் என்ற அற்புதம் நமக்கு கிடைக்காமல் போய்விடும். அது போன்றுதான் இரவும்! இயற்கை எப்படி தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளதோ அதுபோன்று மனிதனும் பொறுமை என்னும் ஆயுதத்தை கையாளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த ஆயுதத்தை கொண்டு வழியில் வரும் துன்பங்களையும் தடைகளையும் கடப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
“ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு”
அதுபோல அடைய வேண்டிய இலக்கை அடைய அவசரப்படாதீர்கள்! அதற்காக முயற்சி செய்யாமல் சோம்பேறித் தனத்தோடு இருக்காதீர்கள். முயற்சியோடு பொறுமையாக காத்திருங்கள்! வானம் உங்கள் வசப்படும்!
வானம் தொட்டு விடும் உயரம்தான்!
பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு துறையில் வெற்றி அடைய வேண்டும், புகழ் பெற வேண்டும் என நினைக்கிறான். அதற்காகப் பிறந்தது முதலே ஏதேனும் ஒரு உந்து சக்தியைக் கொண்டு வழி தேடுகிறான்.
வெற்றி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடக் கூடியது. குழந்தைக்கு எழுந்து நடப்பது வெற்றி; மாணவனுக்கு நல்ல மதிப்பெண் பெறுவது வெற்றி; இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது வெற்றி; விளையாட்டு வீரனுக்கு பதக்கம் வெல்வது வெற்றி. ஆனால் இந்த வெற்றிகள் அனைத்தும் ஒரே நாளில் ஏற்படுவதல்ல! சிறு துளி பெரு வெள்ளம் போன்று சிறு விசையங்களின் கூட்டு விளைவுதான் பெரிய வெற்றி.
எனவே பெரிய வெற்றியடைய முனைபவர்கள் சிறு சிறு செயல்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு நல்ல காபி வேண்டுமென்றால் சரியான அளவில் பால், காபி மற்றம் சர்க்கரை கலக்கப்பட வேண்டும். இதில் சர்க்கரை சிறியதுதானே என்று நினைத்தால் எதிர்பார்த்தச் சுவை கிடைக்காது.
எவரெஸ்டில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமானால் கடுமையான பயிற்சிகளை சிறிது சிறிதாக மேற்கொள்ள வேண்டும். வெற்றியோ, தோல்வியோ ஆரம்பம் என்பது சிறிய விசையம். வண்டியின் கடையாணி என்பது மிகச் சிறியது. ஆனால் அது விழுந்துவிட்டால் வண்டிக்கே ஆபத்து ஏற்படும் ரயில்வே பாதையின் சிறிய விரிசல் பெரிய ரயிலைக் கவிழ்த்து விடும்.
எனவே வெற்றியை நோக்கி வீறு நடைபோடும் பொழுது சின்ன விசையங்களில் கவனத்தைச் செலுத்துங்கள். இல்லாவிட்டால் தடம் புரள வேண்டி வரும் .வாழ்வில் சிறிய சிறிய உதவிகளை தேவையானவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்து பாருங்கள். வணக்கம், நன்றி என்று சிறிய மரியாதைக்கு உரிய செயல்களை செய்து பாருங்கள். வெற்றி அடைய எடுக்கப்படும் முயற்சி ஒரு மராத்தான் ஓட்டப்பந்தயம். இது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல.
எனவே, வெற்றியின் பாதையில் செல்லும் போது இடையிடையே ஓய்வெடுத்து வாழ்க்ககையின் சிறு சிறு சந்தோங்களையும் ருசிக்க, ரசிக்க கற்றுக் கொண்டால் வெற்றியின் பாதை கடினமாக இருக்காது.
6. கவனக் குவிப்பு (FOCUS)
இளைஞர்கள், மாணவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் ஒரு இலக்கு வேண்டும். அந்த இலக்கை அடைய வேண்டுமானால் தன்னம்பிக்கையோடு, அச்சம் இன்றி முயற்சி செய்ய வேண்டும். கடின உழைப்பு மட்டுமே வெற்றிக்கு வழி செய்யும். இத்துடன் இலக்கை அடைய தகுந்த திட்டமிடலும், அந்த திட்டத்தை ஒரு முகத் தன்மையுடன் மனதை குவித்து செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
ஒரு செயலை செய்ய துணிந்து விட்டால், இரவு பகல் பாராமல், சிந்தனை சிதறாமல் அதனை நிறைவேற்ற வேண்டும். சூரிய ஒளி எப்படி ஒரு லென்ஸ் மூலம் குவிக்கப்பட்டவுடன் காகிதத்தை எரியச் செய்கிறதோ அதுபோன்ற மனக்குவிப்பு, ஒரு முகத் தன்மை ஒவ்வொருவருக்கும் அவசியம். ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டால் தேவையில்லாமல் பல செயல்களில் கை வைக்க கூடாது. அதனால் குவிப்பு சிதறி ஆற்றல் விரயமாகிவிடும். இதனால் மூளையின் செயல்திறன் குறைவதுடன் சிந்தனையிலும் சிதறல் ஏற்படும்.
இலக்கை அடைவதற்கான வழியை தேர்ந்தெடுத்தவுடன் தேவையின்றி அவ்வழியை மாற்றக் கூடாது. அவ்வழியில் செல்லும்போது தவறுகள் நடக்கலாம். தோல்விகள் ஏற்படலாம். ஆனால் அதற்காகத் துவண்டு விடாமல் விடா முயற்சியோடு இலக்கு நோக்கி முன்னேற வேண்டும். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள் அதைப் போல.
வெற்றியை அடைய உங்களுடைய ஆற்றல், நேரம், கடின உழைப்பு அனைத்தையும் முழு வீச்சோடு பயன்படுத்துங்கள். தேவையற்ற கவனச் சிதறல்களை விட்டொழிக்கவும். தற்காலத்தில் செல்லிடப் பேசி, முகநூல், வாட்ஸ் அப் போன்ற கணக்கில் அடங்கா தொல்லைகள் அதிகம். இவற்றையயல்லாம் மூட்டைக் கட்டி ஓரமாக வைத்துவிட்டு முன்னேறுவதற்கான வழியைப் பாருங்கள்.
ஒரு முகத் தன்மையை, மனதை குவிக்க உங்களது திட்டத்தை எழுதி வைத்துக் கொண்டு நேரப்படி அவற்றை செயல்படுத்துங்கள். அப்பொழுதுதான் எவ்வளவு தூரம் நீங்கள் பயணம் செய்தீர்கள் என்பதும் இலக்கை அடைய இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டும் என்பதும் தெரியும். அதே நேரத்தில் ஒரே நாளில் இலக்கை அடைய எண்ணாதீர்கள். அதற்கு பொறுமையும் விடா முயற்சியும் அவசியம். ஒவ்வொரு அடியாக எடுத்து வையுங்கள். ஒரு நாள் வெற்றி நிச்சயம் ! எடுத்த வேலையை காரணமின்றி தள்ளிப் போடாதீர்கள்.
இலக்கு தெளிவாக உள்ளதா உங்களது முழுக் கவனமும் அதில் ஈடுபாட்டுடன் உள்ளதா என்பதற்கு மகாபாரதம் வழி சொல்கிறது. துரோணாச்சாரியார் பஞ்ச பாண்டவர்களுக்கு வில்வித்தை கற்று தருகிறார். அந்த பயிற்சி இடத்தில் உள்ள ஒரு மரத்தைப் பார்த்து, என்ன தெரிகிறது என்று பாண்டவர்களிடம் ஒவ்வொருவராக கேள்வி எழுப்புகிறார். ஒருவர் மரம் தெரிகிறது என்கிறார்! மற்றொருவர் இலை தெரிகிறது என்கிறார்! ஆனால் வில்வித்தையில் வீரனான அர்ஜுனன் மட்டுமே அம்மரத்தில் உள்ள பறவை தெரிகிறது, அதன் கண் தெரிகிறது என்கிறான்! உங்களுடைய மனக் குவிப்பு இதுபோன்று இருந்தால்தான் வெற்றிக் கனியை தட்டிப் பறிக்க முடியும். “கையில் உள்ள வேலையின் மீது உங்களது அனைத்து எண்ணங்களையும் ஒருமைப்படுத்துங்கள்” என தொலைப் பேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹம்பெல் கூறுகிறார்.
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
வானம் தொட்டு விடும் உயரம்தான்!
வானம் தொட்டுவிடும் உயரம்தான்!
சாதிக்கப் பிறந்தவர்கள் நிர்ணயிக்க வேண்டியது, இலக்கு. அந்த இலக்கை அடைய வேண்டுமெனில் தேவை கடின உழைப்பு மற்றும் அந்த இலக்கு உங்கள் மனதின் விருப்பத்திற்கு அருகாமையில் இருக்க வேண்டும். அண்ணாந்து படுத்துக் கொண்டு வெறும் ஆகாயத்தைப் பார்ப்பதை விட மனதுக்கு பிடித்தமான இலக்கு எது என்பதை உற்று நோக்க வேண்டும்.
3. உச்சம் தொட கடுமையான உழைப்பு வேண்டும்!
வெற்றியின் விலை கடின உழைப்பு!
எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு ஒரே வழி கடின உழைப்பு மட்டுமே. சிறந்த பெற்றோராக வேண்டுமா இல்லை ஆசிரியராக வேண்டுமா அல்லது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டுமா! அனைத்திற்கும் ஒரே வழி உழைப்பு, உழைப்பு, உழைப்பு மட்டுமே!
வெற்றிக்கான குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. அவ்வாறு இருந்தாலும் அந்த வெற்றி நீண்ட நாட்கள் நீடிக்காது. அது நீர்க் குமிழி போன்றது. குறுக்கு வழி வெற்றிகள் ஒரு மனிதனின் இமேஜை குறைப்பதுடன் இல்லாமல் அவனை ஒரு தன்னம்பிக்கையற்ற மனிதனாகவும் மாற்றிவிடும். கடின உழைப்பு, இலக்கின் உண்மை தன்மையை உணரவைக்கிறது.
கடின உழைப்பு ஒருவனின் உறுதித் தன்மையை, சுய மரியாதயை, எதையும் தாங்கும் சக்தியைக் கொடுக்கிறது. கடின உழைப்பின் மூலம் கிடைக்கும் வெற்றி ஒருவனுக்கு ஆத்ம திருப்தியை கொடுக்கிறது. உலகில் புகழ்பெற்ற கூடைப்பந்து வீரரான மிக்கேல் ஜோர்டான் தனது சிறு வயதிலேயே கடுமையான வாழ்வின் சுழலில் சிக்கித் தவித்தவர், ஆனால் அவரது தந்தையின் மூலம் கடின உழைப்பின் அனுபவத்தை புரிந்து கொண்டு பயிற்சி செய்து இன்று பணக்கார புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
உலகின் புகழ் பெற்ற நிறுவனமான ஜெனரல் மோட்டார் கம்பெனியின் தலைமை பொறுப்பை அடைந்த முதல் பெண் மேரி பர்ரா. தனது 18 வயதில் அந்த நிறுவனத்தின் சேர்ந்தவர், 33 ஆண்டுகள் கடுமையான உழைப்பிற்கு பிறகு அந்நிறுவனத்தில் தலைமை பொறுப்பை அடைந்து புகழ் எய்தியுள்ளார்!
எந்த துறையாக இருந்தாலும், இலக்கு எதுவாக இருப்பினும், வெற்றிக்கு வழி கடுமையான உழைப்பு மட்டுமே!
2. உங்கள் பேரார்வத்தை பின்பற்றுங்கள்!
வாழ்க்கையில் வெற்றி என்றால் பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் என்ற மனநிலை பலரிடத்திலும் காணப்படுகிறது. அதுவும் படித்தவர்களிடத்தில் இந்த எண்ணம் அதிக அளவில் புழங்குகிறது. வெற்றியின் ஒரு பகுதிதான் பணம். இதனால் திருப்தியும், ஆத்ம சந்தோமும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம்.
வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் இலக்கு வேண்டும். அந்த இலக்கு மனதிற்குப் பிடித்தமான ஒன்றாகவும் இருக்க வேண்டும். இன்றைக்கு எத்தனைப் பேர் தன் மனதிற்கு பிடித்ததை செய்கிறார்கள்? பெரும்பாலானவர்கள் நண்பர்களுக்கு, குடும்ப உறுப்பினர்களுக்கு, மனைவிக்கு, இலக்கையே மாற்றிக் கொண்டு ஏதோ இருந்தால் போதும் என்று வாழ்ந்து வருகின்றனர். இதனால் திருப்தியும் சந்தோமும் கிடைக்குமா என்று உறுதியாகக் கூறமுடியாது,
அதனால் தான் follow your passion என்று கூறுகிறார்கள்.
அத்தகைய மனதிற்குப் பிடித்த இலக்கை அடையும் பொழுது பணமும், புகழும் மகிழ்ச்சியும் தானாக வந்து சேரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இதற்கு உதாரணமாக ஆப்பிள் கம்பெனியின் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களைக் கூறலாம். மனத்திற்கு விருப்பமானதை செய்யுங்கள் என்று அறிவுரைக் கூறியவர். தன்னுடையை வேலையின் மேல் காதல் கொள்ளவும் என்று பறைச் சாற்றியவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
ஃபேஸ்புக்கின் தலைவரான மார்க் ஜீக்கர்பெர்க் பணத்தை பின் தொடாதீர்கள்! மகிழ்ச்சியை பின்தொடருங்கள்! என்று கூறுகிறார். மனதிற்கு பிடித்ததை செய்வதால் பணம் கிடைக்காமல் போகலாம், ஆனால் மகிழ்ச்சி நிச்சயம் கிடைக்கும்!
மாற்றி யோசிக்கவும்! மகிழ்ச்சி உறுதி!
எது உங்களது பேரார்வம் என்று கண்டறிய முடியவில்லை?
நேரம் காலம் பார்க்காமல் எந்த விதமான எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், பணத்திற்காக இல்லாமல் எந்த வேலையை உங்களால் செய்ய முடிகிறதோ, அதுவே பேரார்வம் எனலாம்!
1.வெற்றியின் திறவுகோல் - தோல்வி
இன்றைய இளைஞர்களுக்கு வானத்தில் பறக்கவும் ஆசை, ஆழ்கடலில் நீச்சல் அடிக்கவும் ஆசை.ஆனால் சமூகக்கட்டுப்பாடுகளும் காலங்காலாமாக சுகந்திரமாகவும் சுயமாகவும் செயல்பட விடுவதில்லை என்பதே உண்மை.அவர்களின் மனத்திற்க்கு பிடித்த இலக்குகளை அடைய முடிவதில்லை.வாழ்க்கையின் இலக்கு, சமூகத்தின் பார்வையால் குடும்ப உறுப்பினர்களின் விப்பத்தால் நிர்ணயிக்குப்படுகிறது.அதனால் தனது சுகந்திரத்தையும் நிர்ணயிருக்கும் உரிமையையும் அடுத்தவர்களுக்காக மாற்றிக்கொள்ளவோ,விட்டு கொடுக்கவோ, நிர்பந்திக்கப்படுகின்றனர்,சமூகத்தின் மரபுச்சார்ந்த பழக்கவழக்கங்கள் இளைஞர்களை தன்னிச்சையாக சுகந்திரமாக முடிவெடுக்கவோ இயங்கவோ விடுவதில்லை.
இளைஞர்களின் சிறகுகள் குழந்தையாக இருக்கும் போழுதே வெட்டப்படுகின்றன.வாழ்நாள் முழுவதும் கூண்டுக்கிளியாகவே வாழ்கின்றனர். வானத்தில் உச்சத்தைதொடவேண்டியவர்கள் வானத்தைப் பார்த்தவண்ணம் தரையிலேயே தத்தித்தத்தி காலத்தைகடந்த வேண்டிய நிலையில் வாழ்ந்துவருகின்றனர். இளைஞர்கள் வானத்துச்சூரியனாக பிரகாசிக்காவிட்டாலும் ஒரு நட்சத்திரமாக மின்னுவதற்குகாவது முயற்சி செய்ய வேண்டும். ஆனால் இக்காலத்தில் இளைஞர்கள் தோல்வியை நினைத்தேதுவண்டுவிடுவதால் முயற்சி என்றால் என்ன என்பதை அறிய முற்படுவதில்லை தோல்வி என்றச்சொல்லை ஒருவிபரீதமானச் சொல் என்று நினைத்துக் கொண்டு கண்ணையும் காதையும் பொத்திக் கொள்கின்றனர். அவர்கள் வெற்றியின் படிக்கட்டு தோல்வியே என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
தோல்வியைக்காட்டிலும் தோல்வியைப் பற்றிய பயம் தான் மனிதனை பாழாக்கிறது அவனைச் சாதிக்க இயலாமல் குடத்தில் இட்ட விளக்காக வாழ்நாள் முழுவதும் அடக்கிவைக்கிறது. இப்போது எந்த இளைஞரையாவது பார்த்து தம்பி நீ ஏதாவது வேலைக்கும் தேர்வுக்கும்தயார் செய்கிறாயா என்றுக் கேட்டவுடனே அவர் அதற்கு அதெல்லாம் எங்கே நமக்குகிடைக்கப் போடுகிறது என்ற அலட்சிய பதிலையே தருவார். அதாவது முயற்சி செய்வதற்கு முன்பே தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளுகிற நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டனர் இன்றைய இளைஞர்கள் இவர்கள் தாமஸ் ஆல்வா எடிசனைப் பார்க்க வேண்டும்.ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானி.இவையனைத்தும் என்ன ஒரே நாளிலா அவர்கண்டுபிடித்தார். இதனை உருவாக்க பத்தாயிரத்கும் அதிகமான முறை அவர் தோல்வியை தழுவியிருக்கிறார்.
இன்று நாம் மின்விளக்கு, திரைப்பட வசதிகளை மகிழ்ச்சியோடு அனுபவிக்க அவரது முயற்சி தான் காரணம். தோல்வியடையும் ஒவ்வொரு முறையும் நான் வெற்றி பெறுவதற்கான மாற்று வழியை தெரிந்து கொள்கிறேன் என்றார் அவர்.தன்னுடைய முழு ஆய்வகமும் எரிந்துசாம்பலான பொழுதும், மனம் தளராத அந்த மாமனிதன் தனது மனைவியிடம் தனது தவறுகள் அனைத்தும் எரிந்துவிட்டன, இனிமேல் வெற்றிக்கான வழி பிறக்கும் என்று உத்வேகத்தோடு உரைத்தவர். இத்தகைய முயற்சியும் விழுந்தால் மீண்டும் எழுந்து ஓட வேண்டிய மனப்பாங்கும், உத்வேகமும் கொண்டு தோல்வியைக் கண்டு மனம் தளராமல் அதேயே வெற்றிக்கான திறவுகோலாக பயன் படுத்த இளையசமுதாயம் எழுச்சியோடு எழவேண்டும். எனவே, பெற்றோர்களும், சமுதாயமும் இன்றைய மாணவர்களை, இளைஞர்களை தோல்வியை எதிர் நோக்கும் மனப்பான்மையோடு வளர்க்க விழைய வேண்டும்.மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய அவர்களை ஊக்குவிக்க வேண்டும்,அதுவே இளைஞர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கடமையாகும்,
தோல்வியே வெற்றிக்கான திறவுகோல்!
தோல்வியே வெற்றிக்கான படிக்கட்டு!
தோல்வியே வெற்றிக்கான வெற்றி !