ÄÍ]«VB[ ‡2
ÄÍ]«ÐÂz ÖÍ]BV ¶Ð©¸B sõïé\Vª ÄÍ]«VB[‡1Âz ¸Åz, ÃÝ>Võ|ï^ ïaÝm ¶|Ý> xBuEBVï ÄÍ]«VB[‡2 sõïéD Øku¤ï«\Vï å\m sÞQVMïáV_ °k©Ãâ|^ám. Ö>[ EÅ©ÃDÄD Wés[ Ø>[ mòkÝ]_ ÖÍ> sõïéD Öźþ gF¡ ØÄFB sòÂþÅm. ØÃVmkVï Wés[ \Ý]B ¼ïVâ½_>V[ sõïéºï^ Öźþ gF¡ ØÄFkm kwÂïD. gªV_, æªVsuz ¶|Ý>ýBVï å\m åV| ÖÍ> A]B xBuEçB ¼\uØïVõ½ò©Ãm ¶çªkòÂzD ØÃòç\BVzD. ÖÍ> sõïéD WésoòÍm 100 þ.*. #«Ý]_ >ªm ·u®© ÃVç>çB ¶ç\Ým ØïVõ| >ªm gF¡© ÃèçB ¼\uØïV^ÓD \ºï_BV[, ÄÍ]«VB[‡1 Âz© ¸Åz ÖÍ> Wﵡ Öü¼«V sÞQVMïÓÂzD å\m åVâ½uzD céïD >¿sB Aïçw ¼>½Ý >Ím^ám. ¼\KD å\m sõØk¹Ý ]⦺ï^ Øku¤Bç¦B ¶çªÝm sÞQVMïÓÂzD å\m kVµÝmÂïçá ÃöÄVï ¶¹Âþ¼ÅVD!
ஐக்கிய நாடுகள் அமைப்பின், சமூக பொருளாதார மக்கள் தொகைப் பிரிவு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி 2027 ல் உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தலையயடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2019 -2050 க்கு இடைப்பட்ட காலத்தில் சீனா உள்ளிட்ட •மார் 55 நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி குறையவிருக்கிறது. ஆனால் தற்போது •மார் 1.37 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட நமது நாடு 2028 ல் •மார் 1.45 மில்லியன் மக்கள் தொகையை எட்டும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 1950 ல் 37.6 கோடியாக இருந்த நமது மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்தன. விளைவாக நாட்டில் பல சமூக பொருளாதர விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் தொகை அதிகரிப்பால் இந்தியாவின் நீர் மற்றும் நில வளங்கள் மீதான உபயோகம் கடுமையாக அதிகரித்துள்ளது. உணவுத் தேவை அதிகரிப்பு காரணமாக வேளாண்துறை இன்று இரசாயனங்களின் நுகர்வு துறையாக மாறி •ற்றுச் •ழலை பாதிப்பதுடன் மக்களுக்கும் விலங்குகளுக்கும் புதிய புதிய நோய்களை உருவாக்கி வருகின்றன. மக்களின் ஏழ்மை நிலையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அடிப்படைத் தேவைகளான உணவு இருப்பிடம் குறித்து முழுமையான வளர்ச்சி மற்றும் தேவை பூர்த்தி இன்னும் ஏற்படவில்லை. இதுமட்டுமன்றி படித்த இளைஞர்களுக்குப் போதுமான வேலை வாய்ப்புகள் இன்னும் ஏற்படவில்லை. நாடு முழுவதும் நீர் , நிலம், உணவு, மின் உற்பத்தி, இருப்பிட வசதிகள், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, ஏழ்மை ஒழிப்பு என பல துறைகளில் நாம் பெரிய சாவல்களை எதிர் நோக்கி காத்திருக்கின்றோம். நமது நாட்டைப் பொருத்த வரையில் தென்னிந்திய மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப் படுத்திய போதிலும் வட இந்திய மாநிலங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்! இல்லாவிட்டால் உலகின் ஆறாவது பெரியப் பொருளாதாரம் என்ற நிலை நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை வெளிப்படுத்தாது! தற்போதைய முயற்சி மக்கள் தொகை கட்டுப்பாட்டை நோக்கி அமைய வேண்டும், என்பதே அனைவரின் விருப்பம்.
“புத்தகத்தைப் போன்ற சிறந்த நண்பன் அதுவும் நம்பிக்கை மிகுந்த நண்பன் வேறு எதுவும் கிடையாது”, எர்னெஸ்ட் எமிங்வே
கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் சின்ன தம்பி என்ற யானையால் ஏற்பட்டுவரும் தொல்லைகள் சொல்லிமாளாது. ஆனால் சின்னத்தம்பியை குறைச் சொல்லும் மக்கள் விவசாயிகள் மற்றும் இதரப்பிரிவினர் முதலில் தங்களது தவறுகளை இனம் கண்டு களைய வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் வனப் பகுதிகள் அழிக்கப்பட்டதுடன் மட்டுமன்றி ஆக்கிரமிப்புகள் யானைகளின் வழித்தடங்களை அழித்து வருவது இத்தகைய யானை மனிதன் மோதலுக்கு வழி வகுத்துள்ளது.
2018 ஆம் வருடத்தில் மட்டும் ஏறக்குறைய 20 மாணவர்கள் ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. டிசம்பர் மாதத்தில் 4 நாட்களில் 3 பேர் தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். கோட்டா வட இந்தியாவில் தனியார் பயிற்சி நிறுவனங்களின் தலைநகரமாகத் திகழ்கிறது.
அங்கு ஆயிரக் கணக்கான மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை வளமாக்க பயிற்சி என்ற கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். கடுமையானப் போட்டி, பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் அழுத்தம் மாணவர்கள் மேல் தேவையின்றி திணிக்கப்படுகிறது. பொறியியல், குறிப்பாக ஐ.ஐ.டி.க்கான நுழைவுத் தேர்வு மற்றும் நீட் தேர்விற்கு மாணவர்கள் இங்கு தங்கி தங்களை தயார் படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஐ.டியில் உள்ள சுமார் 15000 இடத்திற்கு 10 லட்சம் மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர். இக்காலப் பெற்றோர்கள், மாணவர்களுக்கு பணம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. வாழ்வதற்காகத்தான் பணம் தேவையே ஒழிய, பணத்திற்காக வாழ்க்கை இல்லை! என்பதை இவர்கள் உணர்ந்து கொண்டால்தான் இத்தகைய இழப்புகளை தவிர்க்க முடியும்.
தமிழகத்தின் சாத்தூரை சார்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு HIV தொற்று ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பரிசோதனைக் கூடத்தில் நடந்த மனித தவறு ஒரு கர்ப்பிணி பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டது. தவறு நடக்க காரணமாக இருந்த மூன்று தொழில்நுட்ப வல்லுனர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட அப்பெண்ணின், குழந்தையின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. அரசு அந்தப் பெண்ணிற்கு வேலை மற்றும் வீடு, ஆரோக்கியச் செலவு என அனைத்து உதவிகளை செய்தாலும் நடந்த தவறுக்கு சமமாகாது.
அதுமட்டுமின்றி கிருமி தொற்றிய ரத்தத்தை தானமாக அளித்த நபரும் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருந்தத்தக்கது. தனக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது தெரிந்தவுடன் அவர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கிக்கு தொடர்பு கொண்டு தனது ரத்தத்தை எவருக்கும் ஏற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே ரத்த பரிமாற்றம் கர்ப்பிணி பெண்ணுக்கு செய்யப்பட்டு விட்டது. அரசு உயர்தர மருத்துவ சிகிச்சை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளித்தாலும் நிகழ்ந்த தவறு தமிழகத்தில் ஒரு களங்கமாகவே காணப்படும்.
எதிர்காலத்தில் இத்தகையத் தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
டிசம்பர் 13 ஆம் நாள் மேகாலயாவின் 13 தொழிலாளர்களுக்கு ஒரு மோசமான நாள். ஜைந்தியா மலைகளில் உள்ள மூடப்பட்ட நிலக்கரிச் சுரங்கத்தில் நிலக்கரி எடுப்பதற்காக நுழைந்த இவர்களின் கதி என்ன, என்று இதுவரை தெரியவில்லை.
உலகில் வாழும் புலிகளில் பெரும்பான்மையானவை இந்தியாவில்தான் உள்ளன. அழிந்து வரும் புலிகளை காப்பதற்காகவும், புலிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் 1973-ல் “புராஜெக்ட் டைகர்” எனும் திட்டம் அரசால் ஆரம்பிக்கப்பட்டது.
நமது நாட்டைப் பொறுத்தவரையில் ஓராயிரம் பிரச்சினைகள். ஏழ்மை, வறுமை, கல்வி, அறிவின்மை, போதுமான அளவிற்கு தொழில் வளர்ச்சியின்மை என்று சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் மக்கட் தொகைப் பெருக்கும்! இருந்தாலும், தற்போதைய நிலையில், தமிழகம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி விட்ட போதிலும். பெருகி வரும் வேலையின்மை, இளைஞர்களின் வாழ்க்கையைக் கேள்வி குறியாக்கியுள்ளது,
அந்தமான், ஒரு தனியாக அமைந்துள்ள தீவுத் தொகுப்பு, அங்கு பல பழங்குடி இனத்தினர் காட்டுக்குள் வசித்து வருகின்றனர். ஜாரவா, சென்டினெல் போன்ற இனத்தினர் முக்கியமானவர்கள். அம்மக்கள் தாம் வசிக்கும் பகுதிக்குள் எவரையும் அனுமதி அளிப்பதில்லை. ஏறக்குறைய 30,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழங்குடியினர் இப்பகுதியில் வாழ்வதாகக் கூறப்படுகிறது.
வருடா வருடம் திருவிழா வருவது போல் ஏதாவது ஒரு பெயரில் புயல் தமிழகத்தை தாக்குவது வழக்கமாகிவிட்டது. தானே, ஒக்கி, தித்லி என்று வெவ்வேறு விதமான பெயர்கள். இந்த ஆண்டு வந்தது கஜா! கடந்த பத்து தினங்களுக்கு முன் வந்த இந்தப் புயல் தமிழகத்தின் நெற் களஞ்சியத்தை போர்க் களமாக மாற்றியுள்ளது. ஆம். மக்கள் தங்கள் வாழ்க்கையுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மழைக் காலம் ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பல்வேறு விதமான காய்ச்சல் நோய்கள் குறிப்பாக டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்றவை அதிகரித்து வருகிறது வழக்கமாகிவிட்டது. அரசுத் தரப்பில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த நோய்கள் மூலம் ஏற்படும் இறப்புகளை குறிப்பாக குழந்தை இறப்புகளை காணும் பொழுது பெரியக் கேள்வி குறி கண்முன் தோன்றுகிறது.
இந்தியாவில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒருவருக்கு போதுமான ஊட்டச் சத்து கிடைப்பதில்லை. போதுமான உணவு கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு வயதிற்கேற்ற எடை, உயரம், இருப்பதில்லை. மேலும் ஊட்டச் சத்துக் குறைபாடால் நோய் எதிர்ப்பும் குறைவாக உள்ளது. இதனை நாம் கூறவில்லை! குளோபல் ங்கர் இன்டெக்ஸ் (Global Hungar Index ) 2018ன் அறிக்கைத் தெரிவிக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் 14 வயது பெண் குழந்தையயான்று பீஹார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் குறிப்பாக பீஹார், உத்திரப்பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அச்சம் மற்றும் தாக்குதலுக்கு பயந்து வெளியேறி வருகின்றனர்.
நமது நாடு உலகின் ஆறாவது பெரிய பொருளாதார வளர்ச்சிடைந்த நாடு. இந்தப் பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மை, தொழிற்சாலைகள், சேவைகள் என பல துறைகளும், தங்களது பங்களிப்பைக் கொடுத்துள்ளன. உற்பத்தி பொருள்களும் சேவைகளும் நுகர்வோரை சென்றடைய சாலைகள் பெரும் பங்காற்றுகின்றன.
காந்தி என்ற மாமனிதர் இறந்தாலும் காந்தியின் தத்துவங்கள் அவரது குணங்கள் மக்களின் மனதிலிருந்து மறைவது என்பது சாத்தியம் இல்லை. ஏன் என்றால் உண்மை என்றும் அழிவதில்லை! காந்தியின் ஒவ்வொரு நடவடிக்கையும் வாழ்வின் உண்மையைத் தேடுவதாகவே அமைந்தன என்றால் மிகையாகாது.
கடந்த சில வாரங்களில் மட்டும் நாட்டின் தலைநகரப் பகுதியில் ஆறு துப்புரவு தொழிலாளர்களும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐந்து பேரும் கழிவு நீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பொழுது தங்களது உயிரை இழந்துள்ளனர். மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண செய்தியாக இருந்தாலும் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களைப் பொறுத்த மட்டில் இது ஒரு பெரிய அநீதி.
பெண்ணின் பெருந் தக்க யாவுள! பெண்ணை விட பெருமை மிக்க வேறு என்ன இருக்கிறது, என்கின்றான் திருவள்ளுவன். ஆனால் பெண்களின் நிலை என்ன? சமீபத்தில் “லான்செட்” மருத்துவ இதழில் வெளியான தற்கொலைப் பற்றிய ஓர் ஆய்வறிக்கையின் படி உலகின் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 37% பெண்கள் இந்தியர்கள்.
தற்போது எங்குப் பார்த்தாலும் எந்தச் செய்தித்தாளைப் பார்த்தாலும் ஒரு கொடுமையான விச் செய்தியைக் காண்கின்றோம். அது குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கோரம், அதுவும் குழந்தைகளுக்கான காப்பகத்தில் நடைபெற்று வரும் கொடுமை.
நமது நாட்டில் மக்கள் தொகையின் எண்ணிக்கைப் போலவே சமுதாயப் பிரச்சினைகளும் அதிகம் பன்முகத் தன்மையில் ஒற்றுமை என்பது ஒரு கனவாகிவிடுமோ எனத் தோன்றுகிறது. நாட்டில் ஒரு பக்கம் மழை, வெள்ளம், வறட்சி, வேலை வாய்ப்பின்மை போன்ற பல்வேறு இயற்கை மற்றும் சமூக இடர்பாடுகள். நடு நடுவே ரூபாயின் மதிப்புச் சரிவு, இறக்குமதி அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார பிரச்சினைகள் மறுப்பக்கம். இவற்றிற்கு இடையே சமீபகாலமாக ஒரு பெரிய பிரச்சினை, கும்பல் கொலை(Mob Lynching).
உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடு இந்தியா. மக்கள் தொகையில் இரண்டாவது இடம். பால், பழம், காய்கறிகள் தானியங்கள் உற்பத்தியில் முன்னனி. அதே போன்று எதற்கும் உதவாத வாழ்வின் பயன்பாட்டிற்கு உபயோகமில்லாத கல்வி அளிக்கும் நிறுவனங்களின் குறிப்பாக தொழில் நுட்பக் கல்லூரிகளின் பெரும் சந்தையாக உள்ளது.
தற்போது முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, மொத்தம் 69 பதக்கங்களுடன் 8- து இடத்தைப் பிடித்துள்ளது,நாம் பெருமையடைய வேண்டிய வியம். இதில் 17 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
இந்த ஆண்டில் இந்தியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனை கேரளாவில் வந்த வெள்ளப் பெருக்கு. 1924 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளா இந்த பேரழிவைச் சந்தித்திருக்கிறது. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று வரலாறு காணாத மழை. ஆகஸ்ட் மாதத்தில் ஒன்று முதல் இருபதாம் தேதி வரையில் மட்டுமே கிட்டத்தட்ட 77 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த மாதத்தில் ஏற்பட்ட மழையளவு வழக்கமான மழையளவைக் காட்டிலும் மூன்று மடங்காகும். இதனை எதிர்பார்காத காரணத்தினால் ஏற்பட்ட அழிவு சுமார் இருபதாயிரம் கோடிக்கும் மேல் என்று வல்லுனர்கள் மதிப்பீட்டுள்ளனர். இதில் தனிப்பட்ட மற்றும் பொதுச் சொத்துக்கள் அடக்கம். உயிர் இழப்புகள் தனி.
நீர் இன்றி அமையாது உலகு என்றுரைத்தார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்! இது நிதர்சன உண்மை. இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு பக்கம் வெள்ளத்தினால் குடிப்பதற்கு கூட நீர் கிடைப்பத்தில்லை. மறுபக்கம் வறட்சிக் காரணமாக சொட்டு நீருக்கு மக்கள் அலைய வேண்டிய நிர்பந்தம். காரணம், நீர்வள மேலாண்மை இல்லாதது தான். தற்போது இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் குறிப்பாக கேரளா கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு போன்றவை வெள்ளத்திளால் பாதிக்கபட்டுள்ளன.
தற்போயை இளைஞர்களைப் பற்றி வயது மூத்தவர்களிடமோ, நடுத்தர வயதுடையவர்களிடயே கேள்வி கேட்டும் பாருங்கள் உடனே பதில் வேகமாகவில்லேற்றப்பட்ட அம்பு மாதிரி வரும், எதற்கும்லாயக்கற்றவன், உதவாக்கரை ஊர்ச்சுற்றி, செல்பேசியும் கையுமாக அலைகின்றவன் என்று.ஒரு நிமிடம், நீங்கள் நினைத்தம் பார்க்கவும், இந்த இளைஞர்களுக்காக,திட்டுவதைத் தவிர வேறு எதாவது நீங்கள் செய்திருக்கிறீர்களா? நிச்சயமாக பதில் இல்லை என்றே வரும்.இந்தியாவின் மக்கட் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இளைஞர்கள் உள்ளனர்.உலகின் இளமையான நாடுகளில் முன்னணி வகிக்கிறது நமது நாடு. இந்த உலகத்திற்கே தேவையான உழப்பை நமது இளைஞர்களால் வழங்க முடியும்.