வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இல்லாமல் இல்லை! அதற்காக பலர் சோர்ந்திட நேர்ந்தாலும் பலர் அவற்றை எதிர்கொண்டு வெற்றியடைந்து கொண்டுதான் உள்ளனர். உடல் ஊனமடைந்திருந்தாலும் உள்ளத்தால் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டவர்கள் பலர். அத்தகையவர்களில் பெங்களூரைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற ஊனமுற்ற 24 வயது நிரம்பிய நீச்சல் வீரரை ஒரு உதாரணமாகக் கூறலாம். இவர் பிறப்பிலிருந்தே ஸ்பைனா பிபிடா என்ற தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர். இதை சரி செய்ய குதிரை சவாரி அல்லது நீச்சல் பழகும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். சிறிய நீச்சல் தொட்டில் ஆரம்பித்த பயிற்சி பெரிய நீச்சல் குளத்தில் அவரை சாதனை செய்ய தூண்டியது. 8 வயதில் ஆரம்பித்த பயிற்சி, அரை மணி ஒரு மணி எனத் தொடங்கி 9 மணி நேர பயிற்சி வரை முடிந்த போதிலும் எதற்கும் அயராதவர் நிரஞ்சன்! இதில் என்ன விசேம் என்றால் அவரது உடலில் 17 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் தனது விடா முயற்சியில் ஜீன் மாதம் நடைபெற்ற நார்வேஜியன் நீச்சல் சேம்பியன்´ப் போட்டியில் 200மீட்டர், 100 மீட்டர், 50மீட்டர் என பல்வேறு போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனைப் புரிந்துள்ளார். அவரது வெற்றி மந்திரங்கள்! 1. நீங்கள் யாருக்கும் குறைந்தவர் இல்லை! 2. தன்னபிக்கையும் தைரியமும் தேவை! 3 . ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது, அதைக் கண்டுபிடித்து அதில் வெற்றியடை முயற்சி செய்ய வேண்டும்! 4. உங்கள் மனதிற்குப் பிடித்ததைச் செய்யவும் நீங்கள் செய்வதை விருப்பத்தோடு செய்யவும்!
கத்தார் நாட்டில் தற்போது நடந்து வரும் 23 வது ஏசியன் அத்லெட்டிக் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சோர்ந்த கோமதி என்ற 30 வயது பெண் 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்று சாதனைப் புரிந்துள்ளார்.
ராதிகா அஹிரே! ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபரியும் 25 வயது ஏர்ஹேஸ்டஸ். இவர் கடந்த நவம்பர் 7ந் தேதி (2018 ஆம் ஆண்டு) மும்பையின் அந்தேரியில் உள்ள பல மாடிக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை தனது சாதுர்யத்தால் அணைத்து பெரும் விபத்தை தவிர்த்துள்ளார்.
பல மாடி கட்டிடத்தில் 9 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தை கண்டவுடன் சிறிதும் அஞ்சாமல் படி மூலம் 9வது மாடித் தளத்தை அடைந்து அங்கிருந்து தீ அணைப்பான்களை உபயோகப்படுத்தி விபத்தின் இழப்பை குறைத்தது குறிப்பிடத்தக்கது. இவருடன் இவரது சகோதரர் ரோஹித் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் மகேஷ் உறுதுணையாக இருந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் தீ விபத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போதிலும் இவர் விமானப் பணிகளுக்காக பெற்ற பயிற்சியை தக்க நேரத்தில் விவேத்துடன் உபயோகப்படுத்தியது பெருமை அளிக்கிறது.இவரது சாதனையை பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் வசிப்பவர்கள் ஒன்று கூடி குடியரசுத் தினத்தன்று பறைச் சாற்றி மற்றவர்களுக்கும் எடுத்தக்காட்டாக புகழ்மாலை சூட்டியுள்ளனர். அவரது புகழ் என்றும் வானில் பறக்கட்டும்!.
கோலின் ஒ பிராடி, 33 வயது அமெரிக்கர் 54 நாட்களில் சுமார் 1600 கி.மீ தூரத்தை தன்னந்தனியாக அண்டார்டிகாவின் வட-தென் திசையில் பயணித்து சாதனை புரிந்துள்ளார். எவ்விதமான சாதனமும், துணையும் இன்றி இந்த சாதனை புரிந்துள்ள முதல் நபர் இவர். இவரின் முழு பயணமும் GPS மூலம் கண்காணிக்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக அவரது இணையதளத்திளும் பதிவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தனது கடைசி 32 மணி நேரம் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்றும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறுகிறார் கோலின்,
நவம்பர் 3ம் தேதி 170 கிலோ எடையுடன் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு கொடிய பனிக்காற்றில் மிகக்குரைந்த வெப்பநிலையில் பயணிப்பது இறப்பதற்கு சமமானது, என்று கூறினார் கோலின். பயணம் கிளம்பியதற்கும், முடிவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் தான் மிகவும் வாடிய போதிலும் சிரிப்பு, நடனம், அழுகை என தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
தனது 99 ஆவது வயதில் கேரளாவைச் சார்ந்த சித்ரன் நம்பூதிரிபாத் என்ற ஓய்வு பெற்ற அரசு அலுவலர் இமய மலைகளில் 29 வது முறை ட்ரெக்கிங் செய்து சாதனை புரிந்துள்ளார். தனது நூறாவது வயதில் 30வது முறையை முடிக்க வேண்டும் என இப்பொழுதிலிருந்தே தன்னை தயார்ப் படுத்தக் கொண்டு வருகிறார்.
ÖòÃm kB>Vª ¼k>Vºþ z_ïVM ¨[Å ¯ªVçkß ÄVìÍ> ØÃõ ·\Vì 29000 þ.*. #«Ýç> 159 åVâï¹_ çÄÂþ^ JéD ï¦Ím gEBVs[ AB_ ØÃõ\è ¨[Å ØÃòç\çB ¶ç¦Ím^áVì ¨ª ÖÍ]B ¼>EB sçáBVâ|ï^ þá© ¨ÐD ¶ç\©A ¶¤sÝm^ám. Ökì >ªm ÃBðÝç> gü]¼«oBVs[ ØÃìÝ ¨ÐD åï«Ý]_ Ø>V¦ºþ ï_ïÝ>Vs_ x½Ým^áVì. Îò åVçáÂz 300 þ.*. ¨[Å T>Ý]_ Ökì ÃBðD ØÄFm >ªm ÄV>çªçB °uÃ|Ý] c^áVì.
>ªm ÃBðÝ][ ¼ÃVm ÄJï s¼«V]ï¹[ >VÂz>_, ïV|ï^, \çéï^, kªséºzï^, ïVâ|Ýy, AB_, \çw ¨ª ¶çªÝmD ¨]ì ØïVõ| ÄV>çª AöÍ> ØÃõ\è Ökì.
gü]¼«oBV. WREéVÍm, 益V, ¼ÃVìß·ï_, üØÃl[, ¸«V[ü, ØÃ_÷BD, ØÛì\M, ئ[\VìÂ, üT¦[, «iBV ¨[® Ãé åV|ïçá >[ªÍ>MBVï ·u¤ kÍ>kì ¨[Ãm z¤©¸¦Ý>Âïm. Eé Ö¦ºï¹_\â|D Ök«m ØÃu¼ÅVìï^ mçðBVïß ØÄ[Ūì.
ÖºþéVÍ]_ c^á ¼ÃVì[\¡Ý Ã_ïçé ïwïÝ]_ sçáBVâ| ¼\éVõç\Ý mçÅl_ ýÂzDØÃV¿m ÖÝ>çïB ¨õðD >ªÂzÝ ¼>V[¤B>Vï í®þÅVì.
ÖÍ> ÄV>çªÂïVª Aïçw ¼k>Vºþ >ªm ØÃu¼ÅVìïÓÂz ¶ì©ÃèÝm^áVì! gD, ¼Ãu¼ÅVìï^ Ö_éV\_ ÄV>çª °m?
ஆம்! சாதனைகளுக்கு வயது தடையாக இருக்கமுடியாது என்பதை கேரளாவைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி நிரூபித்துள்ளார். கேரள எழுத்தறிவு இயக்கம் நடத்திய நான்காம் வகுப்பிற்கானத் தேர்வில் 98% மதிப்பெண் பெற்று சாதனை நிகழ்த்திய மூதாட்டிக்கு முன்னால் எந்த சாதனை நிற்க முடியும்!
இந்தியா மட்டுமல்ல உலக அளவிலும் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பல சாதனைகளைப் புரிந்தவர் மேரி கோம். மணிப்பூரைச் சார்ந்தவர். ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக்கில் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு பதக்கங்கள் என பல சாதனைகளை தன் வசமாக்கியவர். இளவயதில் குத்துச் சண்டைப் பழகுவதற்காக மைமாற்றுப் பணத்தில்தான் கையுறைகளை அவரால் வாங்க முடிந்தது. முயற்சி ஒன்றே அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது.
அர்ஜென்டினாவில் தற்போது நடைப் பெற்று வரும் இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்று நமது நாட்டிற்கு பெருமைச் சேர்த்துள்ளார். துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கம் என்பது குறிப்பிடத் தக்கது.
அர்ஜென்டினாவில் தற்போது நடைப்பெற்று வரும் இளைஞர்களுக்கான (Youth Olympics) ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தைச் சார்ந்த 15 வயது ஜெரிமி லால்ரின்னுங்கா என்ற சிறுவன், எடை தூக்கும் போட்டியில் (62 கிலோ பிரிவு) தங்கம் வென்று சாதனைப் புரிந்துள்ளார். இந்த ஆண்டு நடைப்பெற்ற ஏசியன் சேம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை ஏற்கனவே பெற்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.
மத்திய பிரதேசம் இந்தூரைச் சார்ந்த ஜுஹி ஜா என்ற 20 வயதுப் பெண், ஆசிய சாம்பியன்ஷிப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவிற்கான கோ-கோ போட்டிக்கான டீமில் இடம் பெற்றுள்ளார்.
உலகில் பல பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்துள்ளனர். இந்த சாதனைகளுக்குப் பின்னால் ஊக்கம் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. அவமானங்களும் பாதிப்புகளும் கூட சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன. இதற்கு உதாரணமாக தமிழகத்தைச் சார்ந்த ரூபி பியூட்டி என்ற பெண்மணியை கூறலாம்.
கடந்த மாதத்தில் நடந்து முடிந்த இந்தோனேசிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த தருண் அய்யாசாமி 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவர், 48.96 வினாடிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடைப் பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி அறிந்திருப்பீர்கள். அதில் இந்தியாவைச் சேர்ந்த பல இளம் விளையாட்டு வீரர்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்! அவர்களில் ஒருவர்தான் இந்த அடிப்பட்ட பெண் புலி ஸ்வப்னா பர்மன்.
இந்த வார சாதனையாளர் மும்பையைச் சார்ந்த ஜென் சடாவர்தே என்ற 10 வயது பெண்.
தற்போதைய இளைஞர்கள் ஏதாவதொரு வேலையில் சேர்ந்துவிட்டாலே போதும், தான் உலகத்தை வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்கின்றனர்.
கடந்த பல நாட்களாக இந்தியா முழுவதும் மழை, வெள்ளம் தொடர்கிறது.மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. இருப்பினும் இந்த கஷ்டத்திலும் தன் கடமையைச் செவ்வனே செய்வதில் சிலர் எப்பொழுதுமே முன் மாதிரியாக விளங்குகின்றனர். ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் முதலே உத்தராகண்ட் மாநிலத்தில் கடும் மழை எங்கும் வெள்ளக் காடு. ஆனாலும் அம்மாநிலத்தின் பித்தோர்கர் மாவட்டத்தில் தானிபாகர் இலாக்காவில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியரான ஜோத் சிங் குன்வர், ஆற்றுப் பாலம் அடித்துச் செல்லப்பட்ட போதும் ஜிப்-லைன் மூலம் ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்.