உருகும் ஆர்க்டிக் பனிப் பாறைகள்!
20 ஆம் நூற்றாண்டில் புவியின் வெப்பநிலை உயர்வு இன்று ஒரு அபாயகரமான முடிவை நோக்கி நகர்ந்து வருகிறது. உயர்ந்து வரும் புவி வெப்பநிலையால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் பல உயிரினங்கள் அழிவதற்கு இன்று காரணமாகி வருகிறது. ப•மை வீடு விளைவு என்பது தற்போது ஆர்க்டிக்கின் பனிப் பாறைகள் அழிவிற்கு காரணமாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து கூறியுள்ளனர்.
1990களில் இருந்ததைவிட மூன்றில் ஒருபங்கு தான் பனிப்பாறைகளின் தடிமன் உள்ளதாக அறிவியல் அறிஞர்கள் அறிவித்துள்ளனர். மேலும் பனிப்பாறைகளின் அடிப்பகுதிகள் உருகுவதால் கடல் உயிரினங்கள் மீது ஏற்படும் விளைவுகளையும் ஆராய்ந்து வருவதாக நார்த் கரோலினா வில்மிங்க்டன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த டில் வேக்னர் எனும் விஞ்ஞானி அறிவித்துள்ளார்.
ப•மை குடில் வாயுக்களால் உருகப்போவது ஆர்க்டிக்கின் பனிப்பாறை மட்டுமல்ல நமது வாழ்க்கையும்தான்!
இதனை உணர்ந்து திருந்த வேண்டியது நமது கடமை!
còzD gì½ ÃM© ÃVçÅï^!
20‡gD ±uÅVõ½_ Asl[ Øk©ÃWçé cBì¡ Ö[® Îò ¶ÃVBï«\Vª x½çk ¼åVÂþ åïìÍm kòþÅm. cBìÍm kòD As Øk©ÃWçéBV_ °uÃ|D ïVéWçé \Vuźï^ Ãé clöªºï^ ¶ak>uz Ö[® ïV«ð\Vþ kòþÅm. ÷ç\ T| sçá¡ ¨[Ãm >u¼ÃVm gì½Âþ[ ÃM© ÃVçÅï^ ¶asuz ïV«ð\Vþ c^á>Vï sÞQVMï^ >u¼ÃVm ïõ¦¤Ím í¤¥^áªì.
1990ï¹_ ÖòÍ>ç>s¦ J[¤_ Îòúz >V[ ÃM©ÃVçÅï¹[ >½\[ c^á>Vï ¶¤sB_ ¶¤Qìï^ ¶¤sÝm^áªì. ¼\KD ÃM©ÃVçÅï¹[ ¶½©Ãz]ï^ còzk>V_ ï¦_ clöªºï^ *m °uÃ|D sçá¡ïçá¥D g«VFÍm kòk>Vï åVìÝ ï¼«VoªV s_tºÂ¦[ Ã_ïçé ïwïÝç>ß ÄVìÍ> ½_ ¼kÂªì ¨ÐD sÞQVM ¶¤sÝm^áVì.
÷ç\ z½_ kV¥ÂïáV_ cò塚ÃVkm gì½Âþ[ ÃM©ÃVçÅ \â|\_é å\m kVµÂçï¥D>V[!
Ö>çª cðìÍm ]òÍ> ¼kõ½Bm å\m ï¦ç\!
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் குடிநீர் இன்றி பரிதவித்துள்ள நிலையைப் பற்றி கடந்த ஆண்டு அனைவரும் படித்திருப்பீர்கள். அந்த நிலை தமக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் நேரும் என தொழில் நுட்ப நகரமான சென்னை எதிர்ப்பார்த்திருக்காது. இந்த ஆண்டு கோடைக்காலம் ஒவ்வொரு வீட்டிலும் குடிநீருக்காக காத்திருப்பதைப் பார்த்தால் வருண பகவானும் கண்ணீர் வடிப்பான்! பல இடங்களில் தண்ணீர் இல்லாததால் உணவகங்கள், பள்ளிகள், ஐ.டி. நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலை. இதற்கெல்லாம் காரணம் யார், வேறு யார் மனிதர்களாகிய நாம் தான். இயற்கை வளங்களை குறிப்பாக நீரை சேமிக்காமல் கண் மூடித்தனமான உபயோகம் தான் மூலக்காரணம். கடந்த 6-7 மாதங்களாக தமிழகத்தில் மழை இல்லை; ஏரிகளும் குளம், குட்டைகளும் வறண்டு நாளாகிறது. குடி நீர்த்தேக்கங்களில் 1 சதவீதத்துக்கு குறைவான நீர் . சென்னை நகரின் சாதாரணமாக தினசரி நீர் தேவை •மார் 1300 மில்லியன் லிட்டர் இதில் பாதியளவு கூட தற்போது வழங்கப்பட வில்லை. சென்னையைச் •ற்றி அமைந்துள்ள ஏரிகளின் மாவட்டமான காஞ்சிபுரம் இம்முறை கைக்கொடுக்கவில்லை . மழை இல்லாதது, பெய்த மழை நீரை சேமிக்காதது, ஆறுகளின் மணலை அதிகப்படியாக எடுப்பது, நீலத்தடி நீரை அதிகமாக எடுப்பது, நீர் ஆதாரங்களான ஏரிகள் தூர்வாரப்படாதது, செலவு செய்யும் நீரை மறு •ழற்சி செய்யாதது என பல்வேறு பிரச்சனைகளும் ஒன்று கூடி இன்றைய மனிதனை ஆட்டி வைக்கிறது. இதற்கனைத்தும் காரணம் மனிதனே! நீரின்றி அமையாது உலகு ! என்ற வள்ளுனின் வாக்கு இன்று உண்மையாகியுள்ளது. மனிதர்கள் திருந்த வேண்டும்.
ஏழ்மையையும் வறுமையையும் விரட்டுவதில் கல்வியின் பங்கு முக்கியமானது. அனைத்து நாடுகளுமே தங்களது குழந்தைகளை குறைந்த பட்ச கல்வியை நோக்கி முன்னேற்ற பாதையில் செல்கிறது. இந்த முயற்சியிலும் பருவ கால மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என மேரிலாண்ட் பல்கலை கழகம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
பயலாஜிகல் கன்சர்வேன் எனும் பத்திரிக்கையின் கட்டுரைப்படி அடுத்த சில பத்தாண்டுகளில் உலகில் வாழும் பூச்சி இனங்களில் 40% அழிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் இதற்கு முதன்மையானக் காரணமாகும். இந்த அழிவு வருடத்திற்கு 2.5% ஆக உள்ளது. சிட்னி மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் விவசாய அறிவியலுக்கான சீன அகாதமியுடன் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது.உலகின் விலங்குத் தொகுப்பில் 70% பூச்சியினங்களாகும். இவை உணவு சங்கிலியில் பெரும்பங்கு வசிக்கிறது.
தற்போது காற்று மாசு என்பது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தலைநகர் டெல்லி மிகவும் அதிக மாசடைந்த மாநகரங்களில் முதல் இடத்தில் உள்ளது.
இதனால் மக்கள் தங்கள் இல்லங்களில் காற்று சுத்தப்படுத்தும் உபகரணங்களை (Air Purifier ) பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதில் காற்று மாசு முற்றிலும் நீக்கப் படுவதில்லை. குறிப்பாக மிகவும் ஆபத்தான பென்சீன், குளோரோஃபார்ம் போன்ற கெமிக்கல்களை இந்த உபகரங்களால் எதுவும் செய்ய முடியாது! இந்தக் கெமிக்கல்கள் கேன்சரை உருவாக்கும் முக்கிய காரணிகளாகும்.
தற்போது வா´ங்டன் பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் “போதோஸ் ஐவி” (Pothos Ivy ) என்ற உள்ளறை தாவரத்தை ஜீன் மாற்றம் செய்து மேற்கண்ட பாதிப்பு உருவாக்கக்கூடிய கெமிக்கல்களை உட்கவர்ந்து கொள்ளும் வகையில் புதிய தாவரத்தை உருவாக்கியுள்ளனர். இத்தகைய தாவரங்கள் தங்களது வளர்ச்சிக்கு இந்த கெமிக்கலை பயன்படுத்திக் கொள்கிறது.
இந்த முயற்சி வெற்றி அடைந்தால் வீட்டிற்குள் இருக்கும் காற்றை சுத்தப் படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இயற்கையான முறை என்பதால் பக்க விளைவுகளும் இருக்காது, என ஆய்வறிக்கைத் தெரிவிப்பதாக சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பத்திரிகைத் தெரிவிக்கிறது.
வன விலங்குகளை குறிப்பாக யானைகள், புலிகள், சிங்கங்கள், காண்டாமிருகம் போன்றவை அவற்றின் மதிப்பு மிக்க உறுப்புகளுக்காவும் மருத்துவ குணத்திற்காகவும் மக்களையும் கால் நடைகளையும் தாக்குவதற்கு பழிவாங்கும் செயல்கள் மூலமாகவும் கொல்லப்படுவது வழக்கமான ஒரு செயலாகிவிட்டது. அந்த வகையில் சிறுத்தைகளும் மனிதர்களின் நடவடிக்கையிலிருந்து தப்பவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1500க்கும் அதிகமான சிறுத்தைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளதாக வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் அறிவித்துள்ளன.
உலக அளவிலும் இந்தியாவிலும் அதிகரித்து வரும் காற்று மாசு, மற்றும் அதிகரித்து வரும் வளி மண்டல வெப்பநிலை அதிவேகமாக மக்களின் உயிருக்கும், சுற்றுச்சூழல் அழிவிற்கும் வில்லனாக மாறி வருகிறது. இது தொடர்பாக பாரீஸ் ஒப்பந்தம் போடப் பட்டிருந்தாலும் அதை நடைமுறை படுத்துவதில் இன்னும் குழப்பம் தான் நிலவுகிறது. தொடர் கூட்டங்களும் இதனை உறுதிப்படுத்த உலக முழுவதும் நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் ஏறக்குறைய 820 மில்லியன் மக்களுக்குப் போதுமான அளவு உணவு கிடைக்கவில்லை. இதனால் ஊட்டச் சத்துக் குறைபாடுகள் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பசி ஒழிப்பு திட்டத்திற்கு காலநிலை மாற்றம் ஒரு பெரியத் தடையாக இருக்கலாம் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நெதர்லாந்து நாட்டில் 5G நெட்வொர்க் ஆரம்பிக்கப்பட்டது. அதன் காரணமாக, 5G தொழில்நுட்ப டவர்களிலிருந்து வெளிப்படும் அதிக ஆற்றல் கொண்ட கதிர்வீச்சுக் காரணமாக ஆயிரக் கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன. அந்தப் பறவைகளின் உடலில் எந்த விதமான நோய் தாக்குதலோ, கிருமிகளோ இல்லை, எனவே, தொலைப்பேசி டவர்களிலிந்து வெளிவரும் நுண்ணலைகளால் அந்தப் பறவைகளின் இதயங்கள் பாதிக்கப்பட்டு உயிரழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட அறிக்கையின்படி உலகின் 93% குழந்தைகள் விஷக் காற்றை சுவாசிக்கின்றனர். பத்தில் ஒன்பது பேர் அதிக அளவில் மாசடைந்த காற்றை சுவாசிக்கின்றனர் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 80% வரையறுக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான மாசடைந்த காற்றை சுவாசிப்பது மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயமாகும்.
தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்களில் எரிக்கப்படும் நிலக்கரி, வாகன எரிபொருளில் இருந்து வெளிப்படும் புகை என அனைத்து உமிழ்வுகளும் பூமியை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதை மறுக்க முடியாது! இந்த பசுமைக் குடில் வாயுக்களால் பூமியின் வெப்பநிலை அதிவேகமாக உயர்ந்து வருகிறது.
உலகம் முழுவதுமே இந்தியா உட்பட வனவிலங்குகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் கங்காரு போன்ற விலங்குகளின் எண்ணிக்கையை குறைக்க அரசே அவற்றை கொன்று வருகிறது. இது ஒரு புறமிக்க காரணமில்லாமல் தடீரென விலங்குகள் கொத்து கொத்தாக இறப்பதும் அதிர்ச்சி அளிக்க கூடிய வியம்.
உலகம் முழுவதுமே இந்தியா உட்பட வனவிலங்குகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் கங்காரு போன்ற விலங்குகளின் எண்ணிக்கையை குறைக்க அரசே அவற்றை கொன்று வருகிறது. இது ஒரு புறமிக்க காரணமில்லாமல் தடீரென விலங்குகள் கொத்து கொத்தாக இறப்பதும் அதிர்ச்சி அளிக்க கூடிய வியம்.
கடந்த மாதத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. சில மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார, இயற்கை அழிவுகளை சரிச்செய்ய பெரும் பணமும் சில ஆண்டுகளும் தேவைப்படலாம். இத்தகையப் பேரழிகளுக்கு, மக்கள் இயற்கையின் மேல் நடத்திய கொடுந் தாக்குதல்தான் முக்கிய காரணம்.
உலகின் மிகப்பெரிய ஆறுகள் கடலில் கொண்டுச் சேர்க்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அளவிட முடியாத அளவிற்கு கடல் சுற்றுச் சூழலை பாதித்து வருகிறது, கடல் வாழ் உயிரினங்களான மீன், திமிங்கலம், மற்றும் இதர விலங்கினங்களும், தாவர இனங்களும் தங்கள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
தற்போது அனைவரும் பசுமைக்குடில் விளைவு பற்றியும் அதற்கான காரணங்களையும் அறிவர். ஆனால் அதற்கு மூலக் காரணமான பசுமைக் குடில் வாயுக்கள்தான் குறைந்தபாடில்லை. தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ப்ளாஸ்டிக் என்பது நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. “நீர் இன்றி அமையாது உலகு” என்றான் வள்ளுவன். ஆனால், ப்ளாஸ்டிக் இன்றி அமையாது உலகு என்பது இன்றைய மக்களின் குரல்.
உலகமயமாதல்,தொழிற்மயமாதல்,பொருளாதார வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களில் மக்களுக்குத் தேவையான உணவு,உடை இருப்பிடம் வேண்டுமானால் இந்த நூற்றாண்டில் தேவையான அளவிற்கு கிடைத்திருக்கலாம் . ஆனால் இந்த வளர்ச்சி எதை நோக்கி செல்கிறது.உலகம் உயிருடன் இருக்குமா,இருப்பின் எத்தனை ஆண்டுகள்.இது மிகப்பிரிய கேள்விக் குறி.சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தொடந்து எச்சரித்து வந்த போதும்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது.காடுகள் தொடர்ந்து அக்கப்படுகிறது.மக்களுக்கு வேலைத் தேவை.ஆனால் பூமி தேவையில்லையா.நமது அடுத்துவரவிருக்கின்ற தலைமுறை வாழ்வதற்கான காலச்சூழல் இருக்கிறதா